மெல்பனில் தமிழக எழுத்தாளர் பெருமாள் முருகனுடன் இலக்கியச் சந்திப்பு 10.03.24

 .

தமிழ்நாட்டிலிருந்து  அவுஸ்திரேலியாவுக்கு வருகை தரும் பிரபல எழுத்தாளரும் பல இலக்கிய விருதுகளைப்பெற்றிருப்பவருமான திரு. பெருமாள் முருகன் அவர்களுடனான இலக்கிய சந்திப்பு எதிர்வரும் மார்ச் மாதம் 10 ஆம் திகதி ( 10-03-2024 ) ஞாயிற்றுக்கிழமை மாலை 3-00 மணிக்கு மெல்பனில் Vermont South Learning Centre  மண்டபத்தில்                   

                        (  1, Karobran Drive, Vermont South, Vic 3133 )

நடைபெறும்.

எழுத்தாளர் பெருமாள் முருகன்,

  அகராதியியல், பதிப்பியல் ஆகிய

 துறைகளிலும்  மானுடவியல் ஆய்வுகள், வட்டார வழக்கு ஆராய்ச்சி, நாட்டார் இலக்கிய ஆய்வு முதலானவற்றிலும்  பங்காற்றியுள்ளார்.

பெருமாள் முருகனின் ஒன்பது நாவல்கள் ஆங்கிலத்தில்

 மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. நிழல்முற்றம் நாவல் போலிஷ் மொழியிலும்

மாதொருபாகன் நாவல் ஜெர்மன் மொழியிலும் செக் மொழியிலும்

 வெளியாகியுள்ளன. மலையாளம், கன்னடம், தெலுங்கு, மராத்தி, இந்தி

 உள்ளிட்ட இந்திய மொழிகள் பலவற்றில் மாதொருபாகன்  நாவல்

 மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. 

விளக்கு விருது  - கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளை விருது -  கதா விருது -  கனடா  தமிழ் இலக்கியத் தோட்டத்தின்  விருது -  அமுதன் அடிகள் விருது -  திருப்பூர் தமிழ்ச்சங்க விருது உட்பட பல இலக்கிய விருதுகள் பெற்றிருக்கும் பெருமாள் முருகன் அவர்களுடனான இலக்கிய சந்திப்பில் கலந்துகொள்ளுமாறு கலை, இலக்கிய ஆர்வலர்களை அன்புடன் அழைக்கின்றது,

     அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம்

atlas25012016@gmail.com    --        https://atlaswriters.wordpress.com/

 





No comments: