பேச்சினில் இகழ்ச்சியைத் தவிர் – அன்பு ஜெயா பா வகை: வஞ்சிப் பா (குறளடி).

 

 

வஞ்சிப்பா:

எப்போதுமே எவ்விடத்திலும்

தப்பாமலே தவறினைத்தவிர்!

உன்நினைவில் உயரெண்ணமே

என்றுமெழவே இயன்றதைச்செய்!

மற்றமாந்தரும் மாண்புடையரே

உற்றயிடமும் உவந்தளித்திடு!

இனம்தனையே இகழ்வோரையும்

மனம்மாற்றவே முயன்றுவென்றிடு!

 

தனிச்சொல்:  என்றும்,

 

ஆசிரியச் சுரிதகம்:

உன்றன் எண்ணம் உயர்வாய் வைத்திரு,

நன்மை பெருகும் நாட்டிலே,

அன்று இன்பம் ஆறாய்ப் பெருகுமே!

No comments: