ஒளிப்பதிவாளர் எம். ஏ. கபூர் காலமானார்

.
kapoor
இலங்கையின் பழம்பெரும் சினிமா ஒளிப்பதி வாளரும், பிரபல புகைப்பட கலைஞ ருமான எம். ஏ. கபூர் நேற்று கால மானார். மரணிக்கும் போது அவருக்கு வயது 78 ஆகும். மன்னார் மூர்வீதியை பிறப்பிடமாகக் கொண்ட அவர் 300க்கும் மேற்பட்ட சிங்கள மற்றும் தமிழ் திரைப்படங்களின் ஒளிப்பதி வாளராக கடமையாற்றியுள்ளார். தேசிய திரைப்படக் கூட்டுத்தாப னத்தினால் 2000ம் ஆண்டு சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது வழங்கி இவர் கெளரவிக்கப்பட்டுள்ளார். அன்னாரின் ஜனாஸா அவர் வசித்து வந்த திஹாரியில் வைக்கப் பட்டிருந்ததுடன் நேற்று அஸர் தொழுகைக்கு பின்னர் திஹாரிய பெரிய பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இலங்கையின் பழம்பெரும் சினிமா ஒளிப்பதிவாளரும் பிரபல புகைப்படக் கலைஞருமான எம். ஏ. கபூரின் மறைவு கலை உல கிற்கு ஏற்பட்ட பெரும் இழப்பாகும் என தகவல், ஊடகத்துறை அமைச்சின் மேற்பார்வை எம். பி. ஏ. எச். எம். அஸ்வர் தெரிவித்துள்ளார்.

No comments: