இலங்கைச் செய்திகள்



மஹிந்த புலிகளுக்கு 2200 மில்லியன் பணம் வழங்கியுள்ளார்: ரணில் புதிய தகவல்

சுனாமியின்போது காணாமல் போன சிறுவன் 11 வருடங்களின் பின் பெற்றோரிடம் ஒப்படைப்பு     

அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாக டுவிட்டரில் நாமல்

 பிரதமர் பதவி வேறொருவருக்கே : மைத்திரி மஹிந்தவுக்கு கடிதம்

வித்தியா படுகொலை வழக்கு நால்வருக்கு நேரடித் தொடர்பு









மஹிந்த புலிகளுக்கு 2200 மில்லியன் பணம் வழங்கியுள்ளார்: ரணில் புதிய தகவல்

12/08/2015 விடுதலைப் புலிகளுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இரண்டு தடவவைகள் பல மில்லியன்கள் கணக்கான பணத்தை வழங்கியுள்ளார். முதல் தடவை 200 மில்லியன் ரூபா பணத்தையும், 2005 ஆம் ஆண்டு தேர்தலின் பின்னர் நிறுவனம் ஒன்றின் ஊடாக 2000 மில்லியன் ரூபா பணத்தை வழங்கியிருந்தார் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.


ராஜபக்ஷ குடும்பத்து பாதிப்பு ஏற்படாத வண்ணம் ஒப்பந்த அடிப்படையில் இந்த பணம் வழங்கப்பட்டுள்ளதாகவும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மீது கடந்த 2006 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை தாக்குதலையடுத்து குறித்த ஒப்பந்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
2005ம் ஆண்டு விடுதலைப் புலிகள் பலவீனமடைந்திருந்ததாகவும், அதன் தலைவர்கள் பிளவுபட்டிருந்ததாகவும் அப்போது புலிகளை அழித்திருந்தால் இரண்டு பக்கமும் பாதிப்பு குறைவாக இருந்திருக்கும்.
எனினும் இந்தக் காலத்தில் மஹிந்த ராஜபக்ஷவின் பணத்தைப் பெற்றுக் கொண்டு விடுதலைப் புலிகள் தம்மை பலப்படுத்திக் கொண்டதாக அவர் கூறியுள்ளார். தற்போதும் விடுதலைப் புலிகளிடம் இருந்த தங்கம், கப்பல் போன்றன கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் கண்டுபிடிக்கப்பட்டது கேபி மட்டுமே எனவும் அவர் குறிப்பிட்டார். கேபி தொடர்பான எதிர்கால நடவடிக்கைகள் குழு ஒன்றிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் எனினும் மறுபுறம் இந்திய அரசும் அவரைக் கோரி வருவதாகவும் அவர் கூறினார்.
இதன்போது எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த ரணில், ஐக்கிய தேசியக் கட்சி தனது சொத்து அல்ல எனவும், தனக்கு பின்னால் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் யார் என்பதை கட்சியினாலேயே தீர்மானிக்கப்படும்.
இதேவேளை வடக்கில் இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டதாக வெளியான குற்றச்சாட்டு குறித்து வினவியபோது, நீக்கப்பட்டது சம்பூர் முகாம் மட்டுமே எனவும் அவற்றையும் நீக்க வேண்டி ஏற்பட்டது மஹிந்த தமிழர்களுக்கு வழங்கிய வாக்குறுதியினாலேயே எனவும் குறிப்பிட்டார். மேலும் சம்பூரின் வேறு பகுதிகளில் இவற்றை நிர்மாணிக்கவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். நன்றி வீரகேசரி 







சுனாமியின்போது காணாமல் போன சிறுவன் 11 வருடங்களின் பின் பெற்றோரிடம் ஒப்படைப்பு     

12/08/2015 கடந்த 2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்­ ஏற்­பட்ட சுனா­மியின் போது காணாமல் போன 9 வயது சிறுவன் இன்று 21 வயது இளை­ஞ­ராக பெற்­றோர்­க­ளிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்ள சம்­ப­வ­மொன்று முல்­லைத்­தீவில் இடம்­பெற்­றுள்­ளது.

முல்­லைத்­தீவு மாவட்­டத் தின் குமா­ர­பு­ரத்தை நிரந்­தர வசிப்­பி­ட­மாகக் கொண்ட ஜெக­நாதன் குரு­தேவன் என்­ப­வரே 9 வயதில் காணாமல் போயுள்ளார். இவர் காணாமல் போன போது தரம் 4இல் கல்வி கற்று வந்­துள்ளார்.
2004ஆம் ஆண்டு ஏற்­பட்ட சுனாமி அனர்த்­தத்­தினால் பலர் உயி­ரி­ழந்­துள்­ள­துடன், இன்னும் சிலர் காணா­மலும் போயுள்­ளனர். அந்த நாளில் காணாமல் போனவர் பட்­டி­யலில் ஜெக­நாதன் குரு­தே­வனும் இடம்­பி­டித்­து­விட்டார்.
இவ்­வாறு அனர்த்­தத்தின் பின்னர் தனது மகனைக் காண­வில்லை என இவரது பெற்­றோர்கள் அனைத்து பதி­வு­க­ளையும் மேற்­கொண்­டி­ருந்­தனர்.தனது மகனை காணாமல் இவர்கள் எல்லா இடங்­க­ளிலும் முறைப்­பாடு செய்­துள்­ள­துடன், மகன் கடத்­தப்­பட்­டி­ருக்­கலாம் என்ற எண்­ணத்தில் இருந்­துள்­ளனர்.எனினும் சகல சந்­தர்ப்­பங்­க­ளிலும் மகன் பற்­றிய முயற்­சி­யை எடுத்­துள்­ள­தாக இவர்கள் குறிப்­பிட்­டனர்.
11 வரு­டங்கள் சிங்­கள பிர­தே­சத்தில் வாழ்ந்து வந்த குறித்த இளைஞர் தற்­போது தனது சொந்த மொழி­யான தமிழ் மொழியை மறந்து சிங்­கள மொழி­யி­லேயே பேசிக் கொண்­டி­ருக்­கிறார்.
இது­பற்றி அவர் குறிப்­பி­டு­கையில், சுனாமி ஏற்­பட்ட போது அப்­போது எனக்கு வயது ஒன்­பது. முல்­லைத்­தீ­வி­லி­ருந்­து­ வ­வு­னியா வரை தனி­யாக சென்று பின்னர், வவு­னி­யா­வி­லி­ருந்து புகை­யி­ர­தத்தில் ஏறி நண்­பர்­க­ளுடன் சென்றேன்.
இவ்­வாறு புகை­யி­ர­தத்தில் சென்ற நான் ஒரு ரயில் நிலை­யத்தில் இறங்கி நின்­று­கொண்­டி­ருந்தேன். அப்­போ­துதான் நான் நிற்கும் இடம் மாகோ புகை­யி­ரத நிலையம் என தெரிய வந்­தது. அப்­போது அங்கு மக்கள் நட­மாட்டம் மிகவும் குறை­வா­கவே இருந்­தது.இடம், மொழி, என எது­வுமே தெரி­யாமல் தனி­யாக நின்று கொண்­டி­ருந்த என்னை ஒருவர் அழைத்துச் சென்று உண்­ப­தற்கு உணவு வாங்கிக் தந்தார். உணவு உண்ட பின்னர் அவர் என்னை மாகோ பொலிஸ் நிலை­யத்தில் ஒப்­ப­டைத்­துள்ளார் .
இவ்­வாறு பொலிஸில் ஒப்­ப­டைக்­கப்­பட்ட நான் பின்னர், தம்­புள்­ளையில் அளவ்­வ ­என்ற இடத்தில் பிக்கு ஒரு­வ­ரினால் நிர்­வ­கிக்­கப்­படும் சிறுவர் இல்­லத்­திற்கு அனுப்பி வைத்­தார்கள்.

நான் இங்­கி­ருந்து சென்ற போது நான்காம் தரத்தில் கல்வி கற்றேன். பின்னர் அங்கு சென்­றதும் தரம் – 9 வரை கற்­றுள்ளேன். கல்வி கற்­பதை பாதி­யி­லேயே நிறுத்­தி­விட்டு அச்­ச­க­மொன்றில் கட­மை­யாற்றி வந்தேன். அவர்கள் எனக்கு உணவு, உடை, இருப்­பிடம் உள்­ளிட்ட அடிப்­படை வச­தி­ வாய்ப்­புக்­களை ஏற்­ப­டுத்தித் தந்­தனர். ஆனால், மாதாந்தம் கொடுப்­ப­ன­வுகள் எத­னையும் கொடுக்­க­வில்லை. எனக்கு வழங்­கப்­படும் சம்­ப­ளப்­ப­ணத்தை வங்­கி­யொன்றில் கணக்கு ஆரம்­பித்து அந்த வங்கிப் புத்­த­கத்தில் சேமிப்பு செய்து வந்­தனர்.
அத்­துடன், நான் இந்­து­வாக இருந்­தாலும், பௌத்த ஆல­யத்­திற்கே வணக்க வழி­பா­டு­க­ளுக்­காக சென்­றி­ருக்­கிறேன். 11 வரு­டங்கள் எனக்கு சந்­தோ­ஷ­மாக இருந்­தாலும், இப்­போது எனது பெற்­றோ­ருடன் வாழும் நாட்­களை யோசிக்கும் போது 11 வரு­டங்­கள் ­பெ­ரி­தாக தெரி­ய­வில்லை என்றார்.
தம்­புள்ளை பிர­தே­சத்தில் முல்­லைத்­தீவு பிர­தே­சத்தைச் சேர்­ந்த இளைஞர் ஒருவர் இருப்­ப­தாக வெளியான தக­வல்­களை அடுத்து சிறுவர் நன்­ன­டத்­தைப்­ பி­ரி­வினர் அங்கு சென்று குறித்த இளை­ஞரை விசா­ரணை செய்த போது தான் முல்­லைத்­தீவு கொக்­குத்­தொ­டு­வாயில் படித்த­தா­கவும், அது தண்­ணீ­ரூற்றில் இருப்­ப­தா­கவும் குறிப்­பிட்­டி­ருக்­கிறார். இது­பற்­றிய தக­வல்கள் உரிய முறையில் பரி­மா­றப்­பட்­டுள்­ள­துடன், மாங்­கு­ளத்தில் உள்ள சிறுவர் நன்­ன­டத்தை பிரிவு அதி­கா­ரிகள் குறித்த இளை­ஞனின் பெற்­றோர்­களை அழைத்து தம்­புள்­ளைக்கு செல்­வ­தற்­கான ஏற்­பா­டு­களைச் செய்­துள்­ளனர்.
பின்னர் திட்­ட­மிட்­ட­படி சிறுவர் நன்­ன­டத்தை அதி­கா­ரிகள் மற்றும் பெற்­றோர்கள் அங்கு சென்ற போது நீதி­மன்­றத்­தி­னூ­டாக குறித்த இளைஞர் 11 வரு­டங்­களின் பின்னர் பெற்­றோர்­க­ளிடம் ஒப்­ப­டைக்கப் பட்­டுள்ளார்.
குறித்த இளைஞர் தனது குடும்­பத்­துடன் மீள் இணைப்புச் செய்த போது இவரின் வங்கி வைப்புப் புத்­தகம் ஒப்­ப­டைக்­கப்­பட வில்லை. அடை­யாள அட்டை இல்­லாத குறித்த இளை­ஞரை அடை­யாள அட்டையை பெற் றுக் கொண்டு தந்தை யையும் அழைத்து வந்து வங்கிப் புத்­த­கத்தை பெற்­றுக்­கொள்­ளு­மாறு இளைஞரை வளர்த்த பௌத்த மதகுரு குறிப்பிட்டுள்ளார்.  நன்றி வீரகேசரி 








அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாக டுவிட்டரில் நாமல்

12/08/2015 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை எதிர்வரும் 12 ஆம் திகதி நிதி மோசடி  பொலிஸ் பிரிவில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் நாமல் ராஜபக்ஷ தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நன்றி வீரகேசரி 













பிரதமர் பதவி வேறொருவருக்கே : மைத்திரி மஹிந்தவுக்கு கடிதம்

13/08/2015 எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 113 ஆசனங்களை பெற்று வெற்றி பெறுமாயின் முன்னணியில் நீண்டகாலமாக அங்கம் வகிக்கும் சிரேஷ்ட நபர் ஒருவருக்கே பிரதமர் பதவியை வழங்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன குருநாகல் மாவட்ட வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளார்.
இதேவேளை கட்சியின் தலைவர் என்ற வகையில் பிரதமர் பதவியை வழங்குவதில் தனக்கு அதிகாரம் உள்ளது எனவும் அக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.     நன்றி வீரகேசரி 









வித்தியா படுகொலை வழக்கு நால்வருக்கு நேரடித் தொடர்பு

13/08/2015 புங்­குடுதீவு பாட­சாலை மாணவி சிவ­லோ­க­நாதன் வித்­தியா படு­கொ­லை­ செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்­பு­டை­ய­தாக சந்­தே­கத்தில் கைதுசெய்­யப்­பட்ட ஒன்­பது சந்­தேக நபர்­களில் நால்­வ­ருக்கு நேரடி தொடர்­புள்­ள­தா­கவும் ஏனையோர் அந்த கொடூ­ரத்­துக்கு உதவி ஒத்­தாசை புரிந்­த­வர்கள் எனவும் குற்றப் புல­னாய்வுப் பிரிவு நேற்று நீதிமன்­றுக்கு அறிக்கை சமர்­பித்­துள்­ளது.

வித்­தியா படு­கொலை வழக்கு நேற்று ஊர்­கா­வற்­றுரை நீதிவான் நீதி­மன்றில் நீதி­பதி எஸ்.லெனின் குமார் முன்­னி­லையில் விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்­டது.
இதன் போதே இரு வேறு அனு­ம­தி­களின் பேரில் இரு மாதங்கள் சந்­தேக நபர்­களை பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைத்து விசா­ரணை செய்­தமை தொடர்­பி­லான அறிக்­கையை நீதிமன்­றுக்கு சமர்­ப்பித்து குற்றப் புல­னாய்வுப் பிரி­வினர் சந்­தேக நபர்கள் தொடர்­பி­லான மேற்­படி விட­யத்தை நீதி­வா­னுக்கு அறி­வித்­தனர்.
பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் கீழ் சந்­தேக நபர்­க­ளான பூபா­ல­சிங்கம் இந்­தி­ர­குமார் (வயது 40),பூபா­ல­சிங்கம் ஜெய­குமார் (வயது 34), பூபா­ல­சிங்கம் தவ­குமார் (வயது 32) , மகா­லிங்கம் சஷீந்­திரன், தில்­லை­நாதன் சந்­தி­ர­ஹாஷன், சிவ­தேவன் குஷாந்தன், பழனி ரூப­சிங்கம் குக­நாதன், ஜெய­தரன் கோகிலன் அல்­லது கண்ணன் சுவிஸ் குமார் எனப்­படும் மகா­லிங்கம் சசி­குமார் ஆகி­யோரை விசா­ரணை செய்­ததில், இந்த கொடூரம் திட்­ட­மிட்ட வகை­யி­லேயே இடம்­பெற்­றுள்­ளதை உறுதிப் படுத்­தி­யுள்­ள­தா­க புல­னாய்வுப் பிரி­வினர் இதன் போது மன்றில் சுட்­டிக்­காட்­டினர்.
அத்துடன் வித்­தி­யாவின் மூக்குக் கண்­ணா­டி­யையும் இந்த விசா­ர­ணை­களின் இடையே தாம் மீட்­டுள்­ள­தா­கவும் புல­னாய்வுப் பிரி­வினர் மன்றுக்கு தெரிவித்திருந்தனர்.
அரச இர­சா­யண பகுப்­பாய்­வு­க­ளுக்கும், டி.என்.ஏ. பரி­சோ­த­னை­க­ளுக்கும் அனுப்­பட்ட தட­யங்கள் தொடர்­பி­லான ஆய்வு அறிக்கை இன்னும் தமக்கு கிடைக்­க­வில்லை என தெரி­வித்த குற்றப் புல­னாய்வுப் பிரிவின் விசா­ரணை அதி­காரி, அவை கிடைத்­ததும் மேலும் பல விட­யங்­களை உறுதிப் படுத்தக் கூடி­யதாய் இருக்கும் எனவும் குறிப்பிட்டார்.
மாணவி வித்­தியா படு­கொலை வழக்கு நேற்று ஊர்­கா­வற்­றுரை நீதிவான் எஸ். லெனின் குமார் முன்­னி­லையில் விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்­டபோது கடந்த தவணை வழக்கின் போது பது­காப்பு பிரச்­சி­னை­யையை மேற்கோள் காட்டி கொழும்பு பிர­தான நீதிவான் முன்­னி­லையில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்ட சந்­தேக நபர்கள் ஒன்­பது பேரும் நேற்று புல­னாய்வுப் பிரிவின் விஷேட பஸ் வண்டி ஊடாக ஊர்­கா­வற்­றுரைக்கு எடுத்துவரப்பட்டு நீதிவான் முன்­னி­லையில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்­டனர்.
இதன் போது நீதிமன்றில் படு கொலை செய்­யப்­பட்ட வித்­தி­யாவின் தாய் உள்­ளிட்ட உற­வி­னர்­களும் பிர­சன்­ன­மா­கி­யி­ருந்­தனர்.
எனினும் கடந்த தவ­ணையின் போதும் அதற்கு முன்­னரும் பாதிக்­கப்­பட்ட தரப்பு என்ற ரீதியில் வித்­தி­யாவின் குடும்­பத்­தவர் சார்பில் ஆஜ­ரான எந்த சட்­டத்­த­ர­ணி­யும் நேற்று நீதிமன்றில் பிர­சன்­ன­மா­கி­யி­ருக்­க­வில்லை.
கடந்த தவணை சிரேஷ்ட சட்­டத்­த­ரணி தமக்­கு­ரிய அச்­சு­றுத்­தலை மேற்கோள் காட்டி இந்த வழக்கில் இருந்து வில­கி­யி­ருந்­த­துடன் கடந்த தவணை முதல் தலை நகரில் இருந்து சென்ற சகோ­தர இன சட்­டத்­த­ர­ணிகள் மூவர் வித்­தி­யாவின் குடும்­பத்­தவர் சார்பில் ஆஜ­ரா­கி­யி­ருந்­தனர். எனினும் அவர்­க­ளையும் நேற்று மன்றில் அவ­தா­னிக்க முடி­ய­வில்லை.
இந் நிலையில் சந்­தேக நபர்­களை கூண்டில் ஏற்­றி­யதும் குற்றப் புல­னாய்வுப் பிரிவின் சார்பில் நீதிமன்றில் ஆஜ­ரா­கி­யி­ருந்த கூட்டுக் கொள்ளை தொடர்­பி­லான விசா­ரணைப் பிரிவின் உப பொலிஸ் பரி­சோ­தகர், பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் கீழ் செய்த விசா­ர­ணையின் அறிக்­கையை நீதி­வா­னிடம் கைய­ளித்தார்.
சுவிஸ் குமார் அல்­லது பிரகாஸ் என அழைக்­கப்­படும் மகா­லிங்கம் சிவ­குமார், நிசாந்தன், சந்­தி­ர­காசன், ஜெயக்­குமார், தவக்­குமார் ஆகி­யோரின் ஆலோ­ச­னை­யின்­படி இந்த படு பாதக செயல் இடம்­பெற்­றுள்­ளது. இந்த பாதக செய­லுடன் தற்­போது கைது செய்­யப்­பட்­டுள்ள நால்­வ­ருக்கு நேரடி தொடர்பு உள்­ளது. ஏனையோர் அதற்கு உதவி ஒத்­தாசை செய்­துள்­ளனர்.
கைதா­கி­யுள்ள சந்­தேக நபர்கள் எமது விசா­ர­ணை­களின் போது இதனை ஒப்­புக்­கொண்­டுள்­ளனர். அவர்கள் மிகத் திட்­ட­மிட்டு இந்த குற்­றத்தை அரங்­கேற்­றி­யுள்­ளனர்.
இந் நிலையில் இவர்­களை விசா­ரணை செய்யும் போது பிர­தான சந்­தேக நபர்­களில் ஒரு­வ­ரான குஷாந்­தனின் வீட்­டி­லி­ருந்து மாணவி வித்­தி­யாவின் மூக்குக் கண்­ணா­டியை நாம் கைப்­பற்­றி­யுள்ளோம். இது இந்த வழக்கின் பிர­தான தடையப் பொருட்­களில் ஒன்­றா­கவே நாம் பார்க்­கின்றோம்.
சந்­தேக நபர்கள் தொடர்­பிலும் தட­யங்கள் தொடர்­பிலும் டி.என்.ஏ. மற்றும் அரச இர­சா­யன பகுப்­பாய்­வுக்கு அனுப்­பட்ட மாதி­ரிகள் மற்றும் தட­யங்கள் தொடர்­பி­லான அறிக்கை எமக்கு இன்னும் கிடைக்­க­வில்லை. எனவே சந்­தேக நபர்­களை தொடர்ந்து விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு கோரு­கின்றோம். என குற்றப் புல­னாய்வுப் பிரி­வினர் ,நீதி மன்றில் கோரிக்கை முன்­வைத்­தனர்.
குற்றப் புல­னாய்வுப் பிரிவினர் விசாரணை சுருக்­கத்தை நீதிமன்றத்தில் முன்­வைத்­ததைத் தொடர்ந்து கூண்டில் இருந்த சந்­தேக நபர்­களை நீதிவான் நோக்கினார். இதன் போது சந்­தேக நபர்கள் ஒன்­ப­து­பேரும், குற்றப் புல­னய்வுப் பிரிவு பொலிஸார் தம்­மிடம் சிங்­க­ளத்­தி­லேயே கதைத்து தங்­களை வற்­பு­றுத்­தியே வாக்­கு­மூ­லமும், கையெ­ழுத்தும் பெற்­றுக்­கொன்­ட­தாக குறிப்­பிட்­டனர்.
இதன் போது இடை­ம­றித்த பொலிஸார் மேற்­படி ஒன்­பது சந்­தே­க­ந­பர்­க­ளுக்கும் சிங்­களம் ஓர­ளவு நன்­றா­கவே தெரியும் எனவும், இவர்­க­ளிடம் ஒழுங்­கான முறை­யி­லேயே விசா­ரணை இடம்­பெற்­ற­தா­கவும் அதன் பிர­கா­ரமே வாக்­கு­மூ­லங்கள் பெறப்­பட்­ட­தா­கவும் தெரி­வித்­தனர்.
இந் நிலையில் ஆறா­வது சந்­தே­க­நபர் டீ.என்.ஏ பரி­சோ­த­னையை மீண்டும் மேற்­கொள்ள வேண்­டு­மென்று நீதி­வா­னிடம் கோரிக்கை முன்­வைத்­துள்ளார்.
அதே­நேரம் மற்­று­மொரு சந்­தே­க­ந­ப­ரான குஷாந்தன் என்­பவர் வித்­தி­யாவின் கண்­ணாடி தனது வீட்­டி­லி­ருந்து எடுக்­கப்­பட்­ட­தாக கூறப்­ப­டு­வது அப்­பட்­ட­மான பொய் எனவும் எனவும், தன்னைப் பொலிஸார் அழைத்துச் சென்று ஒரு கடையில் வைத்தே அந்த கண்­ணா­டியை வாங்கி வந்து தனக்கு முன்­னா­லேயே தனது வீட்டில் வைத்து விட்டு எடுத்­த­தா­கவும் நீதி­வா­னுக்கு தெரி­வித்தார்.
இந்த குற்றச் சாட்­டுக்­களை சுமத்­திய சந்­தேக நபர்கள் தம்மை பிணையில் விடு­தலை செய்ய கோரினர். எனினும் நீதி­பதி எஸ். லெனின்­குமார் , தமக்­குள்ள அதி­கா­ரத்­துக்கு அமைய குற்­றத்தின் பார­தூ­ரத்தை கருத்தில் கொண்டும் பிணை வழங்க முடி­யா­தெ­னவும், இந்த வழக்கு மேல்­நீ­தி­மன்­றத்­திற்கு மாற்­றப்­படும் போது அங்கு பிணை பெறு­வ­தற்கு முயற்சி செய்­ய­லா­மெ­னவும் கூறினார்.
அதே­வேளை சந்­தே­க­ந­பர்கள் ஒன்­ப­து­பேரும் தமக்­காக எந்த ஒரு சட்­டத்­த­ர­ணியும் ஆஜ­ரா­வ­தற்கு தயங்­கு­வ­தோடு, பயப்­ப­டு­கின்­றார்கள் என நீதிமன்றில் ஒரு­மித்த குரலில் தெரி­வித்­தனர். இதனைச் செவிமடுத்த நீதவான், உங்களுக்காக சட்டத்தரணிகளை ஆஜராகும் விடயத்தில் தன்னால் எதுவும் செய்ய முடியாதென்றும் ஆயினும் ஆஜராகும் சட்டத்தரணிகளுக்கு யாராவது அச்சுறுத்தல் மற்றும் துன்புறுத்தலை மேற்கொண்டால் அது குறித்து தான் நடவடிக்கை எடுக்க முடியுமென்றும் தெரிவித்தார்.
இந் நிலையில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ள வித்தியாவின் மூக்குக் கண்ணாடியை எதிர்வரும் 26.08.2015 அன்று நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்ட நீதிவான் எஸ்.லெனின் குமார் அதுவரை சந்தேக நபர்கள் ஒன்பது பேரையும் விளக்கமறியலில் வைக்குமாறும் 26ஆம் திகதிக்கு வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுப்பதாகவும் கூறி ஒத்தி வைத்தார்.   நன்றி வீரகேசரி 






No comments: