இந்திய விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு !
லொஸ் ஏஞ்சல்ஸில் ஊரடங்கு வேளையிலும் ஆர்ப்பாட்டங்கள் - பலர் கைது
உலகின் மிக உயரமான இரும்பு வளைவுப் பாலம் பிரதமர் நரேந்திர மோடியால் திறப்பு !
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
ஈரானின் புரட்சிகர காவல்படையின் தலைவர் இஸ்ரேலின் தாக்குதலில் பலி
இந்திய விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு !
Published By: Digital Desk 2
14 Jun, 2025 | 01:41 PM
இந்தியாவில் இடம்பெற்ற விமான விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 274 ஆக உயர்வடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தியாவின், அமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து லண்டனுக்கு ஏர் இந்தியாவுக்கு சொந்தமான விமானம் கடந்த 12 ஆம் திகதி நண்பகல் புறப்பட்டது.
அந்த விமானத்தில் இந்தியா, இங்கிலாந்து, கனடா மற்றும் போர்த்துக்கல் நாடுகளை சேர்ந்த 230 பயணிகள் மற்றும் 2 விமானிகள், 10 பணியாளர்கள் என 242 பேர் இருந்தனர்.
ஓடு பாதையில் இருந்து விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் கட்டுப்பாட்டை இழந்த, விமானம், அருகில் இருந்த மேகனிநகர் பகுதியில் இருந்த பி.ஜே. மருத்துவக்கல்லூரி விடுதி கட்டிடத்தின் மீது விழுந்து, வெடித்து சிதறியது.
இந்த கோர விபத்தில் விமானத்தில் இருந்த 241 பேரும், மருத்துவக்கல்லூரி விடுதிக்கட்டிடத்தில் இருந்த மருத்துவ மாணவர்கள் மற்றும் அந்த மருத்துவக்கல்லூரி வளாகத்தில் இருந்த 19 பேர் என 265 பேர் உடல் கருகி உயிரிழந்ததாக தகவல் வெளியாகி இருந்தது. அவர்களில் குஜராத் மாநில முன்னாள் முதல்-மந்திரி விஜய் ரூபானியும் ஒருவர்.
பலியான பலரது உடல்கள் அடையாளம் காணமுடியாத நிலையில் உள்ளதால், உடல்களை அடையாளம் காண்பதற்கு மரபணு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. பரிசோதனை முடிந்து 6 பேரின் உடல்கள் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில் அமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 274 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே விமானத்தில் பயணித்த 241 பேர் உயிரிழந்த நிலையில், மருத்துவக் கல்லூரி மீது மோதியதில் மாணவர்கள் 10 பேர் உட்பட மொத்தம் 33 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.
இந்த விபத்தில், லண்டன் குடியுரிமை பெற்ற இந்தியரான விஸ்வாஸ் குமார் ரமேஷ் என்பவர், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். காயம் அடைந்த அவர் அமதாபாத் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இதேபோல் மருத்துவக்கல்லூரி விடுதியில் இருந்த வைத்தியர்கள், மாணவர்கள் மற்றும் ஜே.பி. வைத்தியசாலை வளாகத்தில் இருந்தவர்கள் என பலர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்களும் வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். நன்றி வீரகேசரி
லொஸ் ஏஞ்சல்ஸில் ஊரடங்கு வேளையிலும் ஆர்ப்பாட்டங்கள் - பலர் கைது
11 Jun, 2025 | 02:08 PM
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்னரும் ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்ததால் பெருமளவானவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என லொஸ் ஏஞ்சல்ஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பல குழுக்களை சேர்ந்தவர்கள் தொடர்ந்து குழுமியிருந்தனர் பலர் வந்து சேர்ந்தனர் என லொஸ் ஏஞ்சல்ஸ் பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சட்டவிரோத ஒன்றுகூடல் இடம்பெற்ற இடத்திலிருந்து அகல மறுத்ததை தொடர்ந்து பலர் கைதுசெய்யப்ட்டனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். நன்றி வீரகேசரி
உலகின் மிக உயரமான இரும்பு வளைவுப் பாலம் பிரதமர் நரேந்திர மோடியால் திறப்பு !
Published By: Digital Desk 2
07 Jun, 2025 | 02:58 PM
உலகின் மிக உயரமான இரும்பு வளைவுப் பாலமான செனாப் பாலம், இந்தியாவின் ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடியால் வெள்ளிக்கிழமை (06) அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
செனாப் நதியின் குறுக்கே 359 மீற்றர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள இப்பாலம், 1315 மீற்றர் நீளத்தைக் கொண்டது.
நில அதிர்வுகளையும், அதிக காற்று அழுத்தங்களையும் தாங்கும் வகையில், நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி இந்த பாலம் கட்டமைக்கப்பட்டுள்ளது.
இந்த பாலத்தின் ஆயுட்காலம் 120 ஆண்டுகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மணிக்கு 100 கிலோமீற்றர் வேகத்தில் ரயில்கள் இப்பாலத்தின் வழியாக பயணிக்கக்கூடியதாகும்.
இந்தப் பெருமைமிகு புதிய பாலம், ஜெர்மனியின் லியோன்ஹார்ட் ஆண்ட்ரா & பார்ட்னர் மற்றும் வியன்னா கன்சல்டிங் இன்ஜினியர்ஸ் ஆகிய நிறுவனங்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது.


ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -
Published By: Rajeeban
13 Jun, 2025 | 06:52 AM
ஈரான்மீது தாக்குதலை மேற்கொண்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
ஈரான் ஆளில்லா விமானதாக்குதலையும் ஏவுகணை தாக்குதலையும் மேற்கொள்ளலாம் என்பதால் அவசரகாலநிலையை பிரகடனம் செய்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது
இஸ்ரேல் பெருமளவு அணுசக்தி அணுவாயுத இலக்குகளையும் இராணுவ இலக்குகளையும் தாக்குவதாக இஸ்ரேலிய அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலின் முன்கூட்டிய தாக்குதலை தொடர்ந்து ஈரான் ஆளில்லா விமான தாக்குதலையும் ஏவுகணை தாக்குதலையும் மேற்கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுவதால் அவசரநிலையை பிரகடனம் செய்துள்ளோம் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. நன்றி வீரகேசரி
ஈரானின் புரட்சிகர காவல்படையின் தலைவர் இஸ்ரேலின் தாக்குதலில் பலி
13 Jun, 2025 | 07:59 AM
ஈரான் புரட்சிகர காவல்படை தலைவர் ஹொசைன் சலாமி இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஈரானிய அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
தாக்குதலில் இறந்த பல மூத்த தலைவர்களில் அவரும் ஒருவர்.
அணுசக்தி அமைப்பின் முன்னாள் தலைவர் ஃபெரேடூன் அப்பாசியும் கொல்லப்பட்டதாக அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment