இலங்கைச் செய்திகள்


20ஆவது திருத்­தத்­துக்­கு அமைச்­ச­ரவை அனு­ம­தி

வித்தியா கொலை : பிரதான சந்தேக நபர் கைது - தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்கின்றது சீ.ஐ.டீ

சனத் உட்பட நால்வர் பிரதி அமைச்சர்களாக பதவிப் பிரமாணம்

பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்து பேராதனைப் பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

நாமல் குற்றப்புலனாய்வு பிரிவிற்கு வருகை

புலம் பெயர்ந்த இலங்கையர்கள் 150 பேருக்கு இரட்டை பிரஜாவுரிமை வழங்கல்







20ஆவது திருத்­தத்­துக்­கு அமைச்­ச­ரவை அனு­ம­தி

09/06/2015 அர­சி­ய­ல­மைப்பின் 20ஆவது திருத்தச் சட்­ட­மாக கொண்­டு­வ­ரப்­ப­ட­வுள்ள தேர்தல் முறை மாற்ற சட்­ட­மூ­லத்­துக்கு அமைச்­ச­ரவை அங்­கீ­காரம் வழங்­கி­யுள்­ளது. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் நேற்று ஜனா­தி­பதி செய­ல­கத்தில் நடை­பெற்ற விசேட அமைச்­ச­ரவைக் கூட்­டத்­தின்­போது தேர்தல் முறை மாற்ற சட்­ட­மூல வரைபை பிர­தமர் ரணில் விக்கி­ர­ம­சிங்க சமர்ப்­பித்த நிலையில் அதற்கு அங்­கீ­காரம் வழங்­கப்­பட்­டுள்­ளது.


125 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் தொகுதி மூலமும், 75 உறுப்­பி­னர்கள் விகி­தா­சார ரீதி­யிலும், 25 உறுப்­பி­னர்­களை தேசி யப் பட்­டியல் ஊடாகவும் தெரிவு செய்யும் வகை­யிலும் 225 உறுப்­பி­னர்­களை கொண்­ட­தாக புதிய தேர்தல் முறை அமைந்­துள்­ளது.

அதா­வதுஇ விருப்பு வாக்கு முறை­யற்ற தொகுதி மற்றும் கலப்பு என இரண்டு முறை­க­ளிலும் அமைந்த புதிய கலப்பு தேர்தல் முறை யோசனை அர­சி­ய­ல­மைப்பின் 20 ஆவது சட்­ட­மூ­ல­மாக பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது.
இதே­வேளை நேற்­றைய தினம் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க தேர்தல் முறை மாற்ற யோச­னயை அமைச்­ச­ர­வையில் சமர்ப்­பித்த பின்னர் அதற்கு பெருந்­தோட்ட உட்­கட்­ட­மைப்பு அபி­வி­ருத்தி அமைச்­சரும் தொழி­லாளர் தேசிய சங்­கத்தின் தலை­வ­ரு­மான பி. திகாம்­பரம் எதிர்ப்பு வெளி­யிட்­டி­ருந்தார்.
அதா­வது நுவ­ரெ­லியா மஸ்­கெ­லியா தொகு­தி­களில் நான்கு பல் தொகு­திகள் உரு­வாக்­கப்­படும் வகையில் தேர்தல் முறை மாற்ற யோசனை வர­வேண்டும் என்று அமைச்சர் திகாம்­பரம் வலி­யு­றுத்­தி­யுள்ளார்.
ஆனால் அதற்கு உட­ன­டி­யாக எதிர்ப்பு வெளி­யிட்ட அமைச்­சர்கள் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க சமர்ப்­பித்­துள்ள வகையில் தேர்தல் முறை மாற்­றத்தை அங்­கீ­க­ரிக்­க­வே­ணடும் என்று வலி­ய­றுத்­தி­யுள்­ளனர். குறிப்­பாக அமைச்­சர்­க­ளான சம்­பிக்க ரண­வக்க மற்றும் எஸ்.பி. திசா­நா­யக்க உள்­ளிட்டோர் முன்­வைக்­கப்­பட்ட தேர்தல் முறையில் மாற்றம் செய்ய முடி­யாது என்று கூறி­யுள்­ளனர்.
இத­னி­டையே தேர்தல் முறை மாற்றம் தொடர்­பான யோசனை தொடர்பில் அமைச்­ச­ரவைக் கூட்­டத்தில் ஏற்­பட்ட சல­ச­லப்பை அவ­தா­னித்த ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ""அப்­ப­டி­யானால் தேர்தல் முறை மாற்­றத்தை நிறை­வேற்ற நீங்கள் விரும்­ப­வில்­லையா? என்று கேட்­டுள்ளார்.
மேலும் எந்­த­வொரு தரப்­புக்கும் அநீதி ஏற்­ப­டா­த­வாறு தேர்தல் முறை மாற்­றத்தை நிறை­வேற்ற நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்றும் ஜனா­தி­பதி இதன்­போது குறிப்­பிட்­டுள்ளார்.
அத்­துடன் தேர்தல் முறை மாற்­றத்தை நிறை­வேற்­று­வ­தற்கு யாரும் தடை­யாக இருக்­க­வேண்டாம் என்றும் அனை­வரும் ஒத்­து­ழைப்பு வழங்­குங்கள் என்றும் ஜனா­தி­பதி இதன்­போது கோரிக்­கையும் விடுத்­துள்ளார். அதனைத் தொடர்ந்து தேர்தல் முறை மாற்­றத்­துக்கு அமைச்­ச­ர­வையின் அங்­கீ­காரம் கிடைத்­தது.
அதன் பின்னர் அமைச்­ச­ரவைக் கூட்டம் முடிந்­ததும் அமைச்சர் திகாம்­ப­ரத்தை சந்­தித்த ஜனா­தி­பதி சிறி­சேன சிறு­பான்மை கட்­சி­களின் பிர­தி­நி­தித்­து­வங்­க­ளுக்கு பாதிப்பு ஏற்­ப­டா­த­வாறு தேர்தல் முறை மாற்றம் வரும் என்று உறு­தி­ய­ளித்­துள்ளார் என்றும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.
இதே­வேளை அமைச்­ச­ரவைக் கூட்­டத்தில் தேர்தல் முறை மாற்­றத்­துக்கு அங்­கீ­காரம் வழங்­கப்­பட்­டமை தொடர்பில் வெளி­வி­வ­கார பிர­தி­ய­மைச்சர் அஜித் பெரெரா கூறி­யுள்­ள­தா­வது
"" புதிய தேர்தல் முறையின் பிர­காரம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் 225 பேரில் மாற்றம் ஏற்­ப­டாது. அதில் 125 உறுப்­பி­னர்கள் கலப்பு முறைமை அடிப்­ப­டை­யிலும் 75 உறுப்­பி­னர்கள் விகி­தா­சார அடிப்­ப­டை­யிலும் தெரிவு செய்­யப்­பட உள்­ளனர். மேலும் 25 உறுப்­பி­னர்கள் தேசிய பட்­டியல் மூலம் தெரிவு செய்­யப்­ப­ட­வுள்­ளனர். பிர­த­மரின் இந்த யோசனை ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டது. இந்­நி­லையில் இதனை முழு­மை­யாக தயா­ரித்து சில தினங்­களில் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்"

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஜனா­தி­ப­தி­யாக பத­வி­யேற்ற காலத்­தி­லி­ருந்து தேர்தல் முறை மாற்­றத்தை உரு­வாக்­கு­வது குறித்து பேசப்­பட்டு வந்­தது. இந்­நி­லையில் இது தொடர்பில் ஆராய்ந்து அர­சியல் கட்­சி­களின் யோச­னை­களை பெற்று தேர்தல் முறையை தயா­ரிக்க அமைச்­ச­ரவை உப குழு ஒன்றும் உரு­வாக்­கப்­பட்­டது.
இந்த அமைச்­ச­ரவை உப குழுவில் அமைச்­சர்­க­ளான கலா­நிதி சரத் அமு­னு­கம, எஸ்.பி. திசா­நா­யக்க, லக்ஷ்மன் கிரி­யெல்ல, கபிர் ஹஷீம், சம்­பிக்க ரண­வக்க, ரவூப் ஹக்கீம், கயந்த கரு­ணா­தி­லக்க, பழனி திகாம்­பரம் மற்றும் ரிஷாத் பதி­யுதீன் ஆகியோர் உறுப்­பி­னர்­க­ளாக இடம்­பெற்­றி­ருந்­தனர். இந்த உறுப்­பி­னர்கள் பல தட­வைகள் கூடி தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் ஆராய்ந்து சில வாரங்­க­ளுக்கு முன்னர் தமது வரைபை முன்­வைத்­தி­ருந்­தனர். ஆனால் அதற்கும் உட­ன­டி­யாக அங்­கீ­காரம் கிடைக்­க­வில்லை. அதன் பின்னர் ஜனா­தி­ப­தி­யும பிர­த­மரும் களத்தில் இறங்கி தேர்தல் முறை மாற்ற யோச­னையை தயா­ரிக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் ஆரம்பத்தில் 255 உறுப்பினர்களை கொண்டு தேர்தல் முறை மாற்றத்தை தயாரிக்கவே யோசனைகள் முன்வைக்கப்பட்டன. அதாவது 196 உறுப்பினர்களை மாவட்ட ரீதியிலும் 59 உறுப்பினர்களை தேசிய பட்டியல் ரீதியிலும் தெரிவு செய்வதற்கு யோசனை முன்வைக்கப்பட்டது. ஆனால் பாராளுமன்ற ஆசனங்கள் 255 ஆகன உயர்வதை பல கட்சிகள் எதிர்த்தன. இந்நிலையில் வாரக்கணக்கில் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு இறுதியில் தற்போதைய யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.   நன்றி வீரகேசரி 








வித்தியா கொலை : பிரதான சந்தேக நபர் கைது - தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்கின்றது சீ.ஐ.டீ
10/06/2015 யாழ். ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவின் புங்குடுதீவு பகுதியைச் சேர்ந்த  பாடசாலை மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் 10 ஆவது சந்தேக நபரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

நேற்று முன் தினம் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரை ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் பெற்றுக்கொண்ட தடுப்புக் காவல் உத்தரவுக்கு அமைய குர்றப் புலனாய்வுப் பிரிவின் விஷேட பொலிஸ் குழு விசாரணைக்கு உட்படுத்தி வருவதாக பொலிஸ் தலைமையகத்தின் நம்பகரமான  வட்டாரங்கள் தெரிவித்தன.
நாயினதீவு பிரதேசத்தைச்   சேர்ந்த 24 வயதுடைய நபர் ஒருவரையே இவ்வாறு குற்ற புலனாய்வு பிரிவின் விஷேட விசாரணைக் குழுவினர்  கைது செய்துள்ளனர். 
ஏற்கனவே கைது செய்யப்பட்ட ஒன்பது பேரில் பிரதான சந்தேக நபர்களில் ஒருவராக கருதப்படும் சந்தேக நபரின் நண்பர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.
விளக்கமரியலில் உள்ள சந்தேக நபர்களிடம் குர்ரப் புலனாய்வுப் பிரிவின் சிறப்பு விசாரணைக் குழுவிற்கு தலமை தாங்கும் கடத்தல் மற்றும் மனிதப் படுகொலைகள் தொடர்பிலான சிறப்பு விசாரணையாளர் பொலிஸ் பரிசோதகர் நிஸாந்த டீ சில்வா தலமையிலான பொலிஸ் குழுவினர் முன்னெடுத்த விசாரணைகளின் பலனாகவே இந்த கைது இடம்பெற்றுள்ளது.
கடந்த மே மாதம் 13 ஆம் திகதி பாடசாலைக்கு சென்ற மாணவி கடத்தப்பட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தி படுகொலை செய்யப்பட்டு இருந்தார். 
அந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் ஏற்கனவே ஒன்பது நபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.  கடந்த முதலாம் திகதி மன்றுக்கு மேலதிக அரிக்கை9யையை சம்ர்பித்திருந்த புலனாய்வுப் பிரிவினர் மேலும் சிலர் இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்படலாம் என அப்போதைய விசாரணைத் தகவல்களை வைத்து தெரிவித்திருந்தனர்.
இந் நிலையிலேயே நேற்று முன் தினம் 10 ஆவது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி





சனத் உட்பட நால்வர் பிரதி அமைச்சர்களாக பதவிப் பிரமாணம்
10/06/2015 ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதி அமைச்சர்களாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.
சனத் ஜயசூரிய, எரிக் வீரவர்தன, விஜய தஹநாயக்க  மற்றும் திலங்க சுமதிபால ஆகியோரே இவ்வாறு பிரதி அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.     நன்றி வீரகேசரி






பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்து பேராதனைப் பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
10/06/2015 பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மஹாபொல உதவித் தொகை குறைக்கப்பட்டமை உட்பட பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.
கண்டி-கொழும்பு பிரதான வீதியின் கலஹா சந்தியில் குறித்த  ஆர்ப்பாட்டம் மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரி









நாமல் குற்றப்புலனாய்வு பிரிவிற்கு வருகை

12/06/2015 முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப்புலனாய்வு பிரிவிற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நன்றி வீரகேசரி










புலம் பெயர்ந்த இலங்கையர்கள் 150 பேருக்கு இரட்டை பிரஜாவுரிமை வழங்கல்

12/06/2015 புலம்­பெ­யர்ந்த இலங்­கை­யர்கள் 150 பேருக்கு நேற்­று இரட்டைப் பிர­ஜா­வு­ரிமை வழங்­கப்­பட்­டது. கொழும்பு கோட்­டை­யி­லுள்ள வெளிவி­வ­கார அமைச்சின் பிர­தான கேட்போர் கூடத்தில் இடம்­பெற்­ற இந்த நிகழ்­வில் வெளிவி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர, மக்கள் பாது­காப்பு மற்றும் கிறிஸ்­தவ மத விவ­கார அமைச்சர் ஜோன் அம­ர­துங்க உள்­ளிட்ட பலர் கலந்து கொண்­டனர்.

புலம்­பெ­யர்ந்த இலங்­கை­யர்கள் 150 பேருக்கு வெளிவி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீ­ரவும் மக்கள் பாது­காப்பு அமைச்சர் ஜோன் அம­ர­துங்­கவும் இரட்­டைப்­பி­ர­ஜா­வு­ரிமை சான்­றி­தழ்­களை வழங்கி வைத்­தனர்.

மேலும் இதன்­போது இரட்­டைப்­பி­ர­ஜா­வு­ரிமை பெற்­ற­வர்கள் எழுந்து நின்று சத்­தி­யப்­பி­ர­மா­ணமும் செய்து கொண்­டனர். இலங்­கையின் பிர­ஜா­வு­ரிமை தொடர்பில் 1948 ஆம் ஆண்டின் போதே சட்டம் நிறை­வேற்­றப்­பட்­டது. குறித்த சட்ட நிறை­வேற்­றத்தின் பிர­காரம் 18 ஆம் இலக்க சட்­ட­மூலம் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது.
இதே­வேளை இலங்­கையில் இரட்­டைப்­பி­ர­ஜா­வு­ரிமை 1987 ஆம் ஆண்டே இலங்­கையில் அறி­முகம் செய்து வைக்­கப்­பட்­டது. அந்த வரு­டத்தின் போது பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­றப்­பட்ட 45 ஆவது இலக்க சட்­ட­மூ­லத்தின் பிர­காரம் இரட்­டைப்­பி­ர­ஜா­வு­ரிமை வழங்கல் செயற்­திட்டம் அர­சாங்­கத்­தினால் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கி­றது. இதன்­படி குறித்த சட்டம் நிறை­வேற்­றப்­பட்­ட­தி­லி­ருந்து இது­வ­ரையில் சுமார் 34 ஆயிரம் பேருக்கு இரட்­டைப்­பி­ர­ஜா­வு­ரிமை வழங்­கப்­பட்­டுள்­ளது.
எனினும் 2011 ஆம் ஆண்­ட­ளவில் இரட்­டைப்­பி­ர­ஜா­வு­ரிமை வழங்கல் அர­சாங்­கத்­தினால் தற்­கா­லி­க­மாக இடை­நி­றுத்­தப்­பட்­டது. இதன்­படி சுமார் நான்கு ஆண்­டுகள் இரட்­டைப்­பி­ரஜாவுரி­மைக்கு விண்­ணப்­பிக்க முடி­யாத நிலைமை காணப்­பட்­டது.
எவ்­வா­றா­யினும் புதிய அர­சாங்­கத்தின் 100 நாள் வேலைத்­திட்­டத்தின் பிர­காரம் 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் அமைச்­ச­ர­வையின் அனு­ம­தி­யுடன் இரட்­டைப்­பி­ர­ஜா­வு­ரிமை மீள வழங்­கு­வ­தற்கு ஆரம்­பிக்­கப்­பட்­டது. 
இந்­நி­லையில் இது­வ­ரைக்கும் 2000 விண்­ணப்­பங்கள் இரட்­டைப்­பி­ர­ஜா­வு­ரி­மைக்கு கிடைக்­கப்­பெற்­றாலும் புதிய ஒழுங்குமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் முதலில் விண்ணப்பம் செய்த 450 பேருக்கு இரட்டைப்பிரஜாவுரிமை வழங்கப்பட்டிருந்தது.
இதற்கமையவே நேற்று மேலும் 150 பேருக்கு இரட்டைப்பிரஜாவுரிமை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி



No comments: