.
மாதவனை வணங்கிய
மார்கழி முடிந்ததும்
ஆதவனை வணங்கிட
தைப் பொங்கல் வருகுது .
போகட்டும் துன்பமென
போகியோடு துவங்குது
பொங்கட்டும் இன்பமென
பொங்கல் தொடருது .
உழவுக்கு உதவி செய்யும்
மாட்டுக்கு நன்றி சொல்ல
மாட்டுப்பொங்கல்
மறுநாள் வருகுது .
உறவுகளைப் புதுப்பித்து
உற்சாகம் கண்டிடவே
காணும் பொங்கல்
மூன்றாம்நாள் வருகுது ..
உணவுத்தரும் தொழிலுக்கும்
உணர்வில் கலந்த தமிழுக்கும்
ஒருசேர விழா எடுக்கும்
உயரியவிழா பொங்கலன்றோ .
வியர்வை சிந்தி உழைக்கும்
விவசாயி பிழைத்திடவும்
விவசாயம் தழைத்திடவும்
விலை நன்கு கிடைத்திடவும்
வேண்டிடுவோம் இந்நாளில் .
தமிழர் திருநாளாய் -இந்தத்
தரணி போற்றும் நன்னாளில்
தமிழன்னை புகழ் பாடி
தமிழினத்தை உயர்த்திடுவோம்.
திருவள்ளுவர் தினத்தில்
திருக்குறளை முற்றோதி
குறள் வழி வாழ்ந்து இந்தக்
குவலயத்தில் உயர்ந்திடுவோம் .
உழவன் வாழ்க , உயிரினங்கள் வாழ்க ,வாழ்க
தமிழ் வாழ்க , தமிழினம் வாழ்க .,வாழ்க
வள்ளுவம் வாழ்க ,இவ்வையகம் வாழ்க, வாழ்க .
பொங்கலோ பொங்கலென பொங்குக இன்பமெங்கும் .
அன்புடன் ,
சிலேடை சித்தர் சேது சுப்ரமணியம்
No comments:
Post a Comment