இந்திய – இலங்கை இணைந்த பொருளாதார தொலைநோக்கு: தொடர்புகளை மேம்படுத்தல், செழுமையை உறுதிப்படுத்தல்

 

July 21, 2023 4:47 pm 

இன்று (21) புதுடில்லியில் நடைபெற்ற சந்திப்புக்களின் போது இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் பெறுபேறுகளை இலக்காகக் கொண்ட பயனுள்ள கலந்துரையாடல்களில் ஈடுபட்டிருந்தனர். அத்துடன் இலங்கை எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடிகளை வெற்றிகொள்வதில் இந்திய இலங்கை பங்குடமையானது வலுவான மூலாதாரமாக இருந்ததாக இரு நாடுகளினதும் தலைவர்கள் ஏற்றுக்கொண்டிருந்த அதேசமயம், இலங்கை மக்களுக்காகவும் அரசாங்கத்துக்காகவும் முன்னொருபோதுமில்லாத வகையில் இந்தியாவால் தக்கதருணத்தில் வழங்கப்பட்ட ஆதரவுக்காக இலங்கை ஜனாதிபதி இந்தியாவுக்கு விசேட பாராட்டுகளை தெரிவித்திருந்தார்.

2. இலங்கையில் ஜனநாயகம், ஸ்திரத்தன்மை, பொருளாதார மீட்சி, ஆகியவற்றுக்கான தமது அர்ப்பணிப்பினையும் நம்பிக்கையினையும் இரு தலைவர்களும் இச்சந்திப்புகளின்போது மீள வலியுறுத்தியிருந்த அதேவேளை, நல்லிணக்கத்தினை ஊக்குவிப்பதற்காகவும் நாட்டின் சகல பகுதிகளிலும் உள்ள இலங்கையின் அனைத்து சமூகங்களினதும் நலன்களுக்காக ஸ்திரமானதும் சமமானதும் வலுவானதுமான பொருளாதார வளர்ச்சிக்கான இந்தியாவின் தொடர்ச்சியான ஆதரவு மற்றும் முதலீட்டின் முக்கியத்துவத்தினை அவர்கள் உறுதிப்படுத்தியிருந்தனர்.

நடிகர் பிரபாஸ் நடிக்கும் ‘ப்ராஜெக்ட் கே’ படத்தில் தோற்ற பார்வை புகைப்படம் வெளியீடு

 July 20, 2023

வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் ‘ப்ராஜெக்ட் கே’ திரைப்படத்தில் நடிக்கும் பான் இந்திய நட்சத்திர நடிகரான பிரபாஸின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் தயாராகி வரும் அறிவியல் புனைவு கதை திரைப்படம் ‘ப்ராஜெக்ட் கே’ . இதில் பொலிவுட் பிரபலங்களான அமிதாப்பச்சன், தீபிகா படுகோன்,  ‘உலக நாயகன்’ கமல்ஹாசன், பான் இந்திய நட்சத்திர நடிகர் பிரபாஸ்,  பொலிவுட் நடிகை திஷா படானி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இந்த திரைப்படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் தெலுங்கில் பிரபலமான முன்னணி பட தயாரிப்பு நிறுவனமான வைஜெயந்தி மூவிஸ் எனும் நிறுவனம் தயாரிக்கிறது.

ஆடியும் அருமையாய் அமைந்த நல்மாதமே !

 

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண்  …. அவுஸ்திரேலியா 


ஆடி என்பது அமங்கல அல்ல


ஆன்மீக கருக்கள் நிறைந்த நல்மாதம் 
பீடை என்பது பொருந்தாக் கருத்தே
பீடுடை என்பதே சிறப்புடைச்  சிந்தனை 

அமங்கலம்  என்பது ஆடியாய் ஆகுமா
அம்மனின் மாதம் ஆடியே ஆகும் 
படையலும் பாட்டும் பரவசம் அனைத்தும்
பக்தியாய் மலரும் பாங்குடை மாதம்

ஆடியில் செவ்வாய் ஆடியின் வெள்ளி
ஆடியின் பூரம் ஆடியின் கார்த்திகை
ஆடித்தபசு ஆடியமாவாசை ஆடிப் பெளர்ணமி
ஆடியில் ஆண்டவன் நினைப்பதை உணர்த்தும் 

ஆடியில் ஆறுகள் நீரைப் பெருக்கும்
ஆடிப் பெருக்கென அனைவரும் குவிவார்
அம்மனை எண்ணி உருகியே நின்று
ஆடிப் பாடி  படைத்துமே மகிழ்வார்

காரைக்கால் அம்மையார் - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச சுந்தரதாஸ்

 சைவ சமய நாயன்மார்கள் அறுபத்து மூவருள் ஒருவர் என்ற பேறு


பெற்றவர் காரைக்கால் அம்மையார். பெண் நாயன்மார்கள் மூவருள் ஒருவரான இவரை சிவனே அம்மையார் என்று போற்றி அழைத்துள்ளார். அவருடைய சரித்திரத்தை இ வி ஆர் பிக்சர்ஸ் பட நிறுவனம் 1973ம் ஆண்டு கலரில் படமாகத் தயாரித்தது. படத் தயாரிப்பாளர் இ வி ராஜன் , இயக்குனர் ராமண்ணாவின் மைத்துனராக இருந்த போதும் படத்தை இயக்கம் பொறுப்பை ராமண்ணாவிடம் தராமல், ஏ பி நகரராஜனிடம் ஒப்படைத்தார். பக்திப் படங்களை உருவாக்குவதில் புகழ் பெற்ற நாகராஜனும் அவ்வாறெ படத்தை இயக்கினார்.


காரைக்காலில் பிரபல வணிகரின் மகளாகப் பிறந்த புனிதவதி சிறு வயது முதல் சிவபெருமான் அடியவளாகவே விளங்கி வருகிறாள். அவளின் திருமணம் தள்ளிப் போவதை கண்டு கவலைப் படும் அவளின் பெற்றோர் தங்களுக்கு அறிமுகமான பரமதத்தன் என்ற இளம் வணிகனுக்கு அவள் சம்மதத்தின் பேரில் அவளை மணம் முடித்து வைக்கிறார்கள். பரமதத்தன் நல்லவன், ஆனால் இறை மறுப்பாளன். ஆனாலும் மனைவியின் பக்திக்கு குறுக்கே நிற்பவன் அல்ல. இதனால் இல்வாழ்வு இனிதே நடக்கிறது. ஒருநாள் தன் வேலையாள் மூலம் இரண்டு மாங்கனிகளை தன் மனைவிக்கு கொடுத்து அனுப்புகிறான் பரமதத்தன். அச்சமயம் புனிதவாதியின் இல்லத்துக்கு ஒரு வயதான சிவனடியார் வரவே புனிதவதி அவருக்கு அமுது படைக்கிறாள். தனக்கு கிடைத்த மாங்கனிகளில் ஒன்றையும் அவருக்கு பரிமாறுகிறாள்.

பரமதத்தன் இல்லம் திரும்பவே அவனுக்கு உணவு பரிமாறி, மீதி

இருந்த மாங்கனியையும் அவனுக்கு கொடுக்கிறாள் புனிதவதி. அதை உண்ட பரமதத்தன் மற்றைய கனியையும் கொண்டுவரும் படி கேட்கவே பூஜை அறைக்கு சென்று சிவனை வணங்க மற்றுமொரு மாங்கனி அவள் கரங்களில் விழுகிறது. அதனை கணவனுக்கு கொடுக்கவே இரண்டு மாங்கனிகளுக்கும் சுவையில் வித்தியாசம் இருப்பதை சுட்டிக்காட்டி காரணம் கேட்கிறான் அவன். நடந்த உண்மையை அவனிடம் கூற , தன்னை இறை நம்பிக்கை உள்ளவனாக்க அவள் நாடகமாடுவதாக அவன் சந்தேகப் படுகிறான். மீண்டும் புனிதவதி சிவனை வணங்க மற்றுமொரு மாங்கனி அவள் கரங்களில் விழுகிறது. இதைக் கண்டு திகைக்கிறான் பரமதத்தன். கடவுள் எங்கே, அவனை காண முடியுமா என்று கேட்டுக் கொண்டிருந்தவன் இப்போது தன் மனைவியையே தெய்வம் என்று போற்றி வணங்குகிறான். அவளுடன் இல்லறம் நடத்த முடியாது என்று கூறி அவளை பிரிந்து சென்று விடுகிறான். அதன் பின் தன்னுடைய இளமையை எடுத்துக் கொண்டு முதுமையை தரும் படி புனிதவதி சிவனை வேண்ட இறைவன் அவளை மூதாட்டியாக்குகிறான். காரைக்கால் அம்மையாராக உருமாறும் புனிதவதியின் ஆன்மீகப் பயணமே மீதி படம்.

சிட்னி துர்க்கை அம்மன் திருக்கோவில்-ஆடிப்பூர உற்சவம் - 2023

 


திரையுலகக் கர்ணன் ஜெய்சங்கர் ❤️✍🏻 கானா பிரபா

 “நடிகர் ஜெய்சங்கரிடம், இவ்வளவு சீக்கிரமாக இந்த உலகத்தை


விட்டுப் போக அப்படியென்ன உங்களுக்கு அவசரம்?”

 என்ற கேள்வியைக் கேட்பேன் என்றார் சித்ரா லட்சுமணன் Chithra Lakshmanan அவர்கள்,

சமீபத்தில் Touring Talkies இல் வரும் கேள்வி பதிலில் ஒரு நேயர்
கேட்ட “இந்த உலகத்தை விட்டு மறைந்த யாராவது ஒருவரைப் பேட்டி எடுக்கும் வாய்ப்புக் கிடைத்தால் என்ன கேட்பீர்கள்?”
என்ற கேள்விக்கு.
சித்ரா சாரின் அந்த ஜெய்சங்கருக்கான கேள்வி அல்லது நேயருக்கான பதிலுக்குள் அடங்கியிருக்கிறது இன்றும் ஜெய்சங்கரை நேசிக்கும் ஆயிரக்கணக்கான உள்ளங்களின் கிடக்கை.
 
இந்த வார இறுதியில் இனியன் கிருபாகரன் Iniyan Kirubakar எழுதிய “திரையுலகக் கர்ணன் ஜெய்சங்கர்" என்ற நூலை வாசிக்கத் தொடங்கினேன்.
முதலில் எடுத்த எடுப்பில்

எழுத்தும் வாழ்க்கையும் ( இரண்டாம் பாகம் ) அங்கம்- 72 “ புத்தகம் காவி “ பட்டத்தையும் சுமந்து வாழும் வாழ்க்கை ! இயற்கையை மக்களுக்குப் பயன்படுத்தும் கட்டார் தேசம் ! முருகபூபதி


பயணங்களின்போது,  கிடைக்கப்பெறும் புத்தகங்களை முடிந்தவரையில் சுமந்துகொண்டு திரும்புவது எனது வழக்கம்.  அதனால், எனது குடும்பத்தில் எனக்கு புத்தகம் காவி   என்றும் ஒரு பட்டப்பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

நான் 1987 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்தபோது,


  எங்கள் ஊரில் எமது உறவினர்கள் சிலர்,  “ இந்தியாவுக்கு போனார் புத்தகங்களுடன் திரும்பினார். அதன் பிறகு ருஷ்யாவுக்குப்போனார், புத்தகங்களுடன் வந்தார், இப்போது அவுஸ்திரேலியாவுக்கு புறப்பட்டிருக்கிறார், என்ன கொண்டுவருகிறார் பார்ப்போம்?  “ என்று என்னை எள்ளி நகையாடினார்கள் என்று அம்மா சொன்னார்கள்.

   அம்மா, திரும்பி வரும்போது புத்தகங்களுடன்தான் நான் வருவேன் “ என்று சொன்னதுடன் நில்லாமல்,  எனது புதிய புத்தகத்துடனும்தான் ( பாட்டி சொன்ன கதைகள் )  1997 இல் தாயகத்திற்கு திரும்பி வந்தேன்.

எழுத்தாளர்கள் இவ்வாறு புத்தகங்களை காவிக்கொண்டிருப்பது பாரதியார் காலத்திலிருந்து நடப்பது. பாரதியாரும் ஒரு சமயம் வெளியூர் பயணம் சென்றுவிட்டு திரும்புகையில் புத்தகங்களை பொட்டலமாக கட்டிக்கொண்டுதான் வந்தார்.

அவரது மனைவி செல்லம்மா, கணவர் தனக்கு ஏதும் புடவை கொண்டு வந்திருப்பார் என்ற நம்பிக்கையில் அந்தப்பொட்டலங்களை ஆராய்ந்து ஏமாற்றமடைவார். இந்தக்காட்சியை நாம் பாரதி திரைப்படத்திலும் பார்த்திருக்கின்றோம்.

நான் புத்தகங்கள் சுமப்பதற்காக குறைசொல்லாத எனது மனைவி,  அவற்றை சுமந்துகொண்டுவரும் பிரயாண பைகள் குறித்தே பெரிதும் கவலை கொள்வதுண்டு.

நான் பல பிரயாணப்பைகளை புத்தகச் சுமையினால் சேதமடையச்செய்திருக்கின்றேன்.

  நானும் இலக்கியப்பயணங்களின்போது எனது புத்தகங்களை இலக்கிவாதிகளுக்கும்  வாசகர்களுக்கும் வழங்குவதுண்டு.  அவர்கள் அவற்றை படிக்கிறார்களா? அல்லது தங்கள் புத்தக ஷெல்ஃபில் அழகாக அடுக்கி வைக்கிறார்களா..?  என்பது தெரியாது!

எனக்கு இந்தப் பயணங்களில் கிடைக்கும் புத்தகங்களை முடிந்தவரையில் படித்து எனது வாசிப்பு அனுபவத்தையும் எழுதிவிடுவேன். அதனால், எமது எழுத்தாளர் நண்பர்கள் என்னைக் காணும்போது தங்கள் புத்தகங்களை தருவதுண்டு.

Kids Story Book

 
































இலங்கைச் செய்திகள்

வடக்கின் போக்குவரத்து துறையின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு

நாட்டை கட்டியெழுப்ப நிதி ரீதியான ஒழுக்கம் அவசியம்

இந்திய உதவியில் வழங்கிய பஸ்கள் இன்று யாழில் கையளிப்பு 

ஜனாதிபதி ரணிலை சந்தித்துரையாடிய இந்திய வெளிவிவகார செயலாளர்

ராஜீவ் கொலை வழக்கு: இலங்கை வர அனுமதிக்குமாறு ரணில் விக்ரமசிங்கவிற்கு சாந்தன் கடிதம்

ஜனவரியில் மூடப்பட்ட கொழும்பு – யாழ் ரயில் சேவை சனிக்கிழமை ஆரம்பம்


வடக்கின் போக்குவரத்து துறையின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு

அமைச்சர் டக்ளஸ் நம்பிக்கை!

July 14, 2023 6:00 am

வடக்கு மாகாணத்துக்கு தேவையான போக்குவரத்து பஸ்கள் மற்றும் ஆளணி பற்றாக்குறைக்கு விரைவில் தீர்வு கிடைக்குமென்று நம்பிக்கையுடன் இருப்பதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,

உலகச் செய்திகள்

 பனிப்போர் திட்டத்திற்கு திரும்பும் நேட்டோவுக்கு ரஷ்யா எச்சரிக்கை

நீண்ட தூர ஏவுகணையை சோதித்தது வட கொரியா

செனகல் தஞ்ச படகு 200 பேருடன் மாயம்

 புகலிடக் கொள்கையில் முரண்பாடு: நெதர்லாந்து அரசாங்கம் கவிழ்ந்தது

சூடானில் இராணுவம் நடத்திய வான் தாக்குதலில் 22 பேர் பலி


பனிப்போர் திட்டத்திற்கு திரும்பும் நேட்டோவுக்கு ரஷ்யா எச்சரிக்கை

July 14, 2023 6:04 am 0 comment

நடந்து முடிந்த நேட்டோ மாநாடு மேற்கத்திய இராணுவ கூட்டணி பனிப் போர் திட்டங்களுக்கு திரும்புவதை காண்பிப்பதாக உள்ளது என்றும் அனைத்து அச்சுறுத்தலுக்கும் தேவையான ‘எல்லா வழிகளிலும்’ பதிலளிக்க தயாராக இருப்பதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.

சிட்னி துர்க்கை அம்மன் திருக்கோவில்-சண்டி ஹோமம் 16 ஜூலை 2023

 


மங்களகரமான சண்டி ஹோமம் 16 ஜூலை 2023 அன்று நடைபெறும்; திருவிழாவின் போது மகா யாகம் நடத்துவது ஒரு புனிதமான மற்றும் சிறப்பு வாய்ந்த நிகழ்வாகும். தாங்களும் கலந்து கொண்டு அன்னை துர்காவின் அருளைப் பெற உங்களை அழைக்கிறோம்.

வாழ்வென்பது வரமாகும்




































மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் ....அவுஸ்திரேலியா 



   மண்ணிலே பிறப்பது மா தவமாகும் 
   மனிதராய் பிறப்பது மா வரமாகும்
   எண்ணியே யாவரும் இருந்திட வேண்டும்
   கண்ணென வாழ்க்கையை எண்ணியே மகிழ்வோம் 

   பிறந்தவர் எல்லாம் மறைவது இயற்கை
   மறைவது வருமென நினைப்பது மில்லை
   நிரந்தரம் நிலைப்போம் என்றுமே நினைத்து
   நிலையினை உணரா நெறிபிறள் கின்றார் 

   வாழ்ந்திட  பொருளது அனைவர்க்கும் தேவை 
   பொருளது வாழ்வினை விழுங்கிடல் முறையா
   பொருளினைக் கருத்தில் இருத்தியே வாழ்ந்தால்
   அருளது நினைப்பை அனைவரும் மறப்பார் 

எழுத்தும் வாழ்க்கையும் ( இரண்டாம் பாகம் ) அங்கம்- 71 பாட்டி சொல்லித்தந்த மகா பாரதக் கதையில் இயல்புகள் ! பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ … ? ! முருகபூபதி

எனது சிறிய பராயத்தில், எனது பாட்டியாரிடம் ( அம்மாவின் அம்மா


தையலம்மா )  கதை கேட்டு வளர்ந்திருக்கின்றேன்.  எனது வாழ்க்கையில் முதல் ஆதர்சமே இந்தப் பாட்டிதான்.

இவர்பற்றி ஏற்கனவே நிறைய எழுதியிருக்கின்றேன்.  மீண்டும் இந்தத் தொடரில், கனடா பயணம் பற்றியும்  அதனைத் தொடர்ந்து கத்தார் – இலங்கை பயணங்கள் பற்றியும்  எழுத நேர்ந்திருக்கின்றபோதும்  எமது குடும்பத்தின் குலவிளக்கான பாட்டியை நினைத்துக்கொள்கின்றேன்.

பாட்டிதான் மகாபாரதக் கதைகளை,  இராமாயணக் கதைகளை, பஞ்சதந்திரக் கதைகளை, தென்னாலிராமன் கதைகளை  முதல் முதலில்  எனக்குச் சொல்லித்தந்தவர்.

ஒருநாள் இரவு  நான் உறங்கும் வேளையில் பாட்டி சொன்ன கதையை  இந்த அங்கத்தில் சொல்கின்றேன். இது மகா பாரதக் கதை.

திருதராஷ்டிரனுக்கு கண் பார்வை இல்லை.  தனது மூத்த மகன் துரியோதனனையும்  தனது தம்பி பாண்டுவினது மூத்த மகன் தருமனையும் அழைத்து,  அஸ்தினாபுரம் நகரத்தை சுற்றிவந்து பார்த்து நிலைமை எவ்வாறிருக்கிறது..? என்று சொல்லுமாறு  கேட்டாராம்.

இருவரும் ஆளுக்கொரு திசையில் சென்று பார்த்துவிட்டு திரும்பிவந்து தகவல் சொன்னார்களாம்.

துரியோதனன், தனது அவதானத்தின் பிரகாரம் மக்களின் மோசமான ( பொய் – சூது – திருட்டு – மோசடி – அயோக்கியத்தனம் )  பக்கங்களையே சொல்லிக்கொண்டிருந்தானாம்.

அவனது பேச்சை நிறுத்திவிட்டு,  தருமன் பக்கம் திரும்பிய திருதராஷ்டிரன்,           “ தருமா இனி நீ சொல். நீ எதனை அவதானித்தாய்..?   “ எனக்கேட்டாராம்.

 “ பெரிய தந்தையாரே… நான் பார்த்த மக்கள் அனைவருமே எனது பார்வையில் நல்லவர்கள்தான். அவர்களிடம் சில குறைபாடுகள் இருந்தபோதிலும் மேன்மையான இயல்புகளும் இருந்தன. அவைதான் எனது கண்களுக்குத் தென்பட்டன. எங்கள் அஸ்தினாபுரத்து மக்கள் உங்கள் ஆட்சியில் நன்றாக இருக்கிறார்கள்.    என்று தருமன் சொன்னார்.

கௌரவம் - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச சுந்தரதாஸ்


தமிழ் திரையுலகில் தன்னுடைய கௌரவம் எந்தளவிற்கு உறுதியாக இருக்கிறது என்பதை பறை சாற்றுவது போல் நடிகர் திலகம் நடித்து 1973ல் வெளிவந்த படம் கௌரவம்! படத்தின் நாயகன் தோல்வியையே விரும்பாத இறுமாப்பு கொண்ட ஒரு வக்கீல். தன்னுடைய கௌரவத்தை தக்க வைத்துக் கொள்ள எதனையும் செய்யலாம், தனது வாதத் திறமையால் கொலைகாரனுக்கும் வாதாடி விடுதலை வாங்கி தரலாம் , இரவு பகல் என்று இல்லாமல் எந்நேரமும் மது அருந்தலாம் , தன்னுடைய பணியாளர்களிடம் எகிறிப் பாயலாம் , என்பது போன்ற பல குணாம்சங்களை கொண்ட ஒரு கதா பாத்திரத்தை ஹீரோவாக படைத்தது கதாசிரியரின் மாறுபட்ட சிந்தனையை வெளிப்படுத்தியது.

பாரிஸ்டர் ரஜனிகாந்த் என்ற கம்பீரமான பாத்திரம் சிவாஜி கணேசனுக்கு அப்படியே பொருந்துகிறது. அவருடைய மேக் அப்பும் அதற்கு துணை நிற்கிறது. பிறகு என்ன, சிவாஜியா, ரஜனிகாந்தா என்று சொல்ல முடியாத வண்ணம் அப்படியே பத்திரத்துடன் ஒன்றி விடுகிறார். ஒவ்வொரு காட்சியிலும் அவர் காட்டும் முகபாவம் பல உணர்வினை வெளிப்படுத்துகிறது. ஆனால் படம் முழுவதும் , எல்லோரிடமும் காட்சிக்கு காட்சி இரைந்து பேசி , அதட்டுவது ஒரு படித்த பாரிஸ்டருக்கு மாண்பு தருவதாக இல்லை! அதிலும் அடக்கமான தன் அப்பாவி மனைவி மீதே அடிக்கடி சீறிப்பாய்வது வக்கிரமாக உள்ளது.