இலங்கைச் செய்திகள்


பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல்

சிரேஷ்ட ஊட­க­வி­ய­லாளர் மாணிக்­க­வா­சகர் கால­மானார்

பாப்பரசர் பிரான்சிஸ் 2015-01-13 அன்று இலங்கை விஜயம்!


பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல்

08/09/2014 மக்கள் விடுதலை முன்னணி ஆதரவாளர்களான பல்கலைக்கழக மாணவர்கள் நால்வர் மீது மொனராகலை கெட்டிய பிரதேசத்தில் வைத்து தாக்குதல்மேற்கொண்டு அதில் ஒரு மாணவனை கடத்திச் சென்று கடுமையாக தாக்கப்பட்டு பின்பு விடுதலை செய்யப்பட்ட நிலையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக  கபே அமைப்பு தெரிவித்துள்ளது.
இன்று காலை 6.30 மணியளவில் இலக்கத் தகடு இல்லாத டிபென்டர்  வாகனத்தில் வந்த இனந்தெரியாத சிலரே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக  கபே அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது .

நன்றி வீரகேசரி







சிரேஷ்ட ஊட­க­வி­ய­லாளர் மாணிக்­க­வா­சகர் கால­மானார்

சிரேஷ்ட ஊட­க­வி­ய­லாளர் கலா­பூ­சணம் செல்­வத்­தம்பி மாணிக்­க­வா­சகர் நேற்றுக் கால­மானார்.

1938 ஆம் ஆண்டு செப்­டெம்பர் 30 ஆம் திகதி பருத்­தித்­துறை புலோலி மேற்கில் பிறந்த செ.மாணிக்­க­வா­சகர் ஊட­க­வியல் துறையில் ஏற்­பட்ட எல்­லை­யற்ற ஆர்­வத்தின் கார­ண­மாக இளமைப் பரு­வத்தில் டைம்ஸ் ஒப் சிலோன் பத்­தி­ரி­கையில் தன்னை இணைத்து ஒரு ஊட­க­வி­ய­லா­ள­­ராக அறி­மு­க­மானார்.
ஊட­க­வி­ய­லா­ள­ராக சமூ­க­தொண்­டாற்­றிய மாணிக்­க­வ­ாசகர் தொடர்ச்­சி­யான காலத்தில் லேக்­கவுஸ் நிறு­வ­னத்தில் தன்னை இணைத்துக் கொண்டு தொடர்ந்தும் தனது ஊட­க­சே­வையை இடை­ய­றாது தொடர்ந்தார்.
ஓய்­வுக்­காலம் வரை குறித்த நிறு­வ­னத்தில் பணி­யாற்­றி­யவர். பின்­னைய நாட்­களில் ஊட­கத்­து­றையில் சுயா­தீன ஊட­க­வி­ய­லா­ள­ராகவும் சிரேஷ்ட பத்தி எழுத்­தா­ள­ரா­கவும் தனது ஊடக பணியை தொடர்ந்து வந்தார்.

இவர் தமிழ், ஆங்­கில மொழி­களில் தனது செய்­தி­க­ளையும் விமர்­ச­னங்­க­ளையும் பத்­தி­க­ளையும் தொடர்ச்­சி­யாக எழுதி வந்தார். கடந்த ஒரு­வா­ர­மாக நோய்­வாய்ப்­பட்டு கொழும்பு தேசிய வைத்­திய சாலையில் அனு­ம­திக்­கப்­பட்டிருந்த இவர் நேற்று மாலை தனது 76 ஆவது வயதில் இவ்­வு­லகை விட்டு பிரிந்தார். அன்­னாரின் இறு­திக்­கி­ரி­யைகள் தொடர்­பாக பின்னர் அறிவிக்கப்படும்.நன்றி வீரகேசரி 



பாப்பரசர் பிரான்சிஸ் 2015-01-13 அன்று இலங்கை விஜயம்!


12/09/2014 பாப்பரசர் பிரான்சிஸ் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு எதிர்ருவரும் 2015 ஆம் ஆண்டு ஜனவரி 13ஆம் திகதி இலங்கை வரவுள்ளதாக இலங்கை கத்தோலிக்க திருச்சபைசற்றுமுன்னர் அறிவித்தது.
கொழும்பு ஆயர் இல்லத்தில் இடம்பெற்று கொண்டிருக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே பாப்பரசர் பிரான்சிஸ் இலங்கை விஜயம் தொடர்பில் அறிவிக்கப்பட்டது. மேலும் 14 ஆம் திகதி காலி முகத்திடலில் பாப்பரசர் பிரான்சிஸினால் திருப்பலி ஒப்புகொடுக்கப்படும்
நன்றி வீரகேசரி 



No comments: