இலங்கைத்தீவில் நீண்டகாலமாக சி ங்களப் பேரினவாத சக்திகளால் இனப் படுகொலைசெய்யப்பட்ட தமிழ்மக்களை யும், அந்த இனவழிப்பின் உச்சமாக 2009-ம் ஆண்டு மே மாதம் முள்ளி வாய்க்காலில் நிகழ்ந்தேறிய மாபெ ரும்மனிதப் பேரவலத்தின்போதும் கா வுகொள்ளப்பட்ட தமிழ் மக்களையும் நினைவுகூருகின்ற தமிழர் இனவழி ப்பு நினைவுநாள் நிகழ்வு, கடந்த 18-05-2019 சனிக்கிழமை மெல்பே ர்ணில்; உணர்வுபூர்வமாக நடைபெற் றது.

அதனைத் தொடர்ந்து, அவுஸ்திரேலி யத் தேசியக்கொடியை தமிழகத்தைச் சேர்ந்த தமிழ்ச்செயற்பாட்டாளர் திருமதி வசந்தி சேகர் அவர்கள் ஏ ற்றிவைக்க, தமிழீழத் தேசியக்கொ டியை மூத்த தமிழ்ச்செயற்பாட்டா ளரும்ஊடகவியலாளருமான திரு செந்தில் செந்தில்நாதன் அவ ர்கள் ஏற்றிவைத்தார்.
அதனைத் தொடர்ந்து முள்ளிவாய்க் காலில் இனவழிப்பின்போது காவுகொ ள்ளப்பட்ட மக்களை இவ்வாண்டு பத் தாவதுஆண்டாக நினைவுகூரும் முகமா க, மெல்பேர்ண் தமிழ்ச்சமூகத்தை ச் சேர்ந்த பல்வேறு துறைசார் செ யற்பாட்டாளர்கள்இளையோர்கள் என ஒ ருங்கிணைந்து, பத்து நினைவுச்சுடர்கள் ஏற்றிவை க்கப்பட்டன.
தொடர்ந்து சிங்களப் பேரினவாதப் படைகளால், இனப்படுகொலை செய்யப் பட்ட அனைத்து தமிழ்மக்கள் நினை வாகவடிவமைக்கப்பட்ட நினைவுப் பீ டத்திற்கு, நிகழ்வில் கலந்துகொ ண்டிருந்த அனைவரும் வரிசையாக வந் துமலர்வணக்கம் செலுத்தினார்கள். மலர்வணக்கத்தை தொடர்ந்து அகவணக் கம் இடம்பெற்றது.
அதனையடுத்து அரங்க நிகழ்வுகள் இ டம்பெற்றன. அரங்க நிகழ்வில் மு தலில் வணக்க நடனம் இடம்பெற்றது. வணக்கநடனமாக திருமதி மீனா இளங் குமரனின் நெறியாள்கையில் நடனா லயாப் பள்ளி மாணவிகளின் "முள்ளி வாய்க்கால்மண்ணே வணக்கம்....." என்ற பாடலுக்கான வணக்க நடனம் இட ம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து நினைவுரை இடம் பெற்றது. நினைவுரையை இறுதிப்போ ர் நாட்களில், வன்னியில் வாழ்ந் தமாவீரர் லெப் கேணல் சதன் அவர் களின் புதல்வன் செல்வன் பவித்தி ரன் அவர்கள் நிகழ்த்தினார். அவர் தனதுபன்னிரண்டாவது வயதில், தனது கண்ணுக்கு முன்னே மக்கள் குண் டடிபட்டு செத்து வீழ்ந்ததை கண் டுபதைபதைத்துபோனதை நினைவிற்கொண் டுவந்தார்.
நாலாயிரம் மக்கள் வாழுமிடத்தை பா துகாப்பு பிரதேசம் என அறிவித்து , நான்கு இலட்சம் மக்களை ஒன்று சேரச்செய்து,திட்டமிட்டு கொல் லப்பட்டதை கண்ணீர் ஊடே நினைவுகூ ர்ந்தார்.
அடுத்து சமூக முற்போக்கு செயற் பாட்டாளரான பாஸன அபயவர்த்தன அவர் களின் ஆங்கில மொழியிலான உரையின் காணொளித் தொகுப்பு திரையிடப்பட் டது. அவர் தனதுரையில் முள்ளிவா ய்க்கால் என்பது தனியே ஒரு இடமல் லஎன்றும், தமது உரிமைக்காக போரா டிய ஒரு இனத்தின் உறுதிமிக்க வர லாற்றை உலகெங்கம் வாழும் அடக் கப்படும்இனங்களுக்கு வழிகாட்டி யாகச் சொல்லிநிற்கும் இடம் என் றும், தமக்கு முன்னே இருந்த மி கப்பெரிய சவாலுக்கும்மத்தியில் தமது கொடியின் கீழ் அணிவகுத்து போராடிய அந்த இயக்கத்தின் தலை வரும், மாவீரர்களும் வரலாற்றில் என்றும் போற்றப்படுவார்கள் என் றார்.
அடுத்து முள்ளிவாய்க்கால் மனி தப் பேரவலத்தின்போது காயமடைந் தவர்களுக்கான சிகிச்சைகள் அரிக் கன் லாம்புவெளிச்சத்தில் மேற்கொ ள்ளப்பட்டதை நினைவூட்டும் வகையி லான அரங்காற்றுகை நிகழ்வு கலை ஞர்களால்நிகழ்த்தப்பட்டது.
அடுத்து தாயகத்தில் நிலவிடுவிப் பிற்காக மக்கள் முன்னெடுக்கும் போராட்டங்கள் மற்றும் வலிந்துகா ணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் முன்னெடுக்கும் போராட்டங்கள், அந்த மக்களின் உணர்வுகளைபிரதி பலிப்பதாக “தசாப்தமும் நாங்களு ம்” என்ற காணொளித் தொகுப்பு தி ரையிடப்பட்டது.
இறுதியாக சமூக அறிவித்தல்களோடு தேசியக்கொடிகள் இறக்கப்பட்டு இர வு 8.00 மணியளவில் தமிழர் இனவழி ப்புநினைவு நாள்- 2019 நிகழ்வுகள் யாவும் நிறைவு பெற்றன.
இந்நிகழ்வின் இறுதியில் முள்ளி வாய்க்கால் அவலத்தை பிரதிபலிக் கும் முள்ளிவாய்க்கால் கஞ்சி அனை வருக்கும்வழங்கப்பட்டதுடன், தமி ழக ஓவியர் புகழேந்தி அவர்களின் “போரின் முகங்கள்” (Faces of War) என்ற ஓவியபுத்தகமும்விற் பனை செய்யப்பட்டது குறிப்பிடத் தக்கது.
No comments:
Post a Comment