உலகச் செய்திகள்


கிம் ஜொங்- உன்னின் முன்னாள் காதலிக்கு மரண தண்டனை: ஆபாச பட விவகாரமா? மனைவியின் பழிவாங்கலா?

ஐரோப்பாவின் மிகப்பெரிய நூலகம் பேர்மிங்ஹாமில்!

சிரிய கடல் பிராந்தியத்துக்கு புலனாய்வு கப்பலை அனுப்பியுள்ள ரஷ்யா?

சிரி­யா­வி­லி­ருந்து 2 மில்­லியன் அக­திகள் வெளி­யேற்றம்
--------------------------------------------------------------------------------------------

கிம் ஜொங்- உன்னின் முன்னாள் காதலிக்கு மரண தண்டனை: ஆபாச பட விவகாரமா? மனைவியின் பழிவாங்கலா?

30/08/2013 வட கொரியாவின் ஆட்சியாளரான கிம் ஜொங்- உன்னின் முன்னாள் காதலியான பாடகியொருவரும், அப் பெண் அங்கம் வகித்த இசைக்குழுவின் உறுப்பினர்களும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆட்சியாளரான கிம் ஜொங்- உன்னின் உத்தரவுக்கமையவே இவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆபாச பட விவகாரமொன்றே இத்தண்டனைக்கான காரணமெனத் தெரிவிக்கப்படுகின்றது.
சுட்டுக்கொல்லப்பட்ட பாடகியின் பெயர் ஹயோன் சொங்-வொல் எனவும் அவரோடு அவர் அங்கம் வகிக்கும் இசைக்குழுவைச் சேர்ந்த பாடகர்கள், இசைக்கலைஞர்கள் என 12 பேர் பொது இடத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
அவ் இசைக்குழுவின் பெயர் 'ஹுனாசு' எனவும் இக்குழு உறுப்பினர்கள் அமைவரும் இணைந்து தாமே ஆபாசப்படங்களில் நடித்து அவற்றை விற்பனை செய்துள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இம்மாதம் 17 ஆம் திகதி இவர்கள் கைதுசெய்யப்பட்டதாகவும், 20 ஆம் திகதி இவர்களுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
வட கொரியாவின் ஆட்சியாளரான கிம் ஜொங்- உன் மற்றும்  ஹயோன் சொங்-வொல் ஆகிய இருவரும் 13 வருடங்களுக்கு முன்னர் ஒருவரையொருவர் சந்தித்துள்ளனர்.
எனினும் கிம் ஜொங்- உன்னின் தந்தையும் தென்கொரியாவின் முன்னாள் ஆட்சியாளரான கிம் ஜொங்-இல் இக்காதலுக்கு சம்மதம் தெரிவிக்காமையால் அவர்கள் பிரிய நேர்ந்துள்ளது.
இதன்பின்னர் ஹயோன் சொங்-வொல் வேறு ஒருவரை மணந்துள்ளார்.





ஆனால் கிம் ஜொங்-இல் மறைவிற்கு பின்னர் குறித்த ஜோடி மீண்டும் இணைந்ததாக தகவல் வெளியாகியிருந்தது.
இதேவேளை கிம் ஜொங்- உன்னின் புதிய மனைவியான ரி சொல்-ஜுவும் இதே இசைக்குழுவின் உறுப்பினரொருவரென தெரிவிக்கப்படுகின்றது.
எனவே கணவனின் முன்னாள் காதலியான ஹயோன் சொங்-வொல்லை பழிவாங்கும் நோக்குடன்  ரி சொல்-ஜு மேற்கொண்ட சதியாக இது இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது.நன்றி வீரகேசரி   









ஐரோப்பாவின் மிகப்பெரிய நூலகம் பேர்மிங்ஹாமில்!

29/08/2013 ஐரோப்பாவின் மிகப்பெரிய நூலகம் இங்கிலாந்தின் பேர்மிங்ஹாமில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 3 ஆம் திகதி திறந்து வைக்கப்படவுள்ளது.
இதனை நிர்மாணிக்க 3 வருடங்கள் தேவைப்பட்டுள்ளதுடன், மொத்த நிர்மாண செலவு 189 மில்லியன் பவுண்ஸ்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நூலகத்தின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் இவ்வருடம் ஏப்பிரல் மாதமே இது நிறைவடைந்துள்ளது.
கட்டிடவியலாளரான பிரன்சைன் ஹவுபனினாலேயே இது நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
மிகவும் நவீனமான முறையில் இதன் உள்ளக வேலைப்பாடுகள் அமைக்கப்பட்டுள்ளன.
அரிய புத்தகங்கள், புகைப்படங்கள் என பல மேற்படி நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

நன்றி வீரகேசரி







சிரிய கடல் பிராந்தியத்துக்கு புலனாய்வு கப்பலை அனுப்பியுள்ள ரஷ்யா?

03/09/2013 ரஷ்­யா­வா­னது சிரி­யா­வுக்கு அப்பால் கருங்­கடல் பிராந்­தி­யத்­துக்கு தனது புல­னாய்வு கப்­பலை அனுப்பி வைத்­துள்­ள­தாக இரா­ணுவ வட்­டா­ர­மொன்றை மேற்கோள் காட்டி ‘இன்டர் பக்ஸ்’ செய்தி முகவர் நிலையம் திங்­கட்­கி­ழமை செய்தி வெளி­யிட்­டுள்­ளது.

சிரி­யாவில் இர­சா­யன ஆயுத தாக்­கு­தல்கள் நடத்­தப்­பட்­டுள்­ள­மைக்­கான சான்­றுகள் கிடைக்கப் பெற்­ற­தை­ய­டுத்து, அந்­நாட்டின் மீது இரா­ணுவ நட­வ­டிக்­கையை மேற்­கொள்ள மேற்­கு­லக நாடுகள் திட்­ட­மிட்டு வரு­வதை ரஷ்யா கவ­லை­யுடன் அவ­தா­னித்து வரு­வ­தாக கூறப்­ப­டு­கி­றது.

இந்­நி­லையில் ரஷ்­யாவின் ‘எஸ்­.எஸ்.வி. - 201’ புல­னாய்வு கப்­ப­லா­னது ஞாயிற்­றுக்­கி­ழமை மாலை கிழக்கு மத்­திய தரை கடல் பிராந்­தி­யத்­துக்­கான பய­ணத்தை ஆரம்­பித்­துள்­ள­தா­கவும், அந்தக் கப்­ப­லி­லுள்ள குழு­வினர் பிராந்­தி­யத்தில் மோதல் ஒன்று கிளர்ந்­தெ­ழு­வது தொடர்பான தகவல்களை சேகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நன்றி வீரகேசரி









சிரி­யா­வி­லி­ருந்து 2 மில்­லியன் அக­திகள் வெளி­யேற்றம்

04/09/2013 சிரி­யா­வி­லி­ருந்து 2 மில்­லியன் பேர் அக­தி­க­ளாக வெளி­யே­றி­யுள்­ள­தாக ஐக்­கிய நாடுகள் அக­திகள் முகவர் நிலையம் செவ்­வாய்க்­கி­ழமை தெரி­வித்­துள்­ளது.

அவர்­களில் 700,000 பேர் லெப­னானில் தஞ்­ச­ம­டைந்­துள்­ள­தா­கவும் எந்­த­வொரு நாட்­டி­னரை விடவும் அதி­க­ளவில் இடம்­பெ­யர்ந்­த­வர்­க­ளாக சிரி­யர்­களே உள்­ள­தா­கவும் மேற்­படி ஐக்­கிய நாடுகள் அக­திகள் முகவர் நிலைய மதிப்­பீடு கூறு­கி­றது.

இந்­நி­லையில் சிரிய படை­யி­னரால் இர­சா­யன ஆயு­தங்கள் பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக கூறப்­படும் குற்­றச்­சாட்டு தொடர்பில் அந்­நாட்­டிற்கு எதி­ராக இரா­ணுவ நட­வ­டிக்­கை­யொன்றை முன்­னெ­டுக்க அமெ­ரிக்­காவும் பிரான்ஸும் தொடர்ந்து வலி­யு­றுத்தி வரு­கின்­றன.

அந்­நாட்டை விட்டு வெளி­யே­று­வ­தற்கு நிர்ப்­பந்­திக்­கப்­பட்­ட­வர்­களில் அரைப் பங்­கினர் சிறு­வர்கள் எனவும் அவர்­களில் முக்கால் பங்­கினர் 11 வய­துக்கு கீழ்ப்­பட்­ட­வர்கள் எனவும் அந்த அறிக்கை மேலும் தெரி­விக்­கி­றது.

Syria

இடம்­பெ­யர்ந்­த­வர்­களில் 118,000 பேர் மட்­டுமே ஏதோ ஒரு வகையில் கல்­வியை தொடர்­வது சாத்­தி­ய­மா­க­வுள்­ள­தா­கவும் அவர்­களில் ஐந்தில் ஒரு பங்­கினர் மட்­டுமே ஏதோ ஒரு வகை ஆலோ­ச­னையைப் பெறு­வ­தா­கவும் மேற்­படி அறிக்­கையில் சுட்டிக் காட்­டப்­பட்­டுள்­ளது.

இந்த அகதிச் சிறு­வர்கள் எதிர்­கா­லத்தில் சிரி­யாவை மீளக்­கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கு உதவ முடி­யா­த­வர்­க­ளாக மாறும் அபா­ய­முள்­ள­தாக ஐக்­கிய நாடுகள் அக­திகள் முகவர் நிலையம் எச்­ச­ரித்­துள்­ளது.

சிரிய அக­திகள் அதி­க­ளவில் லெப­னா­னையே வந்­த­டைந்­துள்­ள­துடன் அந்­நாட்டில் ஒவ்­வொரு 6 லெப­னா­னி­யர்­க­ளுக்கும் ஒருவர் என்ற வீதத்தில் சிரிய அக­திகள் தொகை காணப்­ப­டு­கின்­றது.

அதே­ச­மயம் அதி­க­ளவில் சிரிய அக­திகள் தஞ்­ச­ம­டைந்த நாடுகள் வரி­சையில் ஜோர்­தானும் துருக்­கியும் முறையே இரண்டாம் மூன்றாம் இடங்­களில் உள்­ளன.

97 சத­வீத சிரிய அக­திகள் தமது நாட்டை சூழ்ந்­துள்ள நாடு­களில் தஞ்­ச­ம­டைந்­துள்­ள­தா­கவும் அதனால் அந்­நா­டுகள் தமது உட்­கட்­ட­மைப்பு, பொரு­ளா­தாரம் மற்றும் சமூகம் என்­ப­ன­வற்றில் பெரும் சுமையை எதிர்­கொண்­டுள்­ள­தாகவும் கூறப்­ப­டு­கி­றது.

இந்­நி­லையில் சிரி­யாவின் அயல் நாடுகள் சிரிய அக­தி­களை கையா­ளு­வது தொடர்பில் பாரி­ய­ள­வான சர்­வ­தேச உதவி தேவைப்படுவதாக கூறப்படுகிறது.

இந்த அக­திகள் பிரச்­சி­னையை கையா­ளு­வதில் சர்­வ­தேச உதவி முகவர் நிலை­யங்கள் பெரும் போராட்­டத்தை எதிர்­கொண்­டுள்­ளன. அக­தி­களின் அடிப்­படைத் தேவை­களை நிறை­வேற்­று­வ­தற்கு தேவைப்­படும் நிதியில் 47 வீதத்தை மட்­டுமே அவை கொண்­டுள்­ளன.

இந்த ஆண்டு இறு­திக்குள் அக­திகள் தொகை 3 மில்­லி­ய­னாக உயரும் என அதி­கா­ரிகள் எதிர்வு கூறு­கின்­றனர்.

அதி­க­ளவில் அக­திகள் இடம்­பெ­யர்ந்த காலங்­க­ளி­லொன்­றாக கடந்த ஆகஸ்ட் மாத மத்தி விளங்­கு­கி­றது. இதன் போது வட ­கி­ழக்கு சிரி­யா­வி­லி­ருந்து பல்­லா­யி­ரக்­க­ணக்­கானோர் இடம்­பெ­யர்ந்­தனர்.

அதி­க­ளவு சிரிய அக­தி­களைக் கொண்ட நாடுகள் வரி­சையில் நான்காம் இடத்தில் ஈராக் உள்­ளது. அங்கு 170,000 அக­திகள் உள்­ளனர்.

அதே சமயம் சிரி­யா­வுக்குள் மேலும் 4.25 மில்­லியன் பேர் இடம்­பெ­யர்ந்­துள்­ளனர்.

சிரி­யாவில் இடம்­பெற்று வரும் மோதல்கள் கார­ண­மாக கடந்த 20 வரு­டங்­களில் இல்­லாத வகையில் மிக மோச­மான அக­திகள் நெருக்­க­டிகள் ஏற்­பட்­டுள்­ள­தாக ஐ.நா. சபையின் அறிக்கை கூறு­கி­றது.

2011ஆம் ஆண்டு மார்ச் மாதம் சிரிய ஜனா­தி­பதி பஷார் அல் அஸாத்­துக்கு எதி­ரான எழுச்சி ஆரம்­ப­மா­னது முதற் கொண்டு 100,000 பேருக்கும் அதி­க­மானோர் பலி­யா­கி­யுள்­ளனர்.

அமெ­ரிக்க இரா­ஜாங்க செய­லாளர் ஜோன் கெரியும் பாது­காப்பு செய­லாளர் சக் ஹேகலும் செனட் வெளி­நாட்டு உற­வுகள் சபையில் செவ்­வாய்க்­கி­ழமை இடம்பெற்ற கூட்டத்தில் பங்கேற்று சிரிய விவ­காரம் குறித்து கலந்­து­ரை­யா­டி­யுள்­ளனர்.

அவர்கள் சிரி­யாவில் இரா­ணுவ தலை­யீட்டை மேற்­கொள்­வது தொடர்பில் எதிர்­வரும் 9 ஆம் திகதி அமெ­ரிக்கப் பாரா­ளு­மன்­றத்தில் இடம்­பெ­ற­வுள்ள வாக்­கெ­டுப்பில் ஆத­ர­வைத்­ தி­ரட்டும் முக­மா­கவே இந்தக் கலந்­து­ரை­யா­டலில் ஈடு­பட்­டனர்       
நன்றி வீரகேசரி







No comments: