தாலாட்டு - கவிதை


.


பிறந்த தினத்தில்
அம்மாவின் ஸ்பரிசத்தில்
கிடைத்தது முதல் தாலாட்டு !

நடைபயின்று
ஓடி விளையாடிய பிறகு
தாலாட்டு கேட்கவோ நேரமில்லை
தாலாட்டு பாடவோ தாயில்லை !

அழகான இயற்கைக்கு
ப்ளாஸ்டிக் ஆடை வேண்டாம் என்றேன்
வணிகர்கள் காதுக்கு தாலாட்டாய் கேட்டது !

உணர்ச்சிகள் பீரிட்டு
ஊழலுக்கு எதிராக குரல் ஏழிப்பேன்
ஊழல்வாதிகளுக்கு தாலாட்டாய் ஒலித்தது !


போபாலாக கூடாங்குளமாகி
விட கூடாது என்றேன்
விஞ்ஞானிகளின் காதுக்கு தாலாட்டாய் கேட்கிறது !

வெளிநாட்டில் வேலை செய்ய
விருப்பமில்லை என்றேன்
மேலாளருக்கு தாலாட்டாய் இருந்தது !

என் உணர்வுகள்
என் ஆதங்கம்
என் கோபம்
என் எண்ணம்
எல்லோருக்கும் தாலாட்டாய் கேட்கிறது !

என் இறுதி துக்கத்திற்கு
தாலாட்டு
யார் பாட போகிறார் ?

Nantri:guhankatturai.blogspo

No comments: