திரையுலகில் கிசுகிசுக்களுக்கும், வதந்திகளுக்கு என்றுமே பஞ்சம்
இருந்ததில்லை. இத்தகைய கிசுகிசுவில் ஒரு சீசனில் அடிபட்ட நட்சத்திரங்கள் தான் ஜெய்சங்கர், ஜெயலலிதா இருவரும். இன்று கூட இவர்களை இணைத்து, தொடர்புபடுத்தி பல கதைகள் அவ்வப்போது உலா வந்த வண்ணம் உள்ளன. அவ்வாறு ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விட்ட இவர்கள் இருவரும் இணைந்து நடித்த முதல் படம்தான் நீ. அறுபது ஆண்டுகளுக்கு முன் இந்தப் படம் வெளி வந்தது. தமிழ் சினிமாவில் ஒற்றை எழுத்தில் வெளிவந்த முதல் படமும் இந்தப் படம்தான்.
முதல் படத்துடனேயே பிசி ஹீரோவாகி விட்ட ஜெய்சங்கரையும்,
அதே போல் முதல் படத்திலேயே நட்சத்திர நடிகையாகி விட்ட ஜெயலலிதாவையும் படத்தில் முதலில் இணைத்த பெருமை டைரக்டர் டி . ஆர் . ராமண்ணாவை சாரும். தனது பட நிறுவனமான விநாயகா பிக்சர்ஸ் மூலம் இதற்கு பிள்ளையார் சுழி போட்டார் ராமண்ணா. அது மட்டுமன்றி அது வரை காலமும் தன்னுடைய உதவி இயக்குனராக பணியாற்றிய கனக சண்முகத்தையும் டைரக்டராக்கி அழகு பார்த்தார் அவர்.
அதே போல் முதல் படத்திலேயே நட்சத்திர நடிகையாகி விட்ட ஜெயலலிதாவையும் படத்தில் முதலில் இணைத்த பெருமை டைரக்டர் டி . ஆர் . ராமண்ணாவை சாரும். தனது பட நிறுவனமான விநாயகா பிக்சர்ஸ் மூலம் இதற்கு பிள்ளையார் சுழி போட்டார் ராமண்ணா. அது மட்டுமன்றி அது வரை காலமும் தன்னுடைய உதவி இயக்குனராக பணியாற்றிய கனக சண்முகத்தையும் டைரக்டராக்கி அழகு பார்த்தார் அவர்.
கல்வியும், செல்வமும், செல்வாக்கும் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவன் சுந்தரம். கல்லுரி மாணவனான அவனுக்கு அவன் அண்ணனும், அண்ணியும் திருமணத்துக்கு பெண் பார்த்து முடிவெடுக்கிறார்கள். இந்த நிலையில் ஏழைப் பெண்ணான ஜெயாவை ஒரு விபத்தில் இருந்து காப்பாற்றுகிறான் சுந்தரம். ஜெயா ஓர் அனாதை என்பதையும் தெரிந்து கொள்கிறான். வாழ வழியின்றி தற்கொலை செய்ய துடிக்கும் ஜெயாவை மணந்து அவளுக்கு வாழ்வு கொடுக்க முன் வரும் அவனுக்கு அவனின் நண்பர்கள் துணை நிற்கிறார்கள். அண்ணனோ அவனை குடும்பத்தில் இருந்து ஒதுக்கியே வைத்து விடுகிறார். ஆனாலும் அண்ணியின் வற்புறுத்தலின் பேரில் சுந்தரமும், ஜெயாவும் குடும்பத்தில் இணைகிறார்கள். குடும்பத்தில் குதூகலம் பொங்கும் நேரம் மாஜிஸ்திரேடான சுந்தரத்தின் அத்தான் ஜெயாவை பார்த்து அதிர்ச்சியடைகிறார். அவள் இரவு விடுதியில் பாடி ஆடும் பெண் என்றும், விலைமாது என்றும் குற்றம் சாட்டுகிறார் . குடும்பமே கலங்கிப் போகிறது. எல்லோரும் ஜெயாவை பார்த்து நீ என்று விரல் நீட்டி களங்கம் சுமத்துகிறார்கள். அதிலிருந்து ஜெயா மீண்டாளா என்பதே மீதி படம்.
படத்தின் கதை ஜெயலலிதாவின் கதா பாத்திரத்தை முன்னிலைப் படுத்தியே அமைக்கப்பட்டிருந்தது. இதனால் படம் முழுவதும் தன்னுடைய குணச்சித்திர நடிப்பை காட்டும் வாய்ப்பு ஜெயலலிதாவுக்கு கிட்டியது. ஆனால் அதற்காக அவரை நடிப்போடு நிறுத்தி விடவில்லை. இரண்டு கவர்ச்சி நடனங்களையும் ஆட விட்டிருந்தார்கள். எல்லாவற்றிலும் அவர் திறமையை கட்டியிருந்தார். ஜெய்சங்கருக்கு நடிப்பு, துடிப்பு, அடிதடி என்று பலதும் கலந்த சான்ஸ். கிடைத்ததை அவரும் விடவில்லை. நாகேஷ், மாதவி,என்னத்தே கன்னையா, சதன் காமெடி எடுபடவில்லை.
எஸ் வி சகஸ்ரநாமம், பண்டரிபாய் இருவரும் பாத்திரம் அறிந்து நடித்திருந்தனர். ஜி. சகுந்தலா, ஆர். எஸ் . மனோகர், ஆகியோரும் நடித்திருந்தனர். வழக்கமாக வில்லன்களாக வரும் கே. கண்ணன், எஸ் வி ராமதாஸ் இருவருக்கும் இதில் டாக்டர், நீதிபதி வேடம். பார்க்க நன்றாக இருந்தது.
படத்துக்கு கதை வசனம் எழுதியவர் சக்தி கிருஷ்ணசாமி. ஒளிப்பதிவு
செய்தவர் எம் .ஏ .ரஹ்மான். இருவருக்கும் ஓகே. பாடல்களை வாலி எழுதி இருந்தார். விசுவநாதன், ராமமூர்த்தி கூட்டு முறிந்த பிறகு விஸ்வநாதனுக்கு தனித்து இசையமைக்க கிடைத்த படங்களில் இதுவும் ஒன்று. சுசிலா பாடிய வெள்ளிக்கிழமை விடியும் வேளை , எல் ஆர் ஈஸ்வரி பாடிய அடடா என்ன அழகு, எனக்கு வந்த இந்த மயக்கம் பாடல்கள் ரசிகர்களை ஈர்த்தன.
செய்தவர் எம் .ஏ .ரஹ்மான். இருவருக்கும் ஓகே. பாடல்களை வாலி எழுதி இருந்தார். விசுவநாதன், ராமமூர்த்தி கூட்டு முறிந்த பிறகு விஸ்வநாதனுக்கு தனித்து இசையமைக்க கிடைத்த படங்களில் இதுவும் ஒன்று. சுசிலா பாடிய வெள்ளிக்கிழமை விடியும் வேளை , எல் ஆர் ஈஸ்வரி பாடிய அடடா என்ன அழகு, எனக்கு வந்த இந்த மயக்கம் பாடல்கள் ரசிகர்களை ஈர்த்தன.
No comments:
Post a Comment