துறவி

  .


ஒரு ஊர்ல ஒருத்தன் சாயந்தரம்
வேலை முடிச்சு வீட்டுக்கு போய்ட்டு இருந்தான் .
அப்ப
திடீர்னு ஒரு காட்டுக்குள்ள
வச்சு அவன் வந்த பைக் பஞ்சர்
ஆய்ருச்சு. உடனே பக்கத்துல
பார்த்தான் தூரத்துல ஒரு மடம்
தெரிஞ்சது உடனே அங்க போய்
எதாவது உதவி கிடைக்குமான்னு கேட்கலாம்னு போனான்
அங்க இருந்த
துறவி சொன்னாரு .
தம்பி நேரம்
வேறு போயிருச்சு இந்த
இருட்டுக்குள்ள நீங்க
ஊருக்கு வண்டிய
சரி பண்ணி போகனுமா ?
பேசாம இங்க



தங்கிட்டு காலைல
போங்கன்னு . உடனே இவனும்
சரின்னு ஒத்துக்கிட்டான் .
அங்கேயே சாப்பிட்டு தூங்கி கொண்டிருக்கும்
போது மடத்துக்கு பின்னாடி டமால்னு ஒரு பெரிய
சத்தம் . ஆனா ஒருத்தரும்
எழும்பி என்னனு பார்க்கல .
உடனே இவனும்
அப்படியே படுத்து தூங்கிட்டான் .
மறுநாள் காலைல வண்டிய
சரிபண்ணிட்டு போகும்
போது. அந்த சத்ததுக்கான
காரணத்தை தலைமை துறவிகிட்ட
கேட்டான்
உடனே அவரு அத உன்கிட்ட
சொல்ல கூடாது. நீ போகலாம்
அப்படின்னு சொல்லிட்டார் .
இவனும் வந்துட்டான்
அப்புறம் ஒரு வருடம்
கழிச்சு அதே வழிய வரும்
போது அதே மாதிரி வண்டி பஞ்சர்
ஆகி அதே மடத்துல தங்க
வேண்டி வந்தது .
அன்னைக்கு ராத்திரியும் அந்த
சத்தம் கேட்டது . இவனும்
மறு நாள் காரணம் கேட்டான் .
ஆனா தலைமை துறவி அப்பவும்
சொல்ல
கூடாதுன்னு சொல்லிட்டார்
மறுபடியும்
மூன்றாவது தடவையும்
இப்படி நடந்தப்ப அவர்கிட்ட
காரணம் கேட்டான் . அவர்
அப்பவும் மறுத்தார் .
உடனே இவனுக்கு கோபம்
வந்துருச்சு . ஒரு தரவ கூட
காரணத்த சொல்ல
மாட்டங்குறீங்க .
ஏன்னு கொஞ்சம் கோபத்தோட
கேட்டான்.
அதுக்கு அவரு நீயும் என்ன
மாதிரி துறவி ஆனா சொல்றேன்
அப்படின்னார் .
உடனே இவனும்
வீட்டுக்கு போய்
எல்லார்கிட்டயும்
சொல்லிட்டு துறவியாக
வந்துட்டான் . வந்ததும்
அவரு இவன தவம் பண்ண
சொன்னார் . இவனும்
பண்ணினான்
ஆறு மாதம் கடுமையா தவம்
இருந்த பிறகு அந்த
தலைமை துறவி இந்தாப்பா இந்த
சாவிய வச்சு அந்த கதவ தொற
அங்க தான் நீ கேட்ட
கேள்விக்கு பதில்
இருக்குன்னு சொல்லி ஒரு கதவ
காண்பிச்சார் .
உடனே இவனும் தொறந்தான்.
அங்க இன்னொரு கதவு,
பக்கத்தில ஒரு சீட்டு அதில
ஒரு கேள்வி . அதுக்கு பதில்
கண்டு புடிச்ச பிறகு அடுத்த
சாவி தருவேன்னு துறவி சொன்னார் .
இவனும் கண்டுபிடிச்சான்
அடுத்த சாவியும் தந்தார் .
இவன் தொறந்தான் . அப்புறம்
இன்னொரு கதவு அதுக்கு ஒரு கேள்வி .
ஒரு வழியா அதுக்கும் பதில்
கண்டுபிடிச்சி அந்த
கடைசி கதவ தொறந்தான்
அங்க தான் இவன் அந்த
சத்ததுக்கான
காரணத்தை கண்டு புடிச்சான் .
..
.
அது என்னனு உங்களுக்கு சொல்லனும்னா நீங்க
துறவியாகனும்.
( பாவி பயலுக )

No comments: