மரண அறிவித்தல்

 .

                                                            

                      திருமதி நாகேஸ்வரி கந்தசாமி 

                                      
                                               

                                                       பிறப்பு 26 09 1932 இறப்பு 20 06 2025

சிங்கப்பூரில் (அன்றைய மலாயா) முத்தையா பார்வதி தம்பதிகளுக்கு இளைய மகளாகப் பிறந்தவரும், உடுவிலை சேர்ந்த காலம்சென்ற பொன்னுச்சாமி கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியுமான நாகேஸ்வரி அவர்கள் 20/06/2025 அன்று காலமானார்.

ஏழு பிள்ளைகளின் தாயாரான நாகேஸ்வரி அவர்கள், பிரான்சில் 25 வருடங்களுக்கு மேலாக பிள்ளைகள், பேரப்பிள்ளகள், பூட்டப் பிள்ளைகள் மற்றும் கொள்ளுப் பேத்தியான கலிசியா வரை மடியில் சுமந்து மகிழ்ச்சியுடன் வாழ்ந்திருந்தவர்.

தனது இறுதிக் காலத்தில், சூராவத்தையில் தான் கட்டி வாழ்ந்த வீட்டில் பிள்ளைகள், உற்றார் உறவினர்களுடன் மகிழ்ச்சியாக வாழ விரும்பி 2022ம் ஆண்டிலிருந்து வாழ்ந்து வந்திருந்திருந்த நாகேஸ்வரி அவர்கள், தனது 92வது வயதில் அவரது வீட்டில் காலமாகிவிட்டார் என்பதை மிகவும் துயரத்துடன் அறியத்தருகிறோம்..

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் பின்னர் அறிவிக்கப்படும்.

தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கங்கள் :

புஷ்பலதா தியாகபாலன் : 0774781546 / 0033 611597243
சியாமளா கனேசபாலன் : 0033 601676790

No comments: