புகலிடத் தமிழ்க் கல்வி 📚 திருமதி. நிவேதா உதயராஜன் பேசுகிறார்

 

ஜேர்மன் கல்விக் கழகத்தின் பிதாமகராகக் கொள்ளப்படும் அமரர் நாகலிங்கம் & ஆயிலியம் தம்பதிகளின் மகள்.

இவரின் தாயார் ஆயிலியம் ஆசிரியை தந்து 80 வயது வரை புலம் பெயர் சூழலில் தமிழ்க் கல்வி புகட்டியவர்.
நிவேதாவும் தம் பெற்றோர் வழியில் ஜேர்மனியிலும், இங்கிலாந்திலும் தமிழாசிரியையாக விளங்குவதோடு தமிழ்ப் பள்ளி ஒன்றையும் நடத்தி வருகிறார்.
மூன்றாவது தலைமுறையாக இவரது மகளும் தமிழ் கற்பித்தல் செயற்பாட்டில் இயங்கி வருகிறார்.

நிவேதாவின் இலக்கியப் பக்கத்தில்,
கதைகள், கட்டுரைகள், கவிதைகள் என்று இயங்கி வருபவர்.

புகலிடச் சூழலில் தமிழ்க் கல்வி அமைப்பு குறித்து அவரோடு நான் நிகழ்த்திய நேர்காணலைக் கேட்போம் வாருங்கள்.



கானா பிரபா

No comments: