இலங்கைச் செய்திகள்


வாஸின் மரண தண்­ட­னைக்கு எதி­ரான மேன்­மு­றை­யீடு விசா­ர­ணை திகதி அறிவிப்பு.!

இனி அமெரிக்க விசாவுக்கு இது கட்டாயமாம்.!





வாஸின் மரண தண்­ட­னைக்கு எதி­ரான மேன்­மு­றை­யீடு விசா­ர­ணை திகதி அறிவிப்பு.!

03/04/2018 வர்த்­தகர்  மொஹமட்  சியாம்  படு கொலை விவ­கா­ரத்தில்  மரண  தண்­டனை விதிக்­கப்­பட்ட முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் வாஸ் குண­வர்­தன உள்­ளி ட்ட குற்­ற­வா­ளி­களின் மேன்முறை­யீ­டு­களை எதிர்­வரும் செப்டெம்பர் 25 ஆம் திகதி முதல்  தொடர்ச்­சி­யாக விசா­ரணை செய்ய உயர் நீதி­மன்றம் தீர்­மா­னித்­துள்­ளது.   
Image result for வாஸ் குண­வர்­தன
தனக்கு எதி­ராக ட்ரயல் அட்பார் நீதி­மன்றம் ஊடாக வழங்­கப்­பட்ட மரண தண்­ட­னையை நீக்­கு­மாறு கோரி வாஸ், அவ­ரது மகன் ரவிந்து வாஸ்  உள்­ளிட்ட ஐந்து குற்­ற­வா­ளி­களும்  தாக்கல்  செய்த மேன்முறை­யீடு நேற்று  விசா­ர­ணைக்கு வந்த போதே உயர் நீதி­மன்றம் இந்த திகதி குறிப்பிட்­டது. 
அதன்­படி செப்டெம்பர் 25 ஆம் திகதி முதல் இவ்­வ­ழக்கு தொடர்ச்சியாக விசா ரணை செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி.










இனி அமெரிக்க விசாவுக்கு இது கட்டாயமாம்.!

02/04/2018 அமெ­ரிக்­கா­விற்குள் பிர­வே­சிக்க விசா பெறு­வ­தற்கு விண்­ணப்­பிப்­ப­வர்­களில் பெரும்­பா­லா­ன­வர்­க­ளது  பேஸ்புக் மற்றும் டுவிட்டர் உள்­ள­டங்­க­லான சமூக வலைத்­த­ள தகவல்களை  பெற்றுக்கொள்ளும் செயற்­பாட்டை ஆரம்­பிக்க விரும்­பு­வ­தாக  அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்பின் அர­சாங்கம் தெரி­விக்­கி­றது.
அமெ­ரிக்க இரா­ஜாங்கத் திணைக்­க­ளத்தால் முன்­வைக்­கப்­பட்­டுள்ள இந்தப் பிரே­ர­ணை யின் பிர­காரம் பெரும்­பா­லான விசா விண்­ணப்­ப­தா­ரிகளிடம் தமது பேஸ்புக் மற்றும் டுவிட்டர் இணை­யத்­தள பக்­கங்கள் தொடர்­பான விப­ரங்­களை  வழங்கக் கோரப்­படும்.
இதன் கீழ் விண்­ணப்­ப­தா­ரிகள் கடந்த 5 வருட காலத்­தி­லான  அனைத்து சமூக ஊட­கங்கள் தொடர்­பான தமது ஆள­டை­யா­ளப்­ப­டுத்­தல்­களை வெளிப்­ப­டுத்த வேண்­டி­யி­ருக்கும்.
 மேற்­படி பிரே­ர­ணை­களால் வரு­ட­மொன்­றுக்கு சுமார் 14.7  மில்­லியன் பேர் பாதிப்பை எதிர்­கொள்­ள­வுள்­ளனர்.
இந்த சமூக வலைத்­த­ளங்கள் பற்­றிய  தக­வல்கள்  குடி­யேற்­ற­வா­சிகள் மற்றும் குடி­யேற்­ற­வா­சிகள் அல்­லாதோர் ஆகிய இரு தரப்­பினர் தொடர்­பிலும் ஆள­டை­யாளம் காணவும்  பரி­சீ­ல­னையை மேற்­கொள்­ளவும் பயன்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளன.
இதன்­போது விண்­ணப்­ப­தா­ரி­க­ளிடம் அவர்­களால் ஐந்து வருட காலப் பகு­தியில் பயன்­ப­டுத்­தப்­பட்ட கைய­டக்கத் தொலை­பேசி இலக்­கங்கள், இலத்­தி­ர­னியல் அஞ்­சல்கள் மற்றும் பயண வர­லாறு என்­ப­ன­வற்றை வெளிப்­ப­டுத்தக் கோரப்­படும்.
அத்­துடன் அவர்கள் எந்­த­வொரு நாட்­டி­லு­மி­ருந்து வெளி­யேற்­றப்­பட்­டார்­களா அல்­லது அவர்­களின் உற­வி­னர்கள் எவ­ரா­வது தீவி­ர­வாத செயற்­பாட்­டுடன் தொடர்­பு­பட்­டுள்­ளார்­களா என்­பன குறித்தும் வின­வப்­படும்.
அதே­ச­மயம்  விசா­வின்றி அமெ­ரிக்­கா­வுக்கு பயணம் செய்­வ­தற்கு அனு­ம­திக்­கப்­பட்­டுள்ள பிரித்­தா­னியா, கனடா, பிரான்ஸ் மற்றும் ஜேர்­மனி ஆகிய நாடு­களைச் சேர்ந்­த­வர்கள் இந்தப் புதிய பிரே­ர­ணையால் பாதிக்­கப்­பட மாட்­டார்கள் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.
அமெ­ரிக்க விசாவைப் பெறு­வது தொடர் பில் மேற்­படி விதி­வி­லக்கைப் பெறாத நாடு­க­ளான இந்­தியா, சீனா மற்றும் மெக்­ஸிக்கோ ஆகிய நாடு­களைச் சேர்ந்­த­வர்கள் அமெ­ரிக்­கா­வுக்கு  பணி­யாற்­றவோ அன்றி விடு­மு­றையைக் கழிக்­கவோ விசா பெற முயற்­சிக்­கையில் புதிய பிரே­ர­ணையால் குழப்ப நிலை ஏற்­படும் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.
இந்தப் புதிய பிரே­ரணை தீவி­ர­வா­தி­களை அடை­யாளம் காண  பெரிதும் உதவும் என அமெ­ரிக்க அதி­கா­ரிகள் கூறு­கின்­றனர்.
2015 ஆம் ஆண்டு அமெ­ரிக்க கலி­போர்­னிய மாநி­லத்­தி­லுள்ள சான்­பி­ரான்­சிஸ்­கோவில்  இடம்­பெற்ற 14 பேரைப் பலி கொண்ட   துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் போது    தாக் குதல்தாரிகளுக்கிடையே சமூகவலைத் தளங் களினூடாக  அடிப்படைவாத செய்திகள் பரிமாறிக் கொள்ளப்பட்டிருந்தன.
அந்த செய்திகளை உரிய நேரத்தில் கண் டறிந்திருந்தால் அந்தத் தாக்குதலை தவிர்த் திருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.   நன்றி வீரகேசரி 



No comments: