ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கத் தயார் : உக்ரேனிய ஜனாதிபதி அறிவிப்பு
எகிப்திய முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பை சேர்ந்த 183 பேருக்கு மரணதண்டனை : நீதிமன்றம் உறுதிப்படுத்தி தீர்ப்பளிப்பு
சிரிய இராணுவ இலக்குகள் மீது இஸ்ரேல் வான் தாக்குதல்
பாகிஸ்தான் பெஷாவர் விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு: பெண் ஒருவர் பலி
எகிப்தில் 3 நிலக்கீழ் புகையிரத நிலையங்களில் குண்டு வெடிப்புகள்
நைஜீரியாவில் குண்டு வெடிப்பு:21 பேர் பலி
காணாமல்போன மலேசிய விமானத்தை தேடுவதற்கான புதிய பிரதேசம் அறிவிப்பு
=================================================================
ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கத் தயார் : உக்ரேனிய ஜனாதிபதி அறிவிப்பு
23/06/2014 உக்ரேனின் புதிய மேற்குலக ஆதரவு ஜனாதிபதி பெட்ரோ பொரோஷென்கோ பிரிவினைவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஞாயிற்றுக்கிழமை இணக்கம் தெரிவித்துள்ளார்.
தனது நாட்டிற்கு அச்சுறுத்தலாகவுள்ள ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியை முடிவுக்கு கொண்டு வரும் முகமாக படுகொலை மற்றும் சித்திரவதைகளுடன் தொடர்பு படாத பிரிவினைவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தான் தயாராகவுள்ளதாக அவர் அறிவிப்புச் செய்துள்ளார்.
கிழக்கு உக்ரேனில் முன்னெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் 10 வார தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் 375 பேர் பலியாகி பல்லாயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ள நிலையில் ஒரு வார பரஸ்பர யுத்த நிறுத்தம் தொடர்பில் கடந்த வெள்ளிக்கிழமை அறிவிப்பு செய்யப்பட்டது.
இந்நிலையில் உக்ரேனால் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கான ஆரம்ப செயற்பாடுகளை உள்ளடக்கி முன்வைக்கப்பட்டுள்ள சமாதான திட்டத்துக்கு ஆதரவளிப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் சனிக்கிழமை மாலை அறிவிப்புச் செய்துள்ளார்.
பெட்ரோ பெரோஷன் கோவால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள இந்த ஒரு வார யுத்த நிறுத்த உடன்படிக்கை இறுதி தீர்மானமாக இருக்கக்கூடாது என புட்டின் கூறினார்.
எனினும் இந்த யுத்த நிறுத்தத்தை பிரிவினைவாதிகள் நிராகரித்துள்ளனர்.
தமது சொந்த யுத்த நிறுத்தத்தை உக்ரேனிய இராணுவம் மீறியுள்ளதாக அவர்கள் குற்றஞ்சாட்டினர்.கிழக்கு உக்ரேனில் சனிக்கிழமை இரவு தொடர்ந்து மோதல்கள் இடம்பெற்றுள்ளன. இதன் போது கிளர்ச்சியாளர்களின் தாக்குதலில் 6 எல்லைக் காவலர்கள் காயமடைந்துள்ளனர்.
அதேசமயம்இ உக்ரேனிலுள்ள 7 ரஷ்ய ஆதரவு தலைவர்களுக்கு எதிராக சொத்து முடக்கம் உள்ளடங்கலான தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது. உக்ரேனில் பதற்ற நிலையை தூண்டி விடும் ரஷ்யாவுக்கு எதிராக மேலதிக தடைகளை விதிக்கப் போவதாக மேற்குலக தலைவர்கள் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.
இந்நிலையில் ரஷ்ய ஜனாதிபதி அலுவலகத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையில் அமைதியான தீர்வொன்றை எட்ட ஒரு தொகை பலமான முன்னடியெடுத்து வைப்புகளை முன்னெடுக்க விளாடிமிர் புட்டின் ஆதரவளிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கிழக்கு உக்ரேனிலுள்ள எதிர்த்தரப்பினரிடையே அர்த்தமுள்ள பேச்சுவார்த்தைகளையும் அரசியல் உறுதிப்பாடுகளை முன்னெடுக்க வழிவகை செய்யப்படும் பட்சத்தில் மட்டுமே மேற்படி சமாதான திட்டம் செயற்படக் கூடியதாக இருக்கும் என புட்டின் வலியுறுத்தியுள்ளார்.
பிரிவினை வாத ஆயுததாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ள கிழக்கு உக்ரேனிய பிராந்தியங்களிலுள்ள கட்டடங்களின் கட்டுப்பாட்டை மீளக் கைப்பற்றுவதற்கு உக்ரேனிய படையினர் போராடி வருகின்றனர்.
டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பிராந்தியங்களிலுள்ள உக்ரேனிய எல்லைக் காவலரண்கள் மூன்றை பிரிவினைவாதிகள் வெள்ளிக்கிழமை இரவு தாக்கியுள்ளனர்.
இதன்போதுஇ பிரிவினைவாதிகள் ஏவு கணைகள் மற்றும் மோட்டார் குண்டுகளைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
அத்துடன்இ டொனெட்ஸ் பிராந்தியத் திலுள்ள கிரமடோர்ஸ்க் விமான நிலையத்துக்கு வெளியிலிருந்த படையினர் மீதும் பிரிவினைவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
நன்றி வீரகேசரி
எகிப்திய முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பை சேர்ந்த 183 பேருக்கு மரணதண்டனை : நீதிமன்றம் உறுதிப்படுத்தி தீர்ப்பளிப்பு
23/06/2014 எகிப்திய முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் தலைவர் மொஹமட் பாடி உட்பட 183 இஸ்லாமியவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளதை அந்நாட்டு நீதிமன்றமொன்று உறுதிப்படுத்தி சனிக்கிழமை தீர்ப்பளித்துள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 14 ஆம் திகதி மின்யா மாகாணத்திலுள்ள பொலிஸ் நிலையமொன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பிலேயே அவர்களுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 683 பேருக்கு மரணதண்டனை வழங்க சிபாரிசு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் அவர்களில் 4 பேருக்கு 15 முதல் 25 வருட சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஏனைய 496 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
மொஹமட் பாடி தனக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்வார் என நம்பப்படுகிறது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பைச் சேர்ந்த முன்னாள் ஜனாதிபதி மொஹமட் முர்ஸி இராணுவத்தால் ஆட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டது முதற்கொண்டு இஸ்லாமியவாதிகளை ஒடுக்கும் முயற்சியில் அந்நாட்டு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
அதேசமயம் பாடிக்கும் ஏனைய 13 பேருக்கும் கடந்த வருடம் இடம்பெற்ற பிறிதொரு மோதல் தொடர்பிலும் மரண தண்டனை விதிக்க சிபாரிசு செய்யப் பட்டுள்ளது.
நன்றி வீரகேசரி
சிரிய இராணுவ இலக்குகள் மீது இஸ்ரேல் வான் தாக்குதல்
23/06/2014 இஸ்ரேலானது சிரியாவில் உள்ள 9 இராணுவ இலக்குகள் மீது வான் தாக்குதல்கள் நடத்தியுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இஸ்ரலுக்கும் சிரியாவுக்குமிடையிலுள்ள எல்லையிலுள்ள கோலன் ஹைம்ஸ் பிராந்தியத்தில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தாக்குதலில் 15 வயது சிறுவன் ஒருவன் கொல்லப்பட்டமைக்கு பதிலடி கொடுக்கும் முகமாகவே இந்த வான் தாக்குதல் நடத்தப்பட்டது.
கோலன் ஹைட்ஸ் பிராந்தியத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் சிறுவனின் தந்தை மற்றும் இஸ்ரேலிய பாதுகாப்பு ஒப்பந்தக்காரர் ஒருவர் ஆகியோர் காயமடைந்தனர். மேற்படி மூவரும் பயணித்த வாகனத்தின் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நன்றி வீரகேசரி
பாகிஸ்தான் பெஷாவர் விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு: பெண் ஒருவர் பலி
25/06/2014 பாகிஸ்தான் பெஷாவர் விமான நிலையத்தில் மர்ம நபர்களின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி பெண் பயணி ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
25/06/2014 எகிப்திய கெய்ரோ நகரிலுள்ள 3 நிலக்கீழ் புகையிரத நிலையங்களில் இன்று புதன்கிழமை சனசந்தடிமிக்க காலை வேளையில் சில நிமிட இடைவெளிகளில் இடம்பெற்ற 4 குண்டுவெடிப்புகளில் சிக்கி குறைந்தது 4 பேர் காயமடைந்துள்ளனர்.
நைஜீரியாவில் குண்டு வெடிப்பு:21 பேர் பலி
26/06/2014 நைஜீரியாவில் வர்த்தக நிலையம் ஒன்றில் நேற்று ஏற்பட்ட குண்டு வெடிப்பு காரணமாக 21 பேர் உயிரிழந்துள்ளனர்.
பாகிஸ்தான் பெஷாவர் விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு: பெண் ஒருவர் பலி
25/06/2014 பாகிஸ்தான் பெஷாவர் விமான நிலையத்தில் மர்ம நபர்களின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி பெண் பயணி ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
நேற்றிரவு 178 பயணிகளுடன் சவூதி அரேபியாவில் இருந்து வந்த விமானம் பெஷாவர் சர்வதேச விமான நிலையத்தில் தரை இறங்கிய போது விமானம் மீது மர்ம நபர்கள் சரமாரியாக துப்பாக்கி பிரயோகம் நடத்தியுள்ளனர்.
விமானத்தை குறிவைத்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிப்பதோடு, சம்பவம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
நன்றி வீரகேசரி
எகிப்தில் 3 நிலக்கீழ் புகையிரத நிலையங்களில் குண்டு வெடிப்புகள்
25/06/2014 எகிப்திய கெய்ரோ நகரிலுள்ள 3 நிலக்கீழ் புகையிரத நிலையங்களில் இன்று புதன்கிழமை சனசந்தடிமிக்க காலை வேளையில் சில நிமிட இடைவெளிகளில் இடம்பெற்ற 4 குண்டுவெடிப்புகளில் சிக்கி குறைந்தது 4 பேர் காயமடைந்துள்ளனர்.
கடந்த வருடம் ஜூலை மாதம் இஸ்லாமிய ஜனாதிபதி மொஹமட் முர்ஸி இராணுவத்தால் ஆட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டது முதற் கொண்டு எகிப்தில் போராளிகளால் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அவற்றில் பல தாக்குதல்கள் பாதுகாப்பு படையினருக்கு எதிரானவையாகும்.
இந்நிலையில் இன்றுபுதன்கிழமை இடம்பெற்ற குண்டு வெடிப்புகளில் ஒரு குண்டு மத்திய கெய்ரோவிலுள்ள கம்ரா புகையிரத நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.
ஏனைய குண்டு வெடிப்புகள் தலைநகரின் புறநகர்ப் பகுதிகளான ஷுப்ரா எல் கெயிமா ஹாடயெக் அல் - கொப்பா ஆகிய இடங்களில் இடம்பெற்றுள்ளன.
மேற்படி குண்டுகளானது ஆரம்ப கட்ட சக்தி குறைந்த குண்டுகள் என பிராந்திய அதிகாரி ஒருவர் கூறினார்.
நன்றி வீரகேசரிநைஜீரியாவில் குண்டு வெடிப்பு:21 பேர் பலி
26/06/2014 நைஜீரியாவில் வர்த்தக நிலையம் ஒன்றில் நேற்று ஏற்பட்ட குண்டு வெடிப்பு காரணமாக 21 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆர்ஜென்டீனாவிற்கும் நைஜீரியாவிற்கும் இடையிலான உலக கிண்ண கால் பந்தாட்ட போட்டி ஆரம்பமாவதற்கு ஒரு மணிநேரத்துக்கு முன்னதாக குறித்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பிரேசில் மற்றும் மெக்சிக்கோ அணிகளுக்கிடையிலான போட்டிகளின் போது நைஜீரியாவின் டமடுரு நகரில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இவ்வாறானதொரு தற்கொலை குண்டு தாக்குதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றதுடன்,இதன் போது 14 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
நன்றி வீரகேசரி
காணாமல்போன மலேசிய விமானத்தை தேடுவதற்கான புதிய பிரதேசம் அறிவிப்பு
26/06/2014 காணாமல்போன மலேசிய எம்.எச்.370 விமானத்தை தேடுவதற்கான புதிய பிரதேசம் தொடர்பில் அவுஸ்திரேலிய அரசாங்கம் அறிவிப்பு செய்துள்ளது.
செய்மதித்தரவுகளை மேலும் பகுப்பாய்வுக்குட்படுத்தியதையடுத்தே மேற்படி அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலிய கடற்கரையின் மேற்கே 18000 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள பிரதேசத்தில் மேற்படி விமானத்தை தேடும் நடவடிக்கை புதிதாக முன்னெடுக்கப்படவுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதிப் பிரதமர் வரென்தரஸ் தெரிவித்தார்.
மலேசிய எம்.எச்.370 விமானம் கடந்த மார்ச் மாதம் 8 ஆம் திகதி கோலாலம்பூரிலிருந்து டீஜிங் நகருக்கு 239 பயணிகளுடன் பயணித்த வேளை காணாமல் போனது.
மேற்படி விமானம் விபத்துக்குள்ளானதாக நம்பப்படுகிறது.
மேற்படி விமானத்தை தென் இந்து சமுத்திரத்தில் தேடுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கை தோல்வியில் முடிவடைந்தது.
இந்நிலையில் அந்த விமானத்தை தேடுவதற்கான கடலுக்கடியிலான புதிய பிரதேசம் குறித்து 64 பக்க அறிக்கையொன்றை அவுஸ்திரேலிய அரசாங்கம் வெளியிட்டுள்ளது.
நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment