அருள்மொழி: இறைவன் விரும்பும் பூவும் பழமும்


ஓம் ஸ்ரீ சாயிராம்


தெருவில் வாங்கக் கிடைக்கும் பூவோ பழமோ இறைவனுக்குத் தேவையில்லை. தூய இதயம் என்னும் மணமுள்ள மலரையும், மனம் என்னும் கனியையும் அவனிடம் கொண்டு வாருங்கள். இவை ஆன்ம சாதனையினால் பக்குவப்பட்டவையாக இருக்க வேண்டும். இவையே அவனுக்கு மகிழ்ச்சியைத் தருபவை; சந்தையில் விற்கும் தயார்ப் பொருள்களல்ல. விலைக்கு வாங்கும் பொருள்கள் உன் மனதை உயர்த்த வல்லவையல்ல. ஆன்ம சாதனையே மனதை உயர்த்தும். 
இந்தச் சுவையை அறிய வேண்டுமானால் நீ நல்லோரின், மகான்களின் கூட்டத்தில் இருக்கவேண்டும். நல்லவற்றைச் சிந்திப்பதில் மகிழ்ச்சி அடையவேண்டும். ஏதாவது செய்து உன் ஆனந்தத்தையும் விவேகத்தையும் அதிகரித்துக் கொள். இவற்றால் உன்னை நிரப்பிக் கொண்டால், தேவைப்படும்போது நீ இந்தச் சேகரத்திலிருந்து எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
- சுவாமியின் அருளுரை, செப்டம்பர் 1, 1958
நன்றி சாய் கீதை

No comments: