சுனாமியால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை எட்டியது
ரயில் தடம் புரண்டதில் 7 பேர் பலி!!!
அதி நவீன ஆளில்லா விமானங்களை பாகிஸ்தானிற்கு வழங்குகிறது சீனா!!!
தூதரகத்திற்குள் பத்திரிகையாளர் கொலை- தெளிவான பயங்கரமான ஆதாரங்கள் சிக்கின
இடைநில்லா விமான சேவையை மீண்டும் தொடங்கியது சிங்கப்பூர்
சவுதி பத்திரிகையாளர் தான் கொல்லப்படுவதை தானே பதிவு செய்தாரா?
சுனாமியால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை எட்டியது
08/10/2018 இந்தோனேசியா நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியில் சிக்கி இதுவரை 2000 பேர் வரை பலியானதோடு சுமார் 5000 பேர் வரை காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுனாமி தாக்குதலில் பாதித்த பலு நகரில் நடைபெறும் மீட்பு பணியில் ராணுவமும், பொலிஸாரும் ஈடுபட்டுள்ளனர். இடிபாடுகள் அகற்றப்பட்டு வருகின்றன. தோண்ட தோண்ட சடலங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. மேலும் பலர் மாயமாகி போயுள்ளனர். அதே நேரத்தில் உள்ளே சிக்கி தவிப்பவர்களும் மீட்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இடிபாடுகளில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை 1944 ஆக அதிகரித்துள்ளதோடு சுமார் 5000 க்கும் மேற்பட்ட மக்கள் காணாமல் போயுள்ளனர்.

இதுதொடர்பில், மீட்புப்படை அதிகாரிகள் தெரிவிக்கையில், சுமார் 62,359 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். தற்போது வரை 2,549 பேர் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், பல அடுக்குமாடி குடியிருப்புகள், ஹொட்டல்கள் என பல கட்டிடங்களின் இடிபாடுகள் அகற்றப்பட்டு வருவதால் பலி எண்ணிக்கை உயரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நன்றி வீரகேசரி
ரயில் தடம் புரண்டதில் 7 பேர் பலி!!!
10/10/2018 இந்தியா - உத்தரப்பிரதேசத்தில் இன்று காலை கடுகதி ரயில் பெட்டிகள் தடம் புரண்டதில் 7 பேர் பலியாகியுள்ளதோடு படுகாயமடைந்த 21 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உத்திரப்பிரதேசம் - ரேபரேலி மாவட்டம் ஹர்சந்த்பூர் ரயில் நிலையத்திலிருந்து சுமார் 50 மீட்டர் தூரத்திலேயே இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மற்றம் தேசிய பேரிடர் மீட்புக் குழு மீட்புபணிகளை மேற்கொண்டு வருகின்றனர். நன்றி வீரகேசரி
அதி நவீன ஆளில்லா விமானங்களை பாகிஸ்தானிற்கு வழங்குகிறது சீனா!!!
10/10/2018 ஆளில்லாமல் ஆயுதங்களுடன் தாக்குதல் நடாத்தும் அதி நவீன விமானங்களை சீனா பாகிஸ்தானுக்கு விற்பனை செய்துள்ளது.
சீனா மற்றும் பாகிஸ்தானிற்கிடையே நடைபெற்றுள்ள மிகப்பெரிய ஆயுத தளபாட பரிவர்த்தனைகளில் இவ் விமான விற்பனை மிக முக்கியமானதாகும்.
இருப்பினும் இப் பரிவர்த்தனையின் மொத்த மதிப்பு எவ்வளவு என்பது பற்றிய தகவல்கள் வெளிவரவில்லை.
விங் லூங்2 எனப்படும் இவ் ஆளில்லா விமானங்கள் கன்கானிப்பு தாக்குதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும் அமெரிக்காவின் எம்.க்யு.9ரீப்பர் ஆளில்லா விமானத்திற்கு நிகரான விமானமாக கருதப்படுகிறது.

விங் லூங்2 என்ற இவ்வகை ஆளில்லா விமானங்களை எதிர்காலத்தில் பாகிஸ்தானும் சீனாவும் கூட்டாக தயாரிக்கும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பாகிஸ்தானும் சீனாவும் மிகவும் நெருங்கிய நட்பு நாடாக திகழ்கின்ற அதேவேளை பாகிஸ்தானிற்கு அதிக அளவில் ஆயுத தளபாடங்களை விற்பனை செய்யும் நாடுகளில் ஒன்றாகவும் சீனா திகழ்கிறது.
இவ்விரு நாடுகளும் சேர்ந்து ஜெ.எஃப் தண்டர் எனும் போர் விமானங்களை தயாரித்த வருகின்றமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
தூதரகத்திற்குள் பத்திரிகையாளர் கொலை- தெளிவான பயங்கரமான ஆதாரங்கள் சிக்கின
12/10/2018 சவுதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோகி துருக்கியில் உள்ள தூதரகத்திற்குள் கொல்லப்பட்டமைக்கான வீடியோ மற்றும் ஒலிநாடா ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக துருக்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
துருக்கி அதிகாரியொருவர் இந்த தகவலை மேற்குலக புலனாய்வாளர் ஒருவருக்கு தெரிவித்துள்ளார்.
துருக்கியில் உள்ள சவுதிஅரேபிய தூதரகத்தில் வன்முறைகள் இடம்பெற்றதாக ஆதாரங்கள் கிடைத்தள்ளன என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
பத்திரிகையாளர் தாக்கப்பட்டவேளை அவர் அதிலிருந்து தப்புவதற்காக போராடியுள்ளார் என குறிப்பிட்டுள்ள துருக்கி அதிகாரிகள் பத்திரிகையாளர் கொல்லப்பட்டதை காண்பிக்கும் ஆதாரங்களும் கிடைத்துள்ளன என குறிப்பிட்டுள்ளனர்
துருக்கி அதிகாரிகள் காண்பித்த ஆதாரங்களை பார்த்த வெளிநாட்டு புலனாய்வு அமைப்பை சேர்ந்தவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதேவேளை பத்திரிகையாளர் கொல்லப்பட்டமைக்கான வீடியோ ஒலிநாடா ஆதாரங்கள் உள்ளன என துருக்கி அதிகாரிகள் அமெரிக்க அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர் என வோசிங்டன் போஸ்ட் குறிப்பிட்டுள்ளது.
சவுதிஅரேபியாவிலிருந்து சென்ற குழுவொன்றே பத்திரிகையாளரின் கொலைக்கு காரணம் என்பதற்கான தெளிவான பயங்கரமான ஆதாரங்கள் ஒலிநாடாவில் உள்ளன என வோசிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.
பத்திரிகையாளரின் குரலை கேட்க முடிகின்றது,அராபிய மொழியில் பலர் உரையாடுவதையும் கேட்க முடிகின்றது எனஒலிநாடாவை செவிமடுத்த ஒருவர் வோசிங்டன் போஸ்டிற்கு தெரிவித்துள்ளார்.
அவர் சித்திரவதை செய்யப்படுவதையும் விசாரிக்கப்படுவதையும் அதன் பின்னர் படுகொலை செய்யப்படுவதையும் ஒலிநாடா மூலம் அறிய முடிகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார். நன்றி வீரகேசரி
இடைநில்லா விமான சேவையை மீண்டும் தொடங்கியது சிங்கப்பூர்
13/10/2018 சிங்கப்பூரில் இருந்து அமெரிக்கா செல்லும் இடைநில்லா விமானமொன்று அமெரிக்கா நியுயோர்க் விமான நிலையத்தில் தரையிரங்கியுள்ளது.

குறித்த விமானமானது 17 மணித்தியலங்கள் 25 நிமிடத்தில் சுமார் 15000 கிலோ மீட்டர் வரை தூரம் வானில் பறந்து நியுயோர்க் விமான நிலையத்தில் தடையிரங்கியுள்ளது.
பெற்றோல் விலையின் காரணமாக 5 ஆண்டுகள் நிறுத்தி வைக்கப்பட்ட விமான சேவையே இவ்வாறு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தற்போது பெரும்பாலன மக்களால் பேசப்படும் உலகிலேயே அதகி தூரம் பறக்கும் விமான சேவையாக இது கருதப்படுகிறது. நன்றி வீரகேசரி
சவுதி பத்திரிகையாளர் தான் கொல்லப்படுவதை தானே பதிவு செய்தாரா?
13/10/2018 துருக்கிக்கான சவுதிஅரேபிய தூதரகத்தில் கொல்லப்பட்டதாக கருதப்படும் சவுதி அரேபிய பத்திரிகையாளர் தனது மரணத்தை தானே பதிவு செய்துள்ளார் என துருக்கி ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஒக்டோபர் இரண்டாம் திகதி தூதரகத்திற்குள் நுழைவதற்கு முன்னர் ஜமால் கசோகி தனது கையிலிருந்த அப்பிள்கைக்கடிகாரத்தை இயங்கச்செய்தார் என துருக்கியின் சபா செய்தித்தாள் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக அவர் சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்படும் தருணங்கள் பதிவு செய்யப்பட்டு அவருடைய தொலைபேசிக்கும் ஐகிளவுட்டிற்கும் சென்றுள்ளன என சபா தெரிவித்துள்ளது.
படுகொலையில் ஈடுபட்ட நபர்களின் உரையாடல்கள் பதிவாகியுள்ளன என சபா தெரிவித்துள்ளது.
ஜமால்கசோகி தனது பெண் நண்பியிடம் கொடுத்துவிட்டு சென்ற கையடக்க தொலைபேசியில் படுகொலை இடம்பெற்ற தருணங்கள் பதிவாகியுள்ளதை விசாரணையாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இதேவேளை பத்திரிiகாயளரை கொலை செய்தவர்கள் அந்த கைக்கடிகாரத்தை கண்டுபிடித்து மிகவும் சிரமப்பட்டு சில விடயங்களை அழித்துள்ளனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.ஜமால் கசோகி துருக்கியில் உள்ள தூதரகத்திற்குள் கொல்லப்பட்டமைக்கான வீடியோ மற்றும் ஒலிநாடா ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக துருக்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment