.
அவுஸ்திரேலியாவில் மேற்கு
மாநில மாநகரமான பேர்த்தில் எதிர்வரும் 29 ஆம் திகதி (29-06-2014) ஞாயிற்றுக்கிழமை மாலை
5..30 மணிக்கு தமிழ் அரங்கம் நிகழ்ச்சி
நடைபெறவிருக்கிறது.
பேர்த்தில்
இயங்கும் மேற்கு அவுஸ்திரேலியா தமிழ்ச்சங்கத்தின்
தலைவர் திரு. அருண். அண்ணாத்துரை பேர்த்
பாலமுருகன் தேவஸ்தானத்தின் தலைவர்
திரு. ஜெயசீலன் ஆகியோரின் ஏற்பாட்டில் பாலமுருகன்
தேவஸ்தான மண்டபத்தில் தமிழ் அரங்கு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
மெல்பனில்
வதியும் எழுத்தாளர்
திரு. லெ. முருகபூபதி வாழ்வு அனுபவமும் படைப்பு இலக்கியமும் என்ற
தலைப்பிலும் கவிஞர் திரு.
எம். ஜெயராம சர்மா நாங்களும்
தமிழும் என்ற தலைப்பிலும் தமிழ் நூலகம்
அமைப்பின் இணைப்பாளர்களில் ஒருவரான திரு.
கோபி. கோபிநாத் வலைப்பூக்களும் இணையத்தளங்களும் என்ற தலைப்பிலும் உரையாற்றுவார்கள்.
தமிழ் அரங்கம்
நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் இலக்கிய
அன்பர்களின் அனுபவப் பகிர்வும் கலந்துரையாடலும் இடம்பெறும்.
---0----
No comments:
Post a Comment