இலங்கைச் செய்திகள்


ட்ராவிஸ் சின்னையாவிற்கு டிரினிடி விருது

சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு

இலங்­கைக்கு அழுத்தம் பிர­யோ­கிக்க ஜெனி­வாவில் 15 உப குழுக் கூட்­டங்கள்

கொ­ழும்பில் இல­வச திரு­மணத் திட்­டம்

கொரிய அணுசக்தி பரிசோதனையை எதிர்க்கும் இலங்கை

நியூயோர்க்கில் ஹுசைனை சந்திக்கவுள்ள ஜனாதிபதி

இலங்­கையில் போர்க்­குற்றம் : மீண்டும் நட­வ­டிக்கை எடுக்கும் அமெ­ரிக்கா

 சிவாஜிலிங்கம் தலைமையிலான குழு ஜெனீவா சென்றது







ட்ராவிஸ் சின்னையாவிற்கு டிரினிடி விருது

11/09/2017 கண்டி டிரினிடி கல்லூரியின் பழைய மாணவரான கடற்படைத் தளபதி வைஸ் அத்மிரல் ட்ராவிஸ் சின்னையாவிற்கு கடந்த 9ஆம் திகதி கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடைப்பெற்ற சிங்க இரவு விருது விழாவின் போது “டிரினிடி விருது” வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
125ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடும் டிரினிடி கல்லூரி பழைய மாணவர் சங்கம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட சிங்க இரவு நிகழ்ச்சியின் போதே பல்வேறு துறைகளிலும் சிறந்த சேவைகளை ஆற்றிய ட்ராவிஸ் சின்னையா உட்பட கல்லூரியின் 14 பழைய மாணவர்களுக்கு "டிரினிடி விருது" வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இவ் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய கடற்படை தளபதி கூறுகையில், 
குறித்த விருதை பெறுவதற்காக பாடசாலை மேடைக்கு 37 வருடங்களுக்கு பிறகு வந்துள்ளேன் என்றும் விருதை பெற்றதற்காக தான் சந்தோஷமடைவதாகவும் 35 வருட கடற்படை சேவையுடன் வெற்றிகரமான கடற்படையின் 21ஆவது கடற்படை தளபதியாக புகழ் பெற்ற விருந்தினர்கள் முன் உரையாட வாய்ப்பு கிடைத்தமை தொடர்பில் மகிழ்ச்சியடைவதாகவும் தெரிவித்தார்.
மேலும் கடற்படையில் தன்னுடைய  பாதை மிக நீண்டது மற்றுமல்லாது தடைகள் பல நிறைந்தது எனவும் தடைகளை எதிர்கொள்ள பாடசாலை கற்றுக்கொடுத்த விடாமுயற்சி மற்றும் போராடும் குணம் என்பன பெரிய உதவியாக இருந்தது என்றும் கூறினார்.
தனது உரையின் இறுதியில் தனக்கு வழங்கப்பட்ட மரியாதைக்கும் கௌரவத்திற்கும் பழைய மாணவர் சங்க தலைவர் மற்றும் நிர்வாகக் குழுவினருக்கும் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொண்டார்.



சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு

11/09/2017 இலங்கைக்கு வருகைத்தந்துள்ள சுற்றுலாப்பயணிகளின் தொகை கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 2.5 வீதத்தால் அதிகரித்துள்ளது. இவ்வாறு இந்தியாவிலிருந்தே அதிகமானோர் வருகைத்தந்திருந்தாகவும் சுற்றுலாத்துறை மற்றும் கிறிஸ்த்தவ மதவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
இது தொடர்பில் அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது. 
நன்றி வீரகேசரி












இலங்­கைக்கு அழுத்தம் பிர­யோ­கிக்க ஜெனி­வாவில் 15 உப குழுக் கூட்­டங்கள்

Image result for ஜெனி­வா virakesari

12/09/2017 ஐக்­கிய நாடுகள் மனித உரி மைப் பேர­வையின் 36 ஆவது கூட்டத் தொடர் நேற்று ஆரம்­ப­மா­கி­யுள்ள நிலையில் இலங்கை தொடர்­பான உப நிகழ்­வுகள் தொடர்பில் அனை­வரும் அவ­தானம் செலுத்­தி­யுள்­ளனர். ஜெனிவா வளா­கத்தில் நடை­பெ­ற­வுள்ள இந்த இலங்கை குறித்த உப குழுக் கூட்­டங்­களில் இலங்கை மனித உரிமை விவ­காரம் தொடர்பில் பர­ப­ரப்­பான வாதப்­பி­ர­தி­வா­தங்கள் எழும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.
சர்­வ­தேச மனித உரிமை அமைப்­புக்கள், சர்­வ­தேச அர­ச­சார்­பற்ற நிறு­வ­னங்கள் இலங்கை தொடர்­பான இந்த நிகழ்­வு­களை ஏற்­பாடு செய்­துள்­ளன. மேலும் சர்­வ­தேச நாடு­களின் பிர­தி­நி­திகள் ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வையின் பிர­தி­நி­திகள் இலங்கை தூத­ர­கத்தின் பிர­தி­நி­திகள் என பலரும் கலந்­து­கொண்டு உரை­யாற்­ற­வுள்­ளனர். அத்­துடன் இலங்­கையில் பாதிக்­கப்­பட்ட மக்­களும் இந்த உப குழுக் கூட்­டங்­களில் கலந்­து­கொள்­ள­வுள்­ளனர்.
பிரான்ஸ் அமைப்பு நடத்தும் கூட்டம்
இலங்கை தொடர்­பான முத­லா­வது உப­குழுக் கூட்­ட­மா­னது பிரான்ஸ் நாட்டின் அமைப்பு ஒன்­றினால் நாளை 13 ஆம் திகதி மனித உரிமைப் பேரவை வளா­கத்தின் 22 ஆவது அறையில் பிற்­பகல் 2 மணி­யி­லி­ருந்து 3.30 வரை நடை­பெ­ற­வுள்­ளது.  
தமிழ் உல­கத்தின் கூட்டம்
இலங்கை தொடர்­பான இரண்­டா­வது உப­குழுக் கூட்டம் 14ஆம் திகதி நடை­பெ­ற­வுள்­ளது. தமிழ் உலகம் என்ற சர்­வ­தேச அமைப்பு ஏற்­பாடு செய்­துள்ள இந்த உப­குழுக் கூட்டம் மனித உரிமைப் பேர­வையின் 11ஆவது அறையில் 14 ஆம் திகதி மாலை 5 மணிக்கு நடை­பெ­ற­வுள்­ளது.
மூன்­றா­வது உப­குழுக் கூட்டம்
எதிர்­வரும் 15ஆம் திகதி மாலை 4.30 க்கு இலங்கை தொடர்­பான மூன்­றா­வது உப­குழுக் கூட்டம் நடை­பெ­ற­வுள்­ளது. பாரதி நிலைய அமைப்­பினால் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்ள இந்த உப­குழுக் கூட்­டத்தில் இலங்­கையின் மனித உரிமை நிலைமை தொடர்பில் ஆரா­யப்­ப­ட­வுள்­ளது. இது ஜெனிவா மனித உரிமைப் பேரவை வளா­கத்தின் 23 ஆவது அறையில் நடை­பெ­ற­வுள்­ளது. 
இலங்­கையின் மனித உரிமை நிலைமை தொடர்­பாக ஜெனிவா மனித உரிமைப் பேரவை வளா­கத்தில் 11 ஆவது இலக்க அறையில் மற்­று­மாரு உப குழுக் கூட்டம் 15 ஆம் திகதி நடை­பெ­ற­வுள்­ளது. மாலை 4.30 மணிக்கு ஆரம்­ப­மா­க­வுள்ள இந்த கூட்­டத்தை லீ பொண்ட் என்ற அமைப்பு ஏற்­பாடு செய்­துள்­ளது.
பிரான்ஸ் அமைப்பு 
மற்­றொரு பிரான்ஸ் நாட்டின் தொண்டர் அமைப்பு ஏற்­பாடு செய்­துள்ள இலங்கை தொடர்­பான உப குழுக் கூட்டம் ஜெனிவா மனித உரிமைப் பேரவை வளா­கத்தின் 27 ஆவது குழு அறையில் 18 ஆம் திகதி நடை­பெ­ற­வுள்­ளது. பகல் 12 மணி முதல் ஒரு மணி வரை நடை­பெ­ற­வுள்ள இந்த உப குழுக் கூட்­டத்தில் பல்­வேறு நிபு­ணர்­களும் கலந்­து­கொண்டு உரை­யாற்­ற­வுள்­ளனர்.
எதிர்­வரும் 19 ஆம் திகதி மாலை 3 மணிக்கு தமிழ் உலகம் என்ற அமைப்பு ஏற்­பாடு செய்­துள்ள இலங்கை மனித உரிமை தொடர்­பான உப குழுக் கூட்டம் நடை­பெ­ற­வுள்­ளது. நிலை­மாறு கால நீதி என்ற தலைப்பில் இந்தக் கூட்டம் 11 ஆவது இலக்க அறையில் நடை­பெ­ற­வுள்­ளது. 
மற்­று­மொரு சர்­வ­தேச மனித உரிமை அமைப்பு ஏற்­பாடு செய்­துள்ள இலங்கை தொடர்­பான உப குழுக் கூட்டம் எதிர்­வரும் 19ஆம் திகதி ஐ.நா. மனித உரிமை வளா­கத்தின் 27 ஆவது குழு அறையில் நடை­பெ­ற­வுள்­ளது. பாரதி கலா­சார நிலையம் ஏற்­பாடு செய்­யது இலங்கை தொடர்­பான உப குழுக் கூட்டம் 20 ஆம் திகதி நடை­பெ­ற­வுள்­ளது. இலங்கை மனித உரி­மையின் நிலை­மைகள் என்ற தலைப்பில் இடம்­பெ­ற­வுள்ள இந்­தக கூட்­டத்தில் கூட்டம் 22 ஆவது குழு அறையில் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது. 
சமூக வலு­வூட்டல் மற்றும் சமூ­கத்­திற்­கான அபி­வி­ருத்தி என்ற அமைப்பு ஏற்­பாடு செய்­துள்ள இலங்கை தொடர்­பான ஒரு உப­குழுக் கூட்டம் 21ஆம் திகதி ஜெனி­வாவில் நடை­பெ­ற­வுள்­ளது. மாலை 3 மணி முதல் 4 மணி வரை 24 ஆவது குழு அறையில் இந்தக் கூட்டம் நடை­பெ­ற­வுள்­ளது. 
அனைத்­து­வி­த­மான அநீ­தி­களும் எதி­ரான சர்­வ­தேச இயக்கம் இலங்கை தொடர்­பான 22 ஆம் திகதி ஒரு உப குழுக் கூட்­டத்தை ஏற்­பாடு செய்­துள்­ளது. ஐ.நா. மனித உரிமைப் பேரவை வளா­கத்தின் 27 ஆவது குழு அறையில் மாலை 4 மணிக்கு இக்­கூட்டம் நடை­பெறும்.
சர்­வ­தேச பௌத்த நிவா­ரண அமைப்பின் உப­குழுக் கூட்டம்  
சர்­வ­தேச பௌத்த நிவா­ரண அமைப்பு ஏற்­பாடு செய்­தி­ருக்கும் இலங்கை தொடர்­பான உப­குழுக் கூட்டம் 25ஆம் திகதி நடை­பெ­ற­வுள்­ளது. பிற்­பகல் ஒரு மணிக்கு ஆரம்­ப­மாகும் இந்த உப­குழுக் கூட்­டத்தில் 2015 ஆம் ஆண்டு நிறை­வேற்­றப்­பட்ட இலங்கை தொடர்­பான பிரே­ரணை குறித்து விவா­திக்­கப்­ப­ட­வுள்­ளது. ஜெனிவா மனித உரிமைப் பேர­வையின் வளா­கத்தின் 15 ஆவது குழு அறையில் இந்தக் கூட்டம் நடை­பெ­ற­வுள்­ளது. 
அநீ­தி­க­ளுக்கு எதி­ரான அமைப்பு 
அத்­துடன் 26 ஆம் திகதி 12 மணிக்கு இலங்கை தொடர்­பான ஒரு உப குழுக் கூட்டம் நடை­பெ­ற­வுள்­ளது. சக­ல­வி­த­மான அநீ­தி­க­ளுக்கும் எதி­ரான சர்­வ­தேச இயக்கம் ஏற்­பாடு செய்­துள்ள இந்தக் கூட்டம் 27 ஆவது குழு அறையில் நடை­பெ­ற­வுள்­ளது. மற்றும் பிரான்ஸ் சர்­வ­தேச நிறு­வனம் ஒன்­றினால் இலங்கை தொடர்­பான உப குழுக் கூட்டம் ஒன்று 26 ஆம் திகதி ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது. இதுவும் குழு அறை 27 இல் பிற்­பகல் 1.30 இற்கு ஆரம்­ப­மாகும்.
பசுமை தாயகம்  
இதே­வேளை இந்­தி­யாவின் பசுமை தாயகம் என்ற அமைப்பு ஏற்­பாடு செய்­துள்ள இலங்கை தொடர்­பான உப­குழுக் கூட்டம் எதிர்­வரும் 27ஆம் திகதி நடை­பெ­ற­வுள்­ளது. பிற்பகல் 12.30 மணிக்கு ஆரம்பமாகும் இந்தக் கூட்டத்தில் பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயப்படவிருக்கிறது. 
இலங்கை மனித உரிமை நிலைமை மற்றும் அநீதி என்ற தொனிப்பொருளில் எதிர்வரும் 27 ஆம் திகதி இலங்கை தொடர்பான ஒரு உபகுழுக் கூட்டம் இறுதியாக ஜெனிவாவில் நடைபெறவுள்ளது. சர்வதேச பௌத்த நிவாரண அமைப்பு இதனை ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்வு குழு அறை 15 இல் நடைபெறும்.   நன்றி வீரகேசரி











கொ­ழும்பில் இல­வச திரு­மணத் திட்­டம்

12/09/2017 பிரித்­தா­னிய சைவ­முன்­னேற்றச் சங்கம் தனது 40 ஆண்டுப் பூர்த்­தி­யை முன்­னிட்டு அகில இலங்கை இந்­து­மா­மன்­றத்­துடன் இணைந்து 40 மண­மக்­க­ளுக்கு இல­வச திரு­ம­ண­த் திட்டம் ஒன்­றி­னை ­ந­டத்­த­வுள்­ளது.
எதிர்­வரும் 15 ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழ­மை­ காலை 6.17 முதல் 8.33 வரை­யுள்­ள ­சு­பமு­கூர்த்­த ­வே­ளையில் பம்­ப­லப்­பிட்டி, சம்­மாங்­கோடு ஸ்ரீ மாணிக்­க­ வி­நா­யகர் ஆலய மண்­ட­பத்தில் இத் திரு­ம­ண­ வை­பவம் நடை­பெ­ற­வுள்­ளது.
திரு­மண வய­தினை அடைந்தும் வறுமை நிலை­ கா­ர­ண­மாக திரு­மண பந்­தத்தில் இணை­ய­ மு­டி­யா­ம­லி­ருக்கும் 40 மண­மக்கள் தெரி­வு ­செய்­யப்­பட்டு இத் திட்­டத்தின் கீழ் திரு­மணம் செய்­து­வைக்­கப்­ப­ட­வுள்­ளனர். ஒவ்­வொ­ரு­ம­ண­மக்­க­ளுக்கும் தாலி, கூறைப்­பு­டவை, பட்­டு­, வேட்­டி­ சால்வை, இரண்­டு­மோ­தி­ரங்கள் ஆகி­ய­வற்­றுடன் வீட்டுப்பாவனைப் பொருட்கள் மற்றும் திருமணச் செலவுக்கென நிதியுதவியும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி












கொரிய அணுசக்தி பரிசோதனையை எதிர்க்கும் இலங்கை
12/09/2017 கொரிய ஜனநாயக மக்கள் குடியரசால் கடந்த 3 ஆம் திகதி பரீட்சிக்கப்பட்ட 6 ஆவது அணுசக்தி பரிசோதனைக்கு இலங்கை தனது கண்டனத்தையும் எதிர்ப்பையும் தெரிவித்துள்ளது.
கொரியாவின் இத்தகைய செயற்பாடானது மக்கள் நலனுக்காக ஐ.நா. பாதுகாப்பு குழுவின் தீர்மானங்கைளை மீண்டும் மீண்டும் மீறுகின்ற தான் தோன்றித்தனத்தை எடுத்துக்காட்டுவதாகவுள்ளது எனவும் குறித்த பகுதி மற்றும் அதற்கு அப்பாலும் சமாதானத்திற்கும் ஸ்தீரதன்மைக்கும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது எனவும் இலங்கை வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. 
இயற்கையை பாதுகாப்பதற்கும் ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானங்களை கடைப்பிடிப்பதற்கும், கலந்துரையாடல் மூலம் பிரச்சினைகளை தீர்வுக்குக் கொண்டுவருவதற்கும் சர்வதேச சமூகத்துடன் இணைந்து செயற்படுமாறு கொரிய ஜனநாயக மக்கள் குடியரசை இலங்கை வலியுறுத்தியுள்ளது.
மேலும் ஐ.நா. பாதுகாப்பு சபையால் கையொப்பமிட்ட புதிய தீர்மானத்தை வரவேற்கும் அதேவேளை ஐ.நா பாதுகாப்பு சபை முடிவுகளை நிறைவேற்றுவது தொடர்பில் மீண்டும் தனது உறுதிப்பாட்டை வலியுறுத்துவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நன்றி வீரகேசரி












நியூயோர்க்கில் ஹுசைனை சந்திக்கவுள்ள ஜனாதிபதி
13/09/2017 ஐக்­கிய நாடுகள் பொதுச் சபையின் 72 ஆவது கூட்டத் தொடரில் கலந்­து­கொள்ளும் நோக்கில் எதிர்­வரும் ஞாயிற்­றுக்­கி­ழமை நியூ யோர்க் செல்­ல­வுள்ள ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன  ஐக்­கிய நாடுகள் மனித உரிமை ஆணை­யாளர்  செய்ட் அல் ஹுசைன் மற்றும் உலக நாடு­களின் அர­சியல் தலை­வர்­களை  சந்­தித்து பேச்­சு­வார்த்தை  நடத்­த­வுள்ளார்.  
ஐக்­கிய நாடுகள் பொதுச் செய­லாளர் நாயகம் அன்­டோ­னியோ கட்ரஸ் இந்­திய பிர­தமர்   நரேந்­திர மோடி  ஜப்பான் பிர­தமர்  சின்­சிரோ அபே சீன ஜனா­தி­பதி  ஷீ ஜின்பின் ஜேர்மன் அதிபர்  ஏஞ்­சலா மேர்கல் கன­டாவின் பிர­தமர் டுருடூ உள்­ளிட்ட அர­சியல் தலை­வர்­களை சந்­தித்து பேச்சு நடத்­த­வுள்ளார். 
ஐக்­கிய நாடுகள் பொதுச் சபை அமர்வின்   பக்க சந்­திப்­புக்­க­ளா­கவே அர­சியல் தலை­வர்­க­ளுக்கு இடை­யி­லான இந்த சந்­திப்­புக்கள் நடை­பெ­று­வுள்­ளன. 
ஐக்­கிய நாடுகள்  மனித உரிமை ஆணை­யாளர்  செய்ட் அல் ஹுசே­னுக்கும் ஜனா­தி­பதி  மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கும்  இடை­யி­லான சந்­திப்­பின்­போது பல்­வேறு  விட­யங்கள் குறித்து ஆரா­யப்­ப­ட­வுள்­ளது. 
அதா­வது  இலங்கை   பொறுப்­புக்­கூறல் மற்றும்  நல்­லி­ணக்க விட­யத்தில்  மிகவும்  தாம­த­மாக செயற்­ப­டு­கின்­ற­தாக  நேற்று  முன்­தினம்   ஐக்­கிய நாடுகள்  மனித உரிமை ஆணை­யாளர்  செய்ட் அல் ஹுசேன்   கடும் அதி­ருப்­தியை  வெ ளியிட்ட நிலையில் இந்த  சந்­திப்பு நடை­பெ­ற­வுள்­ளமை  விசேட அம்­ச­மாகும். 
இதன்­போது    பொறுப்­புக்­கூறல் மற்றும் நல்­லி­ணக்க விட­யத்தில் அர­சாங்கம்  முன்­னெ­டுக்கும் வேலைத்­திட்­டங்கள் குறித்து   அல் ஹுசே­னுக்கு  ஜனா­தி­பதி  மைத்­திரி  விளக்­க­ம­ளிக்­க­வுள்ளார். அத்­துடன்  காணாமல் போனோர்   தொடர்­பாக ஆராய்­வ­தற்­கான    அலு­வ­லகம் நிய­மிக்­கப்­ப­ட­வுள்­ளமை குறித்தும்   புதிய  அர­சி­ய­ல­மைப்பை  உரு­வாக்க   அர­சாங்கம்  அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­ப­டு­கின்­றமை  தொடர்­பா­கவும் ஜனா­தி­பதி    விளக்­கிக்­கூ­ற­வுள்ளார். 
எனினும்   2015  ஆம் ஆண்டு ஜெனிவா பிரே­ர­ணையை  அமுல்­ப­டுத்­து­வதில் அர­சாங்கம்   தாம­த­மாக  செயற்­ப­டு­வ­தாக இந்த சந்­திப்­பின்­போது  செய்ட் அல் ஹுசேன்   அதி­ருப்­தியை  வெ ளியி­டலாம் என   எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. 
ஆனால்  பொறுப்­புக்­கூறல் நல்­லி­ணக்க செயற்­பா­டுகள் மற்றும்   2015 ஆம் ஆண்டு பிரே­ர­ணையை  அமு­லாக்­குதல்   தொடர்பில்   அர­சாங்கம் எதிர்­கொள்ளும்  சவால்கள் குறித்தும்   இன­வாத சக்­தி­களின்   இடை­யூ­றுகள்   தொடர்­பா­கவும்  ஜனா­தி­பதி  இதன்­போது   ஐக்­கிய நாடுகள்  மனித உரிமை ஆணை­யாளர்  செய்ட் அல் ஹுசே­னுக்கு   எடுத்­து­ரைப்பார் என்றும்  தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.   
இதே­வேளை  ஐக்­கிய நாடுகள் பொதுச் சபையின் 72 ஆவது கூட்டத் தொடரில் கலந்­து­கொள்ளும் இந்­திய பிர­தமர்  நரேந்­திர மோடி­யையும்  ஜனா­தி­பதி  சந்­தித்து  இரு­த­ரப்பு  பேச்­சு­வார்த்­தையை  நடத்­த­வுள்ளார்.    ஐக்­கிய நாடுகள் பொதுச் சபை வளா­கத்தில் இந்த பிரத்­தி­யேக சந்­திப்பு நடை­பெ­ற­வுள்­ளது. 
இதன்­போது இலங்­கைக்கும் இந்­தி­யா­வுக்கும் இடை­யி­லான   உறவை மேலும் கட்­டி­யெ­ழுப்­புதல்  குறித்தும்  இரண்டு நாடு­க­ளுக்கு இடை­யி­லான  உறவை அடுத்த கட்­டத்­துக்கு கொண்டு  செல்­வது    தொடர்­பா­கவும் இரண்டு நாடு­க­ளி­னதும்  தலை­வர்கள் கலந்­து­ரை­யா­ட­வுள்­ளனர். 
மேலும்  இலங்­கையில் உரு­வாக்­கப்­பட்­டு­வரும்  புதிய அர­சி­ய­ல­மைப்பு   அதில்  தமிழ் பேசும் மக்­க­ளுக்­கான அர­சியல் தீர்வு என்­பன  தொடர்­பா­கவும்  விரி­வாக  பேசப்­ப­ட­வுள்­ளது.   மேலும்  எட்கா உடன்­ப­டிக்கை விவ­காரம்     மத்­தள  விமான நிலைய   அபி­வி­ருத்தி இணக்­கப்­பா­டுகள் குறித்தும்  இதன்­போது இரண்டு நாடு­க­ளி­னதும் தலை­வர்­க­ளினால்  கலந்­து­ரை­யா­டப்­ப­ட­வுள்­ளது.  ஐக்­கிய நாடுகள் பொதுச் சபையின் 72 ஆவது கூட்டத் தொடரில் பங்­கேற்­க­வுள்ள இரண்டு  தலை­வர்­க­ளி­னதும் சந்­திப்பு  மிகவும் முக்­கி­யத்­து­வ­மிக்­க­தாக பார்க்­கப்­ப­டு­கின்­றது.  
இது இவ்­வாறு இருக்க ஐக்­கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்­டத்தில்  கலந்­து­கொள்ளும்    சீன ஜனா­தி­பதி ஜின்பின் மற்றும் ஜப்பான் பிர­தமர் சின்­சிரோ அபே  ஆகி­யோ­ரையும்  ஜனா­தி­பதி  மைத்­தி­ரி­பால சிறி­சேன  சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­த­வுள்ளார். 
சீன ஜனா­தி­ப­தி­யு­ட­னான சந்­திப்­பின்­போது  இரண்டு நாடு­க­ளுக்கும் இடை­யி­லான வர்த்­தக உறவு மற்றும்  ஏனைய   தொடர்­புகள் குறித்தும்  பேசப்­ப­ட­வுள்­ளது.  துறை­முக நகர்  அபி­வி­ருத்தி திட்டம் மற்றும்   சீனா­வினால் இலங்­கையில் மேற்­கொள்­ளப்­படும் அபி்­வி­ருத்தி திட்­டங்கள் உள்­ளிட்ட பல்­வேறு விட­யங்கள் குறித்தும்   இலங்கை சீன  தலை­வர்கள்  கலந்­து­ரை­யா­ட­வுள்­ளனர். 
 அண்­மையில்  இலங்­கைக்கும் சீனா­வுக்கும் இடையில் கைச்­சாத்­தி­டப்­பட்ட   அம்­பாந்­தோட்டை  துறை­முக உடன்­ப­டிக்கை குறித்தும்  பேச்­சு­வார்த்தை நடத்­தப்­ப­டலாம் என்றும்  எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. 
அத்­துடன்  ஜப்பான்  நாட்டின் பிர­த­ம­ருடன்   திரு­மலை துறை­மு­கத்தை   அபி­வி­ருத்தி செய்­வது  குறித்து   ஜனா­தி­பதி  பேச்­சு­வார்த்தை நடத்­தப்­ப­டலாம் என்றும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.  அத்­துடன் இலங்­கைக்கும்  ஜப்­பா­னுக்கும் இடை­யி­லான  வர்த்­தக பொரு­ளா­தார உற­வு­களை வலுப்­ப­டுத்­து­வது  குறித்தும் இதன்­போது பேச்­சு­வார்த்தை  நடத்­தப்­படும். 
ஐக்­கிய நாடுகள்  செய­லாளர்  அன்­டோ­னியோ கட்­ர­ஸு­டனும் ஜனா­தி­பதி   மைத்­தி­ரி­பால சிறி­சேன  பேச்­சு­வார்த்தை நடத்­த­வுள்­ள­துடன்  ஐக்­கிய நாடுகள் சபை­யுடன்   இணைந்து பய­ணிப்­பது குறித்து  ஆரா­ய­வுள்ளார். அத்­துடன்  இலங்­கையில்  ஐக்­கிய நாடுகள் சபை முன்­னெ­டுக்கும் அபி­வி­ருத்தி  உதவி  திட்­டங்கள்   தொடர்­பா­கவும் பேசப்­ப­ட­வுள்­ளது. 
இதே­வேளை  ஐக்­கிய நாடுகள் பொதுச் சபையின் 72 ஆவது கூட்டத் தொடரில் கலந்துகொள்ளும்  ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன   எதிர்வரும் 19 ஆம் திகதி  செவ்வாய்க்கிழமை    பொதுச் சபையில் உரையாற்றவுள்ளார். 
இந்த உரையின்போது  அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் நல்லிணக்க செயற்பாடுகள், புதிய அரசியலமைப்பை உருவாக்கும்  வேலைத்திட்டங்கள்  போன்றவை தொடர்பாக  உலகநாடுகளின் தலைவர்களுக்கு  விளக்கமளிக்கவிருக்கிறார்.  
ஜனாதிபதியுடன்  வெ ளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன  உள்ளிட்ட அமைச்சர்கள்  சிலரும்   ஐக்கிய நாடுகள் கூட்டத் தொடரில் கலந்துகொள்ள   நியுயோர்க் செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி 












இலங்­கையில் போர்க்­குற்றம் : மீண்டும் நட­வ­டிக்கை எடுக்கும் அமெ­ரிக்கா

13/09/2017 இலங்­கையில் இடம்­பெற்ற போர் குற்­றங்கள் தொடர்பில் விசா­ரணை மேற்­கொள்ள காத்­தி­ர­மான வழி­முறை அவ­சியம் என அமெ­ரிக்கா மீண்டும் வலி­யு­றுத்­தி­யுள்­ளது.
2018 ஆம் ஆண்டு தெற்­கா­சி­யா­வுக்­காக செல­வி­டப்­படும் நிதி தொடர்பில் நடை­பெற்ற நிகழ்வில் இது குறித்து தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
தெற்கு மற்றும் மத்­திய ஆசிய விவ­கா­ரங்கள் தொடர்பான அமெ­ரிக்க உதவி இரா­ஜாங்க செய­லாளர் எலிஸ் வெல்ஸ் இதனை தெரி­வித்­துள்ளார்.
போரில் பாதிக்­கப்­பட்­ட­வர்க­ளுக்கு நீதியை நிலைநாட்­டு­வது தொடா்பில் ஐ.நா. மனித உரிமை ஆணைக்­கு­ழுவில் இலங்கை அர­சாங்கம் உறு­தி­மொழி வழங்­கி­யி­ருந்­தது. அதனை நிறை­வேற்­று­வது தொடர்பில் இலங்­கை­யுடன் இணைந்து அமெ­ரிக்கா செயற்­ப­டு­வ­தாக அவர் தெரி­வித்­துள்ளார்.
இலங்கை தொடர்பான திட்­ட­வட்­ட­மான நட­வ­டிக்கை பட்­டியல் ஒன்­றையும் சர்­வ­தேச இராஜ­தந்­தி­ரிகள் முன்­னி­லையில் அவரால் சமர்­பிக்­கப்­பட்­டுள்­ளது.
அதற்­க­மைய மாகாண சபை­க­ளுக்கு அதிக நிர்­வாக அதி­கா­ரங்­களை வழங்கும் அர­சி­ய­ல­மைப்பு திருத்­தச்­சட்டம், பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்­திற்கு பதி­லாக சர்வதேச தரத்­திற்கு பொருந்தும் மற்­றொரு சட்டம், இரா­ணு­வத்­தி­னரால்  கைப்­பற்­றப்­பட்­டுள்ள பொது­மக்­களின் காணி­களை மீட்­டெ­டுத்தல்,  காணாமற் போனோர் தொட
ர்பான அலு­வ­ல­கத்தை நிறு­வுதல், உண்மை மற்றும் நல்­லி­ணக்க ஆணைக்­குழு நிறு­வுதல் ,இழப்­பீட்டு அலு­வ­லகம் மற்றும் போர்க்­குற்­றங்­களை விசா­ரிக்க மற்றும் தண்­டிக்க நம்­ப­கர­மான செயல்­முறை அந்த திட்­ட­வட்­ட­மான வழி­மு­றை­க­ளுக்குள் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளது.
2015ஆம் ஆண்டு இலங்கை ஐக்­கிய நாடு­களின் மனித உரிமை ஆணைக்­கு­ழுவில் வெளி­நாட்டு நீதி­ப­தி­களை கொண்ட நீதி­மன்­றத்தை போர்­க்குற்ற விசா­ர­ணைக்­காக நிறு­வு­வ­தாக வாக்­கு­று­தி­ய­ளித்­தது.
அதற்­காக மேலும் இரு வருட கால அவ­காசம் வழங்­கு­வ­தற்கு 2017ஆம் ஆண்டு மனித உரிமை ஆணைக்குழு அமர்வில் இணக்கம் வெளியிடப்பட்டது.
எப்படியிருப்பினும் வெளிநாட்டு நீதிபதிகளை  நிராகரிப்பதாக இலங்கையின் சமகால அரசாங்கம் கூறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி












 சிவாஜிலிங்கம் தலைமையிலான குழு ஜெனீவா சென்றது

13/09/2017 ஐக்கிய நாடுகள் சபையின் 36 ஆவது மனித உரிமைகள் தொடர்பான அமர்வுகள் ஆரம்பமாகியுள்ள நிலையில் இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள், இனப்படுகொலைகள் தொடர்பாக  கருத்துக்களை முன்வைக்கும் நோக்குடன்  வடக்கு மாகாண சபை உறுப்பினரும், ரெலோ இயக்கத்தின் தேசிய அமைப்பாளருமான சிவாஜிலிங்கம் தலைமையிலான ஐவர் அடங்கிய குழு நேற்று மதியம் ஜெனீவா சென்றடைந்துள்ளது.
இக்குழுவில் வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் தியாகராசா, கஜதீபன், புவனேஸ்வரன், முன்னாள் உறுப்பினர் மயூரன் ஆகியோர் அடங்குகின்றனர்.
இலங்கையில் இடம்பெற்ற யுத்தக் குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணையை வடக்கு மாகாண முதலமைச்சர் தலைமையிலான வட மாகாண அரசாங்கம் கோரி நிற்கின்ற இவ்வேளையில் இவர்களின் இப்பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.
இலங்கையின் நிலைமைகள் தொடர்பாக மாகாண சபை உறுப்பினர்கள் அனைவரும் விசேட உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.  நன்றி




No comments: