உலக புகைப்பட போட்டியில் மட்டக்களப்பு மாணவனது புகைப்படம் தெரிவு



News Service
உலக வங்கியினால் நடத்தப்பட்ட உலக புகைப்பட போட்டியில் தென்னாசிய பிரிவில் மட்டக்களப்பு பட்டிருப்பு தேசிய பாடசாலை மாணவன் திவ்வியராஜ் சயந்தன் என்ற மாணவன் வெற்றி பெற்றுள்ளார். அவர் அனுப்பி வைத்த புகைப்படம் தென்னாசிய பிரிவில் தெரிவு செய்யப்பட்ட இரு படங்களில் ஒன்றாகும். உலக அளவில் 6பிரிவுகளா இந்த போட்டி நடத்தப்பட்டது. இதில் தென்னாசிய பிரிவிலேயே இம்மாணவன் அனுப்பி வைத்த புகைப்படம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. குடும்ப வறுமை காரணமாக வீதி ஓரத்தில் தேங்காய் விற்கும் சிறுவன் ஒருவனை படம் பிடித்து அனுப்பிவைக்கப்பட்டபோது அப்படம் சிறந்த படமாக தெரிவு செய்யப்பட்டிருக்கிறது.

No comments: