மெல்பேர்ணில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற தியாகதீபம் கலைமாலைநிகழ்வு 2018.

பாரததேசத்திடம் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நல்லூர்க்கந்தன் ஆலய முன்றலில் நீர்கூட அருந்தாது பன்னிருநாட்கள் சாகும்வரை உண்ணாநோன்பிருந்து, ஈகைச்சாவைத் தழுவிக்கொண்ட தியாகதீபம் லெப் கேணல திலீபன் அவர்களின் 31வது ஆண்டு நினைவுநாள் நிகழ்வுகள்  அவுஸ்திரேலியாவின்  மெல்பேர்ண் நகரில் சென்யூட்ஸ் மண்டபத்தில்  மிகவும் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டது.
கடந்த 28 - 09 - 2018 வெள்ளிக்கிழமையன்று மாலை 6.00 மணிக்கு செல்வி லக்சிதா தலைமையில் ஆரம்பமான இந்நிகழ்வில், அவுஸ்திரேலிய தேசியக்கொடியை மில்பார்க் தமிழ்ப்பள்ளி அதிபர் திரு சந்திரகுமார் அவர்கள் ஏற்றிவைக்க, தமிழீழ தேசியக்கொடியை விக்ரோறியா மாநில தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் செயற்பாட்டாளர் கபிலன் நந்தகுமார் அவர்கள் ஏற்றிவைத்தார். தியாகதீபம் லெப் கேணல் திலீபன் அவர்களது திருவுருவப்படத்திற்கு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் மூத்த செயற்பாட்டாளர் திரு அ. திலகராஜா அவர்கள் ஈகைச்சுடரேற்றி மலர்வணக்கம் செலுத்தினார்.


26 – 09 - 2001 அன்று சிறிலங்காப் படையினரின் ஆழ ஊடுருவும் அணியினரின் கிளைமோர்த் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மூத்த தளபதி கேணல் சங்கர் அவர்களின் திருவுருவப்படத்திற்கு, மாமனிதர் குணாளன் மாஸ்ரர் அவர்களின் மகன் திரு ஹரிதாஸ் அவர்கள் ஈகைச்சுடரேற்றி மலர்வணக்கம் செலுத்தினார்.
25 – 08 - 2002 அன்று சுகயீனம் காரணமாக சாவடைந்த கிட்டு பீரங்கிப் படையணியின் சிறப்புத்தளபதி கேணல் ராயூ அவர்களின் திருவுருவப்படத்திற்கு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் செயற்பாட்டாளர் திரு. வசந்தன் அவர்கள் ஈகைச்சுடரேற்றி மலர்வணக்கம் செலுத்திவைத்தார்.
அதனைத்தொடர்ந்து பொதுமக்களின் மலர்வணக்கமும், தொடர்ந்து தாயக விடுதலைப்போரில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட  மாவீரர்களையும்போரின்போது யிர்நீத்த   பொதுமக்களையும் மற்றும் நாட்டுப்பற்றாளர்களையும்மாமனிதர்களையும் நினைவில் நிறுத்தி அகவணக்கம் செலுத்தப்பட்டது.
அதனைத்தொடர்ந்து அரங்கநிகழ்வுகள் ஆரம்பமாகினஅரங்கநிகழ்வில் முதலாவதாக வணக்க நடனம் இடம்பெற்றது. வணக்கநடனத்தை நடனாலயா பள்ளி மாணவி செல்வி சரண்யா ஜெயரூபன் அவர்கள் நிகழ்த்தினார்.
அடுத்து தியாகதீபத்தின் நினைவுகளையும் சமகால அரசியல் நிலவரங்களையும் உள்ளடக்கியதாக தயாரிக்கப்பட்ட குளுங்காணொளித்தொகுப்பு அகலத்திரையில் திரையிடப்பட்டது.
அடுத்து நினைவுரைகள் இடம்பெற்றது தமிழ்மொழியிலான நினைவுரையை தமிழக உறவான உணர்வாளர் பிறின்ஸ் அவர்களும், ஆங்கிலமொழியிலான உரையை Victorian Socialists கட்சியின் Moreland Councillor உம் விக்.மாநில செனட் வேட்பாளரான Sue Bolton அவர்களும் நிகழ்த்தினார்.
அடுத்து இந்நினைவுநிகழ்வின் சிறப்புநிகழ்வான உள்ளூர்க்கலைஞர்களின் நெளியாள்கையில் மெல்பேர்ணில் வளர்ந்துவரும் பாடகர்கள் தியாகதீபம் திலீபன் நினைவு சுமந்த  பாடல்கள் உட்பட தாயகப்பாடல்களை உள்ளடக்கியதான தியாகதீப கலைமாலை நிகழ்வு இடம்பெற்றது.  இந்த தாயகப்பாடல்கள் அனைத்தும் நிகழ்வில் கலந்துகொண்டிருந்த அனைவரது  மனங்களையும் நிறைத்திருந்தது
இறுதியாக இரவு 8.00 மணியளவில் தேசியக்கொடிகள் இறக்கப்பட்டு, உறுதிமொழியுடன் தியாகதீபம்  கலைமாலை 2018 நிகழ்வுகள் நிகழ்வுகள் நிறைவுபெற்றன. இந்நிகழ்வில் தமிழ்த்தேசியச்செயற்-பாட்டாளர்கள் பள்ளிமாணவர்கள் ஆர்வலர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு  சிறப்பித்திருந்தனர்.





























No comments: