இஸ்ரேலிய பிரதமருக்கு எதிராக பிடியாணை பிறப்பித்த நீதிபதி உட்பட நான்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்ற நீதிபதிகளிற்கு எதிராக தடைகள் - அமெரிக்கா அறிவிப்பு
நன்றி இல்லாதவர்’... ட்ரம்ப் - எலான் மஸ்க் நட்பு முறிவும் பரஸ்பர சாடல்களும்!
எனக்கு உறுதுணையாக நின்ற தமிழ்நாட்டிற் கு நன்றி.. கர்நாடகாவில் தக் லைப்க்கு தடை.. கமல்ஹாசன் நெகிழ்ச்சி
பாலஸ்தீன ஆதரவு: அமெரிக்க எம்ஐடி-யில் இந்திய வம்சாவளி மாணவி மேகா மீதான நடவடிக்கையும் பின்னணியும்
டெல்லியில் தமிழர்கள் குடியிருப்பு அகற்றம்: 370-க்கும் மேற்பட்ட வீடுகள் இடித்து தரைமட்டம்
எலான் மஸ்க் உடனான உறவு முடிந்து விட்டது'' - டொனால்ட் ட்ரம்ப் அதிரடி
இஸ்ரேலிய பிரதமருக்கு எதிராக பிடியாணை பிறப்பித்த நீதிபதி உட்பட நான்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்ற நீதிபதிகளிற்கு எதிராக தடைகள் - அமெரிக்கா அறிவிப்பு
Published By: Rajeeban
06 Jun, 2025 | 11:19 AM
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவிற்கு எதிராக பிடியாணை பிறப்பித்த நீதிபதிஉட்பட சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் நான்கு நீதிபதிகளிற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் தடைகளை விதித்துள்ளது.
நால்வரில் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படையினரின் நடவடிக்கைகளை இலக்குவைத்து செயற்பட்ட நீதிபதியொருவரும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் நீதிபதிகளான இந்த நால்வரும் அமெரிக்காவையும் அதன் நெருங்கிய சகாவான இஸ்ரேலையும் இலக்குவைத்து ஐசிசியின் சட்டவிரோத ஆதாரமற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டனர் என அமெரிக்க இராஜாங்க செயலாளர் மார்க்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்
சர்வதேச குற்றவியல்நீதிமன்றம் அரசியல்மயமாக்கப்பட்டுள்துஎன அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு நீதிமன்றத்தின் முன் விசாரணை மற்றும் விசாரணைப் பிரிவைச் சேர்ந்த நீதிபதிகள் ரெய்ன் அடிலெய்ட் சோஃபி அலபினி கன்சோ மற்றும் பெட்டி ஹோஹ்லர் ஆகியோர் நெதன்யாகு மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலண்ட் ஆகியோரை குறிவைத்து
பிடியாணைகளை பிறப்பிப்பதற்கு அனுமதி வழங்கினார்கள் என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கை சர்வதேச நீதித்துறை நிறுவனத்தின் சுதந்திரத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் தெளிவான முயற்சி என தெரிவித்துள்ள ஐசிசி பொறுப்புக்கூறலிற்காக பாடுபடுபவர்களை இலக்குவைப்பதுமோதலில் சிக்குண்டுள்ள மக்களிற்கு எந்த வகையிலும் உதவாது என தெரிவித்துள்ளது.
ஐ.சி.சியின் மேல்முறையீட்டுப் பிரிவைச் சேர்ந்த நீதிபதிகள் உகாண்டாவைச் சேர்ந்த சோலோமி பலுங்கி போசா மற்றும் பெருவைச் சேர்ந்த லஸ் டெல் கார்மென் இபனெஸ் கார்ரான்சா ஆகியோர் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் அமெரிக்க படையினர் இழைத்ததாக தெரிவிக்கப்படும் யுத்த குற்றங்கள் குறித்து ஐ.சி.சி விசாரணையைத் தொடங்க வழி வகுத்த குழுவில் இடம்பெற்றனர்
நவம்பர் 2024 இல் ஐ.சி.சி தலைமை வழக்கறிஞர் கரீம் கான் நெதன்யாகு மற்றும் கேலன்ட் மற்றும் மூன்று மூத்த ஹமாஸ் தலைவர்களுக்கு எதிராக கைது வாரண்டுகளை பிறப்பித்தார். இந்த நடவடிக்கை பைடன் நிர்வாகத்திடமிருந்து எதிர்ப்புகளைப் பெற்றது முன்னாள் ஜனாதிபதி இதை "மூர்க்கத்தனமானது" என்று அழைத்தார்.
ஐ.நா தலைமையிலான பாலியல் துஷ்பிரயோக விசாரணைக்கு மத்தியில் கான் கடந்த மாதம் தனது பதவியில் இருந்து விலகினார்
ஜனாதிபதி டிரம்பின் முதல் பதவிக் காலத்தில் அமெரிக்க அரசாங்கம் ஐ.சி.சி வழக்கறிஞர் ஃபடோ பென்சவுடா மற்றும் மூத்த அதிகாரி ஃபாகிசோ மோச்சோச்சோகோ ஆகியோர் மீது ஆப்கானிஸ்தானில் அமெரிக்க இராணுவத்தால் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் போர்க்குற்றங்களை விசாரித்ததற்காக தடைகளை விதித்தது - பின்னர் பைடன் நிர்வாகத்தால் நீக்கப்பட்டது.
அப்போதைய வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ மற்ற ஐ.சி.சி அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு விசா கட்டுப்பாடுகளை விதித்தார்.
இந்த நடவடிக்கையை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் வரவேற்க வாய்ப்புள்ளது - மார்ச் 2023 இல் நீதிமன்றம் அவருக்கு பிடியாணை பிறப்பித்தது.
ஐ.சி.சி-யை நிறுவிய ரோம் சட்டத்தில் அமெரிக்காவோ அல்லது இஸ்ரேலோ கைச்சாத்திடவில்லை.. நன்றி வீரகேசரி
நன்றி இல்லாதவர்’... ட்ரம்ப் - எலான் மஸ்க் நட்பு முறிவும் பரஸ்பர சாடல்களும்!
06 Jun, 2025 | 10:29 AM
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் - தொழிலதிபர் எலான் மஸ்க் இடையேயான மோதல் பொதுவெளியில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இருவரும் ஒருவர் மீது ஒருவர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.
“எலான் மஸ்க் உடன் எனக்கு சிறந்த நட்பு ரீதியிலான உறவு இருந்தது. ஆனால் இனியும் நாங்கள் அப்படி இருப்போமோ இதை தொடருவோமோ என எனக்கு தெரியவில்லை. மஸ்க் மீது நான் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளேன்” என ‘தி ஓவல்’ அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பின் போது ட்ரம்ப் தெரிவித்தார். இது நேரலையில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.
“எல்லோரையும் விட இந்த புதிய சட்டமூலம் மசோதா குறித்து மஸ்க் முழுவதுமாக அறிவார். அதன் உள் விவரங்களையும் அவர் நன்கு தெரியும். இந்தச் சூழலில் திடீரென்று இப்போது அவருக்கு என்ன பிரச்சினை என்று தெரியவில்லை. மஸ்க் எனக்கு எதிராக இருப்பது குறித்து நான் பொருட்படுத்தவில்லை. ஆனால் அவர் இதை முன்பே செய்திருக்க வேண்டும்” என ட்ரம்ப் கூறினார்.
உடனடியாக நிகழ்நேரத்தில் எக்ஸ் வலைதளத்தில் ட்வீட் மூலம் மஸ்க் பதிலடி கொடுத்தார்.
ட்ரம்ப்பின் புதிய வரி மசோதாவுக்கு வெளிப்படையாக எதிர்ப்பு
தெரிவித்திருந்தார் மஸ்க். தொடர்ந்து அமெரிக்க அரசு செயல்திறன் துறையின் (டிஓஜிஇ) சிறப்பு ஊழியர் பொறுப்பில் இருந்து அண்மையில் அவர் விலகினார். “நான் மட்டும் இல்லையென்றால் 2024 தேர்தலில் ட்ரம்ப் தோற்றிருப்பார். அவர் நன்றி இல்லாதவர். ட்ரம்ப் பொய் சொல்கிறார். அந்த மசோதா எனது பார்வைக்கு கிடைக்கவில்லை. இது இந்த ஆண்டின் பிற்பாதியில் பொருளாதார மந்த நிலையை உருவாக்கும்.
ட்ரம்ப் எனது நிறுவனங்களின் அரசு ஒப்பந்தத்தை ரத்து செய்வது குறித்து பேசினார். அந்த வகையில் ஸ்பேஸ்-எக்ஸின் டிராகன் விண்கலன் திட்டம் சார்ந்த செயல்பாடுகளை உடனடியாக நிறுத்துகிறது” என மஸ்க் எக்ஸ் தளத்தில் தெரிவித்தார்.
இதோடு ட்ரம்ப்பை நீக்கிவிட்டு துணை அதிபர் ஜே.டி.வான்ஸை அதிபராக நியமிக்க வேண்டும் என எக்ஸ் தளத்தில் பயனர் ஒருவர் தெரிவித்திருந்தார். ‘ஆம்’ என அதற்கு பதில் கொடுத்துள்ளார் மஸ்க்.
மேலும் அமெரிக்காவில் புதிய கட்சியை உருவாக்க வேண்டுமா என்பது குறித்து எக்ஸ் தளத்தில் வாக்கெடுப்பு ஒன்றையும் மஸ்க் முன்னெடுத்துள்ளார். எப்ஸ்டீன் ஃபைல்ஸ் வெளியிடாதது குறித்தும் மஸ்க் கேள்வி எழுப்பியுள்ளார். இதில் ட்ரம்ப் சம்மந்தப்பட்டு இருப்பது தான் காரணம் என தெரிவித்துள்ளார்.
பின்னணி என்ன? - அமெரிக்காவின் பட்ஜெட் திட்டம் ஏமாற்றம் அளித்ததால்ர் ட்ரம்ப் நிர்வாகத்தில் இருந்து தொழிலதிபர் எலான் மஸ்க் கடந்த வாரம் வெளியேறினார். அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் 2-வது முறையாக பதவியேற்றதும் அரசு செலவினங்களை குறைப்பதற்காக தொழிலதிபர் எலான் மஸ்க் தலைமையில் அரசு செயல்திறன் துறை (டிஓஜிஇ) என்று உருவாக்கப்பட்டது.
ஆண்டுதோறும் எலான் மஸ்க் 130 நாட்கள் சிறப்பு அரசு ஊழியராக செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டது. இத்துறை அரசு ஊழியர்களின் எண்ணிக்கையை குறைப்பது உட்பட பல ஆலோசனைகளை அமெரிக்க அரசுக்கு வழங்கி வந்தது. இதற்கு அமெரிக்காவில் எதிர்ப்பும் கிளம்பியது.
இந்நிலையில் அமெரிக்க அரசின் பட்ஜெட் தயார் செய்யப்பட்டது. இது எலான் மஸ்க் தலைமையிலான அரசு செயல்திறன் துறை தெரிவித்த பரிந்துரைகளுக்கு மாறாக இருந்துள்ளது. மக்களுக்கு ஏராளமான வரிச்சலுகைகளுடன்இ ராணுவ பட்ஜெட் செலவினங்களும் அதிகமாக இருந்தது.
கடந்த 2017-ம் ஆண்டு அதிபர் ட்ரம்ப் நிர்வாகம் பல வரிச்சலுகைகளை அளித்தது. அதேபோல் தற்போதும் 4 பேர் கொண்ட குடும்பத்துக்கு 1இ300 டாலர் கூடுதல் வருவாய் கிடைக்கும் வகையில் வரிச்சலுகை அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் லட்சக்கணக்கான அமெரிக்கர்கள் பயனடைவர். பட்ஜெட் அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்டது. ட்ரம்பின் மிகப் பெரிய மற்றும் அருமையான பட்ஜெட் ஏமாற்றம் அளிப்பதாக தொழிலதிபர் எலான் மஸ்க் கூறினார்.
‘‘சிறப்பு அரசு ஊழியராக எனக்கு ஒதுக்கப்பட்ட நேரம் முடிவுக்கு வருகிறது. வீண் செலவினங்களை குறைக்க வாய்ப்பளித்த டொனால்டு ட்ரம்ப்புக்கு நன்றி. அமெரிக்க அரசின் மிகப் பெரிய பட்ஜெட் நிதி பற்றாக்குறையை அதிகரித்துள்ளது. அரசு செயல்திறன் துறையின் பணிகளை குறைத்து மதிப்பிட்டுள்ளது. இந்த பட்ஜெட் பெரியதாக இருக்கலாம் அல்லது அருமையானதாக இருக்கலாம். ஆனால் இரண்டும் சேர்ந்ததாக இருக்குமா என தெரியவில்லை’’ என மஸ்க் அப்போது தெரிவித்தார். அரசுப் பணி காலத்தில் போதைப் பொருள் பயன்படுத்தியதாக மஸ்க் மீது குற்றச்சாட்டு எழுந்தது. அதை அவர் மறுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
எனக்கு உறுதுணையாக நின்ற தமிழ்நாட்டிற் கு நன்றி.. கர்நாடகாவில் தக் லைப்க்கு தடை.. கமல்ஹாசன் நெகிழ்ச்சி
04 Jun, 2025 | 05:33 PM
சென்னை: எனக்கு உறுதுணையாக இருந்த தமிழ்நாட்டிற்கு நன்றி என்று நடிகரும், மநீம தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். உயிரே, உறவே, தமிழே என்று சொன்னதற்கான அர்த்தத்தை முழுமையாக உணர்வதாக கூறிய கமல்ஹாசன், தக் லைஃப் திரைப்படம் சர்வதேச தரத்துடன் உருவாகி இருப்பதாக கூறியுள்ளார்.
இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன், த்ரிஷா, அபிராமி, அசோக் செல்வன், நாசர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தக் லைஃப். இந்த இசை வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன், தமிழில் இருந்து பிறந்ததே கன்னடம் என்று பேசி இருந்தார்.
கமல்ஹாசனின் இந்த வார்த்தைகள் சர்ச்சையாகியது. இதனால் கர்நாடகாவில் கமல்ஹாசனுக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியது.
கர்நாடகா அரசியல் கட்சிகள், அமைப்புகள், கர்நாடகா திரைப்பட வர்த்தக சபை, நீதிமன்றம் என்று அனைத்து தரப்பும் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அறிவுறுத்தி வருகின்றன்ர். இல்லையென்றால் கர்நாடகாவில் தக் லைஃப் திரைப்படம் ரிலீஸ் செய்யப்படாது என்று தெரிவித்தனர்
ஆனால் கமல்ஹாசன் பொருளாதார இழப்புக்காக மன்னிப்பு கேட்கவில்லை. அன்பு ஒரு போதும் மன்னிப்பு கேட்காது என்று திட்டவட்டமாக தெரிவித்தார். இதனால் கர்நாடகாவில் நாளை தக் லைஃப் திரைப்படம் ரிலீஸாகவில்லை. கர்நாடகா தவிர்த்து மற்ற அனைத்து நாடுகளிலும், மாநிலங்களிலும், மொழிகளிலும் தக் லைஃப் நாளை ரிலீஸாக உள்ளது.
கமல்ஹாசன் பேட்டி
இந்த நிலையில் தக் லைஃப் படக்குழுவினர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது கமல்ஹாசன் பேசுகையில்,
அதேபோல் எனக்கு உறுதுணையாக இருந்த தமிழ்நாட்டிற்கே நன்றி சொல்ல வேண்டும்.. நான் மேடையில் பேசும் போது, உயிரே.. உறவே.. தமிழே.. என்று சொன்ன அர்த்தத்தையும் முழுமையாக உணர்கிறேன் என்று தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் தக் லைஃப் தடை செய்யப்பட்டிருப்பது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்ட போது, மற்றொரு நாளில் இதனை பற்றி பேசுவேன் என்று கமல்ஹாசன் உறுதி அளித்துள்ளார் நன்றி வீரகேசரி
பாலஸ்தீன ஆதரவு: அமெரிக்க எம்ஐடி-யில் இந்திய வம்சாவளி மாணவி மேகா மீதான நடவடிக்கையும் பின்னணியும்
03 Jun, 2025 | 05:18 PM
காசா போரை கண்டித்து உரையாற்றியதால், அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தில் (எம்ஐடி - MIT) படிக்கும் இந்திய வம்சாவளி மாணவி மேகா வெமுரி பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.
எம்ஐடி-யின் 2025-ம் ஆண்டு வகுப்புத் தலைவரான மேகா வெமுரி வியாழக்கிழமை (மே 29) மாசசூசெட்ஸின் கேம்பிரிட்ஜில் நடைபெற்ற ‘ஒன்-எம்ஐடி’ (OneMIT) தொடக்க விழாவில் கலந்து கொண்டு பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும் இஸ்ரேலை கண்டித்தும் உரையாற்றினார். மேலும், காசா போரை எதிர்த்துப் போராடியதற்காக தனது சகாக்களைப் பாராட்டிய அவர், இஸ்ரேலுடனான பல்கலைக்கழகத்தின் உறவுகளை விமர்சித்தார். இதையடுத்து, மேகா வெமுரி மீது பல்கலைக்கழகம் ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, வெள்ளிக்கிழமை (மே 30) நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள அவர் அனுமதிக்கப்படவில்லை. மேலும், பட்டமளிப்பு விழா முடியும் வரை பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழையவும் தடை விதிக்கப்பட்டது.
“எம்ஐடி கருத்து சுதந்திரத்தை ஆதரிக்கிறது. அதேநேரத்தில், மேகா வெமுரி மீதான நடவடிக்கையில் பல்கலைக்கழகம் உறுதியாக உள்ளது. ஏனெனில், அந்த நபர் வேண்டுமென்றே நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை தவறாக வழிநடத்தி மேடையில் இருந்து போராட்டத்தை வழிநடத்தி இருக்கிறார்” என்று பல்கலைக்கழக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். எனினும், மேகா வெமுரி தனது பட்டத்தைப் பெறுவார் என்று பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மேகா வெமுரி,
"இனப்படுகொலைக்கு உடந்தையாக இருக்கும் ஒரு நிறுவனத்தின் மேடையைக் கடந்து செல்ல வேண்டிய அவசியமில்லை என்று நான் கருதுகிறேன். எனினும், எம்ஐடி அதிகாரிகள் உரிய நடைமுறை இல்லாமல் என்னைத் தண்டிக்க முயன்றதால் பெருமளவில் நான் ஏமாற்றமடைந்துள்ளேன். நான் உரையாற்றியதால் பல்கலைக்கழகத்தின் எந்தவொரு விதியும் மீறப்படவில்லை" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர், பேச்சு சுதந்திரத்திற்கு எம்ஐடி ஆதரவு அளிப்பதாகக் கூறுவது பாசாங்குத்தனம் என்றும் அவர் விமர்சித்தார்
பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள மேகா வெமூரி தடை விதிக்கப்பட்டதற்கு அமெரிக்க - இஸ்லாமிய உறவுகள் கவுன்சில் (CAIR) கண்டனம் தெரிவித்துள்ளது. "எம்ஐடி கல்வி சுதந்திரத்தை மதிக்க வேண்டும், அதன் மாணவர்களின் குரல்களை மதிக்க வேண்டும், இனப்படுகொலைக்கு எதிராகவும் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும் பேசுபவர்களைத் தண்டிக்கவோ மிரட்டவோ கூடாது," என்று சிஏஐஆர் - மாசசூசெட்ஸ் நிர்வாக இயக்குனர் தஹிரா அமதுல்-வதூத் தெரிவித்துள்ளார். நன்றி வீரகேசரி
டெல்லியில் தமிழர்கள் குடியிருப்பு அகற்றம்: 370-க்கும் மேற்பட்ட வீடுகள் இடித்து தரைமட்டம்
02 Jun, 2025 | 10:45 AM
உயர் நீதிமன்ற உத்தரவின்படி டெல்லியின் ஜங்புரா பகுதியில் தமிழர்கள் குடியிருப்பு நேற்று அகற்றப்பட்டது. சுமார் 370-க்கும் மேற்பட்ட வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.
தெற்கு டெல்லியின் ஜங்புரா பகுதியில் மதராசி கேம்ப் என்ற தமிழர்கள் குடியிருப்பு உள்ளது. அங்கு சுமார் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு ஜங்புரா பகுதியில் தமிழர்கள் குடியேறினர். சென்னை, விழுப்புரம் உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த சுமார் 3,000 பேர் மதராசி கேம்ப் பகுதியில் வசித்து வந்தனர். குடியிருப்பின் மையப் பகுதியில் முருகன் கோயிலை கட்டி வழிபட்டு வந்தனர்.
மதராசி கேம்ப் வழியாக யமுனை நதியின் பிரதான மழைநீர் வடிகால் செல்கிறது. இந்த கால்வாய் ஆக்கிரமிக்கப்பட்டு இருப்பதால் டெல்லியின் ரிங் ரோடு உள்ளிட்ட பகுதிகள் வெள்ளத்தில் மூழ்குவதாக டெல்லி பொதுப் பணித் துறை குற்றம் சாட்டியது. மதராசி கேம்ப் பகுதியில் வசிப்போர் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று டெல்லி பொதுப் பணித் துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இதை எதிர்த்து மதராசி கேம்ப் பகுதி மக்கள் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீண்ட காலமாக நடைபெற்று வந்த நிலையில் அண்மையில் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதன்படி மதராசி கேம்ப் பகுதியில் மே 20-ம் தேதி முதல் 31-ம் தேதிக்குள் வீடுகளில் உள்ள பொருட்களை காலி செய்ய வேண்டும். ஜூன் 1-ம் தேதி முதல் ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்கும் பணிகளைத் தொடங்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து டெல்லி பொதுப் பணித் துறை அதிகாரிகள், காவல் துறை உதவியுடன் மதராசி கேம்ப் பகுதியில் வசித்தவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். அடுத்த கட்டமாக மதராசி கேம்ப் பகுதியில் உள்ள 370-க்கும் மேற்பட்ட வீடுகள் நேற்று பொக்லைன் இயந்திரங்கள் மூலம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. இதற்கு அப்பகுதியில் வசிக்கும் தமிழர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி அப்புறப்படுத்தினர்.
இதுகுறித்து ராணி என்பவர் கூறும்போது, “கடந்த 4 தலைமுறைகளாக மதராசி கேம்ப் பகுதியில் தமிழர்கள் வசித்து வருகின்றனர். தற்போது ஒரே நாளில் அனைத்து வீடுகளையும் இடித்து தரைமட்டமாக்கிவிட்டனர்" என்று கண்ணீர்மல்க கூறினார்.
சுமதி என்பவர் கூறும்போது, “தமிழகத்தின் விழுப்புரத்தை சேர்ந்த எங்கள் குடும்பம் மதராசி கேம்ப் பகுதியில் மிக நீண்ட காலமாக வசித்து வந்தது. எங்களிடம் ஆதார் அட்டை, ரேஷன் அட்டை உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் உள்ளன. நாங்கள் அனைவரும் இப்போது சொந்த வீடுகளை இழந்துவிட்டோம்" என்று தெரிவித்தார்.
முருகன் என்பவர் கூறும்போது, “மதராசி கேம்ப் பகுதியில் சுமார் 500 குடும்பங்கள் வசித்து வந்தன. அனைவரின் வீடுகளும் தரைமட்டமாகி உள்ளன. இதில் 189 குடும்பங்களுக்கு மட்டுமே வீடுகள் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் அந்த வீடுகள் வாழ்வதற்கு ஏற்றதாக இல்லை" என்று தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் போராடி வருகின்றனர். அவர்கள் கூறியதாவது: சுமார் 370-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிக்கப்பட்டு உள்ளன. இதில் 189 குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு மட்டும் 40 கி.மீ. தொலைவில் உள்ள நரேலா பகுதியில் வீடுகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. புதிய வீடுகளில் அடிப்படை வசதிகள் எதுவுமே இல்லை. குடிநீர், மின்சார வசதிகூட இல்லை. அந்த இடத்தில் எப்படி வாழ முடியும்?
சுமார் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு மாற்று இடம், வீடுகள் ஒதுக்கப்படவில்லை. அவர்கள் எங்கு செல்வார்கள்?. டெல்லியில் ஆளும் பாஜக அரசு மனிதாபிமானத்துடன் செயல்பட வேண்டும். இவ்வாறு மார்க்சிஸ்ட் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
டெல்லி ஊரக குடியிருப்பு மேம்பாட்டு வாரியத்தின் அதிகாரிகள் கூறும்போது, “டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவின்படியே ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றப்பட்டு உள்ளன. இங்கு வசித்தவர்களில் 189 குடும்பங்களிடம் மட்டுமே போதிய ஆதாரங்கள் உள்ளன. அவர்களுக்கு மட்டும் வீடுகள் ஒதுக்கப்பட்டு உள்ளன" என்று தெரிவித்தனர்.
தென்கிழக்கு டெல்லி ஆட்சியர் அனில் பங்கா கூறும்போது, “மதராசி கேம்ப் பகுதியில் உள்ள பாராபுலா கால்வாய் ஆக்கிரமிக்கப்பட்டு மழை காலங்களில் மிகப்பெரிய அளவில் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டன. உயர் நீதிமன்ற உத்தரவின்படி முறைப்படி நோட்டீஸ் வழங்கப்பட்டு, மாற்று வீடுகள் ஒதுக்கப்பட்ட பிறகே ஆக்கிரமிப்பு வீடுகள் இடிக்கப்பட்டன" என்று தெரிவித்தார்.
தமிழக அரசு உதவிக்கரம்: தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: டெல்லி நிஜாமுதீன் ரயில் நிலையத்துக்கு அருகில் தமிழர்கள் வசித்த மதராசி கேம்ப் பகுதியில் 370 வீடுகள் இடிக்கப்பட்டு உள்ளன. தமிழக முதல்வர் ஸ்டாலினின் உத்தரவின்படி டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்ல அலுவலகம் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மதராசி கேம்ப் பகுதியில் வசித்த மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் தாமதமின்றி வழங்கப்படும்.
வீடுகளை இழந்த மக்கள் சொந்த மாவட்டங்களுக்கு திரும்ப விரும்பினால் அவர்களுக்கு தமிழ்நாடு அரசு உதவிக் கரம் நீட்டும். வாழ்வாதாரம் மற்றும் தேவையான அடிப்படை உதவிகள் வழங்கப்படும். சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் மூலம் இந்த உதவிகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு தமிழக அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. நன்றி வீரகேசரி
எலான் மஸ்க் உடனான உறவு முடிந்து விட்டது'' - டொனால்ட் ட்ரம்ப் அதிரடி
08 Jun, 2025 | 01:53 PM
உலகின் ‘நம்பர் 1’ செல்வந்தரான எலான் மஸ்க் உடனான நட்புறவு முற்று பெற்று விட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். இதனால் ட்ரம்ப்பின் முன்னாள் நண்பரான மஸ்க் இப்போது அவரது பிரதான இலக்காக மாறியுள்ளதாக பார்க்கப்படுகிறது.
டொனால்ட் ட்ரம்ப் தொலைபேசி வழியாக அமெரிக்க ஊடக நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் “மஸ்க் உடனான நட்புறவு முற்று பெற்று விட்டதாக நினைக்கிறேன்.
தேர்தலில் நான் மிகப்பெரிய வெற்றியை பெற்றேன். ஆனால் அதற்கு முன்பாகவே அவருக்கு நிறைய சலுகைகள் அளித்தேன். நான் முதல் முறை ஆட்சி பொறுப்பில் இருந்த போதும் இதை செய்தேன். அவரது உயிரை காத்தேன். அவருடன் பேசும் எண்ணம் எனக்கு இல்லை.
2026-ல் நடைபெறும் இடைத்தேர்தலில் அவர் ஜனநாயக கட்சி உறுப்பினர்களுக்கு ஆதரவு அளித்தால் நிச்சயம் அதற்கான பின்விளைவுகளை எதிர்கொள்வார்” என ட்ரம்ப் கூறியுள்ளார்.
ட்ரம்ப் இப்போது மஸ்க்கை குறிவைத்துள்ளதாக அமெரிக்காவில் பார்க்கப்படுகிறது. அதை சுட்டும் வகையில் அவரது அண்மைய பேச்சும் இருந்துள்ளது. அரசின் செலவினங்களை குறைக்க மஸ்க்கின் நிறுவனங்களுடனான ஒப்பந்தத்தை ரத்து செய்தால் போதும் என ட்ரம்ப் எச்சரித்திருந்தார். இந்நிலையில் தற்போது வெளிப்படையாக ஜனநாயக கட்சியினருக்கு உதவினால் பின்விளைவுகளை எதிர்கொள்வார் என கூறியுள்ளார்.
“மஸ்க் உணர்ச்சிவசப்படக்கூடிய நபர். நிச்சயம் அவர் அரசுடன் இணைந்து பயணிப்பார் என கருதுகிறேன். ஆனால் இப்போது அது நடக்காது. ட்ரம்ப் சிறப்பாக தனது பணிகளை செய்து வருகிறார். ஜெஃப்ரி எப்ஸ்டீன் விவகாரத்தில் எந்த தவறையும் செய்யவில்லை. என அமெரிக்க துணை அதிபர் வான்ஸ் கூறியுள்ளார். நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment