உலகச் செய்திகள்


சிங்­கப்­பூரின் 50 ஆவது சுதந்­திர தினம்

சொலமன் தீவு­களை உலுக்­கிய 6.9 ரிச்டர் பூமி­ய­திர்ச்சி

கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக தமிழர் நியமனம்

நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த குண்டுகள் மீது மண்டியிட்டு அமர்ந்திருக்கச் செய்து 10 கைதிகளுக்கு மரணதண்டனை

நைஜீரிய சந்தையில் குண்டுத் தாக்குதல் 47 பேர் உயிரிழப்பு

சீனாவில் மண்சரிவு; 40 பேரைக் காணவில்லை

சீன துறைமுகத்தில் களஞ்சியசாலையில் வெடிப்பு

எகிப்தில் ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் தொடர்புடைய பணயக்கைதி படுகொலை

54 பயணிகளுடன் இந்தோனேஷிய விமானம் மாயம்

இந்­தி­யாவின் 69 ஆவது சுதந்­தி­ர ­தின விழா





சிங்­கப்­பூரின் 50 ஆவது சுதந்­திர தினம்

10/08/2015 சிங்­கப்­பூரின் 50 ஆவது ஆண்டு சுதந்திர தினம் நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை அந்நா­டெங்கும் விம­ரி­சை­யாக கொண்­டா­டப்­பட்­டது.


இதன்போது இரா­ணுவ மரி­யாதை அணி­வ­குப்பும் வாண­வே­டிக்கை நிகழ்வும் இடம்­பெற்­ற­துடன் அந்­நாட்டின் ஸ்தாபகத் தலைவர் லீ குவான் யெவ்­விற்கு அஞ்­ச­லியும் செலுத்­தப்­பட்­டது.

இந்த நிகழ்­வு­களில் சுமார் 250,000 பார்­வை­யா­ளர்கள் வரை கலந்து கொண்­டனர்.
இரா­ணுவ அணி­வ­குப்பில் 50 இரா­ணுவ விமா­னங்­களும் 177 பீரங்­கி­களும் ஏனைய பாது­காப்பு கன­ரக வாக­னங்­களும் பங்­கேற்­றன.
அந்­நாடு 1965 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9 ஆம் திகதி குடி­ய­ர­சா­னது. இந்­நி­லையில் சுதந்­திர தின நிகழ்வில் சிங்­கப்பூர் பிர­தமர் லீ ஹஸியன் லூங்­குடன் மலே­சியா மற்றும் தாய்­லாந்து பிர­த­மர்கள், புருனே சுல்தான் ஹஸனல் போல்­கி­யபஹ், இந்­தோ­னே­சிய பிரதி ஜனா­தி­பதி ஜூஸுப் கல்லா, சீனா, அவுஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.


நன்றி வீரகேசரி













சொலமன் தீவு­களை உலுக்­கிய 6.9 ரிச்டர் பூமி­ய­திர்ச்சி

11/08/2015  வட ஆப்­கா­னிஸ்­தானை 5.9 ரிச்டர் அள­வான பூமி­ய­திர்ச்சி திங்­கட்­கி­ழமை தாக்­கி­யுள்­ளது. இந்த பூமி­ய­திர்ச்சி இந்­திய காஷ்மீர் பிராந்­தியம் வரை உண­ரப்­பட்­டுள்­ளது.
இந்து குஷ்மலைப் பிராந்­தி­யத்தில் 224 கிலோ­மீற்றர் ஆழத்தில் தாக்­கிய இந்தப் பூமி­ய­திர்ச்­சியால் ஏற்­பட்ட சேத விபரங்கள் அறிக்கையிடப்படவில்லை.
சொலமன் தீவு­க­ளுக்கு அப்பால் 6.9 ரிச்டர் அள­வான பூமி­ய­திர்ச்சி திங்­கட்­கி­ழமை தாக்­கி­யுள்­ளது.
ஹொனி­யரா பிராந்­தி­யத்­துக்கு மேற்கே 214 கிலோ­மீற்றர் தொலைவில் கடலின் கீழ் மையங்கொண்­டி­ருந்த பூமி­யதிர்ச்­சியால் கட்­ட­டங்கள் நடுங்­கியதால் பெரும் பர­ப­ரப்பு ஏற்­பட்­டது.
எனினும் மேற்­படி பூமி­ய­திர்ச்­சியால் சேதங்கள் எதுவும் ஏற்பட்டதாக அறிக்கையிடப்படவில்லை.   நன்றி வீரகேசரி










கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக தமிழர் நியமனம்

11/08/2015  கூகுள் நிறுவனத்தின் புதிய தலைமைச் செயற்பாட்டு அதிகாரியாக தமிழரான சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டுள்ளார்.

43 வயதான சுந்தர் பிச்சை சென்னையைச் சேர்ந்தவர். சுந்தர்ராஜன் பிச்சை தான் இவரது முழுப் பெயர். சென்னை பத்மா சேஷாத்ரி பால பவன் பாடசாலையில் படித்த இவர், பின்னர் ஐ.ஐ.டி. கரக்பூரில் பொறியியல் பட்டமும் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ் பட்டமும் பென்சில்வேனியாவில் உள்ள வோர்டன் கல்லூரியில் எம்.பி.ஏ. பட்டமும் பெற்றவர். 
கூகுள் நிறுவனத்தில் இணைவதற்கு முன்னர் மெக்கென்சி நிறுவனத்தில் பணிபுரிந்தார். 2004 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் இணைந்தார். தற்போது தலைமை துணைத்தலைவராக இருக்கும் இவர், அன்ட்ரொய்ட் கூகுள் குரோம், கூகுள் என்ஜினியரிங் அப்ஸ், ஜிமெயில், கூகுள் டக்ஸ் உள்ளிட்ட பிரிவுகளைக் கவனித்து வந்தவர். 
2008 ஆம் ஆண்டு பிச்சை தலைமையிலான குழு தான் குரோம் பிரவுசரை உருவாக்கியது. இந் நிலையிலேயே இவர் கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சுந்தர் பிச்சையின் தந்தை ரகுநாத பிச்சை ஜி. சி நிறுவனத்தில் எலெக்ட்ரிகல் என்ஜினியராக பணியாற்றியவர். தாயார் ஸ்டெனோகிராபராக இருந்தவர். 
நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த பிச்சை தனது புத்திசாலித்தனத்தாலும் கடும் உழைப்பாலும் இந்த நிலையை அடைந்துள்ளார். 
2004 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதலாம் திகதி இவர் கூகுள் நிறுவனத்தில் இணைந்தார். இன்டர்நெட் எக்ஸ்புளோரர், பயர்பொக்ஸ் ஆகிய பிரவுசர்களில் கூகுள் தேடுதளத்தை எளிமையாக்க உதவும் டூல்பார் உருவாக்கும் ஒரு சிறிய அணியில் தான் பிச்சைக்கு பணி கிடைத்தது.
ஆனால், நாம் ஏன் மற்ற பிரவுசர்கள் பின்னால் அலைய வேண்டும் நாமே ஒரு பிரவுசரை உருவாக்கலாமே என தனது அதிகாரிகளிடம் பிச்சை தெரிவித்தார். முதலில் இது தேவையில்லாத வேலை என கூகுள் நினைத்தது. ஆனால் அதன் பலன்களை எடுத்துச் சொல்லி பிரவுசரை உருவாக்கும் திட்டத்துக்கு வலு சேர்த்தார். அடுத்த ஓராண்டில் கூகுள் குரோமை வெளியிட்டது பிச்சையின் குழு. இப்போது உலகில் 32 சதவீதம் பயன்படுத்தப்படும் பிரவுசர் குரோம் தான்.  
இவரது மனைவி அஞ்சலி. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். உலகின் முன்னணி நிறுவனங்களான மைக்ரோசொப்ட், கூகுள் ஆகியவற்றின் தலைமை செயல்பாட்டு அதிகாரிகளாக இரு இந்தியர்கள் உள்ளனர். 
ஒருவர் சுந்தர் பிச்சை மற்றையவர் மைக்ரோசொப்ட் தலைமை செயல்பாட்டு அதிகாரியான ஆந்திராவைச் சேர்ந்த சத்யா நடெல்லா என்பது குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி









நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த குண்டுகள் மீது மண்டியிட்டு அமர்ந்திருக்கச் செய்து 10 கைதிகளுக்கு மரணதண்டனை

12/08/2015 ஐ.எஸ். தீவி­ர­வா­திகள், தம்மால் கைதி­க­ளாக பிடிக்­கப்­பட்ட 10 பேருக்கு நிலத்தில் புதைக்­கப்­பட்­டி­ருந்த குண்­டுகள் மீது மண்­டி­யிட்டு அமர்ந்­தி­ருக்க நிர்ப்­பந்­தித்த பின் அந்தக் குண்­டு­களை வெடிக்க வைத்து மர­ண­தண்­டனை நிறை­வேற்­றுவதை வெளிப்­ப­டுத்தும் புதிய வீடியோ காட்­சி­யொன்று வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.
மேற்­படி வீடியோ காட்­சி­யா­னது ஆப்­கா­னிஸ்­தானில் பட­மாக்­கப்­பட்­டுள்­ளது.இந்த மர­ண­தண்­டனை நிறை­வேற்­றத்­துக்கு முன்னர் குறிப்­பிட்ட மலைப் பிராந்­திய பகு­திக்கு குதி­ரை­களில் வரும் தீவி­ர­வா­திகள், தரையில் வரி­சை­யாக குழி­களைத் தோண்டி அவற்­றுக்குள் வெடி­பொ­ருட்­களை புதைத்து அவற்றை மண்ணால் மூடு­கின்­றனர்.
தொடர்ந்து அந்தப் பிராந்­தி­யத்­துக்கு தீவி­ர­வா­தி­களால் கண்கள் கட்­டப்­பட்ட நிலையில் இழுத்து வரப்­படும் கைதிகள் குண்­டுகள் புதைத்து வைக்­கப்­பட்­டி­ருந்த தரைப் பகு­தியின் மீது மண்­டி­யிட்டு அமர்ந்­தி­ருக்க நிர்ப்­பந்­திக்­கப்­ப­டு­கின்­றனர்.
மேற்­படி கைதிகள் அனை­வரும் வய­தா­ன­வர்­க­ளா­கவும் அவர்­களை அழைத்து வரும் தீவி­ர­வா­திகள் இளை­ஞர்­க­ளா­கவும் தோற்­ற­ம­ளிக்­கின்­றனர். அந்தத் தீவி­ர­வா­திகள் தமது கைகளில் கன­ரக துப்­பாக்­கி­களை ஏந்­தி­யி­ருக்­கின்­றனர்.
கைதிகள் தொடர்ந்து மண்­டி­யிட்டு அமர்ந்­தி­ருக்க அங்­கி­ருந்து நகரும் தீவி­ர­வா­திகள் தூர இருந்து இயக்கும் முறைமை மூலம் நிலத்தின் கீழ் புதைக்­கப்­பட்­டி­ருந்த குண்­டு­களை வெடிக்க வைத்து கைதி­க­ளுக்கு மர­ண­தண்­டனை நிறை­வேற்­று­கின்­றனர்.இதன் போது கைதிகள் உடல் துண்டு துண்­டாக சிதறி உயி­ரி­ழக்­கின்­றனர்.
ஷின்­வாரி இனத்­துவ குழுவைச் சேர்ந்­த­வர்கள் என நம்­பப்­படும் அந்தக் கைதிகள் ஆப்­கானின் நங்­கர்ஹார் பிராந்­தி­யத்­தி­லுள்ள தலி­பான்­க­ளுக்கு உதவி வரு­வ­தாக குற்­றஞ்­சாட்­டப்­ப­டு­கி­றது. அந்தப் பிராந்­தி­யத்­தி­லி­ருந்து ஐ.எஸ். தீவி­ர­வா­திகள் அண்­மை­யி­லேயே வெளியேற்றப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் மரணதண்டனை நிறைவேற்ற ப்பட்ட மேற்படி கைதிகளை மத எதிர்ப்பாளர்கள் என தீவிரவாதிகள் தம்மால் வெளியிடப்பட்ட வீடியோ காட்சியில் குறிப்பிட்டுள்ளனர்.    நன்றி வீரகேசரி










நைஜீரிய சந்தையில் குண்டுத் தாக்குதல் 47 பேர் உயிரிழப்பு

13/08/2015   நைஜீ­ரி­யாவின் வட கிழக்கு மாநி­ல­மான பொர்­னோவில் சன­சந்­த­டி­மிக்க சந்­தை­யொன்றில் நடத்­தப்­பட்ட தற்­கொலைக் குண்டுத் தாக்­கு­தலில் குறைந்­தது 47 பேர் உயி­ரி­ழந்­துள்­ள­துடன் 52 பேருக்கும் அதி­க­மானோர் காய­ம­டைந்­துள்­ளனர்.

வபொன் காரி நக­ரி­லுள்ள ஜெபோ கால்­நடைச் சந்­தை­யி­லேயே இந்தத் தாக்­குதல் நடத்­தப்­பட்­டுள்­ளது. இந்தத் தாக்­குதல் ஏற்­க­னவே பொருத்தி வைக்­கப்­பட்­டி­ருந்த குண்டைப் பயன்­ப­டுத்தி நடத்­தப்­பட்­டதா அல்­லது தற்­கொலைக் குண்­டு­தா­ரி­யொ­ரு­வரால் நடத்­தப்­பட்­டதா என்­பது அறி­யப்­ப­ட­வில்லை.
மேற்­படி தாக்­கு­த­லுக்கு இது­வரை எந்­த­வொரு குழுவும் உரிமை கோராத போதும் போகோ ஹராம் போரா­ளி­களே காரணம் என நம்­பப்­ப­டு­கி­றது.
அந்­நாட்டின் புதிய ஜனா­தி­பதி முஹ­மது புஹாரி, மேற்­படி போராளிக் குழுவை நசுக்கப் போவதாக சூளுரைத்திருந்த நிலையிலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.    நன்றி வீரகேசரி








சீனாவில் மண்சரிவு; 40 பேரைக் காணவில்லை

 13/08/2015 சீனாவின் வட மேற்கு ஷாங்ஸி மாகா­ணத்தில் புதன்­கி­ழமை இடம்­பெற்ற பாரிய மண்­ச­ரி­வொன்­றை­ய­டுத்து குறைந்­தது 40 பேர் காணா­மல்­போ­யுள்­ளனர்.




இந்த மண்­ச­ரிவில் ஷாங்யங் நக­ரி­லுள்ள ஷாங்ஸி வுஸொயு சுரங்கக் கம்­ப­னிக்­குச் சொந்­த­மான விடு­தி­களும் வீடு­களும் புதை­யுண்­டுள்­ளன.
மேற்­படி மண்­ச­ரிவில் புதை­யுண்ட 14 பேர் உயி­ருடன் மீட்­கப்­பட்­டுள்­ளனர். தென் சீனாவை கடந்த வார இறு­தியில் தாக்­கிய சூறா­வ­ளி­யொன்று கார­ண­மாக அந்­நாட்டின் பல பிர­தே­சங்­களில் அடை மழை பெய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி











சீன துறைமுகத்தில் களஞ்சியசாலையில் வெடிப்பு

14/08/2015 சீனாவின் வட துறை­முக நக­ரான தியன்­ஜின்னில் புதன்­கி­ழமை நள்­ளி­ரவை அண்­மித்த வேளையில் இடம்­பெற்ற இரு பிர­தான வெடிப்புச் சம்­ப­வங்­களில் சிக்கி குறைந்­தது 44 பேர் பலி­யா­ன­துடன் 500 பேருக்கும் அதி­க­மானோர் காய­ம­டைந்­துள்­ளனர்.
பலி­யா­ன­வர்­களில் 12 தீய­ணைப்புப் படை­வீ­ரர்­களும் உள்­ள­டங்­கு­கின்­றனர். காய­ம­டைந்­த­வர்­களில் பலரின் நிலைமை கவ­லைக்­கி­ட­மாக இருப்­ப­தாக மருத்­து­வ­மனை வட்­டா­ரங்கள் தெரி­விக்­கின்­றன.

அந்த நகரின் துறை­முகப் பிர­தே­சத்தில் அபா­ய­க­ர­மான இர­சா­யனப் பொருட்கள் களஞ்­சி­யப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்த களஞ்­சி­ய­சா­லை­யி­லேயெ இந்த இரு வெடிப்­பு­களும் இடம்­பெற்­றுள்­ளன.
இந்த வெடிப்­புகள் கார­ண­மாக ஏற்­பட்ட பாரிய தீயை நெடுந் தூரத்­திற்கு அவ­தா­னிக்கக் கூடி­ய­தாக இருந்­த­தாக அங்­கி­ருந்து வரும் செய்­திகள் தெரி­விக்­கின்­றன.
மேற்­படி வெடிப்­பு­களால் அவை இடம்­பெற்ற இடத்­தி­லி­ருந்து 2 கிலோ­மீற்றர் தூர சுற்று வட்டப் பகு­தி­யி­லி­ருந்த கட்­ட­டங்­களின் ஜன்­னல்கள் சேத­ம­டைந்­துள்­ள­துடன் அலு­வ­லக மாடிக் கட்­ட­டங்­களும் நூற்­றுக்­க­ணக்­கான கார்­களும் தீக்­கி­ரை­யா­கி­யுள்­ளன.
முத­லா­வது வெடிப்பு இடம்­பெற்று ஒரு சில செக்­கன்­களில் இரண்­டா­வது வெடிப்பு இடம்­பெற்­றுள்­ளது. முத­லா­வது வெடிப்பின் போது 3 தொன் ரி.என்.ரி வெடி­பொ­ருட்கள் வெடித்­த­தை­யொத்த சக்தி வெளிப்­பட்­டுள்­ளது. அதே­ச­மயம் இரண்­டா­வது வெடிப்பில் 21 தொன் ரி.என்.ரி வெடி­பொ­ருட்கள் வெடித்­த­தை­யொத்த சக்தி வெளிப்­பட்­டுள்­ளது.
மேற்­படி வெடி­பொருள் இர­சா­ய­னத்தை கப்­பலில் ஏற்­றிய போதே இந்த வெடிப்புகள் இடம்­பெற்­ற­தாக உறு­திப்­ப­டுத்­தப்­ப­டாத தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.
இத­னை­ய­டுத்து வெடிப்­புகள் இடம்­பெற்ற களஞ்­சி­ய­சா­லையின் உரிமை நிறு­வ­ன­மான றுயிஹாய் லொஜிஸ்டிக்ஸ் நிறு­வ­னத்தின் சிரேஷ்ட முகா­மை­யா­ளர்­களை அதி­கா­ரிகள் விசா­ர­ணைக்­குட்­ப­டுத்­தி­யுள்­ளனர்.    நன்றி வீரகேசரி








எகிப்தில் ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் தொடர்புடைய பணயக்கைதி படுகொலை

14/08/2015 எகிப்­திய கெய்ரோ நக­ரி­லி­ருந்து கடத்­தப்­பட்ட குரோ­ஷிய பண­யக்­கை­தி­யொ­ரு­வரை தாம் தலையைத் துண்­டித்து படு­கொலை செய்­துள்­ள­தாக அந்­நாட்­டி­லுள்ள ஐ.எஸ். தீவி­ர­வா­தி­க­ளுடன் தொடர்­பு­டைய குழு­வினர் புதன்­கி­ழமை தெரி­வித்­துள்­ளனர்.
மேற்­படி குரோ­ஷிய பண­யக்­கை­தி­யான தொமிஸ்லாவ் சலோ­பெக்கின் (30 வயது) சட­லத்தைக் காண்­பிக்கும் புகைப்­ப­ட­மொன்­றையும் எகிப்­திய சினாய் பிராந்­தி­யத்­தி­லுள்ள ஐ.எஸ். தீவி­ர­வா­திகள் இணை­யத்­த­ளத்தில் வெளி­யிட்­டுள்­ளனர்.

இது தொடர்பில் குரோ­ஷிய பிர­தமர் ஸொரான் மில­னோவிக் தெரிக்­கையில், தீவி­ர­வா­தி­களால் தொமிஸ்லாவ் படு­கொலை செய்­யப்­பட்­டதை 100 சத­வீதம் உறு­திப்­ப­டுத்த முடி­யா­துள்­ள­தாக கூறினார்.
தொமிஸ்லாவ் கடந்த ஜூலை மாதம் தலை­நகர் கெய்­ரோ­வி­லி­ருந்து கடத்­தப்­பட்ட பின்னர் மேற்­படி தீவி­ர­வா­தி­களால் பண­யக்­கை­தி­யாக பிடித்து வைக்­கப்­பட்­டி­ருந்தார்.
இந்­நி­லையில் அவரைக் கொன்­றுள்­ள­தாக உரிமை கோரி­யுள்ள அந்தக் குழு­வினர், அவ­ரது முதுகில் அவ­ரது துண்­டிக்­கப்­பட்ட தலை வைக்­கப்­பட்­டுள்­ளதை வெளிப்­ப­டுத்தும் புகைப்­ப­ட­மொன்றை வெளி­யிட்­டுள்­ளனர்.   நன்றி வீரகேசரி










54 பயணிகளுடன் இந்தோனேஷிய விமானம் மாயம்

16/08/2015 இந்தோனேஷியாவில் இருந்து 54 பயணிகளுடன் பயணித்த விமானம் ஒன்று பப்புவா நியுகினி பகுதியில் வைத்து  தனது காட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழுந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த விமானத்தில் 5 குழந்தைகள் உட்பட 54 பேர் பயணித்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் விமானத்தின் நிலை குறித்து விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகள் விசாரணைகளை  மேற்கொண்டு வருகின்றனர்.  நன்றி வீரகேசரி






இந்­தி­யாவின் 69 ஆவது சுதந்­தி­ர ­தின விழா

16/08/2015  இந்­தி­யாவின் 69 ஆவது சுதந்­தி­ர­தின விழா நேற்று கொண்­டா­டப்­பட்­டது. இத­னை­யொட்டி இந்­தியா முழு­வதும் பாது­காப்பு பலப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

தலை­நகர் டில்­லியில் பிர­தமர் மோடி கொடி ஏற்றி வைத்­தார். இதை­யொட்டி டில்­லியில் 7 அடுக்கு பாது­காப்பு போடப்­பட்­டுள்­ளது. சென்னை கோட்டை கொத்­த­ளத்தில் தமி­ழக முதல்வர் ஜெய­ல­லிதா தேசிய கொடி­யேற்றி வைத்­துள்ளார். டில்­லியில், ஒவ்­வொரு 40 மீற்­ற­ருக்கும் துப்­பாக்கி ஏந்­திய பொலிஸார் பணியில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு, பாது­காப்பு மூன்று மடங்கு அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது.

இம்­முறை பா.ஜ.க. அலு­வ­ல­கங்­களை ஐ.எஸ். அமைப்­பினர் குறி­வைத்து தாக்­கலாம் என்ற உள­வுத்­துறை எச்­ச­ரிக்கை கார­ண­மாக, இந்­தியா முழு­வதும் பொலிஸார் உசார்ப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளனர்.
சுதந்­திர தின விழா நடை­பெறும் இடத்தை சுற்­றிலும் சுமார் 30 ஆயி­ரத்­திற்கும் அதி­க­மான பொலிஸார் நிறுத்­தப்­பட்­டுள்­ளனர். டில்லி பொலிஸார், துணை இரா­ணுவ படை­யினர், உள­வுத்­து­றை­யினர் என பல்­வேறு பாது­காப்பு படை­யி­னரும் ஒருங்­கி­ணைந்து, 7 அடுக்கு பாது­காப்பு பணியில் ஈடு­பட்­டுள்­ளனர்.

மேலும் உள­வுத்­து­றையின் எச்­ச­ரிக்­கையைத் தொடர்ந்து பிர­தமர் மோடிக்­கான கொமாண்டோ படை பாது­காப்பும் அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. நான்கு ஆள் இல்லா விமா­னங்கள் மற்றும் ஹெலி­கொப்டர் மூல­மா­கவும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சுதந்திரதின விழா நடைபெறும் இடத்தில் சுமார் 1,400 கெமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன.   நன்றி வீரகேசரி

No comments: