அவளிடமிருந்து உனக்குத் தருகிறேன் -கு.உமாதேவி

.

 என்னுடையதென்று என்னிடம் எதுவுமில்லை

பிரபஞ்சம் எங்கும் உயிர்களைப் பிரசவித்த

காமத்தின் உச்சி முகர்ந்த வாசம்

எலி மருந்து தின்று

இறந்து போனவளின் வெஞ்சினம்

பறவையின் கூரிய இறகினையொத்த

எனது விழிகளில் சுரந்தோடும் கருணை

கட்டற்று அணல்தாவும்

காட்டுத் தீயின் பெருங்கோபம்

வேலிகளைத் தாண்டிப் பூத்தரும்பும்

மலர்களின் மென்மை

பசித்து வருந்தும் வரியவர்க்கு

ஈயும்

தாய்மையின் வீச்சம்

துரோகத்தின் எல்லை மீறுகையில்

பீறிடும் கொலைவெறி

எல்லாம் உன்னுடையதுதான்

உன்னுடையதை உன்னிடமே ஒப்படைத்து விடுகிறேன்

மகளே



No comments: