உலகச் செய்திகள்


 காஷ்மீர் எல்லையில் போர் மேகம்!

நைஜீரியாவில் பள்ளிவாசலினுள் துப்பாக்கிச் சூடு: 44 பேர் பலி

மும்பையில் இந்திய நீர்மூழ்கியில் தீ: 18 வீரர்களைக் காணவில்லை

இந்திய எல்லைக்குள் நுழைந்த சீனப் படை

எகிப்தில் உக்கிர வன்முறைகளையடுத்து அமைதி: வன்முறைகளில் 525 பேர் பலி?

=======================================================================

காஷ்மீர் எல்லையில் போர் மேகம்!

12/08/2013   காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் இராணுவம் கடந்த 48 மணிநேரத்தில் மாத்திரம் மீண்டும் 5வது முறையாக இந்திய நிலைகள் மீது அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது.
காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில் எல்லைக் கட்டுப்பாடு கோட்டிற்கு அருகே கடந்த 6ந் தேதி பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளதுடன். இதில் இந்திய இராணுவ வீரர்கள் 5 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனைதொடர்ந்து தனது அத்துமீறலை பாகிஸ்தான் இராணுவம் தொடர்ந்து வருகிறது. பூஞ்ச் அருகே திக்வார் என்ற இடத்தில் பாகிஸ்தான் இராணுவம் நேற்றிரவு 10 மணியளவில் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது.


துர்கா, லங்கப்பூர், ரேகா ஆகிய இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் இராணுவம் துப்பாக்கியால் சுட்டும் ரொக்கெட் லோஞ்சர் மற்றும் பயங்கர ஆயுதங்களை கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளது.
பதிலுக்கு இந்திய இராணுவமும் தாக்குதல் நடத்தியது. 9 மணிநேரத்திற்கும் மேலாக நடைபெற்று வரும் இந்த மோதலில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் படுகாயம் அடைந்தார்.
நேற்று ஒரே நாளில் மட்டும் 3 முறையும், கடந்த 48 மணிநேரத்தில் 5வது முறையாகவும் பாகிஸ்தான் போர்நிறுத்தப் ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தியுள்ளது.
கடந்த ஜனவரியிலிருந்து 61 முறை பாகிஸ்தான் இராணுவம் எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி  



நைஜீரியாவில் பள்ளிவாசலினுள் துப்பாக்கிச் சூடு: 44 பேர் பலி

13/08/2013    தென்கிழக்கு நைஜீரியாவில் பள்ளிவாசலினுள் தொழுகை நடத்திக் கொண்டிருந்தவர்கள் மீது போக்கோ ஹராம் தீவிரவாதிகள் கண்மூடித் தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 44 பேர் உயிரிழந்தனர்.
சுமார் 50 சதவீதம் முஸ்லிம்களும், 50 சதவீதம் கிறிஸ்தவர்களும் வாழும் நைஜீரியாவில் இஸ்லாமிய சட்டதிட்டங்களை பின்பற்றும் ஆட்சி முறையை அமைக்க வேண்டும் என்று போராடி வருகின்றனர் போக்கோ ஹராம் தீவிரவாதிகள்.
அவ்வப்போது கிறிஸ்தவ தேவாலயங்களின் மீது தாக்குதல் நடத்தி பிராத்தனையில் ஈடுபடும் மக்களை கொன்று குவித்து வருகின்றனர்.
இதேபோல் பழைமைவாத முஸ்லிம்களையும் அவர்கள் ஈவிரக்கமின்றி கொன்று குவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் போர்னோ மாநிலம், மைடுடுரி பகுதியில் உள்ள மசூதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை உள்ளூர்வாசிகள் தொழுகையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, ஆயுதங்களுடன் பள்ளிவாசலினுள் புகுந்த போக்கோ ஹராம் தீவிரவாதிகள் தொழுகை நடத்தியவர்கள் மீது கண்மூடித் தனமாக துப்பாக்கியால் சுட்டனர்.
இச்சம்பவத்தில் 44 பேர் பலியானதாக போர்னோ மாவட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  நன்றி வீரகேசரி   







மும்பையில் இந்திய நீர்மூழ்கியில் தீ: 18 வீரர்களைக் காணவில்லை

14/08/2013 இந்தியாவின் தெற்கு மும்பை கடல் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த இந்திய கடற்படைக்கு சொந்தமான கப்பலில் நேற்று நள்ளிரவு திடீரென  தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் காணாமல் போன 18 வீரர்களைத் தேடும் பணி நடை பெற்று வருகிறது.
தெற்கு மும்பை கடற்படை தளத்தில் நிறுத்தப்பட்டிருந்தது இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ். சிந்து ராக்சாக் நீர் மூழ்கி கப்பல்.
நேற்று நள்ளிரவு திடீரென இக்கப்பலில் தீவிபத்து ஏற்பட்டது. உடனடியாக அருகில் இருந்த மற்றொரு கப்பல் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டதால் அதன் சேதாரம் தவிர்க்கப்பட்டது.
விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் 16 தீயணைப்பு வாகனங்களில் சென்ற தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்துவருகின்றன. தீ விபத்தில் நீர் மூழ்கி கப்பல் பலத்த சேதமடைந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார் .
விபத்தில் இருந்து தப்பிக்க பல வீரர்கள் நீரில் குதித்ததாகவும், பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இவ்விபத்தில் 3 அதிகாரிகள் உள்பட 18 வீரர்கள் காணவில்லை எனத் தெரிகிறது. தொடர்ந்து இவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
விபத்துக்கான காரணம் இதுவரை தெரிய வரவில்லை.    நன்றி வீரகேசரி  







இந்திய எல்லைக்குள் நுழைந்த சீனப் படை

14/08/2013    இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாசலப் பிரதேசத்தில் சீன இராணுவம் 30 கிலோ மீட்டர் தூரம் இந்திய எல்லைக்குள் ஊடுருவியிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
ஜம்மு காஷ்மீரில் பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது. லடாக்கில் சீனா தொடர்ந்தும் ஊடுருவி வருகிறது.
இந்நிலையில் அருணாசலப் பிரதேசத்தின் அஞ்சவ் மாவட்டத்தில் சங்கலஹாம் பகுதியில் சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவு இந்தியாவுக்குள் ஊடுருவியிருக்கின்றனர்.
சங்கலஹாம் பகுதிக்கு உரிமை கோரி சீன இராணுவ வீரர்கள்  சுற்றி வந்ததாகவும் அவர்களை வெளியேறும்படி இந்திய இராணுவத்தினர் எச்சரித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது வரை அங்கு கூடாரங்கள் அமைத்து சீன இராணுவத்தினர் தங்காத நிலையில் அவர்கள் தங்களது பகுதிக்கு இன்று திரும்பக் கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.     நன்றி வீரகேசரி  






எகிப்தில் உக்கிர வன்முறைகளையடுத்து அமைதி: வன்முறைகளில் 525 பேர் பலி?

16/08/2013  எகிப்­திய கெய்ரோ நகரில் ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­களின் முகாம்­களை கலைப்­ப­தற்­கான நட­வ­டிக்­கையின் போது இடம்­பெற்ற உக்­கிர வன்­மு­றை­க­ளை­ய­டுத்து அங்கு தற்­போது அமைதி நில­வு­வ­தாக அங்­கி­ருந்து வரும் செய்­திகள் கூறு­கின்­றன.
ஆட்சி கவிழ்க்­கப்­பட்ட முன்னாள் தலைவர் முர்­ஸியின் ஆத­ர­வா­ளர்கள் கூடி­யி­ருந்த இரு முகாம்­களை பாது­காப்பு படை­யினர் தகர்க்க மேற்­கொண்ட நட­வ­டிக்­கை­யின்­போது குறைந்­தது 525 பேர் பலி­யா­கி­யுள்­ள­தாக கூறப்­ப­டு­கி­றது.
அதே­ச­மயம் நஹ்டா சதுக்­கத்­திலும் மற்றும் ரபா அல் அடா­வியா பள்­ளி­வா­ச­லுக்கு அண்­மை­யிலும் உள்ள முகாம்­க­ளி­லி­ருந்­த­வர்­களை கலைக்க படை­யினர் புதன்­கி­ழமை மேற்­கொண்ட நட­வ­டிக்­கையின் போது 2000 பேருக்கும் அதி­க­மானோர் பலி­யா­கி­யுள்­ள­தாக முர்­ஸியின் முஸ்லிம் சகோ­த­ரத்­துவ அமைப்பு தெரி­விக்­கி­றது.
எனினும் உயிரிழந்தோர் தொடர்பில் முரணான தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன.
வன்முறைகளையடுத்து கெய்ரோவிலும் ஏனைய பல நகர்களிலும் புதன்கிழமை இரவு 7.00 மணி முதல் வியாழக்கிழமை காலை 6.00 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது.
ஊர­டங்கு சட்டம் நீக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து தலை­ந­க­ரி­லுள்ள வீதி­க­ளிலும் பாலங்­க­ளிலும் சிறிது சன­நெ­ருக்­கடி காணப்­பட்­டுள்­ளது.
''எகிப்தில் இடம்­பெற்ற வன்­மு­றைகள் அந்­நாட்டில் மீள் நட்­பு­ணர்வை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்­கான முயற்­சிகளுக்கு பாரிய அடி­யாகும்'' என அமெ­ரிக்க இரா­ஜாங்க செய­லாளர் ஜோன் கெரி தெரி­வித்­துள்ளார்.

இந்த வன்­மு­றை­க­ளுக்கு ஐரோப்­பிய ஒன்­றிய வெளி­நாட்டு கொள்கைத் தலைவர் கதரின் அஷ்­டனும் ஐக்­கிய நாடுகள் செய­லாளர் நாயகம் பான் கீ மூனும் கண்­டனம் தெரி­வித்­துள்­ளனர்.
கடந்த ஜூலை மாதம் 3ஆம் திகதி இரா­ணு­வத்­தி­னரால் வெளி­யேற்­றப்­பட்ட மொஹமட் முர்­ஸியை மீள் பத­வியில் அமர்த்த வலி­யு­றுத்­தியே அவ­ரது ஆத­ர­வா­ளர்கள் ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்டு வரு­கின்­றனர்.
இந்­நி­லையில் இரா­ணுவ ஆத­ர­வுள்ள அந்­நாட்டு இடைக்­கால அர­சாங்கம், புதன்­கி­ழமை இடம்­பெற்ற வன்­மு­றை­களில் 43 பேர் பலி­யா­கி­யுள்­ள­தா­கவும் 2926 பேர் காய­ம­டைந்­துள்­ள­தா­கவும் தெரி­வித்­துள்­ளது.
மேற்­படி வன்­மு­றை­க­ளுக்கு பிரித்­தா­னிய பிர­தமர் டேவிட் கமெரோன், துருக்­கிய பிர­தமர் றிசெப் ­தாயிப் எர்­டோகன் ஆகி­யோரும் ஜெர்­மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளின் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
 நன்றி வீரகேசரி  



No comments: