ஸ்ரீ சிறுடி சாய் பாபாவின் கோவில் பூமி யாகம் 12/08/2012

 - கு கருணாசலதேவா
 சென்ற சனிக்கிழமை 11-08-2012ம் திகதி சிட்னி துர்க்கை அம்மன் கோவிலிற்கு அருகாமையில் அமைந்துள்ள காணியில் புதிதாக ஸ்ரீ சிறுடி சாய்  பாபாவின் கோவில் கட்டுவதற்கான ஆரம்பவேலை பூமி யாகத்தோடு ஆரம்பமாகியது. நியூ யோர்க்   கிலிருந்து வருகை தந்துள்ள ஸ்ரீ சைடன்யானந்தா நாதா சரஸ்வதி  Sri Chaitanyananda Natha Saraswati  (ஹரன் ஐயா) அவர்கள் இந்த யாகத்தை காலை 10 மணி தொடக்கம் மிகச்சிறப்பாக நடாத்தியிருந்தார்.  வருகைதந்துள்ள நூற்றுக்கணக்கான பக்தர்கள் அனைவரும் இந்த யாகத்தில் கலந்துகொண்டு புதிய கோயில் கட்டுவதற்கான ஆரம்ப நிகழ்ச்சியை மிகச்சிறப்பாக நடாத்தி வைத்தார்கள். வாகன வசதியில்லாத பக்தர்களுக்கு லிட்கம் புகையிரத நிலையத்திலிருந்து பஸ் சேவை செய்யப்பட்டிருந்தது. பிறபகல் 1 மணியளவில் மதியஉணவோடு இந்நிகழ்ச்சி இனிதே முடிவடைந்தது.
வீடியோ கீழே 

படங்கள் கீழே

படப்பிடிப்பு :   ஞானி

















No comments: