உலகச் செய்திகள்



எம்.எச். 370 விமா­னத்­தினுடை­யது என நம்­பப்­படும் இரண்­டா­வது பாகம் கண்­டு­பி­டிப்பு

இந்தியாவில் ரயில் விபத்து : 30 பேர் பலி, பலர் காயம்

மீட்கப்பட்ட விமானத்தின் பாகம் எம்.எச்.370 உடையதே : மலேசிய பிரதமர்

600 குடி­யேற்­ற­வா­சி­களை ஏற்றி வந்த படகு லிபிய கடற்­க­ரைக்கு அப்பால் மூழ்­கி­யது








எம்.எச். 370 விமா­னத்­தினுடை­யது என நம்­பப்­படும் இரண்­டா­வது பாகம் கண்­டு­பி­டிப்பு

03/08/2015 காணா­மல்­போன மலே­சிய எம்.எச். 370 விமா­னத்தினுடை­யது என நம்­பப்­படும் இரண்­டா­வது பாக­மொன்று பிரான்ஸின் இந்து சமுத்­திர தீவான றீயூ­னியன் கடற்­க­ரையில் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது.


கடந்த வாரம் புதன்­கி­ழமை எம்.எச். 370 விமா­னத்­தி­னு­டை­யது என சந்­தே­கிக்­கப்­படும் இறக்கைப் பாக­மொன்று கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்ள நிலை­யி­லேயே இந்த புதிய பாகம் சென் டெனிஸ் நகரின் தெற்கே கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது.
மேற்­படி விமா­ன­மா­னது கடந்த வருடம் மார்ச் மாதம் 239 பேருடன் பய­ணித்த வேளை காணாமல் போனது.இந்­நி­லையில் முத­லா­வ­தாக கண்­டு­பி­டிக்­கப்­பட்டு மீட்­கப்­பட்ட விமா­னத்தின் பாகம், அது காணா­மல்­போன எம்.எச். 370 விமா­னத்­திற்­கு­ரி­யதா என்­பதை கண்­ட­றி­வ­தற்கு பரி­சோ­தனை மேற்­கொள்ளும் முக­மாக பிரான்­ஸுக்கு கொண்டு செல்­லப்­பட்­டுள்­ளது.
அது போயிங் 777 ரக விமா­னத்­தி­னு­டைய சிதைவு என நம்­பப்­ப­டு­கி­றது.இந்­நி­லையில் இந்து சமுத்­திரப் பிராந்­தி­யத்தில் காணா­மல்­போன ஒரே­யொரு போயிங் 777 ரக விமா­ன­மாக எம்.எச். 370 உள்­ளமை, அந்தப் பாகம் அந்த விமா­னத்தின் சிதைவு என்ற நம்­பிக்­கையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ள­தாக கூறப்­ப­டு­கி­றது.
இந்­நி­லையில் றீயூ­னியன் தீவுப் பிராந்­தி­யத்தைச் சேர்ந்த இருவர், தாம் கடந்த மே மாத­ம­ளவில் விமா­னத்­தி­னது என நம்­பப்­படும் பய­ணப்­பொ­தி­க­ளையும் ஆச­ன­மொன்­றையும் கண்­ட­தா­கவும் ஆனால் குறிப்­பிட்ட எம்.எச். 370 ஆனால் விமா­னத்தின் இறக்கைப் பாகம் கரை­யொ­துங்கும் வரை அவை விமா­ன­மொன்­றி­லி­ருந்து வந்­த­வை­யாக இருக்கக் கூடும் என தாம் நினைக்­க­வில்லை எனவும் தெரி­வித்­துள்­ளனர்.
காணா­மல்­போன எம்.எச். 370 விமா­னத்தை தேடும் நட­வ­டிக்­கை­யொன்று றீயூ­னியன் தீவுக்கு சுமார் 4,000 கிலோ­மீற்றர் தொலைவில் அவுஸ்­தி­ரே­லி­யாவால் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.
இந்­நி­லையில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள விமானப் பாகங்கள் எம்.எச். 370 விமானத்தினுடையது என உறுதிப்படுத்தப் படும் பட்சத்திலும் அந்த விமான அனர்த்தத்திற்கான காரணம் தொடர்ந்து மர்மமாகவே இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். நன்றி வீரகேசரி 








இந்தியாவில் ரயில் விபத்து : 30 பேர் பலி, பலர் காயம்

05/08/2015 இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தின் ஹர்தா பகுதியில் நேற்றிரவு இரண்டு ரயில்கள் தடம்புரண்டதில் 30 பேர் உயிரிழந்துள்ளதுடன் 25 ற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த ரயில்கள் மச்சக் ஆற்றின் மேம்பாலத்தை கடக்கும் போது விபத்துக்குள்ளாகியுள்ளன. 
இந்த பகுதிளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் அடைமழை காரணமாக குறித்த ஆற்றில் வெள்ளம் கரை புரண்டோடுகிறது. வெள்ளம் ரயில் தண்டவாளத்தை மூழ்கும் அளவுக்கு இருந்தமையால் இவ் விபத்து இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.



நன்றி வீரகேசரி 










மீட்கப்பட்ட விமானத்தின் பாகம் எம்.எச்.370 உடையதே : மலேசிய பிரதமர்

06/08/2015 இந்தியப் பெருங்கடலில் கண்டெடுக்கப்பட்ட விமானத்தின் பாகங்கள் காணமல்போன எம்.எச்.370 மலேசிய விமானத்தினுடையது என மலேசியப் பிரதமர் உறுதிப்படுத்தியுள்ளார்.

கடந்த வருடம் மார்ச் மாதம் 8 ஆம் திகதி 239 பயணிகளுடன்  மலேசிய விமானம் புறப்பட்டுச் சென்று 2 மணி நேரத்தில் திடீரென மாயமானது. 
அதனைத் தேடும் பணியில் சர்வதேச நாடுகள் தீவிரமாக ஈடுபட்டன.  இருப்பினும் விமானத்தின் எந்த ஒரு பாகமும் கிடைக்கவில்லை. 

விமானத்திற்கு என்ன நடந்தது. அதில் பயணித்த பயணிகள் என்ன ஆனார்கள்? என்பது ஓராண்டு தாண்டிவிட்ட நிலையிலும் புரியாதபுதிராகவே இருந்து வந்தது. 

இந்த நிலையில் பிரான்ஸ் நாட்டில் உள்ள ரீயூனியன் தீவின் கடற்கரையில் (இந்திய பெருங்கடலின் மேற்கு பகுதியில்) சில தினங்களுக்கு முன்பு ஒரு விமானத்தின் பாகம் கரை ஒதுங்கியது.

இது மாயமான மலேசிய விமானத்தின் பாகமாக இருக்க வேண்டும் என்று கருதப்பட்டது. இவ்வாறு மீட்கப்பட்ட  விமானத்தின் பாகம் 2 மீற்றர் நீளமும்  ஒரு மீற்றர் அகலமும் உடையது.

விமானத்தின்  பாகங்கள் பிரான்ஸ் நாட்லுள்ள தொவ்லொசுவிலுள்ள  பாதுகாப்பு துறையின் ஆய்வகம் ஒன்றில் ஒப்படைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. 

அந்தப் பாகங்களை ஆராய்ந்த சர்வதேச ஆய்வாளர்கள் அவை எம்.எச் .370 யினுடையது என  இறுதியாக உறுதிப்படுத்தினர்.
இந்நிலையில் இந்திய பெருங்கடலின் மேற்கு பகுதியில் கண்டெடுக்கப்பட்ட பாகங்கள் காணமல்போன மலேசிய விமானத்தினுடையது என்று மலேசிய பிரதமர் உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.    நன்றி வீரகேசரி 











600 குடி­யேற்­ற­வா­சி­களை ஏற்றி வந்த படகு லிபிய கடற்­க­ரைக்கு அப்பால் மூழ்­கி­யது

07/08/2015 லிபிய கடற்­க­ரைக்கு அப்பால் சுமார் 600 குடி­யேற்­ற­வா­சி­க­ளுடன் புதன்­கி­ழமை மூழ்­கிய பட­கொன்றில் பய­ணித்த பலர் உயி­ரி­ழந்­தி­ருக்­கலாம் என அஞ்­சப்­ப­டு­கி­றது.

மேற்­படி படகு லிபிய கடற்­க­ரை­யி­லி­ருந்து 25 கிலோ­மீற்றர் தொலைவில் மூழ்­கி­யி­ருந்­தது.ஆரம்­பத்தில் அந்தப் படகில் பய­ணித்த நூற்­றுக்­க­ணக்­கானோர் உயி­ரி­ழந்­துள்­ள­தாக அஞ்­சப்­பட்­டது. எனினும் அவர்­களில் சுமார் 400 பேர் உயி­ருடன் மீட்­கப்­பட்­டுள்­ள­தாக ஐக்­கிய நாடுகள் அக­திகள் முகவர் நிலையம் பின்னர் தெரி­வித்­தது.
இது­வரை 25 சட­லங்கள் மீட்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் பலர் காணா­மல்­போ­யுள்­ள­தா­கவும் இத்­தா­லிய கரை­யோர காவல் படை­யினர் தெரி­வித்­தனர்.இந்த ஆண்டு மத்­தி­ய­தரைக் கடலைக் கடந்து ஐரோப்­பா­விற்கு செல்லும் முயற்சியின் போது 2,000 க்கு மேற்பட்ட குடியேற்றவாசிகள் உயிரிழந்திருந்தனர்.  நன்றி வீரகேசரி 








No comments: