ஒரு நட்சத்திர நடிகர், ஒரு தயரிப்பாளர் இயக்குனருக்கு இடையிலான பிரிவு, இரு இசையமைப்பாளர்களுக்கிடையில் ஏற்பட்ட பிரிவு, ஒரு சூப்பர் ஸ்டார் , ஒரு முன்னணி நடிகை இடையில் தோன்றிய மனஸ்தாபம் இவற்றுக்கு எல்லாம் வடிகாலாய் அமைந்த படம் தான் ஆயிரத்தில் ஒருவன்.
சிவாஜியின் படத் தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் விளங்கிய பி ஆர் பந்துலு தான் எடுத்த முரடன் முத்து படத்துடன் சிவாஜியின் நட்பை உதறி விட்டு எம் ஜி ஆரின் கரத்தை பற்றிப் பிடித்துக் கொண்டார். மெல்லிசை மன்னர்களாக வலம் வந்த விஸ்வநாதன் , ராமமூர்த்தி இருவரும் இறுதியாக இணைந்து இசையமைத்து விட்டு இப் படத்தோடு பிரிந்தார்கள் . தொடர்ந்து இணைந்து நடித்த எம் ஜி ஆர் , சரோஜாதேவி இருவருக்கு இடையே மனதளவில் விரிசல் தோன்றியதை வெளிப்படுத்திய படம் என்று சொல்லும் வண்ணம் 1965ம் ஆண்டு ஆயிரத்தில் ஒருவன் உருவானது.
பிரம்மாண்டமான காட்சியமைப்பு, கண்ணைக் கவரும் வெளிப்புற படப்பிடிப்பு, வண்ணத்திரை காவியம், அழகான ஆடை அணிகலன்கள் என்றெல்லாம் விளம்பரப்படுத்துவார்களே அவை எல்லாம் ஒருங்கே அமைந்த படமாக ஆயிரத்தில் ஒருவன் அமைந்தது. அது மட்டுமன்றி எம் ஜி ஆர் அது வரை காலமும் ஏற்று நடிக்காத கடற் கொள்ளைக்காரன் வேடம் ஏற்று நடித்து ரசிகர் மனதை கொள்ளை கொண்ட படமாகவும் இப் படம் அமைந்தது.
ஒரு வைத்தியன் சந்தர்ப்ப சூழ்நிலையால் சர்வாதிகாரி ஒருவனால் வேற்று நாட்டவனுக்கு அடிமையாய் விற்கப் படுகிறான். அவனை அந்த நாட்டின் தலைவி காதலிக்கிறாள். அவனோ தனதும்,தன் இனத்தினதும் விடுதலையை எண்ணி போராடுகிறான். விடுதலை கிடைக்கும் தருணம் ஒரு கடற் கொள்ளைக்காரனால் மீண்டும் அடிமையாக்கப்பட்டு இம்முறை அவனால் கொள்ளைக்காரனாகிறான். தன்னை காதலித்தவளையே கடற்கொள்ளையில் கைப் பற்றுகிறான். இறுதியில் அவனின் சுதந்திரப் போராட்டம் சாத்தியமாகி , பல எதிரிகளின் சதித் திட்டத்தை முறியடித்து எவ்வாறு வெற்றி பெற்று காதலியை கரம் பற்றுகிறான் என்பதே மீதி படம்.
சும்மா சொல்லக் கூடாது சிவாஜியை விட்டு வெளியேறிய பந்துலு சரியான ஒரு கதையுடன் தான் எம் ஜி ஆரை அணுகியிருக்கிறார். எம் ஜி ஆரைத் தவிர்த்து வேறு எவருக்கும் இக் கதை பொருந்தி இருக்காது என்பது நிச்சயம். தான் இயக்கிய படங்கள் தோல்வி அடைந்தாலும் தான் எழுதும் கதைகள் வெற்றி பெறும் என்பதை படத்தின் கதாசிரியர் கே .ஜே .மகாதேவன் நிரூபித்திருந்தார். அவருக்கு தான் சளைத்தவனில்லை என்பது போல் ஆர் கே சண்முகம் அமைத்த வசனங்கள் வீரியத்துடன் தெறித்தன. முதல் படத்திலேயே சண்முகம் அசர வைத்து விட்டார்.
வாலி எல்லாப் பாடல்களையும் எழுத, சந்தர்ப்பம்
கண்ணதாசனையும் இரு பாடல்களை எழுத வைத்தது. அதிலும் அவர் எழுதிய அதோ அந்த பறவை போல வாழ வேண்டும் பாடல் ஒரு காலத்தில் தேசிய கீதம் போல் ஒலித்தது. உன்னை நான் சந்தித்தேன், ஆடாமல் ஆடுகிறேன், ஓடும் மேகங்களே, நாணமோ இன்னும் நாணமோ, ஏன் என்ற கேள்வி ஆகிய பாடல்கள் இன்றும் மனதில் நிற்கின்றன.
கண்ணதாசனையும் இரு பாடல்களை எழுத வைத்தது. அதிலும் அவர் எழுதிய அதோ அந்த பறவை போல வாழ வேண்டும் பாடல் ஒரு காலத்தில் தேசிய கீதம் போல் ஒலித்தது. உன்னை நான் சந்தித்தேன், ஆடாமல் ஆடுகிறேன், ஓடும் மேகங்களே, நாணமோ இன்னும் நாணமோ, ஏன் என்ற கேள்வி ஆகிய பாடல்கள் இன்றும் மனதில் நிற்கின்றன.
ஏ கே சேகர் அமைத்த அரங்க அமைப்பு, வி ராமமூர்த்தியின் ஒளிப்பதிவு, எல்லாமே படத்தை ஒரு படி உயர்த்தின என்றால் ஷியாம் சுந்தர் அமைத்த வாட் சண்டைக் காட்சிகள் ரசிகர்களை விறுவிறுப்பின் உச்சத்துக்கு கொண்டு சென்றன.
படத்தில் எம் ஜி ஆரின் கதா பாத்திரம் சிறப்பாக அமைக்கப்பட்டிருந்தது . காதல் காட்சிகள், சண்டை காட்சிகள் இரண்டிலும் எம் ஜி ஆர் தன் திறமையை வெளிப் படுத்துகிறார் . நிதானம் தப்பாத நடிப்பு. இளம் தேவதையாக வரும் ஜெயலலிதா இந்தப் படத்தோடு ரசிகர் மனதில் நங்கூரம் இட்டு விட்டார். நம்பியார், மனோகர், ராமதாஸ் என்று மூன்று வில்லன்கள் . முதலிடம் நம்பியாருக்குத் தான். எம் ஜி ஆரின் நிரந்தர வில்லனாக வந்து மோதும் புத்தூர் நடராஜன் இதில் நல்கவராக வந்து வசனம் பேசி நடிப்பது புதுமை. நாகேஷ் , மாதவி ஜோடி படம் முழுவதும் வருவதால் சிரிப்புக்கு பஞ்சம் இல்லை. இவர்களுடன் எல் விஜயலஷ்மி, எஸ் ராமராவ், ஆகியோரும் நடித்திருந்தனர்.
1965ம் வருடம் எம் ஜி ஆர் நடிப்பில் இரண்டு படங்கள் கலரில் வெளிவந்தன. எங்க வீட்டுப் பிள்ளை, ஆயிரத்தில் ஒருவன் இரண்டுமே வெள்ளி விழா படமாகி ரசிகர்களின் மனதில் நிலைத்தன. இந்தப் படத்துக்கு பிறகு பந்துலு மீண்டும் சிவாஜி பக்கமே போகவில்லை. எம் ஜி ஆரின் நிரந்தர படத் தயாரிப்பாளராகி விட்டார்.
திரையுலகிற்கு சரோஜாதேவியை அறிமுகப்படுத்திய பந்துலு,
பின்னர் திரையுலகிற்கு தான் புதிதாய் அறிமுகப் படுத்திய ஜெயலலிதாவை , எம் ஜி ஆருக்கு அறிமுகப் படுத்தி , இந்தப் படத்தில் அவரை எம் ஜி ஆருக்கு ஜோடியாக நடிக்க வைத்து அவர்களின் நீண்டகால உறவுக்கு அடிக்கல் நாட்டி வரலாற்று சாதனை புரிந்து விட்டார். ஆயிரத்தில் ஒருவன் தமிழ் சினிமாவிலும், அரசியலிலும் தடம் பதித்த படமாக ஆகி விட்டது.
பின்னர் திரையுலகிற்கு தான் புதிதாய் அறிமுகப் படுத்திய ஜெயலலிதாவை , எம் ஜி ஆருக்கு அறிமுகப் படுத்தி , இந்தப் படத்தில் அவரை எம் ஜி ஆருக்கு ஜோடியாக நடிக்க வைத்து அவர்களின் நீண்டகால உறவுக்கு அடிக்கல் நாட்டி வரலாற்று சாதனை புரிந்து விட்டார். ஆயிரத்தில் ஒருவன் தமிழ் சினிமாவிலும், அரசியலிலும் தடம் பதித்த படமாக ஆகி விட்டது.
No comments:
Post a Comment