இலங்கைச் செய்திகள்


வடக்கில் போதைப்பொருள் பாவனை அதிகரிப்பு : ருவான் குணசேகர

பொலிஸாரின் அடக்கு முறைக்கு எதிராக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
 மட்டு.மாவட்டத்தில் கடும் மழை : பல குடும்பங்கள் இடம்பெயர்வு
 கோத்தாவை கைது செய்ய முடியாது
தாய்லாந்து இளவரசியை சந்தித்தார் ஜனாதிபதி







வடக்கில் போதைப்பொருள் பாவனை அதிகரிப்பு : ருவான் குணசேகர


02/11/2015 வடக்கில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கும், நாட்டில் இடம்பெறும் குற்றச்செயல்களை தடுப்பதற்கு அனைத்து தரப்புக்களினதும் ஒத்துழைப்பு தேவையெனவும் குறிப்பிட்டார்.


கிளிநொச்சிக்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேக  கிளிநொச்சி இரணைமடு சந்தியில் அமைந்துள்ள பிரதி பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே மேற்கண்டவாறு குறிப்பட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
வடமாகாணத்தில் கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் தற்போது குற்றச்செயல்கள் குறைவடைந்துள்ளன. குறிப்பாக கொலைச் சம்பவங்கள், பாலியல் துஸ்பிரயோக சம்பவங்கள் போன்ற குற்றச்செயல்கள் குறைவடைந்து காணப்படுகின்றது.
இதேவேளை நாட்டில் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையைில் 2014ஆம் ஆண்டு ஐனவரி மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரையான காலப்பகுதியில் 391 படுகொலைகளும் 2015ஆம் ஆண்டு அதே காலப்பகுதியில் 336 படுகொலைகளும் பதிவாகியிருக்கின்றன.
ஆயினும் போதைப்பொருள் பயன்பாடு வடபகுதியில் அதிகம் காணப்படுகின்றது.
இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக குறிப்பாக காங்கேசன்துறை பருத்தித்துறை பகுதிகளில் இருந்து போதைப்பொருட்கள் இலங்கைக்கு எடுத்து வரப்படுகின்றன.
போதைப்பொருள் குற்றச்செயல்களுடன் தொடர்புபட்ட பலர் கைது செய்யப்பட்டதுடன் அவர்களிடம் இருந்து இதுவரை 300 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருட்களையும் கைப்பற்றியுள்ளளோம். 

எனவே குற்றச்செயல்களை குறைப்பதற்கு நாட்டில் உள்ள அனைத்து தரப்புக்களினதும் ஒத்துழைப்புக்களின் மூலமே நாட்டில் இடம்பெறும் குற்றச்செயல்களை தடுக்கமுடியும் என அவர் மேலும் தெரிவித்தார். நன்றி வீரகேசரி 










பொலிஸாரின் அடக்கு முறைக்கு எதிராக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்


02/11/2015 கணக்கியல் உயர் டிப்ளோமா மாணவர்களால் வியாழக்கிழமை கொழும்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதல் சம்பவத்தை கண்டித்து மட்டக்களப்பு உயர் தேசிய கணக்கீட்டு கற்கை நெறி மாணவர்களினால் இன்று அமைதியான முறையில் கண்டணப்பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் என்பன நடாத்தப்பட்டன.
மட்டக்களப்பு கல்முனை பிரதானவீதியில் மறியல் மற்றும் கண்டன பேரணயிலும் மாணவர்கள் ஈடுபட்டனர்.



கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட உரிமை மீறல்களையும் அத்துமீறல்களையும் கண்டித்து உயர் தேசிய கணக்கீட்டு கற்கை நெறி (HNDA) தொடர்பான தமது உரிமை கோரிக்கைகளை வலுப்படுத்தியும், அதற்கான தீர்வினை பெற்றுக்கொள்ளும் நோக்கிலும் மட்டக்களப்பு உயர் கல்வியகத்தை (ATI) சேர்ந்த முழு, பகுதிநேர மாணவர்கள் இன்றுகாலை 10 மணிக்கு அமைதியான முறையில் தமது கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளதாகவும் மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. நன்றி வீரகேசரி 










 மட்டு.மாவட்டத்தில் கடும் மழை : பல குடும்பங்கள் இடம்பெயர்வு

03/11/2015 மட்டக்களப்பு மாவட்டத்தில் கடும் மழை பெய்து வருகின்ற காரணமாக பல குடும்பங்கள் இடம்பெயர்ந்து உறவினர்,நண்பர்கள் வீடுகளில் தங்கியுள்ளனர். கடந்த மணிநேரத்தில் 100.9 மீற்றர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட வானிலை அவதான நிலைய பொறுப்பதிகாரி கே.சூரியகுமார் தெரிவித்தார்.

இம்மாவட்டத்தில் இடைவிடாது தொடர்ந்து பெய்ந்து வரும் அடை மழை காரணமாக வீதிகள், பாடசாலைகள் உட்பட பொது இடங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் போக்குவரத்து செய்வதில் மக்கள் பெரும் சிரமங்களை எதிர் கொண்டுள்ளனர்.   நன்றி வீரகேசரி 












கோத்தாவை கைது செய்ய முடியாது

05/11/2015 ஐக்­கிய நாடுகள் சபையின் கலப்பு விசா­ர­ணையையும் சர்­வ­தேச நீதி­ப­தி­களையும் எதிர்ப்­ப தாக கூறிக் கொள்ளும் தேசப்­பற்­றாளர்கள் இலங்­கையில் நீதித்­துறைமீது நம்­பிக்­கை­யில்லை என்­கி­றார்கள். இதுவா இவர்­க­ளது தேசப்­பற்று என்று நீதி­ய­மைச்சர் விஜேய­தாஸ ராஜ­பக்ஷ நேற்று சபையில் கேள்வி எழுப்பினார்.
"எவன்கார்ட்" விவ­கா­ரத்தைப் பயன்­ப­டுத்தி கோத்­த­பாய ராஜ­ப­க்ஷவை கைதுசெய்ய முடி­யாது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்­கி­ழமை இடம்­பெற்ற எவன்கார்ட் தொடர்­பான சபை ஒத்­திவைப்பு வேளை பிரே­ரணை மீதான விவா­தத்தில் கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே நீதி­ய­மைச்சர் விஜேய­தாஸ ராஜ­பக் ஷ மேற்கண்டவாறு தெரி­வித்தார்.
அமைச்சர் சபையில் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்,
சட்­டமா அதி­பரோ திணைக்­க­ளமோ எவன்கார்ட் நிறு­வ­ன­த்திற்கு சார்­பாக எந்­த­வித நட­வ­டிக்­கை­க­ளையும் மேற்­கொள்­ள­வில்லை. சட்­டமா அதிபர் நேர்­மை­யாக செயற்­ப­டுபவர். அவ­ருக்கு சுவிஸில் வங்கிக் கணக்கு இருப்பதாக கூறப் பட்டது. அங்கு சேமிப்பில் 6 சதமேனும் அவ ருக்கு இருப்­பதாக நிரூ­பித்தால் நான் பதவி வில­குவேன்.
எவன்கார்ட் நிறு­வ­னத்­திற்கு எதி­ராக வெடி­மருந்­துகள், கொள் கலன்கள் விவகாரம் தொடர்பில் பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் கீழ் வழக்கு தொடர முடி­யாது என சட்­டமா அதிபர் திணைக்­களம் அறி­வி­த்தது. சட்­டமா அதி­பரும் தெரி­வித்தார்.
பொலிஸார் விசா­­ரித்து குற்­றங்கள் கண்­டு­பி­டிக்­கப்­பட்டு விசா­ர­ணைகள் நடத்­தப்­பட்டால் தான் குற்­ற­வியல் தண்­ட­னையின் கீழ் வழக்குத் தாக்கல் செய்ய முடியும்.எவன்கார்ட் மிதக்கும் கப்பல் ஐ.நா.பிர­க­ட­னங்­க­ளுக்கு அமை­யவே ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. எனவே இதில் எவ்­வி­த­மான குற்ற வியல் காரணங்களும் கிடை­யாது.
ஐ.நா. விசா­ரணை, ஹைபிரிட் விசா­ரணை மற்றும் சர்­வ­தேச நீதி­ப­திகள் இங்கு வரு­வதை எதிர்ப்­ப­தாக கூறிக் கொண்டு தம்மை தேசப்­பற்றுள்ளவர்களாக காட்டிக் கொள்­பவர்கள் மறு­புறம் உள்­நாட்டு நீதித்­துறை மீது நம்­பிக்­கை­யில்லை என்றும் சட்டமா அதிபர் திணைக்களம் மீது நம்பிக்கையில்லை என்­கின்­றனர்.
இவ்­வாறு மாறு­பட்ட கருத்­துக்­களை வெளி­யி­டு­வதால் எமது நாட்­டுக்கே பிரச்­சி­னை­களை சந்­திக்க நேரிடும். சர்­வ­தேசம் எமது நாட்டைப் பற்றி எவ்­வாறு சிந்­திக்கும்.அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் கொண்­டு­வ­ரப்­பட்ட போது நாம் அதனை சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்­திற்கும் உயர்­நீ­தி­மன்­றத்­திற்கும் முன்­வைத்தோம்.
அமைச்­ச­ர­வையில் தலை­வ­ராக பிர­த­மரை பரிந்­துரை செய்தோம். ஆனால் எமது கருத்தை சட்­டமா அதிபர் திணைக்­களம், உயர் நீதி­மன்றம் என்பன நிரா­க­ரித்­தன. இதனை நாம் ஏற்றுக் கொண்டோம். எமக்கு நாட்டின் சட்­டத்­துறை மீது நம்­பிக்­கை­யுள்­ளது. அதனை மதிக்­கிறோம்.

எவன்கார்ட் விடயம் தொடர்பில் 3000 ஆவ­ணங்­களை ஆராய்ந்தே தீர்­மா­னங்கள் எடுக்­கப்­பட்­டன. சட்ட ரீதி­யா­கவே அனைத்தும் இடம்­பெற்­றன. நான் சட்­டத்­த­ரணி என்ற ரீதியில் இதனை அறிவேன். ஆனால் இது தொடர்பில் சட்­டமே தெரியாவர்கள் இது தொடர்பில் கருத்­துக்­களை வெ ளியி­டு­கின்­றனர்.
சிலர் இவ்­வி­ட­யத்தைப் பயன்­ப­டுத்தி கோத்­தா­பாய ராஜ­ப­க்ஷவை கைது செய்­வ­தற்­கான முயற்சி­களை முன்­னெ­டுத்­தனர். இதனை நான் எதிர்த்தேன். அவருடன் அர­சி­யல் ரீதி­யான கருத்து வேறு­பா­டுகள் இருக்­கலாம். ஆனால் சட்­டத்தின் பிர­காரம் சரி­யான தீர்­மா­னத்­தையே எடுக்க வேண்டும்.
இதனை நான் ஜனா­தி­ப­தி­யி­டமும், பிர­த­ம­ரி­டமும் தெளி­வு­ப­டுத்­தினேன். இதன்­போது இரு­வரும் சட்டத்தின் பிரகாரம் அனைத்தையும் மேற்கொள்ளுமாறு என்னிடம் தெரிவித்தனர்.
எமது ஆட்சியில் எவரையும் பழிவாங்கும் நோக்கமில்லை. கடந்த காலங்களில் நீதியில்லாத நிலைமை காணப்பட்ட நாட்டில் இன்று நீதியும் சட்டமும் நிலைநிறுத்தப்பட்டு வருகின்றன.. இதனை சீர்குலைக்க வேண்டாம் என்றார்.   நன்றி வீரகேசரி 








தாய்லாந்து இளவரசியை சந்தித்தார் ஜனாதிபதி

04/11/2015 தாய்லாந்துக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று அந்நாட்டின் இளவரசியான மஹா சக்கிரி சிறிதொம்மை, ஸ்ரா பெத்தும் மாளிகையில் வைத்து சந்தித்தார்.

நன்றி வீரகேசரி

No comments: