உலகச் செய்திகள்


 .
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு விரும்புவதாக கியூப ஜனாதிபதி அறிவிப்பு

சிரியாவின் தலையெழுத்தைத் தீர்மானிக்கவுள்ள அலெப்போ மோதல்

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு விரும்புவதாக கியூப ஜனாதிபதி அறிவிப்பு 
28/7/2012


  அமெரிக்காவுடன் பேச்சுவார் த்தை நடத் து வதற்கு விரும்புவ தாக கியூப ஜனாதிபதி ராவுல் காஸ்ட்ரோ தெரிவித்துள்ளார். புரட்சி தின வைபவமொன்றில் வியாழ க் கி ழமை உரையாற்றுை க யி லேயே அவர் இவ் வாறு தெரிவி த்து ள் ளா ர்.

அவர் கடந்த இரு வருடங்களாக புரட்சி தின வைபவங்களின் உரையாற்றுவதை தவி ர் த்து வந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் குவான்டனமோ மாகாண த் தில் இடம்பெற்ற வைபவத்தில் ராவுல் காஸ் ட்ரோ உரையாற்றுகையில், ‘‘ அமெரி க் காவு க்கும் கியூபாவுக்குமிடையிலான கலந் து ரை யாடல்களில் சமத்து வம் பேணப்படும் நிலையில் அமெரிக்காவு டன் பேச்சுவார்த் தைகளில் ஈடுபட விரும்பு வ தாக கூறினார்.




மேற்படி பேச்சுவார்த்தைகள் தொடர்பில் ஏற்கனவே இராஜதந்திர ஊடகங்கள் மூலம் தெரிவிக்கப்பட்டதாக கூறிய ராவுல் காஸ் ட்ரே ா ஆனால் வரையறைக ளுக்கு அப்பால் பேச் சுவார் த்தைகளுக்கு இடமில்லை ௭ன்று தெரி வித் தார். ஜனநாயகம் மனித உரி மை கள் ௭ன்பன தொடர் பில் பேச்சுவார்த் தைக ளில் ஈடுபடு வத ற்கு தான் தயாரா கவுள்ள தாக தெரிவித்த ராவுல் காஸ்ட்ரோ, ‘‘ஆனால் நாம் ௭ந்த நாட்டினதும் காலனித்துவ நாடாக இல்லையென்பதால் சமத்துவ அடிப் படை யிலேயே பேச்சுவார் த் ை தகள் இடம் பெற வேண்டும்’’ ௭ன வலி யுறு த் தி ன ா ர்.

கியூபாவிலான மனித உரிமைகள் விவ கா ரம் தொடர்பான அமெரிக்காவின் குற்றச் சாட் டு தொடர்பில் அவர் குறிப்பிடுகையில், அமெரிக்காவும் விவாதத்துக்கு தன்னை உட் படுத்திக் கொள்வதற்கு தயாரானால் அது தொடர்பான கலந்துரையாடலை மகி ழ்ச்சியுடன் ஏற்பதாக அவர் கூறினார். _
நன்றி வீரகேசரி 



சிரியாவின் தலையெழுத்தைத் தீர்மானிக்கவுள்ள அலெப்போ மோதல் _
கவின் / வீரகேசரி இணையம் 27/7/2012 


  சிரியாவின் இரண்டாவது பெரிய நகரமான அலெப்போவில் அரச படைகள் மற்றும் கிளர்ச்சியாளர்கள் உக்கிரமோதலுக்கு தயாராகி வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அலெப்போ நகரில் ஊடுருவியுள்ள போராளிகளை வெளியேற்ற ஆட்சியாளர் படைகள் மிகப் பெரிய தாக்குதலுக்குத் தயாராகி வருவதாகத் தெரியவருகின்றது.

சிரியாவின் தலையெழுத்தையெத் தீர்மானிக்கும் மோதலாக இது அமையவுள்ளதெனக் கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இம் மோதல் உக்கிரமடையும் பட்சத்தில் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

சிரியப் படைகள் மிகப் பெரிய மனிதப்படுகொலைகளுக்குத் தயாராகி வருவதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது.

சிரியா முழுவதிலும் இடம்பெற்று வரும் மோதல்களில் நேற்று மட்டும் பொதுமக்கள் 61 பேரும், ஆட்சியாளர் படையினர் 32 பேரும், போராளிகள் தரப்பில் 21 பேரும் ஆக மொத்தம் 114 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை கடந்த சில தினங்களுக்கு முன்னர் அந்நாட்டின் ஹமா நகரின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள பள்ளிவாசலொன்றின் மீது அரச படை நடத்திய தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டனர்.

சிரியாவில் ஜனாதிபதி பஷர்-அல் அசாத்துக்கு எதிராக ஒரு வருடத்துக்கும் மேலாகக் கிளர்ச்சியாளர்கள் போராடி வருகின்றனர்.

இக்கிளர்ச்சிகளில் சிக்கி சுமார் 19 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
__

No comments: