18/07/2016 கஜகஸ்தானின் மிகப்பெரிய நகரமான அல்மாட்டியில் இன்று ஆயுதங்களுடன் காரில்வந்த 2 நபர்கள் திடீரென பொலிஸ்  நிலையம் மற்றும் பாதுகாப்புத்துறை அலுவலகம்மீது தாக்குதல் நடத்தினர்.
பொலிஸ் நிலையத்தில் உள்ள பொலிஸ் அதிகாரி ஒருவரை சுட்டுக்கொன்றுவிட்டுஅவரிடம் இருந்த துப்பாக்கியை பறித்துச் சென்றுள்ளனர்.
இதையடுத்து அவர்களை  விரட்டிச் சென்ற பொலிஸார் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிசூட்டில் 2 பொலிஸார் உயிரிழந்தனர்பின்னர் அந்த காரை மடக்கிய பொலிஸார்,காருக்குள் இருந்த ஒருவனை கைது செய்யும் வேளையில் மற்றொருவன் தப்பிஓடிவிட்டான்.



இதுபற்றி பொலிஸார் நடத்திய விசாரணையில்பிடிபட்ட நபர் ஏற்கனவே குற்றவழக்கில் தண்டிக்கப்பட்ட 27 வயதுடையவர் என்பது தெரியவந்ததுமுன்னதாக கார்கடத்தலின்போது ஒருவரை கொன்றதும் தெரியவந்தது.

இந்த சம்பவங்களால் நகர் முழுவதும் பரபரப்பும் பதட்டமும் ஏற்பட்டதுமக்கள் கூடும்இடங்களில் பொலிஸார் குவிக்கப்பட்டனர்பொதுமக்கள் வெளியில் வரவேண்டாம் எனஅறிவுறுத்தப்பட்டது.



கஜகஸ்தானில் கடந்த சில மாதங்களாக இதுபோன்ற வன்முறைச் சம்பவங்கள்அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.