நெல்சன் மண்­டே­லாவின் மறை­வுக்கு உலக தலை­வர்கள் அனு­தாபம்




07/12/2013    தென்­னா­பி­ரிக்க முன்னாள் ஜனா­தி­பதி நெல்சன் மண்­டேலா வியா­ழக்­கி­ழமை தனது 95 ஆவது வயதில் மர­ண­மா­ன­தை­யொட்டி உலகத் தலை­வர்கள் பலரும் ஆழ்ந்த கவ­லையை வெளி­யிட்­டுள்­ளனர்.

இந்த உல­கத்­திற்­கான மிகப் பெரிய ஒளி மறைந்து விட்­டது என பிரித்­தா­னிய பிர­தமர் டேவிட் கமெரோன் தனது அனு­தாபச் செய்­தியில் தெரி­வித்­துள்ளார்.
எமது காலத்தில் உச்ச நிலை­யி­லி­ருந்த உலகின் உண்­மை­யான வீர­பு­ருஷர் ஒரு­வ­ர் மர­ண­ம­டைந்­துள்­ள­தாக அவர் தெரி­வித்தார்.
பிரான்ஸ் ஜனா­தி­பதி பிரான்கொயிஸ் ஹொலன்ட் தனது அனு­தாபச் செய்­தியில், நெல்சன் மண்­டே­லாவின் மறைவானது சுதந்­தி­ரத்­துக்­காக போரா­டு­ப­வர்­க­ளுக்கு உத்­வே­க­ம­ளிப்­ப­தாக தொடர்ந்தும் இருப்­ப­துடன் பிர­பஞ்ச உரி­மை­களை பாது­காப்­பதில் மக்­க­ளுக்கு நம்­பிக்­கை­ய­ளிப்­ப­தா­கவும் இருக்கும் என தெரி­வித்தார்.


''மண்­டே­லாவின் வன்­மு­றைக்கு எதி­ரான அர­சியல் கொள்­கையும் அனைத்­து­ வி­த­மான இன­வா­தத்­துக்கு எதி­ரான கண்­ட­னமும் தொட­ர்ந்து செல்­வாக்கு செலுத்தும்'' என ஜேர்­ம­னிய அதிபர் அஞ்­சலா மெர்கெல் குறிப்­பிட்­டுள்ளார்.
நவீன காலத்தில் மாபெரும் அர­சியல் வாதி­களில் ஒருவர் நெல்சன் மண்­டேலா எனக் ­கூ­றிய ரஷ்ய ஜனா­தி­பதி விளா­டிமிர் புட்டின், அவர் தனது கொள்கைகளில் இருந்து ஒரு­போதும் பின் வாங்­கி­ய­தில்லை என தெரி­வித்தார்.
நவீன ஆபி­ரிக்க வர­லாற்றில் முழு சகாப்தம் ஒன்று நெல்சன் மண்­டே­லாவின் பெய­ருடன் தொடர்புபட்­டுள்­ள­தா­கவும் அது இன ஒடுக்கு முறைக்­கான வெற்­றி­யையும் ஜன­நா­யக தென் ­ஆ­பி­ரிக்­காவை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தையும் குறிப்­ப­தாக உள்­ள­தாகவும் புட்டின் மேலும் கூறினார்.
நெல்சன் மண்­டேலா தனது நாட்டின் நல­னுக்­காக அய­ராது பாடுபட்ட ஒருவர் என குறிப்பிட்டுள்ள பிரித்தானிய எலிஸபெத் மகாராணியார், இன்று அனைவரும் காணும் அமைதியான தென்னாபிரிக்காவுக்கு அவரே வழிவகை செய்துள்ளதாக தெரிவித்தார்.
மியன்மார் ஜன­நா­யக தலைவர் ஆங் சான் சூகி விடுத்த அனு­தாப செய்­தியில், தனது பிறப்பின் நிமித்தம் ஏற்­பட்ட தனது தோலின் நிறத்­துக்­காக எவரும் தண்­டிக்­கப்­ப­டக்­கூ­டாது என்­ப­தை அனை­வரும் அறியச் செய்த தலைவர் நெல்சன் மண்­டேலா என்று தெரி­வித்­துள்ளார்.
''எம்மால் உலகை மாற்ற முடியும் என்­பதை அவர் எம்மை உணரவைத்­துள்ளார்" என ஆங் சான் சூகி தனது செய்­தியில் மேலும் குறிப்­பிட்­டுள்ளார்.
நெல்சன் மண்­டேலா தனது அசா­தா­ரண முயற்­சி­யால் இன ஒடுக்கு முறைக்கு எதி­ரான போராட்­டத்தில் தென் ஆபி­ரிக்க மக்­களை வெற்றி பெறச் செய்­துள்ளார். புதிய தென் ஆபி­ரிக்கா உத­ய­மா­கவும் அபி­வி­ருத்­தி­ய­டை­யவும் அவர் பங்­க­ளிப்புச் செய்­துள்ளார். என சீன ஜனா­தி­பதி ஸி ஜின்பிங் கூறி­யுள்ளார்.
''மனித கெள­ரவம், சுதந்­திரம், சமா­தானம், மீள்­நல்­லி­ணக்கம் என்­ப­வற்­றுக்­கான சாத­னை­யா­ள­ராக நெல்சன் மண்­டே­லாவை வர­லாறு நினைவு கூரும்'' என முன்னாள் அமெ­ரிக்க ஜனா­தி­பதி பில் கிளின்டன் தெரி­வித்­துள்ளார்.
அதே சமயம் நாடு கடந்து வாழும் திபெத்­திய ஆன்­மிக தலைவர் தலாய் ­லாமா விடுத்த செய்­தியில், நெல்சன் மண்­டே­லா­விற்கு நாம் செய்­யக்­கூ­டிய மிகச் சிறந்த அஞ்­சலி அவரைப் பின்பற்றி சமாதானத்துக்கும் மீள் நல்லிணக்கத்திற்கும் பணியாற்றுவதாகும் என குறிப்பிட்டுள்ளார்.

நன்றி வீரகேசரி

கறுப்புச் சரித்திரம் சரிந்தது..!


06/12/2013  தென்னாபிரிக்காவின் கறுப்புச் சரித்திரம் என்று அழைக்கப்பட்ட அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா தனது 95 ஆவது வயதில் நேற்று வியாழக்கிழமை காலமானார்.
இந்தத் தகவலை அந்நாட்டு அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
நெல்சன் மண்டேலா கடந்த சில மாதங்களாக கடும் சுகயீனமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததுடன் அதன் பின்னர் அவரது இல்லத்தில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தார்.
அவருடைய உடல்நிலை பாதிப்படைந்து வருவதாக நேற்று முன்தினம் உறவினர்கள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் நேற்றிரவு அந்நாட்டு நேரப்படி 8.05 மணிக்கு அவருடைய உயிர் பிரிந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
1918 ஆம் ஆண்டு ஜுலை 18 ஆம் திகதி பிறந்த நெல்சன் மண்டேலா தென்னாபிரிக்காவின் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியிரசுத் தலைவராவார். தென்னாபிரிக்காவில் புரட்சியை ஏற்படுத்திய பெருமையுடன் நிறவெறிக்கு எதிராக போராடியமையால் உலகம் போற்றும் தலைவராகவும் இவர் திகழ்ந்தார். நன்றி வீரகேசரி

No comments: