வஞ்சிப்பா:
எப்போதுமே
எவ்விடத்திலும்
தப்பாமலே
தவறினைத்தவிர்!
உன்நினைவில்
உயரெண்ணமே
என்றுமெழவே
இயன்றதைச்செய்!
மற்றமாந்தரும்
மாண்புடையரே
உற்றயிடமும்
உவந்தளித்திடு!
இனம்தனையே இகழ்வோரையும்
மனம்மாற்றவே
முயன்றுவென்றிடு!
தனிச்சொல்:
என்றும்,
ஆசிரியச்
சுரிதகம்:
உன்றன் எண்ணம்
உயர்வாய் வைத்திரு,
நன்மை பெருகும்
நாட்டிலே,
அன்று இன்பம்
ஆறாய்ப் பெருகுமே!
No comments:
Post a Comment