கந்தசஷ்டிச் சிந்தனை

 .   


                     

      மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 
   மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
          மெல்பேண் …. அவுஸ்திரேலியா

 (  4 ம் நாள் )

திருப்புகழ் பாடச் வைத்தவன் முருகன் !

திருப்புகழ் பாடச் வைத்தவன் முருகன்
திருந்திட அருணகிரியைச் செய்தவன் முருகன்
திருப்புகழ் பாடினால் திருந்திடும் நாக்கு
திருப்புகழ் பாடுவோம் சிறந்திடும் வாழ்வு           


மாம்பழம் முருகனை மாற்றியே விட்டது
மாம்பழம் அவனே சுவையும் அவனே
கதையினக் கேட்டுக் கலங்கிட வேண்டாம்
எல்லாம் இறையின் தத்துவம் ஆகும்

கணபதி கந்தனின் சோதரன் ஆவார்
கந்தனின் காதலில் கணபதி உதவினார்
கதையினைக் கதையாய் கேட்டிட வேண்டும்
விமர்சனம் செய்வது வீண்விளை வாகும் !



                    ( 5 ம் நாள் )

அரனின் மைந்தன் ஆலயம் இருப்பார் !

        மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 
   மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
          மெல்பேண் …. அவுஸ்திரேலியா



கந்த புராணம் கலாசாரம் ஆனது
நொந்திடு மனத்துக்கு ஒளடதம் ஆனது
ஆலயந் தோறும் கந்தனின் புராணம்
படிப்பது என்பது பக்தியின் நிலையே

ஆறு நாட்களும் ஆறு முகனை
சோறு தண்ணி தவிர்தே நிற்பார்
வீர வேலன் வெற்றித் திருமகன் 
பாதம் பணிந்து நோற்பார் விரதம் 

இளையோர் முதியோர் யாவரும் இணைவார்
சளையா திருந்து விரதம் பிடிப்பார்
ஆறு நாளையும் பேறாய் எண்ணி
அரனின் மைந்தன் ஆலயம் இருப்பார் !



                      ( 6 ம் நாள் )

அப்பன் முருகன் அருளுவான் எமக்கு !

        மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 
   மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
          மெல்பேண் …. அவுஸ்திரேலியா


ஒருமுகம் எங்களை உருகிட வைக்கும்
மறுமுகம் எங்களை மயங்கிடச் செய்யும்
அறுமுகம் இணைந்து ஆனந்தம் கொடுக்கும்
அப்பன் முருகன் அருளுவான் எமக்கு

வேலன் என்றால் வினைகள் ஓடும்
காலனும் அருகே வந்திட மாட்டான்
ஆலமாய் இருக்கும் அனைத்தையும் போக்குவான்
அழகன் முருகன் அடியினைப் பரவுவோம்

கனியும் அவனே சுவையும் அவனே
காயும் அவனே மலரும் அவனே
அனைத்தும் ஆகி இருப்பவன் முருகன்
அவனை நினைத்தால் ஆனந்தம் பெருகும்  !

No comments: