இலங்கைச் செய்திகள்




தேர் குடைசாய்ந்ததில் ஆலய பிரதமகுரு படுகாயம் : யாழில் சம்பவம்

பிள்ளையார் ஆலய மூல விக்கிரகங்கள் திருட்டு : காரைநகரில் சம்பவம்

ஊடகவியலாளர் மீது யாழில் தாக்குதல்

கோபி, தேவியன், அப்பன் ஆகி­யோரின் உடல்கள் நீதி­மன்ற உத்­த­ர­வுக்­க­மைய அனு­ரா­த­பு­ரத்தில் அடக்கம்

பயங்கரவாதப் பட்டியலில் பொது பலசேனா

====================================================================

தேர் குடைசாய்ந்ததில் ஆலய பிரதமகுரு படுகாயம் : யாழில் சம்பவம்


15/04/2014  யாழ்ப்பாணம் கலட்டிப்பிள்ளையார் ஆலயத்தின் தேர்திருவிழா நேற்று முற்பகல் 10 மணியளவில் இடம்பெற்றபோது தேர் தேர்குடை சாய்ந்ததில் பிரதம குரு படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பக்தர்கள் எவருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும் ஆலயத்தின் பிரதம குரு படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
புது வருடப்பிறப்பு தினத்தில் இவ்வாறான ஒரு சம்பவம் இடம்பெற்றமை பக்தர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



நன்றி வீரகேசரி 






பிள்ளையார் ஆலய மூல விக்கிரகங்கள் திருட்டு : காரைநகரில் சம்பவம்

15/04/2014   காரைநகர் துறைமுகப் பிள்ளையார் ஆலய மூல விக்கிரகம் உட்பட அதனுடன் இருந்த மூன்றுக்கும் மேற்பட்ட விக்கிரகங்கள் களவு போயுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் ஆலய தர்மகார்த்தா சபையினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பாலஸ்தாபனம் செய்வதற்க்காக மூல விக்கிரகம் உட்பட ஏனைய விக்கிரகங்களும் ஆலயத்தின் உட்புறத்தில் தனியான ஒரு இடத்தில் வைக்கப்பட்டு இருந்தது.
நேற்று முன்தினம் இரவு விக்கிரகங்கள் வைக்கப்பட்டு இருந்த அறையை உடைத்து உட்புகுந்த  திருடர்கள் ஆலயத்தின மூல விக்கிரகம் உட்பட ஏனைய விக்கிரகங்கங்களையும் திருடிச் சென்றுள்ளார்கள்.
ஊர்காவற்றுறை பொலிசார் குறிப்பிட்ட திருட்டு சம்பவம் சம்பந்தமாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.       நன்றி வீரகேசரி








ஊடகவியலாளர் மீது யாழில் தாக்குதல்

15/04/2014  யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் மீது இனம்தெரியாத நபர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம்  நேற்று திங்கட்கிழமை இரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
வடமராட்சி, மாலுசந்தி பகுதியை சேர்ந்த 29 வயதுடைய சிவஞானம் செல்வதீபன் என்ற ஊடகவியலாளரே இவ்வாறு தாக்குதலுக்குள்ளானவராவார்.
வல்லை புறாப்பொறுக்கிச் சந்திக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்த இவரின் பின்னால் சென்ற இனம்தெரியாதோர் நீ ஊடகவியலாளரா? என கேள்வி எழுப்பியதோடு தலையில் பலமாக தாக்கி உள்ளதாக தெரியவருகின்றது.
பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர் மந்திகை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நன்றி வீரகேசரி 

 கோபி, தேவியன், அப்பன் ஆகி­யோரின் உடல்கள் நீதி­மன்ற உத்­த­ர­வுக்­க­மைய அனு­ரா­த­பு­ரத்தில் அடக்கம்

16/04/2014  வவு­னியா, நெடுங்­கேணி, வெடி­வைத்த கல்லு பகு­தியில் உள்ள காட்டில் தப்பிச் செல்ல முற்­பட்ட போது இரா­ணு­வத்­தி­னரின் துப்­பாக்கிப் பிர­யோ­கத்தில் உயி­ரி­ழந்த தமி­ழீழ விடு­தலைப் புலி­களின் புதிய தலைவர் என அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்ட கோபி,தேவியன் மற்றும் அப்பன் ஆகி­யோரின் உடல்கள் அனு­ரா­த­பு­ரத்தில் புதைக்­கப்­பட்­டன.
இந்த நட­வ­டிக்­கை­யா­னது நீதி­மன்ற உத்­த­ர­வுக்­க­மைய கடந்த 12 ஆம் திகதி சனிக்கிழமை மேற்­கொள்­ளப்­பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் அஜித் ரோஹன தெரி­வித்தார்.
இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் அஜித் ரோஹன மேலும் தெரி­வித்­த­தா­வது,
சம்­பவம் தொடர்பில் இரா­ணு­வத்­தி­ன­ரூ­டாக பொலி­ஸா­ருக்கு தகவல் அளிக்­கப்­பட்­டது. இதனை அடுத்து பொலிஸார் விஷேட விசா­ர­ணை­களை ஆரம்­பித்­தனர். நீதிவான் நீதி­மன்ற நீதி­ப­தியின் ஸ்தல விசா­ர­ணைகள் கெப்பிட்டிக்கொல்லாவ நீதிவான் நீதி­மன்ற நீதி­ப­தி­யூ­டாக கடந்த வெள்­ளிக்­கி­ழமை முன்­னெ­டுக்­கப்­பட்­டது.
இந் நிலையில் நீதிவான் உத்­த­ர­வுக்­க­மைய கோபி,ப்பன்,தேவியன் ஆகி­யோரின் சட­லங்கள் பிரேத பரி­சோ­த­னைக்­காக அனு­ரா­த­புரம் ஆதா­ர­வைத்­தி­ய­சா­லைக்கு கொண்­டு­செல்­லப்­பட்­டது. அங்கு 12 ஆம் திகதி சனி­க்கிழமை விஷேட சட்ட வைத்­திய அதி­கா­ரி­யூ­டாக பிரேத பரி­சோ­த­னைகள் மேற்­கொள்­ளப்­பட்­ட­து­டன் அதனை தொடர்ந்து நீதி­மன்ற உத்­த­ர­வுக்­க­மைய அனு­ரா­த­பு­ரத்­தி­லேயே அந்த சட­லங்கள் அடக்கம் செய்­யப்­பட்­டன. என்றார்.
இத­னி­டையே இரா­ணு­வத்­தி­னரின் துப்­பாக்கிப் பிர­யோ­கத்தில் உயி­ரி­ழந்த மூவ­ரி­னதும் சட­லங்கள் அனு­ரா­த­புரம் ஆதார வைத்­தி­ய­சா­லைக்கு கொண்டு செல்­லப்­பட்ட போது அங்கு அம்­மூ­வ­ரி­ன­தும் உற­வி­னர்­களும் வருகை தந்­தி­ருந்­தனர்.
கோபியின் அம்­மாவும், மனை­வியும் இதன் போது வைத்­தி­ய­சா­லையில் கோபியை அடை­யாளம் காட்­டி­ய­துடன் பொலி­ஸா­ருக்கும் வாக்கு மூலம் அளித்­தனர். இதனை விட தேவி­யனும் அவ­ரது உற­வி­னர்­களால் அடை­யாளம் காணப்­பட்டார்.
எவ்­வா­றா­யினும் அப்­பனின் சகோ­த­ரர்கள் இருவர் வைத்­தி­ய­சா­லைக்கு வந்­தி­ருந்த போதும் அப்­பனை அடை­யாளம் காண அவர்­களால் முடி­ய­வில்லை. அப்­ப­னு­ட­னான தொடர்­புகள் துண்­டிக்­கப்­பட்டு பல வரு­டங்கள் ஆவதால் அவரை அடை­யாளம் காண்­பதில் சிக்கல் உள்­ள­தாக பொலி­ஸா­ரிடம் அவர்கள் குறிப்­பிட்­டுள்­ளனர்.
எவ்­வா­றா­யினும் பாது­காப்பு தரப்­பினர் மேற்­கொண்ட விசா­ர­ணை­களின் பல­னாக வெடி­வைத்த கல்லு பகு­தியில் வைத்து இரா­ணு­வத்­தி­னரால் சுட்­டுக்­கொல்­லப்­ப ட்ட மூவரும் தேடப்­பட்­டு­வந்த கோபி, தேவியன் மற்றும் அப்பன் ஆகியோரே என உறுதிப்படுத்தப்பட்டதுடன் அது தொடர்பிலான அறிவித்தலும் பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்டது.
இந் நிலையிலேயே நீதிமன்ற உத்தர்வுக்கமைய கோபி, தேவியன் மற்றும் அப்பன் ஆகி யோரின் சடலங்கள் அனுராதபுரத்தில் அரு கருகே அடக்கம் செய்யப்பட்டமை குறிப் பிடத்தக்கது.
நன்றி வீரகேசரி








 பயங்கரவாதப் பட்டியலில் பொது பலசேனா


16/04/2014 பொதுபலசேனா ஒரு பயங்கரவாத அமை ப்பு என பயங்கரவாத அமைப்புக்களை பட் டியலிடும் பிரபல சர்வதேச நிறுவனமான 'ட்ரக்' எனும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
சர்வதேச அளவில் அரசியல் வன்முறைகள் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்ளும் அமெரிக்காவை தளமாகக்கொண்ட 'பயங் கரவாத ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுக் கூட்டமைப்பு' ( Terrorism Research & Analysis Consortium (TRAC) ) எனும் நிறுவனமே பொதுபலசேனாவை பய ங்கரவாத அமைப்பாக பெயரிட்டுள்ளது.பொதுபலசேனா அமைப்பு இலங்கை யில் செயற்பட்டுவரும் விதம் தொடர்பில் ஆராய்ந்ததன் பின்னரே அதனை பயங்க ரவாத அமைப்பாக பெயரிட்டுள்ளது.
இது குறித்து பயங்கரவாத ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுக் கூட்டமைப்பான 'ட்ரக்' வெளியிட்டுள்ள விளக்கத்தில் இலங்கையில் முஸ்லிம்கள் மற்றும் கத்தோலிக்கர்களுக்கு எதிராக பொது பல சேனா அமைப்பு தொடர்ந்தும் செயற்பட்டுவருவதாகவும் குறித்த சிறுபானமையின மதப் பிரிவினரின் மதஸ்தலங்கள் மீது அவர்கள் வன்முறைகளை பிரயோகித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன் பொது பல சேனா அமைப்பானது இலங்கை அரசுடன் மிக சமீபமாக செயற்படுவதாகவும் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவுடன் நெருங்கிய தொடர்பினைப் பேணுவதாகவும் அந்த அமைப்பின் இணையத்தளத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனை விட 'மென்மையான இலக்குகள் மீது பயங்கரவாத செயல்களை ஒத்ததாக உள்ளது' என பொது பல சேனா அமைப்பை பயங்கரவாத அமைப்பாக பெயரிட்டமைக்கான காரணத்தை விளக்கியுள்ள 'ட்ரக்'அமைப்பு மியன்மாரின் பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையதாக கூறப்படும் விராது தேரருடன் பொது பல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞான சார தேரர் இணைந்து காணப்படும் புகைப்படத்தினையும் தனது இணையத்தில் பிரசுரித்து அதனூடாக பயங்கரவாதம் தொடர்பில் கேள்வி எழுப்பியுள்ளது.
சுமார் 3800 பேர் வரையிலான கல்வி பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி தொடர்பிலான பகுப்பாய்வாளர்களை ஒன்றிணைத்து செயற்படும் ஒரு அமைப்பான பயங்கரவாத ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுக் கூட்டமைப்பு எனும் 'ட்ரக்' அமைப்பே மேற்படி பொது பல சேனாவை இவ்வாறு பயங்கரவாத தடைப் பட்டியலில் சேர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
எவ்வாறாயினும் தமது அமைப்பு பயங்கரவாத அமைப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டமையை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அதனை முற்றாக நிராகரிப்பதாகவும் பொது பல சேனா அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் டிலந்த விதானகே குறிப்பிட்டுள்ளார். தமது அமைப்புடன் எவ்வித கலந்துரையாடலும் இன்றியே குறித்த அமைப்பு பயங்கரவாத அமைப்பாக தம்மை பெயரிட்டுள்ளதாகவும் அது ஜனநாயக அமைப்பொன்றின் இலட்சனம் அன்று எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மியன்மார் விரத்து தேரருடன் பொதுபல சேனா தேரர் சந்தித்து படம் எடுத்துக் கொண்டதால் தம்மை பயங்கரவாத அமைப்பு என்று கூற முடியாது எனவும் அப்படியாயின் தடை செய்யப்பட்ட புலிகள் அமைப்புடன் தொடர்பு வைத்திருந்த நோர்வே பயங்கரவாத பட்டியலில் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுபல சேனா பயங்கரவாத அமைப்பு இல்லை அது மிகவும் பகிரங்கமாக செயற்படும் அமைப்பு என அவர் தெரிவித்துள்ளார்.சிங்கள பௌத்த மக்களுக்கு உலகில் விடுக்கப்படும் அழுத்தம் இதன்மூலம் வெளிப்படுவதாக டிலந்த வித்தானகே குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை பிரித்தானிய தமிழர் பேரவைஇ கனேடியன் தமிழ் காங்கிரஸ் மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகிய அமைப்புக்களையும் 'ட்ரக்' என்ற அமைப்பு பயங்கரவாத அமைப்பாக பெயரிட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரி

No comments: