ஆப்கான் குண்டுவெடிப்பு : ஊடகவியலாளர்கள் உட்பட 21 பேர் பலி
உலகின் மிகப்பெரிய கண்ணாடி மாளிகை: கண்கவர் அம்சங்களுடன் மீண்டும் திறப்பு..!
ஜெயலலிதா நினைவிடத்திற்கு மே 7 ஆம் திகதி அடிக்கல் நாட்டு விழா!!!
ஆப்கான் குண்டுவெடிப்பு : ஊடகவியலாளர்கள் உட்பட 21 பேர் பலி
30/04/2018 ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இடம்பெற்ற இருவேறு குண்டுத் தாக்குதல்களில் 21 பேர் பலியானதுடன் 27 பேர் காயமடைந்துள்ளனர்.
இதில் முதலாவது குண்டு வெடிப்பு ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க தூதரகதிற்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவம் காலை 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் சம்பவம் தொடர்பில் செய்தி சேகரிப்பதற்காக அவ்விடத்திற்கு சென்ற ஊடகவியளாலர்களை குறிவைத்து இரண்டாவது குண்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. நன்றி வீரகேசரி
உலகின் மிகப்பெரிய கண்ணாடி மாளிகை: கண்கவர் அம்சங்களுடன் மீண்டும் திறப்பு..!
06/05/2018 லண்டனின் நகரிலுள்ள கியூ பகுதியில் உலகின் மிகப்பெரிய விக்டோரியா கண்ணாடி மாளிகை (தாவரவியல் பூங்கா) உள்ளது. 1863 ஆம் ஆண்டு பிரிட்டன் அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட இந்த கண்ணாடி மாளிகை மிகவும் புகழ்பெற்றது. இதில் பல்வேறு வகையான தாவரங்கள் வைக்கப்பட்டுள்ளமையும் சிறப்பம்சமாகும்.
இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து குவிகின்றனர். உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள வித்தியாசமான தாவரங்கள் இங்கு பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தன. 2003 ஆம் ஆண்டு யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்களில் ஒன்றாக இதனை அங்கீகரித்தது.
பல ஆண்டுகளாக பயன்பாட்டிலிருந்த இக்கண்ணாடி மாளிகை சற்று சேதமடைந்திருந்தமையின் காரணமாக சரி செய்வதற்காக கடந்த 5 ஆண்டுகள் மூடப்பட்டிருந்த நிலையில், 41 மில்லியன் ஸ்ரேலிங் பவுண்ட்ஸ் செலவில் இதன் பாராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
அதன் பின்னர் பல புதிய தாவரங்களின் தொகுப்புகளுடன் கண்ணாடி மாளிகை மீண்டும் திறக்கப்பட்டுள்ளமை முக்கிய அம்சமாகம். நன்றி வீரகேசரி
ஜெயலலிதா நினைவிடத்திற்கு மே 7 ஆம் திகதி அடிக்கல் நாட்டு விழா!!!
05/05/2018 தமிழ் நாட்டின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா எதிர்வரும் மே மாதம் 7 ஆம் திகதியன்று நடைபெறும் என்று அ.தி.மு.க அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ .பன்னீர் செல்வமும். இணை ஒருங்கிணைப்பாளரும். முதல்வருமான எடப்பாடி. கே. பழனிச்சாமியும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது....
"மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவிற்கு சென்னை மெரீனாவில் நினைவிடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா எதிர் வரும் மே மாதம் 7ஆம் திகதியன்று நடைபெறுகிறது. காலை 8 30 மணியளவில் அ.தி.மு.க சார்பில் இந்த அடிக்கல் நாட்டு விழா நடைபெறவிருக்கிறது.
இதில் கட்சியின் தொண்டர்களும், நிர்வாகிகளும், பொது மக்களும் கலந்து கொள்ள வேண்டும்." என்று அந்த அறிக்கையில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment