காதல்! - ராம்ப்ரசாத், சென்னை

 .

நேற்று மாலையே!

முடித்து வைத்த‌!
வீட்டுப்பாடங்களை!
சுக்குநூறாய் கிழித்தெரிந்துவிட்டு!
வகுப்பறைவிட்டு வெளியேறுகிறேன்!
ஏற்கனவே வெளியேறிவிட்ட!
உன்னை!
தனிமையில் சந்திப்பதற்காக...!
!
எனக்கு மிகவும் பரிச்சயமான‌!
கல்லூரியில்,!
அதிகம் பரிச்சயமில்லாத‌!
உன்னுடன் பகிர்ந்துகொள்ள,!
மிகவும் பரிச்சயமான‌!
என் தாய்மொழியிலோர்!
கவிதை கிட்டாவிட்டாலும்!
குறைந்தபட்சம்!
நான்கைந்து வார்த்தைகளாவது!
கிட்டியிருக்கலாம்...!
!
தயங்கி வேர்த்தோதுங்கிய‌!
சில மணித்துளிகளில்!
உன்னைச்சூழ்ந்துகொண்ட‌!
தோழிகளுடன் நீ!

கதைபல கதைப்பதைப்பார்த்து!
சற்றே தள்ளி நின்று!
நடத்திக்கொண்டிருந்தேன்!
மனதிற்க்குள் ஓர் விவாதம்!
'ரோஜாப்பூவுக்குப் பேச‌!
யார் கற்றுக்கொடுத்தது'

 ராம்ப்ரசாத், சென்னை

No comments: