அவுஸ்திரேலியாவில் வட்டுக்கோட்டை தீர்மானத்தை வலியுறுத்தி 99.4% மக்கள் ஆதரவு

22.04.2010



அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற வட்டுக்கோட்டை தீர்மானத்தை மீளுறுதிப்படுத்தும் தேர்தலின்போது 99.4 விழுக்காடு மக்கள் ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

பன்னிரண்டாயிரத்திற்கும் அதிகமாக பதிவு செய்யப்பட்ட வாக்குகளில், அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளின் விபரம் வருமாறு:

வாக்களித்தோர் எண்ணிக்கை 8274,

தீர்மானத்திற்கு ஆதரவாக அளிக்கப்பட்ட வாக்குகள் 8156,

தீர்மானத்திற்கு எதிராக அளிக்கப்பட்ட வாக்குகள் 51,

நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 67.

இம்முடிவுகள் இன்று நியுசவுத்வேல்ஸ் பாராளுமன்ற பத்திரிகையாளர் கூடத்தில் பிற்பகல் 2 மணியளவில் உள்ளுர் மற்றும் தமிழ் ஊடகவியலாளர்கள் முன்னிலையில், இத்தேர்தலினை நடாத்திய அவுஸ்திரேலிய சிபிஐ நிறுவன அதிகாரிகளினாலும் அவுஸ்திரேலியா தமிழர் பேரவை, அவுஸ்திரேலியா தமிழர் வாக்குக்கணிப்பு குழு பிரதிநிகளுடன் இணைந்து வெளியிடப்பட்டது

இது பற்றி மேலும் கேட்கப்பட்டபோது அவுஸ்திரேலியாவில் வசிக்கும் தமிழர்களின் சரியான எண்ணிக்கை தெரியாவிட்டாலும் அண்ணளவாக பதினையாயிரம் வாக்களிக்க தகுதி உள்ளவர்கள் இருக்கலாம் என்றும் அதில் வாக்களித்தவர்கள் தொகை எட்டாயிரத்து முன்னுறு பேர் வரையில்தான் என்றும் ஏனையோர் வாக்களிக்காதது ஏன் என கண்டறிய படுத்தல் நன்மை பயக்கும் என்றும் குறிப்பிடப்பட்டது.

முழுமையான விபரங்கள் பின்னர் வெளியிடப்படும்

No comments: