உலகச் செய்திகள்


சாதனை விமானப் பயணம் 

மத முறைப்படி ஆடை அணியத் தவறியதற்காக பெண்ணுக்கு சித்திரவதை செய்து மரணதண்டனை

84 வயதில் 4வது முறையாக மாடல் அழகியை மணந்த இங்கிலாந்து பத்திரிகை அதிபர்

ஜல்­லிக்­கட்­டுக்கு உச்­ச­நீ­தி­மன்றம் இடைக்காலத்தடை

பய­ணித்த விமா­னத்தின் சக்­கரப் பகு­தியில் 11 மணி நேர­மாக தொங்­கிய சடலம் 

மூன்­றரை வரு­டங்­க­ளாக மம்மி நிலையில் பேணப்­பட்ட சீனத் துற­வியின் உடல் 

இந்தோனேஷியாவில் தொடர் குண்டு வெடிப்பு, துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் : மூவர் பலி 

சாதனை விமானப் பயணம் 


11/01/2016 பிரித்­தா­னி­யா­வி­லி­ருந்து அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு திறந்த சிறிய ரக விமா­ன­மொன்றில் 14,600 கடல் மைல் தூரம் பய­ணித்து பிரித்­தா­னிய சாகஸ கலை­ஞ­ரான திரேசி கேர்டிஸ் ரேலர் சாதனை படைத்­துள்ளார்.



அவர் (53 வயது) 1942 போயிங் ஸ்ரியர்மான் ஸ்பிறிட் விமானத் தில் பார்ன்பரோ­வி­லி­ருந்து கடந்த ஒக்­டோபர் மாதம் பய­ணத்தை ஆரம்­பித்து சிட்னி நக ரில் தற்போது தரை யிறங்கியுள்ளார்.  நன்றி வீரகேசரி 

மத முறைப்படி ஆடை அணியத் தவறியதற்காக பெண்ணுக்கு சித்திரவதை செய்து மரணதண்டனை

11/01/2016 ஐ.எஸ். தீவி­ர­வாத குழுவைச் சேர்ந்த பெண் உறுப்­பினர் ஒருவர், சிரி­யாவைச் சேர்ந்த யுவ­தி­யொ­ரு­வ­ருக்கு மத ரீதி­யான ஆடை­களை அணியத் தவ­றிய குற்­றச்­சாட்டில் சித்­தி­ர­வதை செய்து மர­ண­தண்­டனை நிறை­வேற்­றி­யுள்­ள­தாக அங்­கி­ருந்து வரும் செய்­திகள் தெரி­விக்­கின்றன.

இது தொடர்பில் சர்­வ­தேச ஊட­கங்கள் சனிக்­கி­ழமை செய்­தி­களை வெளி­யிட்­டுள்­ ளன.மேற்­படி 21 வய­தான யுவதி மத முறைப்­படி உடலை மூடி ஆடை அணி­யாது செல்­வதைக் கண்ட ஐ.எஸ். தீவி­ர­வாத குழுவைச் சேர்ந்த ஒவும் பாரூக் என்ற பெண் உறுப்­பினர், அவரை அடித்து உதைத்து சித்­தி­ர­வதை செய்து மர­ண­தண்­டனை நிறை­வேற்­றி­ய­தாக அவ­ரது குடும்­பத்தைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவர் அரா நியூஸ் ஊடகத்துக்கு தெரிவித்துள்ளார்.    நன்றி வீரகேசரி

84 வயதில் 4வது முறையாக மாடல் அழகியை மணந்த இங்கிலாந்து பத்திரிகை அதிபர்

13/01/2016 இங்கிலாந்து பத்திரிகை அதிபர் 84 வயது முர் டோக் தன்னை விட 30 வயது குறைந்த நடிகையை 4-வது திருமணம் செய்கிறார்.


இங்கிலாந்தின் பிரபல மான ஒரு பத்திரிகையின் அதிபர் ரூபெர்ட் முர்டோக். இவருக்கு வயது 84. இவருக்கு ஏற்கனவே 3 பெண்களுடன் திருமணம் நடந்துள்ளது. அவர்கள் மூலம் 6 குழந்தைகள் உள்ளனர். இவரது 3-வது மனைவி வெண்டி டெங் (46). இவர் மூலம் கிரேஸ் (14), சொலோக் (12) என்ற 2 குழந்தைகள் உள்ளனர். இவரை கடந்த 2013-ம் ஆண்டு முர்டோக் விவாகரத்து செய்தார்.
இந்த நிலையில் முர்டோக் ஜெர்ரி ஹால் என்ற 59 வயது நடிகையும், முன்னாள் மாடல் அழகியின் காதல் வலையில் விழுந்தார். ஜெர்ரியும் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆனவர். இவருக்கு எலிசபெத், ஜேம்ஸ், ஜார்ஜியா மற்றும் காபிரியல் ஜாக்கர் என்ற 4 குழந்தைகள் உள்ளனர்.


முர்டோக்-ஜெர்ரி ஹால்  ஜோடி கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ஒருவரை ஒருவர் சந்தித்து அன்பை பகிர்ந்து கொண்டனர். அதன் பின்னர் ஆஸ்திரேலியா சென்று காதல் வானில் சிறகடித்து பறந்த இவர்கள் திருமணம் செய்ய முடிவு செய்தனர். அதை தொடர்ந்து கடந்த வாரம் இவர்களது திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.இந்நிலையில், காதல் ஜோடி சமீபத்தில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த 73-வதுகோல்டன் குளோப் திரைப்பட விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டு பரபரப்பை ஏற்படுத்தினர்.


ரூபெர்ட் முர்டோக்கின் முதல் மனைவி பாட்ரிகா புக்கர், 2-வது மனைவி அன்ன போர்ல், 3-வது மனைவியின் பெயர் வெண்டி டெங், முர்டோக்கின் மூத்த மகன் லாசெலான். இவருக்கு 44 வயது ஆகிறது.
நன்றி வீரகேசரி



ஜல்­லிக்­கட்­டுக்கு உச்­ச­நீ­தி­மன்றம் இடைக்காலத்தடை



13/01/2016 ஜல்­லிக்­கட்டு போட்­டிக்கு மத்­திய அரசு அனு­மதி வழங்­கி­யதை எதிர்த்து தொட­ரப்­பட்ட 13 மனுக்கள் மீதான விசா­ர­ணை­க­ளை­ய­டுத்து நேற்று ஜல்­லிக்­கட்­டுக்கு உச்­ச­நீ­தி­மன்றம் இடைக்காலத்தடை விதித்­தது.
இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் எங்கும் நேற்று போராட்டங்கள் வெடித்ததோடு அலங்காநல்லூரில் இரு இளைஞர்கள் தீக்குளிக்க முயற்சித்தமை பரபரப்பை ஏற்படுத்தியது.
பொங்­கலை முன்­னிட்டு ஜல்­லிக்­கட்டு நடத்­து­வ­தற்­கான அனு­ம­தியை மத்­திய அரசு கடந்த வெள்ளிக்­கி­ழமை வழங்­கி­யது. இதனை எதிர்த்து விலங்­குகள் நல­வா­ரியம் உள்­ளிட்ட தரப்­பினர் சார்பில் உச்­ச­நீ­தி­மன்­றத்தில் தாக்கல் செய்த 13 மனுக்கள் மீதான விசா­ரணை நீதி­பதி தாக்கூர் தலை­மை­யி­லான அமர்­வி­லி­ருந்து நீதி­ப­திகள் தீபக் மிஸ்ரா, ரமணா ஆகியோர் கொண்ட அமர்­வுக்கு மாற்­றப்­பட்டு நேற்று விசா­ரணை நடை­பெற்­றது.
விலங்­குகள் நல­வா­ரியம் சார்­பாக வழக்­க­றிஞர் அரிமா சுந்­தரம் வாதிட்டார். அவர் தமது வாதத்தில், ஜல்­லிக்­கட்­டுக்கு தடை விதித்து ஏற்­க­னவே உள்ள அறிக்­கையை மீற முடி­யாது. புதிய அறிக்­கையில் ஜல்­லிக்­கட்­டுக்கு அனு­மதி வழங்க புதிய அம்­சத்தை சேர்த்­தது சரி­யல்ல என்று கூறினார். மத்­திய அரசு சார்பில் அட்­டர்னி ஜெனரல் முகுல் ரோஹக்கி ஆஜ­ராகி வாதா­டினார்.
புதிய அறிக்­கையில் காளை­கள் வதை தொடர்­பாக கவ­னத்தில் கொண்­டுள்ளோம் என்று அவர் தெரி­வித்தார். மேலும் ஜல்­லிக்­கட்­டுக்கு தேவை­யெனில் உச்­ச­நீ­தி­மன்றம் நிபந்­தனை விதிக்­கலாம் என்றும் அவர் கூறினார். தமி­ழக அரசு சார்பில் ராஜேஸ்­வர ராவ், சேகர் நாப்டே ஆகியோர் ஆஜ­ரா­கினர்.
அனைத்து தரப்பு வாதங்­க­ளையும் கேட்ட நீதி­ப­திகள் ஜல்­லிக்­கட்டு போட்­டிக்கு இடைக்­கால தடை விதித்து உத்­த­ர­விட்­டனர். அனு­ம­தியளித்த மத்­திய அரசின் அறிக்­கைக்கு இடைக்­கால தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது. முன்­ன­தாக, "காட்­சிப்­ப­டுத்­தப்­படும் விலங்­குகள்" பட்­டி­யலில் உள்ள காளையை நிபந்­த­னை­யுடன் ஜல்­லிக்­கட்டு போட்­டியில் ஈடு­ப­டுத்த வகை செய்யும் அர­சா­ணையை மத்­திய அரசு கடந்த 8 ஆம் திகதி வெளி­யிட்­டமை குறிப்­பி­டத்­தக்­கது.
பொங்­க­லுக்கு இன்னும் சில நாட்­களே உள்ள நிலையில் உச்­ச­நீ­தி­மன்­றத்தின் இந்த உத்­த­ரவு முக்­கி­யத்­துவம் வாய்ந்­த­தாக கரு­தப்­ப­டு­கி­றது.
இருப்பினும் மீண்டும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மனுதாக்கல் செய்யப்பட்டு தீர்ப்பு கிடைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்ற எதிர்பார்ப்பு தமிழக மக்கள் மத்தியில் நிலவிவருகிறது.   நன்றி வீரகேசரி
பய­ணித்த விமா­னத்தின் சக்­கரப் பகு­தியில் 11 மணி நேர­மாக தொங்­கிய சடலம்

14/01/2016 பிரே­சி­லி­லி­ருந்து பிரான்ஸின் பாரிஸ் நக­ருக்கு பய­ணித்த விமா­ன­ மொன்றின் சக்­கரப் பகு­தி­ யில் தொங்­கிய நிலையில் நப­ரொ­ரு­வ­ரது சடலம் மீட்­கப்­பட்­டுள்­ளது.
திங்­கட்­கி­ழமை இடம்­பெற்ற இந்த சம்­பவம் குறித்து சர்­வ­தேச ஊட­கங்கள் புதன்­கி­ழமை செய்­தி­களை வெளி­யிட்­டுள்ளன.
பிரே­சிலின் சாயோ போலோ நக­ரி­லி­ருந்து மேற்­படி எயார் பிரான்ஸ் விமானம் புறப்­பட்ட போது, குறிப்­பிட்ட நபர் ஐரோப்­பா­வுக்கு சட்­ட­வி

ரோ­த­மாக செல்லும் முயற்­சியில் அந்த விமா­னத்தின் சக்­கரப் பகு­தியில் மறைந்து கொண்­டி­ருந்­தி­ருக்­கலாம் எனவும் அவர் அந்தப் பய­ணத்தின் ஆரம்­பத்­தி­லேயே மர­ண­ம­டைந்­தி­ருக்­கலாம் எனவும் நம்­பப்­ப­டு­கி­றது.
அவ­ரது சடலம் அந்த போயிங் 777 விமா­னத்தில் தொடர்ந்து 11 மணி நேரம் தொங்கிக் கொண்­டி­ருந்­துள்­ளது.   நன்றி வீரகேசரி









மூன்­றரை வரு­டங்­க­ளாக மம்மி நிலையில் பேணப்­பட்ட சீனத் துற­வியின் உடல் 

14/01/2016 மம்மி நிலையில் பேணப்­பட்ட சீனத் துற­வி­யொ­ரு­வ­ரது உடல் மத வைப­வ­மொன்­றை­யொட்டி பொது­மக்­க­ளுக்கு காட்­சிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.
மூன்­றரை வரு­டத்­துக்கு முன்னர் உயி­ரி­ழந்த துற­வி­யான பு ஹோயுவின் உடல் உருளை வடி­வான கொள்­க­லனில் இது­வரை காலமும் பாது­காக்­கப்­பட்டு வந்­தது.

கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை தென் கிழக்கு சீனா வின் புஜியான் மாகா­ணத்தில் குவான்­ஸொயு எனும் இடத்­தி­லுள்ள ஆல­யத்தில் மேற்­படி துற­வியின் உடல் பொது­மக்கள் பார்­வை­யி­டு­வ­தற்­காக காட்­சிப்­ப­டுத்­தப்­பட்­டது.
இது தொடர்பில் சர்­வ­தேச ஊட­கங்கள் புதன்­கி­ழமை செய்­தி­களை வெளி­யிட்­டுள்­ளன.
துற­வியின் உடல் வைக்­கப்­பட்­டி­ருந்த கொள்­கலன் ஞாயிற்­றுக்­கி­ழமை திறக்­கப்­பட்ட போது அதனுள் அவ­ரது உடல் நன்கு பேணப்­பட்ட நிலையில் காணப்­பட்­டது.   நன்றி வீரகேசரி
அந்த உடலை பேணு­வ­தற்­காக அதனை மூடி­யி­ருந்த கரியும் சந்­தணமும் நிபு­ணர்­களால் கவ­ன­மாக அகற்றப்பட்டது.
இதன்போது அங்கு கூடியிருந்த பெருந்தொகை யான மதகுருமார் அந்த துறவிக்கு மரியாதை செலுத்தினர்.
'புனித சதை' என அழைக்கப்படும் மேற்படி துற வியின் உடலானது அந்நாட்டு பாரம்பரிய வழக்கப் பிரகாரம் தங்க உள்ளடக்கங்களால் மூடப்பட்டு பௌத்த சிலையொன்றாக மாற்றப்படவுள்ளது.
புஜியான் மாகாணத்திலுள்ள ஜின்சியாங் நகரில் 1919 ஆம் ஆண்டில் பிறந்த பு ஹோயு, தனது 13 ஆவது வயதில் துறவியானார்            நன்றி வீரகேசரி


இந்தோனேஷியாவில் தொடர் குண்டு வெடிப்பு, துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் : மூவர் பலி 


14/01/2016 இந்தோனேஷியாவின் தலைநகரான  ஜகார்த்தாவில் 6 குண்டு வெடிப்புகள் மற்றும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த சம்பவத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.
இதில் இலங்கையர்களுக்கு எந்த வித பாதிப்பும் இல்லை என இந்தோனேஷியாவில் உள்ள இலங்கைக்கான தூதரகம் தெரிவித்துள்ளது.





நன்றி வீரகேசரி