.
மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் ..... அவுஸ்திரேலியா
நிலைபெறுமா றெண்ணிநிற்க
நீள்பிவியில் நீவிரும்பு
அலைபாயும் மனமதனை
அடக்குதற்கு துணிந்துவிடு
நிலையில்லா பொருளையெலாம்
நினைப்பினின்று அகற்றிவிடு
நெஞ்சமதில் இறைநினைப்பை
நிரந்தரமாய் இருத்திவிடு !
துன்பமெனும் நினைப்பதனைத்
துரத்தியே அடித்துவிடு
சூழ்நிலையை தூய்மையாய்
ஆக்குதற்கு விரும்பிவிடு
அன்புடனே அணைத்துவிட
ஆவலுடன் இருந்துவிடு
ஆண்டவனும் ஆசியினை
அள்ளியே அளித்திடுவான் !
ஆத்திரத்தை மூட்டைக்கட்டி
அப்பாலே எறிந்துவிடு
ஆணவமாம் நினைப்பதனை
அகமிருந்து அகற்றிவிடு
கூசுகின்ற வார்த்தைகளை
பேசுவதைத் தவிர்த்துவிடு
குறையில்லா பரம்பொருளும்
நிறைவாக வழங்கிடுவான் !
உன்விருப்பைத் திணித்துவிட
ஒருபோதும் நினைக்காதே
ஒழுக்கநெறிப் பாதையிலே
உன்பயணம் அமையட்டும்
தாமரையின் இலைமீது
தண்ணீரும் இருப்பதுபோல்
வாழ்ந்துவிட விரும்பிவிடு
வரந்தருவான் இறைவனுமே !
.jpeg)
.jpg)
No comments:
Post a Comment