நம்மைக் கவர்ந்த நாதஸ்வர கலைஞர்களின் இசை நிகழ்ச்சி

.
                                                                                    மதுரா மகாதேவ்

தாயகத்தில் இருந்து சிட்னி முருகனின் திருவிழாவை சிறப்பிக்க வந்திருந்த தவில் நாதஸ்வர கலைஞர்களின் இசை நிகழ்ச்சி சிட்னி முருகன் ஆலயத்தின் கலை கலாச்சார மண்டபத்தில் 04.04.2010 அன்று நடை பெற்றது. நுழைவுச் சீட்டுகள் பத்து வெள்ளிகள் என விற்கப்பட்டன. நிகழ்ச்சி சரியாக ஐந்து மணிக்கு மண்டபம் நிறைந்த கூட்டத்துடன் ஆரம்பமானது. . முதலில் கீர்த்தனைகளை வாசித்தார்கள். நாதஸ்வரத்தின் இனிமைக்கு ஏற்றாற்போல் தவில் வித்வான்களாகிய சுதாகரும் நர்மதனும் மிகவும் திறம்பட தாளத்திற்கேற்ப  வாசித்தார்கள்.




நாதஸ்வர வித்வான்களான நாகேந்திரமும் பாலமுருகனும் மிகவும் இனிமையாக பல தமிழ்த் திரை இசை பாடல்களை இடைவேளையின் பின்பு வாசித்தார்கள். 1940 களில் இருந்து 2009 ஆம் ஆண்டு வெளியான பட பாடல்களை வாசித்தது மிகவும் வியக்கத்தக்க ஒன்றாக இருந்தது. புதிய பாடல்களில் குத்து பாடல்களையும் அவர்களின் நாதஸ்வரம் விட்டுவைக்கவில்லை. அவற்றில் ஒன்று வாழை மீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம். இதைவிட வில்லு படத்திலிருந்து டாடி மம்மி வீட்டிலில்லை தடை போட யாருமில்லை, வாடா மாப்பிள்ளே வாழைப்பழ தோப்பிலே என்னும் இளையவர்களை மட்டுமல்லாமல் வயதுவந்தவர்களையும் கவரந்த பாடல்களாகும்.
படிக்காத மேதை திரைப் படத்திலிருந்து பெண் ஒன்று கண்டேன் பொன் அங்கு இல்லை, அபூர்வ ராகங்களில்ருந்து அதிசய ராகம் ஆனந்த ராகம், சிவாஜியிலிருந்து ரா ரா, என்னும் பாடல்களை மிகவும் இனிமையாக வாசித்தார்கள். பொம்பே திரை படத்திலிருந்து உயிரே என்னும் பாடலை பாலமுருகன் வாசித்தது அனைவரையும் கொள்ளை கொண்டுவிட்டது. இவர் ஒரு இளம் தலை முறையை சேர்ந்த கலைஞர் இவருக்கு எதிர்காலம் சிறப்பாக அமையும் என்று நம்பலாம்.



இந்த நிகழ்ச்சியின் மூலம் சேர்ந்த பணத்தை வழமைபோல் சைவமன்றத்தினர் அவர்களுக்கே கொடுத்து கௌரவித்தார்கள். இசை நிகழ்ச்சி இரவு ஒன்பது நாற்பந்தைந்திற்கு நிறைவு பெற்றது. எமது தாய் நாட்டிலிருந்தும் கனடாவில் இருந்தும் வருகை தந்து எங்களை நாதஸ்வர தவில் இசையில் நனைய செய்த இந்த நால்வரும் நீண்ட நாள் வாழ எல்லாம் வல்ல சிட்னி முருகப்பெருமான் அருள் புரிய வேண்டும். ஒரு சிறந்த நிகழ்சியை சிறந்த முறையில் நடாத்தி முடித்த சைவமன்றத்தினரும் பாராட்டப்பட வேண்டியவர்களே.

No comments: