13/10/2018 கிளிநொச்சியில் சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கு எதிரான பல்வேறு கோசங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு  ஊர்வலம் ஒன்று இன்று இடம்பெற்றது.
சிறுவர் துஷ்பிரயோகம் அற்ற தேசத்தை உருவாக்குவோம் என்ற தொணிப்பொருளிலும், சிறுவர் பெண்களுக்கான, பரிபூரணமான பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம் என்ற வகையிலும்  சமாதான நடைப்பயணம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இவ் ஊர்வலமானது இன்று  காலை பத்து மணியளவில் கிளிநொச்சி காக்கா கடைச் சந்தியிலிருந்து கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானம் வரை ஊர்வலமாக சுமார் ஜயாயிரம் வரையான சிறுவர்கள் கலந்துகொண்ட சமாதான ஊர்வலம் இடம்பெற்றது.
நன்றி வீரகேசரி