இயற்கை எனும் பெண்

                                                                       
xxxx ஜதுஷியா மகேந்திரராஜா xxxxx

சிட்னியில் கல்விபயிலும் மாணவி இந்த
நாட்டில் வளரும் சூழலிலும் கவிதை எழுத
ஆர்வம் கொண்டு இக்கவிதையை வடித்துள்ளார்.




பெண்ணே உன்  அழகிற்கு நிகர்
இந்த அகிலத்தில் எதுவும் இல்லை
எப்போதும் இருந்ததும் இல்லை
வசந்த காலத்தின் இனிமையான தென்றலில்
உன் பச்சைக் கூந்தல் அசையக் கண்டேன்
தினம் தினம் காலையில் எழும்போது
உன் புன்னகையால் இருளை நீக்கி
இந்த உலகிற்கு வெளிச்சத்தை கொண்டுவந்தாய்
உன் குழந்தைப் பேச்சும் அழகான சொற்களும்
நீர் வீழ்ச்சியாகக் கொட்டுகின்றன
நீ பாடும் சங்கீதமும் பேசும் தமிழும்
சுவை சேர்ந்து நதியாக ஓடுகின்றது
உனது குளிர்காற்றாலும் கொட்டும் மழையாலும்
உன்மேல் இருக்கும் காதலும் ரசனையும் கூடுகின்றது
பெண்ணே உன் ஆனந்தக் கண்ணீர்
மழையாப் பொழிகிறது
உன் கன்னத்தில் பூக்கும் வண்ணங்கள்
வானவில்லின் வர்ண யாலங்கள்
பச்சைப் பட்டில் நீ புல் வெளி
நீலப் புடவையில் நீங்காத நீல வானம்
சிவப்புச் சேலையில் அழகான அஸ்தமனம்
வெளுத்த ஆடையில் மெல்லிய பனி மூட்டம்
நீ அணியும் நவரத்தினங்கள் பூமியின் புஸ்பங்கள்
கொட்டும் மழைத்துளி உன் சலங்கையின் சிரிப்பொலி
கொழுத்தும் சூரியனோ உன் நெற்றிப் பொட்டு
தேவதையே உன் சுவாசம் தென்றலாய் வீசுகிறது
காரிகையே உன்வாசம் என்னை காந்தமாய் இழுக்கிறது
அன்று நான் தவழ்ந்த உன் மடியழகு
இன்று உன் மண்ணில் வாழும் நாட்கள் அழகு
நாளை உன்னில் புதையும்போது உன் அணைப்பும் அழகே
இயற்கையெனும் பெண்ணே
உன் அழகிற்கு நிகர்
இந்த அகிலத்தில் எதுவும் இல்லை
எப்போதும் இருந்ததுமில்லை.

1 comment:

Anonymous said...

well done ilam kavi


kaya