இலங்கைச் செய்திகள்


மதுபோதையில் பள்ளிவாசல்கள், கடைகள் மீது தாக்குதல் நடத்திய நால்வர் கைது

வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 62 பேர் கைது

அளுத்கம பிரதேச பாடசாலைகள் மீண்டும் ஆரம்பம் : ஆசிரியர், மாணவர்களின் வரவு வீழ்ச்சி

' நானே என்னை வெட்டிக் கொண்டேன்':வட்டரெக விஜித்த தேரர் வாக்கு மூலம்'

புலனாய்வுப் பிரிவினர் எனக் கூறி வெள்ளவத்தையில் பணம் கொள்ளை:இரு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் கைது

வட்டரக்க விஜித்த தேரர் கைது

 வட மாகாணசபை உறுப்பினர்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு இல்லை : யாழ்.பிரதிப்பொலிஸ் மா அதிபர்

புலிகள் இயக்கத்தை சார்ந்த இருவர் கைது

அளுத்கம சம்பவம் தொடர்பில் 68 பேர் கைது:அஜித் ரோஹண

புலிகள் இயக்கத்தின் ரவிச்சங்கருக்கு எதிராக சிவப்பு அறிக்கை
==================================================================



மதுபோதையில் பள்ளிவாசல்கள், கடைகள் மீது தாக்குதல் நடத்திய நால்வர் கைது

24/06/2014   குரு­ணாகல் பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட மல்­ல­வ­பிட்­டிய மற்றும் நக­ரி­லி­ருந்து சுமார் 6 கிலோ­மீற்றர் தொலைவில் உள்ள கொக்க­ரெல்ல பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட இப்­பா­க­முவ, பன்­னல ஆகிய பகு­தி­களில் இரு பள்­ளி­வா­சல்கள் தாக்­கு­த­லுக்கு உள்­ளா­கி­யுள்­ளன. அத்­துடன் இப்­பா­க­முவ தெகல்­கொடை பகு­தியில் முஸ்லிம் கடை தொகுதி ஒன்றும் தாக்­கு­த­லுக்கு உள்­ளா­கி­யுள்­ளது. 
நேற்று முன்தினம் இரவு இ­டம்­பெற்ற இந்த தாக்­கு­தல்­களின் போது பள்­ளி­வா­சல்­க­ளி­னதும் கடை­க­ளி­னதும் கண்­ணா­டி­க­ள் சேதமடைந்துள்ளன. நேற்று முன் தினம் இரவு 7.00 மணி­ய­ளவில் குரு­ணாகல்-தம்­புள்ளை பிர­தான வீதியில் உள்ள கொக்­க­ரெல்ல பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட இப்பாகமுவ பன்­னல பள்­ளி­வாசல் மீதும் இப்­பா­க­முவ, தெகல்­க­முவ பகு­தி­க­ளி­லுள்ள கடைத்­தொ­குதி மீதும் மது­போ­தையில் வந்த குழு­வி­னரால் தாக்­கு­தல்கள் நடத்­தப்­பட்­டுள்­ளன. இதனால் அப்­ப­கு­தியில் பெரும் பதற்றம் நில­வி­யது.
பன்­னல பகு­தியில் வீதி­யோரம் உள்ள பள்­ளி­வாசல் மீது மது போதையில் வந்த சுமார் 15 பேர் கல்­வீச்சு தாக்­கு­தலை மேற்­கொண்­டுள்­ளனர். இதனால் பள்­ளி­வா­சலின் முன்­பக்க கண்­ணா­டிகள் கடும் சேதத்­துக்கு உள்­ளா­கி­யுள்­ளன.
அத­னை­ய­டுத்து அங்­கி­ருந்து தப்பிச் சென்ற குறித்த குழு­வினர் குரு­ணாகல் தம்­புள்ளை பிர­தான வீதியில் இப்­பா­க­முவ சந்­தியில் உள்ள கடை தொகு­தி­யி­லுள்ள முஸ்லிம் கடை­களை உடன் மூடு­மாறு கூச்­ச­லிட்­டுள்­ளனர். இதன் போது அந்த பகு­தியில் சிவில் உடை­யி­லி­ருந்த பொலிஸ் உத்­தி­யோ­கத்தர் ஒருவர் ஏன் கடை­களை மூட­வேண்டும் என குறித்த குழு­வி­ன­ரிடம் கேள்­வி­யெ­ழுப்­பி­யுள்ளார்.
இத­னை­ய­டுத்து அக்­கு­ழு­வினர் மேலும் கூச்­ச­லிட்ட வண்ணம் கடைகள் மீது கற்கள் மற்றும் பொல்­லு­களால் தாக்­குதல் நடத்­தி­யுள்­ளனர். இதனால் கடை­களின் முன்­பக்க கண்­ணா­டி­க­ளுக்கு கடும் சேதம் ஏற்­பட்­டது. இதனைத் தொடாந்து அப்­ப­கு­தியில் உள்ள முஸ்லிம் வர்த்­தக நிலை­யங்கள் அனைத்தும் மூடப்­பட்­டன.
சம்­ப­வத்தை அடுத்து பிர­தேச வாழ் முஸ்­லிம்கள் பெரும் அச்­சத்­துக்கு உள்­ளா­கி­ய­துடன் அப்­பி­ர­தே­ச­மெங்கும் பெரும் பதற்றம் ஏற்­பட்­டது. அத­னை­ய­டுத்து கொக­க­ரெல்ல பொலிஸார் சம்­பவ இடத்­திற்கு விரைந்­த­துடன் வடமேல் மாகாண சபையின் முஸ்லிம் காங்­கிரஸ் உறுப்­பினர் றிஸ்வி ஜவ­ஹர்ஷா மற்றும் இப்­பா­க­முவ பிர­தேச சபை தவி­சாளர் டீ.ஜே.சுமித் ஆகி­யோரும் ஸ்தலத்­துக்கு சென்று பதற்ற நிலை­மையை கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்­டு­வரும் வித­மாக பொலி­ஸா­ருடன் கலந்­து­ரை­யா­டினர்.
தமது ஊரினை அண்­மித்த பகு­தி­களில் வசிக்கும் பெரும்­பான்­மை­யி­னத்தைச் சேர்ந்­த­வர்­களே இந்த தாக்­கு­தலை நடத்­தி­ய­தா­கவும் அவர்கள் குறிப்­பிட்­டனர்.
மல்­ல­வ­பிட்­டிய பள்­ளி­வாசல் மீதும் தாக்­குதல் இத­னி­டையே குரு­ணாகல் - கண்டி பிர­தான வீதி­யுஇல் உள்ள மல்­ல­வ­பிட்­டிய பகு­தியில் உள்ள பள்­ளி­வாசல் மீதும் நேற்று இரவு தாக்­குதல் நடத்­தப்­பட்­டுள்­ளது. இந்த தாக்­குதல் கார­ண­மாக பள்­ளி­வா­ச­லுக்கு சிறிது சேதம் ஏற்­பட்­டுள்­ள­தாக பிர­தேச மக்கள் குறிப்­பிட்­டனர்.
பள்­ளி­வாசல் மீது தாக்­குதல் நடத்­தி­விட்டு தப்பிச் செல்ல முயன்ற இரு­வரை பிர­தேச மக்கள் மடக்கிப் பிடித்து பொலி­ஸா­ரிடம் ஒப்­ப­டைத்­துள்­ளனர்.
எவ்­வா­றா­யினும் இவ்­விரு சம்­ப­வங்­க­ளு­டனும் தொடர்­பு­டை­ய நால்வரை பொலிஸார் நேற்று கைது செய்­தனர். மது போதையில் இவர்கள் இவ்­வா­றான செயல்­களில் ஈடு­பட்­டுள்­ள­தா­கவும் இதில் வேறு ஏதும் உள் நோக்கம் கிடை­யாது எனவும் பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் அஜித் ரோஹன தெரி­வித்தார்.
கொக­ரெல்ல பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட சம்­ப­வத்­திலும் குரு­ணாகல் பகுதி சம்­ப­வத்­திலும் தொடர்­பு­டை­ய­வர்­க­ளையும் பொலிஸார் கைது செய்­துள்ள நிலையில் அவர்கள் மீது சட்ட நட­வ­டிக்கை மேர்­கொள்­ளப்­ப­ட­வுள்­ள­தா­கவும் அவர் சுட்டிக்காட்டினார்.
குடித்துவிட்டே இவர்கள் கூச்சலிட்டு இந்த செயலை செய்துள்ளதாக சுட்டிக்காட்டிய அவர் விசாரணைகளை பொலிஸார் தொடர்வதாக குறிப்பிட்டார்.
இவ்விரு சம்பவங்களை அடுத்து குருணாகல் மாவட்டதுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபரின் விஷேட அறிவித்தலின் பிரகாரம் முஸ்லிம் பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம்கள் வாழும் பகுதிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  நன்றி வீரகேசரி 









வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 62 பேர் கைது

23/06/2014  பேருவளை,அளுத்கம மற்றும் வெலிப்பன்ன  ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில்  மேலும் நால்வர் இன்று கைது செய்யப்பட்டுள்ளதுடன்,இதுவரை 62 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இந்த சம்பவங்கள் தொடர்பிலான விசாரணைகளுக்கு 20 பொலிஸ் குழுக்களை நியமித்துள்ளதாக  அஜித் ரோஹண மேலும் தெரிவித்தார்.
நன்றி வீரகேசரி















அளுத்கம பிரதேச பாடசாலைகள் மீண்டும் ஆரம்பம் : ஆசிரியர், மாணவர்களின் வரவு வீழ்ச்சி

23/06/2014   பேருவளை அளுத்கம மற்றும் தர்கா நகர் பகுதிகளில் ஏற்பட்ட இனக்கலவரத்தை அடுத்து சுமார் ஒருவார காலம் மூடப்பட்டிருந்த சிங்கள மற்றும் முஸ்லிம் பாடசாலைகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
பாடசாலைகள் திறக்கப்பட்டுள்ள போதிலும் ஆசிரியர்கள் மாணவர்களின் வரவு  வீழ்ச்சியடைந்து காணப்பட்டது. குறிப்பாக அல் ஹ_மைஸரா தேசியப்பாடசாலையில் ஆசிரியர்களின் வரவு மிகவும் வீழ்ச்சியடைந்து காணப்பட்டது.
76 ஆசிரியர்கள் கடமையாற்றும் இப்பாடசாலையில் 38 ஆசிரியர்களே  கடமைக்கு வந்திருந்தனர்.
பேருவளைப் பகுதியில் உள்ள முஸ்லிம் பாடசாலைகளில் கடமையாற்றும் கூடுதலான ஆசிரியர் தர்கா நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
ஆசிரியர்கள், மாணவர்களின் வருகை குறைந்து காணப்பட்ட சில பாடசாலைகள் நேர காலத்துடன் மூடப்பட்டன.
நன்றி வீரகேசரி






' நானே என்னை வெட்டிக் கொண்டேன்':வட்டரெக விஜித்த தேரர் வாக்கு மூலம்

25/06/2014  தனது மர்ம உறுப்பு உள்ளிட்ட உடல் பாகங்களை தானே வெட்டிக்கொண்டதாக ஜாதிக பல சேனாவின் தலைவர் வட்டரெக விஜித்த தேரர் பொலிஸாருக்கு வாக்கு மூலம் அளித்துள்ளார். இதன் படி வட்டெரெக விஜித்த தேரரை கைது செய்வதா இல்லையா என்பதை அவர் வைத்தியசாலையிலிருந்து விடுதலையானதன் பின்னர் தீர்மானிப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அஜித் ரோஹன  குறிப்பிட்டார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் 17 ஆவது அறையில் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்றுவரும் வட்டரெக விஜித்த தேரர் உடல் நிலை தேறி வரும் நிலையில் அவர் வைத்தியசாலையிலிருந்து வெளியேறலாம் என நேற்று எதிர்ப்பார்க்கப்பட்டது. இந் நிலையில் அவர் வைத்தியசாலையிலிருந்து வெளியேறினால் அவரை கைது செய்ய பொலிஸார் தயார் நிலையில் இருப்பதாக கூறப்பட்டது. இது தொடர்பில்  கருத்து தெரிவித்த போதே  அஜித் ரோஹண மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
வட்டெரெக விஜித்த தேரர்' என்னை நானே வெட்டிக்கொண்டேன்' எனவும் நடந்த முழு சம்பவமும் தன்னாலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸாரிடம் வழங்கிய வாக்குமூலத்தில் ஒப்புக்கொண்டுள்ளார். அத்துடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையும் காயங்கள் அனைத்தும் அவராலேயே ஏற்படுத்திக் கொள்ளப்பட்டவை என்பதை உறுதி செய்துள்ளன. இந் நிலையில் பொய்யான முறைப்பாடு அளித்தமை தொடர்பில் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. எனினும் அவரை கைது செய்வதா இல்லையா என்பது குறித்து அவர் வைத்தியசாலையிலிருந்து வெளியேறிய பின்னரேயே தீர்மானிக்கப்படும் என்றார்.
கடந்தவாரம் பண்டாரகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹிரண பாலம் அருகே  வீதியோரத்தில் மயக்க நிலையில் காயங்களுடன் கிடந்த வட்டரெக விஜித்த தேரர் பொலிஸாரால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல் பகுதிகளில் பிளேட் வெட்டுக்காயங்களும் மர்ம உறுப்புப் பகுதியில்  காயங்களும் மருத்துவர்களால் அவதானிக்கப்பட்டது.இது தொடர்பிலான விசாரணைகளை பாணந்துறை பொலிஸ் பிரிவுக்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரூடாக மேற்கொள்ளப்பட்டது. இந் நிலையிலேயே சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கை
நன்றி வீரகேசரி









புலனாய்வுப் பிரிவினர் எனக் கூறி வெள்ளவத்தையில் பணம் கொள்ளை:இரு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் கைது

25/06/2014  வெள்ளவத்தையில் சுமார் 14 இலட்சம் ரூபா பணத்தை வங்கியில் வைப்பிலிடச் சென்ற ஒருவரை புலனாய்வுப் பிரிவினர் எனக் கூறி கடத்தி பணத்தை கொள்ளையிட்டதாக கூறப்படும் வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்தின் இரு கான்ஸ்டபிள்கள் கைது செய்யப்பட் டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டது.
கடந்த 21 ஆம் திகதி வெள்ளவத்தை வியாபார நிலையம் ஒன்றின் பணத்தை அவ் வியாபார நிறுவன உரிமையாளரின் உறவுக்காரரில் ஒருவராகிய வெள்ளவத்தையை சேர்ந்த ஒருவர் வங்கியில் வைப்பிலிட எடுத்துச் சென்றுள்ளார். இந் நிலையில் குறித்த நபரை இடை நடுவே நிருத்தியுள்ள இரு பொலிஸ் கான்ஸ்டபிள்களும் தாம் குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிஸார் எனக் கூறி தம்மை அறிமுகம் செய்துள்ளனர். அதனை தொடர்ந்து முச்சக்கர வண்டியொன்றில் இருவரையும் ஏற்றிக்கொண்டு சென்றுள்ள அவ்விரு கான்ஸ்டபிள்களும் குறித்த நபரிடமிருந்து பணத்தொகையை கொள்ளையிட்டுள்ளனர்.
இந் நிலையில் நேற்று முந்தினம் வெள்ளவத்தை பொலிஸ் நிலைய குற்றவியல் பிரிவு பொலிஸாருக்கு இது தொடர்பில் முறைப்பாடொன்று கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியின் ஆலோசனைக்கு அமைய விசாரணைகளை துரிதப்படுத்திய குற்றவியல் பிரிவு பொலிஸார் கொள்ளையிட்டதாக கூறப்படும் இரு பொலிஸ் கான்ஸ்டபிள்களையும் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
பொலிஸார் மேற்கொண்டுள்ள விசாரணைகளில் 13 இலட்சத்து 65 ஆயிரம் ரூபா பணத்தொகையை இவ்வாறு கடத்தி கொள்ளையிட்டுள்ளமை தெரியவந்துள்ளது. மேலதிக விசாரணைகளை வெள்ளவத்தை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
நன்றி வீரகேசரி







வட்டரக்க விஜித்த தேரர் கைது

25/06/2014 ஜதிக பல சேனாவின் தலைவர் வட்டரக்க விஜித்த தேரர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 
விஜித்த தேரர் தன்னை இனந்தெரியாதோர் தாக்கியதாக குறிப்பிட்டிருந்ததோடு, பின்னர் எவரும் தன் மீது தாக்குதல் மேற்கொள்ளவில்லை எனவும் தன்னை தானே  தாக்கி கொண்டதாகவும் கருத்து ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இந்த சம்பவத்தை  தொடர்ந்து கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் விஜித்த தேரர்  இன்று வைத்தியசாலையிலிருந்து வெளியேறும் போது கைது செய்துள்ளனர்.
நன்றி வீரகேசரி











 வட மாகாணசபை உறுப்பினர்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு இல்லை : யாழ்.பிரதிப்பொலிஸ் மா அதிபர்

25/06/2014   வடக்கு மாகாணசபை உறுப்பினர்களுக்கு வழக்கப்பட்டு வந்த பொலிஸ் பாதுகாப்பினை விலக்குவதாக யாழ்.மாவட்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் இன்று கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
யாழ்.மாவட்டத்தில் மாகாணசபை உறுப்பினர்களான திருமதி அனந்தி சசிதரன்(எழிலன்) பாலச்சந்திரன் கஜதீபன்இசந்திரலிங்கம் சுகிர்தன் ஆகியோருக்கே இன்று நண்பகல் இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, தனிப்பட்ட பொலிஸார் பாதுகாப்பு வழங்குவது தொடர்பில் முடிவெடுக்கும் அதிகாரம் தனக்கு இல்லை என்றும் மேலதிகமாக பாதுகாப்பு தேவையெனக்கருதினால் பாதுகாப்பு அமைச்சுடன் தொடர்பு கொள்ளுமாறும் அக்கடிதத்தில் றொஹான் டயஸ் தெரிவித்துள்ளார். 
கடந்த மாதம் 13 ஆம் திகதியே மாகாணசபை உறுப்பினர்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் இன்றுடன் அந்தப்பாதுகாப்பும் விலக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
அச்சுறுத்தல்கள், தாக்குதல் சம்பவங்களையடுத்தே மாகாணசபை உறுப்பினர்கள் தனிப்பட்ட பொலிஸ் பாதுகாப்பினைக்கோரியிருந்தனர் இன்றுடன் பொலிஸ் பாதுகாப்பு விலக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வடக்கு மாகாணசபையின் பேரவைச் செயலகத்தில் கடந்த மே மாதம் 16 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை நடத்தவிடாது தடுத்த பொலிஸாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று கோரிக்கை விடுத்து அவைத்தலைவர் சீ.வீகே.சிவஞானத்திடம் 16 உறுப்பினர்கள் கையொப்பமிட்டு கடிதம் ஒன்று சமர்ப்பித்துள்ளநிலையில் இவ்வாறு பொலிஸ் பாதுகாப்பு விலக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
நன்றி வீரகேசரி






புலிகள் இயக்கத்தை சார்ந்த இருவர் கைது

25/06/2014 யுத்தத்திற்கு பின்பு தலைமறைவாகி இருந்த தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தை சார்ந்த இருவரை குற்றப்புலனாய்வு பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண தெரிவித்தார். 
கொழும்பு பொலிஸ் தலைமையகத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது;
நாட்டில் 30 வருடமாக யுத்தமொன்றை மேற்கொண்ட பயங்கரவாத இயக்கம் முற்றாக அழிதொழிக்கப்பட்ட போதிலும் விடுதலைப் புலிகள் இயக்கத்தை சார்ந்தவர்கள் யுத்தத்திற்கு பிற்பாடு தலைமறைவாக சிங்கள பிரதேசங்களிலிருந்து புலம் பெயர் தமிழர்களுக்கு தகவல் அனுப்பி வருகின்றனர். 
இதற்கமைய கடந்த 17 ஆம் திகதி விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கிய தரப்பினருள் ஒருவரான சுப்பிரமணியம் ரவிந்திரன் என்பவர் ஹொரனையில வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 
இதற்கமைய குறித்த நபர் யுத்தம் முடிவடைந்த பிற்பாடு ஹொரனை ரைகம் பிரதேசத்தில் வசித்து வந்துள்ளார். இவரை அப்பிரதேசத்தில் பதிவு செய்வதற்கு அப்பிரதேசத்தைத் சேர்ந்த கிராம சேவகர் இலஞ்சம் பெற்றுள்ளார். 
இதன்படி அப்பிரதேச கிராம சேவகரை கைது செய்ய முற்பட்ட வேளை அவர் தப்பிச் சென்றுள்ளார். குறித்த கிராம சேவகர் தற்போது ஓய்வு பெற்றுள்ளதாக தெரிய வருகிறது. 
விடுதலை புலிகள் இயக்த்தை சேர்ந்த சுப்பிரமணியம் என்பவர் கிளிநொச்சியை சேர்ந்தவர் எனவும் தெரிய வருகிறது. 
அதேபோன்று கடந்த 19 ஆம் திகதி தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் கடற்படகு இயந்திர பொறுப்பாளராக கடமையாற்றிய திருநாவுக்கரசு பிரதீபன் என்பவரே இரண்டாவதாக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 
திருநாவுக்கரசு பிரதீபன் என்பவரும் கிளிநொச்சியை சேர்ந்தவராக கருதப்படுகிறது. குறித்த நபர் பிரான்ஸிற்கு செல்ல முற்பட்ட வேளை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
நன்றி வீரகேசரி








அளுத்கம சம்பவம் தொடர்பில் 68 பேர் கைது:அஜித் ரோஹண


26/06/2014 அளுத்­கம சம்­பவம் தொடர்பில் இது­வரை 68 பேரை கைது­செய்­யப்­பட்­டுள்ள அதே­வேளை 44 பேரை நீதி­மன்­றத்­தில் ஆஜர்­ப­டுத்­தி­யுள்­ள­தாக பொலிஸ் ஊடக பேச்­சா­ளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­ச­க­ரு­மான அஜித் ரோஹண தெரி­வித்தார்.
இதே­வேளை, பாணந்­துறை நோலிமிட் தீக்­கி­ரை­யாக்­கப்­பட்­டமை தொடர்பில் விசா­ரணை மேற்­கொள்­ளப்­பட்டு வரு­வ­தா­கவும் அவர் தெரி­வித்தார்.
கொழும்பு பொலிஸ் தலை­மை­ய­கத்தில் நேற்று இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டின் போதே அவர் இதனை தெரி­வித்தார்.
இது­ தொ­டர்பில் அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது;
கடந்த 15 ஆம் திக­தி­யன்று அளுத்­கம பேரு­வளை மற்றும் தர்கா நகர் பகு­தி­களில் இடம்­பெற்ற வன்­முறைச் சம்­ப­வங்­களில் சம்­பந்­தப்­பட்ட 68 பேரை இது­வரை கைது செய்­துள்­ள­துடன், 44 பேரினை நீதி­மன்­றத்தில் ஆஜர்­ப­டுத்­தி­யுள்­ளனர். குறித்த சம்­ப­வங்­களை விசா­ரணை செய்­வ­தற்­காக 20 பொலிஸ் குழுக்கள் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளன.
இத­வேளை, குறித்த சம்­ப­வங்கள் தொடர்பில் இறுவெட்டு உள்­ளிட்ட ஆதா­ரங்கள் இருக்­கு­மாயின் பொலி­ஸாரிடம் சமர்­பிக்­கு­மாறு வேண்­டப்­ப­டு­கின்­றனர்.
அத்­தோடு ஆட்டுப் பண்­ணை­யொன்றை தீ வைத்த 30 பேரை பொலிஸார் கைது செய்­துள்­ள­துடன் கோழிப் பண்­ணை­யொன்றில் கொல்­லப்­பட்­டி­ருந்த சிவ­லிங்கம் தொடர்
பில் பிர­தான சந்­தேக நபர் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.
அதே­போன்று பாணந்­துறை நோலி­மிட்டில் தீயி­டப்­பட்ட சம்­பவம் தொடர்பில் விசா­ரணைக் குழுக்­களின் அறிக்கை இது­வ­ரையில் சமர்­ப்பிக்­கப்­ப­ட­வில்லை. சமர்­ப்பிக்­கப்­பட்­ட­வுடன் அதற்­கான நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­படும்.
அத்­தோடு, அளுத்­கம வன்­முறை தொடர்பில் கைது செய்­யப்­ப­டு­ப­வர்­க­ளுக்கு எதிராக தரா­தரம் பாராமல் சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்.
முஜிபுர் ரஹ்­மான் மீது விசா­ரணை அத்­தோடு கடந்த 19 ஆம் திகதி ஹர்த்தால் அனுஷ்­டிக்­கு­மாறு அச்­சு­றுத்­தியதன் பேரில் 5 பேர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­துடன் குறித்த நபர்கள் மாளி­கா­வத்­தை­யி­லுள்ள மேல் மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானின் காரியாலயத்திலிருந்தே புறப்பட்டனர்.
இது தொடர்பாக நேற்று குற்றப் புலனாய்வு பிரிவினரால் அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நன்றி வீரகேசரி










புலிகள் இயக்கத்தின் ரவிச்சங்கருக்கு எதிராக சிவப்பு அறிக்கை


26/06/2014 வவுனியா நீதிமன்றத்தினால் 30வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட விடுதலை புலிகள் இயக்கத்தின் கடற்பிரிவுகளுக்கு பொறுப்பாளர் ஒருவரான கனகராஜ் ரவிச்சங்கருக்கு எதிராக சிவப்பு அறிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.
கொழும்பு பொலிஸ் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;
முன்னாள் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் கடற்படையின் முக்கிய பொறுப்பாளராக செயற்பட்ட கனகராஜ் என்பவர் வட கொரியாவில் பயிற்சி பெற்று யுத்த காலத்தில் 3 ஆயுத கப்பல்களை கொண்டு வந்துள்ளார்.
இதற்கமைய குறித்த நபர் தற்போது கனடாவில் இருப்பதாக தெரியவந்துள்ளது. இதன்படி 1996 ஆம் ஆண்டில் மார்ச் முதலாம் திகதி டிசம்பர் 31ம் திகதி வரையும் 1997 மற்றும் 1999 ஆண்டுகளில் குறித்த ஆயுதக் கப்பல்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.
இது தொடர்பாக குறித்த நபர் மீது வவுனியா நீதிமன்றத்தில் மூன்று வழக்குகள் தொடுக்கப்பட்டிருந்தது. ஒரு வழக்குக்கு 10 வருடம் என்ற அடிப்படையில் மூன்று வழக்குகள் 30 வருடம் கடூழிய சிறை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் குறித்த நபரை இலங்கைக்கு வரவழைக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. 30 வருடங்களாக யுத்தமொன்றை முகங்கொடுத்த நாங்கள் இனிமேலும் யுத்தமொன்றை மேற்கொள்ள தயாரில்லை. 
அதற்கமைவாகவே விடுதலைப்புலிகள் இயக்கத்தை சார்ந்தவர்களை கண்டுபிடிப்பதற்கு இலங்கை பொலிஸ் தீவிரமாக செயற்பட்டு வருகின்றது.
இந்நிலையில் கனகராஜா என்பவர் மிகவும் நாசக்கார  செயலில் ஈடுபட்டமையை கருத்தில் கொண்டு இந்த சிவப்பு அறிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே இலங்கை பொலிஸினால் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தை சார்ந்த 30 பேருக்கு எதிராக சிவப்பு அறிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நன்றி வீரகேசரி














No comments: