சிட்னி முருகன் ஆலய கும்பாபிசேகம் 29-01-2012

.படப்பிடிப்பு ஞானி


சிட்னி முருகன் ஆலயத்தின் கும்பாபிசேகம் 29.01.2012 ஞாயிற்றுக்கிழமை மிகச் சிறப்பாக இடம்பெற்றது. பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்த நிகழ்வினைக் காண்பதற்காககோவில் வீதியெங்கும் நிறைந்திருந்தார்கள். 12 வருடங்களுப்பின்பு கோவிலில் இடம்பெற்ற இந்த கும்பாபிசேகத்தைக் காண்பதற்கு தாம் பாக்கியம் பெற்றுள்ளோம் என்று பக்தர்கள் பலர் தமிழ்முரசிற்கு தெரிவித்தார்கள்.

காலை 9.30 மணிக்கு பெரிதாக சனத்திரள் இல்லாதிருந்த கோவிலில் 10.30 மணிக்குள் சாரி சாரியாக மக்கள் வந்து குவிந்தவண்ணம் இருந்ததைப் பார்க்க பரவசமான இருந்தது. கோவிலை அண்டிய பகுதியில் இருந்த பொது வீதிகள் எங்கும் இலங்கை இந்திய மக்களின் வாகனங்களால் நிரம்பியிருந்தது. 10.30 மணியிலிருந்து 11 மணிக்குள் ராஜகோபுரத்தின் கும்பாபிசேகம் இடம் பெற்றது. இதில் உலகநாடுகளில் இருந்து வருகைதந்திருந்த பல அந்தணர்களும் அவுஸ்ரேலிய வாழ் அந்தணர்களும் சிவாச்சாரியார்களும் கலந்து சிறப்பித்திருந்தார்கள்.



வருகைதந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு சைவமன்றம் சளைக்காது அன்னதானம் வழங்கிக் கொண்டிருந்தது மிகச் சிறப்பான அம்சமாகும்.  சுpட்னி மக்கள் மட்டுமல்லாது பிறமானிலங்களில் இருந்தும் வந்து கலந்துகொண்ட மக்களுக்கு தாகசாந்திக்காக தண்ணீர்ப்பந்தலும் அமைக்கப்பட்டிருந்தது மிகவும் அனுகூலமாக இருந்தது.
முருகன் ஆலய கும்பாபிசேக விழாவினை அவுஸ்ரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் உள்ளிட்ட பல வானொலிகள் நேரடியாக அஞ்சல் செய்துகொண்டிருந்ததைக் காணக் கூடியதாகவும் இருந்தது.இது கோவிலுக்கு வருகை தரமுடியாதிருந்தவர்களுக்கு நிகழ்வை நேரில் பார்த்த திருப்தியைக் கொடுத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இந்தநிகழ்வை திறம்பட நடாத்திமுடிப்பதற்காக பல தொண்டர்கள் இரவு பகலாக உழைத்துக்கொண்டிருந்ததை பார்க்ககூடியதாக இருந்தது. நிர்வாகத்தினரும் தொண்டர்களும் சிவாச்சாரியார்களும் பாராட்டப்படவேண்டியவர்களே.
கும்பாபிசேக படங்களை கீழே காணலாம் 
தமிழ்முரசு ஒஸ்ரேலியா



                                                                                                         படப்பிடிப்பு ஞானி





                                                                                                    படப்பிடிப்பு ஞானி






                                                                                                     படப்பிடிப்பு ஞானி







                                                                                   





14 comments:

Anonymous said...

Slightly sad that we couldn't get half as many people to come to protests or Remembrance Day to pay respect to the tens of thousands of our people who were brutally killed in Sri Lanka.

santhiran said...

dont lament. people do willingly that which brings them maximum inner happiness !!!!!

santhiran

kirrukan said...

சிட்னி வாழ் முருகனுக்கு அரோகரா...
(quote)Slightly sad that we couldn't get half as many people to come to protests or Remembrance Day to pay respect to the tens of thousands of our people who were brutally killed in Sri Lanka.(quote)
அரசியல் வேறு பக்தி வேறு என்று எம்மவர்கள் நினைத்துவிட்டார்கள் போலும் அதுதான் அவர்கள் கலந்து கொள்ளவில்லை...மேலும் ஒரு நன்பர் பின்னூட்டம் விட்டுள்ளார்(people do willingly that which brings them maximum inner happiness !!!!!) அதாவது தனிமனித சந்தோசம்தான் முக்கியம் சமுதாயம் எக்கேடு கேட்டாலும் எமக்கு என்ன என்ற நினைப்புதான்

kirrukan said...

டமிழ்முரசு படங்கள் எல்லாம் வடிவாகபோடுகிறீர்கள் நன்றிகள் பல....படங்களை போட்டு சனத்தை உசுப்பேத்தாமல் அங் கு ஒரு சிலர் செய்யும் சண்டித்தனதையும் படம்பிடித்து போட்டால் முருகன் அடியார்களுக்கு மிகவும் பயனுடையதாக இருக்கும்.முருகனுக்கும் மகிழ்ச்சியாக இருக்கும் ...ஊடகம் என்றால் தட்டி கொடுப்பது மட்டுமல்ல ,தவறுகளை தட்டி கேட்கவும் வேண்டும்.புலிகளையும்,சிங்களவர்களையும் பிழை காணாமல் புலம் பெயர் பக்தர்கள் ,தொண்டர்கள்,கொமிட்டி உறுப்பினர்கள் ஆகியோரிடையே இருக்கும் குறைகளையும் நிறைகளையும் விமர்சனம் செய்ய வேண்டும்.நிறைகள் எழுதலாம் ஆனால் குறைகளை எழுதுவது கடினம்தான் ,இருந்தாலும் ஊடகம் என்ற படியால் நீங்கள் கிறுக்கலா...ம்

Anonymous said...

Mr Kirukkan, you should write the all the comments about every body including committee members and others, if they have done any thing wrong OK. Don't leave to others to comment. If you have 'gutts' you would eply for this.

Anonymous said...

உங்கு கோயில் கமிட்டியில் முன்னுக்கு இருக்கும் 3 சிவாக்கள் செய்யும் அட்டகாசங்கள் தாங்க முடியவில்லை. அதில் 1 சிவாவை தட்டியே ஆகவேண்டும்.
பின்னுக்கு சமையல் தலைவர் எவ்வளவோ செய்கிறார். ஆனால் முன்னுக்கு அவர் வந்து கொமான்ட் பண்ணிறது பாலுக்குள் மண் அள்ளி கொட்டுறது போல.

பழைய முதலைகள், திரும்ப திரும்ப ஏன் வருகிறார்கள்? மலரில் படங்களை பார்க்க பார்க்க விசர் வருகுது. கும்பாபிசேகம் கம்மிட்டீகுள் வரவேண்டும் என்று என்ன கொலை வெறியோ ? சீனா, சூனா, பானா, தானா, வானா, போன்ற மெம்பெர்ஸ் தயவு செய்து கோம்மிட்டீ பக்கம் வரவே வேண்டாம். எவ்வளவோ சரியை தொண்டுகள் கோயிலுக்கு வெளியில் செய்யுங்கோ. பின்னுக்கு சமையலுக்கு, முன்னுக்கு கார்பார்க், சாப்பாடு பரிமாற என்று எவ்வளவோ இருக்கு.

Anonymous said...

kirrukan & Anoonymous you are vaikol paddarai naikal.

kirrukan said...

[quote]kirrukan & Anoonymous you are vaikol paddarai naikal[quote]

நன்றிகள் பட்டம் கொடுத்தமைக்கு ....உண்மை கசக்கத்தான் செய்யும் ,என்ன செய்யிறது வைக்கோல்லையும் பாதுகாக்க வேண்டுமே

Anonymous said...

COMMITTY ENTRU IRUNTHAAL KULAPPAM IRUKKAMAL VIDAATHU... THAMILAN MATHIYIL ITHU SAGAJAM. PATHAVI ASAI ENPATHU THAMILANIN PIRAPPURIMAI...!

Anonymous said...

enna sola vareengal? members seiurathu sariya pilaya? Pathavi aasai irukalam, aanal pathaviyai thush-pirayogam seiya koodathu. Ivalavu eluthiyiruku , parungo yaravathu oru member ithai ethirthu eluthukirara endru.appidi endral, ellathaiyum accept pannukirarkala?

kirrukan said...

[quote]COMMITTY ENTRU IRUNTHAAL KULAPPAM IRUKKAMAL VIDAATHU... THAMILAN MATHIYIL ITHU SAGAJAM. PATHAVI ASAI ENPATHU THAMILANIN PIRAPPURIMAI...[quote]!

தமிழனின் பரம்பரை குணம் என்று சொல்லி நாங்கள் ஒதுங்க ஏலாது ,பாதிக்கப்படுவது தமிழர்களாகிய நாங்கள் ஆகவே தட்டி கேட்பது எமது உரிமை....திருந்துவது திருந்தாமல் விடுவது அவர்களை பொருத்தது...


பதவி ஆசை பிடித்த பலர் ஊடகத்துக்கு பயந்திருக்கிறார்கள்

kirrukan said...

[quote]oru member ithai ethirthu eluthukirara endru.appidi endral, ellathaiyum accept pannukirarkala?
[quote]
நாங்கள் முருகனுக்கு எவ்வளவோ செய்யிறோம் உவங்கள் என்னத்தை பண்ணுகிறது எங்களுக்கு...என்ற மனப்பான்மைதான் ...கொமிட்டி உறுப்பினர்களை பொருத்தவரை முருகனுக்கு அடுத்தது தாங்கள்தான் என்ற நினைப்பு.

Ramesh said...

(quote)Slightly sad that we couldn't get half as many people to come to protests or Remembrance Day to pay respect to the tens of thousands of our people who were brutally killed in Sri Lanka


இவர் ஆதங்கப்பட்டிருந்தேர் கும்பாபிசேகத்திற்கு இவ்வளவு சனம் வந்திருக்கிறார்கள் ஆனால் அரைவாசி ஆட்கள்கூட மக்கள் இறந்தபோது வரவில்லை என்று. காரணம் அதை ஒழுங்கு பண்ணினவர்கள்தான் எத்தனைமுறை எடுத்துச் சொன்னாலும் விளங்காது அதுகளுக்கு. எங்க என்னத்த கொண்டுபோக வேண்டும் என்ற அறிவுகூட இல்லாமல் வந்த மக்களுக்கு மத்தியில் புலிக் கொடியை தூக்கி பாயவைத்தால் பிறகு எப்பிடி மக்கள் வருவார்கள்.
கிறுக்கன் சொன்னது போல் அந்தந்த கொமிற்றியில் இருக்கும்போது தங்களைவிட்டால் ஒருத்தரும் இல்லையெண்டு அறிவில்லாது ஆடுவதே ஒரு பழக்கமாகி விட்டது.

Anonymous said...

Dei kirukka,

If you are a man, write with your proper name. Otherwise anything you say is rubbish.