உலகச் செய்திகள்


அமெரிக்க கண்டத்தையே அழிக்கவல்லதாம் ; மிரட்டுகிறது வடகொரியா

அரண்மனையில் ட்ரம்பின் வாரிசுக்கு விருந்தளிக்கும் மோடி

குமுறும் அகுங் எரி­மலை : விமானப் போக்­கு­வ­ரத்­துகள் பாதிப்பு.!

 “பிரித்­தா­னிய பிர­தமர் என்னைக் கவ­னிப்­பதை விடுத்து தீவி­ர­வாதம் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்”

வட கொரி­யா­வு­ட­னான இரா­ஜ­தந்­திர உற­வு­களை அனைத்து உலக நாடு­களும் துண்­டிக்க வேண்டும்




அமெரிக்க கண்டத்தையே அழிக்கவல்லதாம் ; மிரட்டுகிறது வடகொரியா
29/11/2017 தாம் ஏவிய புதிய வகை கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையானது முழு அமெரிக்க கண்டத்தையும் அழிக்கக்கூடியதென வடகொரியா தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கண்டம் விட்டு கண்டம் பாயும் மிகவும் சக்தி வாய்ந்தது எனக் கூறப்பட்ட ஹவாசாங்-15 ஏவுகணையானது இன்று புதன்கிழமை அதிகாலை ஏவப்பட்டுள்ளது.

குறித்த ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்துள்ளதாக வட கொரியா தெரிவித்துள்ள நிலையில், ஒரு அணு ஆயுத நாடாக மாற வேண்டும் என்ற தனது குறிக்கோளை வட கொரியா அடைந்துள்ளதாக அந்நாட்டு அரச தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.



ஜப்பான் கடலில் விழுந்த இந்த ஏவுகணை, வட கொரியா முன்பு சோதித்த ஏவுகணைகளை விட அதிக உயரம் சென்றுள்ளதாகவும் 4,475 கிலோ மீற்றர் உயரத்தில், 960 கிலோ மீற்றருக்கு 53 நிமிடங்கள் இந்த ஏவுகணை பறந்ததாகவும் அந்நாட்டு அரச செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி












அரண்மனையில் ட்ரம்பின் வாரிசுக்கு விருந்தளிக்கும் மோடி
27/11/2017 தெலுங்கானா மாநிலம்  ஐதராபாத்தில் சர்வதேச தொழில் முனைவோர் மாநாடு எதிர் வரும் 28 ஆம் திகதி நடைபெற உள்ளது.
இம் மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். இம் மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மகள் இவாங்கா டிரம்ப் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார்.
அமெரிக்க தொழில் முனைவோர் குழுவுக்கு இவர் தலைமை தாங்கி அழைத்து வருகிறார். இம் மாநாட்டில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் உற்பட 350ற்கும்  மேற்பட்டோர் பங்கேற்கின்றனர்.
இவாங்காவுக்கு மிரட்டல்கள் இருப்பதால் சர்வதேச தொழில் முனைவோர் மாநாடு நடைபெறும் இடத்தில் 3 கி.மீ சுற்றளவுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஐதராபாத்தில் தங்கும் இவாங்கா டிரம்புக்கு 5 அடுக்கு பாதுகாப்பு கொடுக்கப்படுகிறது.
வரலாற்று சிறப்புமிக்க பலாக்னுமா அரண்மனையில் அரசு சார்பில் அளிக்கப்படும் விருந்தில் இவாங்கா பங்கேற்கவுள்ளார்.
இந்த விருந்தில் பிரதமர் மோடியும் கலந்து கொள்கிறார். இங்கு சுமார் 2,000 பேர் கூடும் வசதி கொண்ட பிரமாண்ட விருந்து மண்டபத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மகள் இவாங்காவுக்கு பிரதமர் மோடி விருந்தளிக்கிறார்.
இதற்கான ஏற்பாடுகளை  பலாக்னுமா அரண்மனை நிர்வாகம் செய்துள்ளது.
ஐதராபாத்தில் தங்கும் இவாங்கா சார்மினார், லாட்பஜார் உற்பட முக்கிய இடங்களுக்கு செல்கிறார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  நன்றி வீரகேசரி










குமுறும் அகுங் எரி­மலை : விமானப் போக்­கு­வ­ரத்­துகள் பாதிப்பு.!

27/11/2017 இந்­தோ­னே­சிய பாலித் தீவி­லுள்ள அகுங்  எரி­மலை குமுறி 13,100  அடி உய­ரத்­துக்கு புகை­யையும் சாம்­ப­லையும் வெளித் தள்­ளி­ய­தை­ய­டுத்து  அந்தப் பிராந்­தி­யத்தில் நேற்று கடும் எச்­ச­ரிக்கை பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

இது இந்­தோ­னே­சிய தீவில் ஒரு வார காலத்தில் இடம்­பெற்ற இரண்­டா­வது  பிர­தான எரி­மலைக் குமு­ற­லாகும்.
இந்­நி­லையில் எரி­மலைச் சாம்பல் விழும் பிராந்­தி­யங்­க­ளி­லுள்ள மக்­க­ளுக்கு  முக­மூடி உறை­களை வழங்கும் நட­வ­டிக்­கையில்  அதி­கா­ரிகள் ஈடு­பட்­டுள்­ளனர்.
இந்த எரி­மலைக் குமு­ற­லை­ய­டுத்து பாலித் தீவின்  பிர­தான விமான நிலை­யத்­திற்­கான விமான சேவை­களில் சில இரத்துச் செய்­யப்­பட்­டுள்­ளன.
ஆனால் பாலியின் கிழக்கே லொம்பொக் தீவி­லுள்ள  பிர­தான சர்­வ­தேச விமான நிலையம் முழு­மை­யாக மூடப்­பட்­டுள்­ளது.
இந்­நி­லையில் அந்த எரி­ம­லையை சூழ்ந்து 7.5  கிலோ­மீற்றர்  தூரத்துக்குள்  வாழும் மக் களை உடனடியாக இடம்யெர்வதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  நன்றி வீரகேசரி











 “பிரித்­தா­னிய பிர­தமர் என்னைக் கவ­னிப்­பதை விடுத்து தீவி­ர­வாதம் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்”

01/12/2017 பிரித்­தா­னிய பிர­தமர் தெரேஸா மே என்னில் கவனம் செலுத்­து­வதை விடுத்து தனது நாட்­டி­லான தீவி­ர­வாதம் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப் தெரி­வித்­துள்ளார்.
 பிரித்­தா­னிய தீவிர வலது சாரிக் குழுவால் இணை­யத்­த­ளத்தில் வெளி­யி­டப்­பட்ட  பதற்­றத்தை ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய 3 காணொளிக் காட்­சி­களை டொனால்ட் ட்ரம்ப் டுவிட்டர் இணை­யத்­த­ளத்தின் மூலம் மீளப் பரி­மாறிக் கொண்­ட­தை­ய­டுத்து,  இவ்­வாறு ஜனா­தி­ப­தி­யொ­ருவர் செயற்­பட்­டுள்­ளமை தவ­றா­னது என தெரேஸா மேயின் பேச்­சாளர் குற்­றஞ்­சாட்­டி­யி­ருந்தார்.
 பிரித்தானிய தீவிர வலதுசாரி பிரிட் டிஷ் தேசிய கட்சியின் முன்னாள் உறுப்பினர் களால் ஸ்தாபிக்கப்பட்டுள்ள பிறிட்டன் பெர்ஸட் அமைப்பின் பிரதித் தலைவர் ஜேடா பிரான்ஸனால் வெளியிடப்பட்ட காணொளிக் காட்சிகளையே ட்ரம்ப் மீள வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் டொனால்ட் ட்ரம்ப் டுவிட்டரில் தன்னால் வெளியிடப்பட்ட புதிய செய்தியில்,  தெரேஸா மே தன்னைக் கவனிப்பதை விடுத்து தீவிரவாதிகள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.  நன்றி வீரகேசரி










வட கொரி­யா­வு­ட­னான இரா­ஜ­தந்­திர உற­வு­களை அனைத்து உலக நாடு­களும் துண்­டிக்க வேண்டும்

01/12/2017 வட கொரியா புதி­தாக ஏவு­க­ணையை ஏவிப் பரி­சோ­தித்­த­தை­ய­டுத்து அந்­நாட்­டு­ட­னான இரா­ஜ­தந்­திர உற­வு­களை அனைத்து நாடு­களும் துண்­டிக்க வேண்டும் என அமெ­ரிக்கா அழைப்பு விடுத்­துள்­ளது. 
அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப் கொரி­யா­வுக்­கான எண்ணெய் விநி­யோ­கங்­களை நிறுத்த சீன ஜனா­தி­பதி ஸி ஜின்­பிங்­கிடம் கேட்டுக்கொண்­டுள்­ள­தாக ஐக்­கிய நாடுகள் சபைக்­கான அமெ­ரிக்கத் தூதுவர் நிக்கி ஹேலி  கூறினார்.
வட கொரி­யாவின் ஏவு­கணைப் பரி­சோ­த­னை­யை­ய­டுத்து ஐக்­கிய நாடுகள் பாது­காப்பு சபையில் கூட்­டப்­பட்ட அவ­சரக் கூட்­டத்தில் உரை­யாற்­று­கை­யி­லேயே  அவர் இவ்­வாறு கூறினார்.
 அமெ­ரிக்கா மோதல் ஒன்றை நாட­வில்லை எனவும் ஆனால் போர் ஒன்று இடம்­பெறும் பட்­சத்தில் வட கொரியா முற்று முழு­தாக அழிக்­கப்­படும் எனவும் அவர் தெரி­வித்தார்.
 வட கொரியா கடந்த இரு மாத காலப் பகு­தி­யி­லான தனது முத­லா­வது ஏவு­கணைப் பரி­சோ­த­னையை நேற்று முன்­தினம் புதன்­கி­ழமை மேற்­கொண்­ட­தை­ய­டுத்தே இந்த எச்­ச­ரிக்கை பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.
 அந்த ஏவு­க­ணை­யா­னது 4,475  கிலோ­மீற்றர் உய­ரத்­துக்குச் சென்று சுமார் 13,000 கிலோ­மீற்றர் தூரத்­திற்கு பய­ணிக்கக் கூடி­யது என வட கொரியா உரி­மை­ கோ­ரி­யுள்­ளது. இது  சர்­வ­தேச விண்­வெளி நிலை­யத்­தி­லி­ருந்து  பூமியின் வளி­மண்­ட­லத்­துக்குள் போரா­யு­த­மொன்றை பிர­யோ­கித்து  தாக்­கு­தலை நடத்­து­வ­துடன் ஒப்­பி­டு­கையில் 10  மடங்கு அதிக உயரம் என அந்­நாடு கூறு­கி­றது.
இதன் பிர­காரம் மேற்­படி ஏவு­க­ணை­யா­னது பிரித்­தா­னிய லண்டன் நகர்,  அமெ­ரிக்க நியூயோர்க் நகர் உள்­ள­டங்­க­லாக உலகின் அநேக நகர்­களை சென்று தாக்கும் வல்­ல­மையைக் கொண்­டுள்­ளது எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.  அந்த வகையில் இந்த ஏவு­க­ணையின் தாக்­கு­த­லி­லி­ருந்து தென் அமெ­ரிக்­காவும் ஆபி­ரிக்­காவின் சிறு பகு­தியும் மட்­டுமே விடு­பட்­டுள்­ள­தாகக் கூறப்­ப­டு­கி­றது.  
ஆனால்  வட கொரியா அத்­த­கைய உச்ச நிலைத் தொழில்­நுட்ப ஆற்­றலைப் பெற்­றி­ருப்­பது சாத்­தி­ய­மில்லை என்றே நிபு­ணர்கள் கரு­து­கின்­றனர்.
எனினும் இந்த ஏவு­கணைப் பரி­சோ­த­னை­யா­னது எது­வி­தத்­திலும் குறை­கூற முடி­யாத சாத­னை­யொன்­றா­க­வுள்­ள­தாக வட கொரிய தலைவர் கிம் யொங் – உன் குறிப்­பிட்­டுள்ளார்.
 வட கொரியா இந்த வரு­டத்தில் இதை­யொத்த அநேக ஏவு­கணைப் பரி­சோ­த­னை­களை மேற்­கொண்­டுள்ள போதும்,  தற்­போது மேற்­கொள்­ளப்­பட்­டுள்ள பரி­சோ­த­னை­யா­னது முழு அமெ­ரிக்­கா­வையும் இலக்­கு­வைக்­கக்­கூ­டிய ஆற்­றலைக் கொண்­டுள்­ளது என வட கொரிய அர­சாங்கம் தெரி­விக்­கி­றது.
இத்­த­கைய அத்­து­மீறல் நட­வ­டிக்­கைகள் தொடரும் பட்­சத்தில் அது வட கொரி­யாவின் ஸ்திரத்­தன்மையை மேலும் சீர்­கு­லைக்­க மட்­டுமே வழி­வகை செய்யும் என நிக்கி ஹேலி எச்­ச­ரித்­துள்ளார்.
 வட கொரியா தனது ஏவு­கணை மற்றும் அணு­சக்திப் பரி­சோ­த­னை­களை நிறுத்த வேண்டும் என அழைப்பு விடுத்­துள்ள ரஷ்யா,  அமெ­ரிக்கா இந்த மாதம் தென் கொரி­யா­வுடன் இணைந்து நடத்தத் திட்­ட­மிட்­டுள்ள இரா­ணுவப் பயிற்­சி­களை நிறுத்த வேண்டும் எனவும் அந்தப் பயிற்­சிகள் நிலை­மையை மேலும் பார­தூ­ர­மாக்கும் வகையில் அமைந்­துள்­ள­தா­கவும் தெரி­வித்­துள்­ளது.
அமெ­ரிக்கா தனது இரா­ணுவ பயிற்­சி­களை நிறுத்­து­வ­தற்கு பதி­லாக வட கொரியா தனது ஆயுதப் பரி­சோ­த­னை­களை நிறுத்தக்கூடும் என சீனா யோச­னையை முன்­வைத்­துள்­ளது. இதை­யொத்த யோசனை கடந்த காலத்தில் அமெ­ரிக்­காவால் முன்­வைக்­கப்­பட்ட போது வட கொரியா அதனை நிரா­க­ரித்­தி­ருந்­தது.
அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப் வட கொரி­யாவால் மேற்­கொள்­ளப்­பட்ட அணு­சக்திப் பரி­சோ­தனை குறித்து  நேற்று முன்­தினம் புதன்­கி­ழமை  குறிப்­பி­டு­கையில், அந்­நாட்டுத் தலைவர் கிம் யொங் – உன்னை ' நோயுற்ற நாய்க்­குட்டி'  என விமர்­சித்­தி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.  நன்றி வீரகேசரி






No comments: