ஞானம் அட்டைப்பட அதிதி நவீன டிஜிட்டல் முறையில் ஓவியம் வரையும் இலக்கிய படைப்பாளி கிறிஸ்டி நல்லரெத்தினம் முருகபூபதி

( இலங்கையிலிருந்து வெளியாகும் ஞானம் மாத இதழ் ( 290 ஆவது இதழ் ) இம்மாதம் ( ஜூலை ) அவுஸ்திரேலியாவில் வதியும் எழுத்தாளரும், ஓவியருமான கிறிஸ்டி நல்லரெத்தினம் அவர்களை அட்டைப்பட அதிதியாக கௌரவித்துள்ளது. இவ்விதழில் இவரைப்பற்றி  எழுத்தாளர் முருகபூபதி எழுதிய  பதிவு இங்கே தரப்படுகிறது )

 


உள்ளார்ந்த கலை, இலக்கிய ஆற்றல் மிக்கவர்கள் தமது தாயகம் விட்டு உலகின் எந்தப்பாகத்திற்குச்சென்று வாழ நேரிட்டாலும், தமது ஆற்றல்களை வெளிப்படுத்திக்கொண்டே இருப்பார்கள் என்பதற்கு உதாரணமாக எனது அவதானத்தில் மற்றும் ஒருவரை ஞானம்  இதழில் அறிமுகப்படுத்த விரும்புகின்றேன்.

எனினும்,  இவருக்கு அறிமுகம் அவசியமில்லைத்தான். கருத்தாழமும் உயிர்ப்பும் இணைந்த தனது வண்ண ஓவியங்கள் மற்றும் ஆக்க இலக்கியப்படைப்புகளின் மூலமாக எமது வாசகர்களுக்கு, குறிப்பாக ஞானம் மாத இதழின் அபிமான வாசகர்களுக்கு நன்கு அறிமுகமானவர்தான் அவுஸ்திரேலியாவில் விக்ரோரியா மாநிலத்தில் வதியும் ஓவியர் – படைப்பிலக்கியவாதி கிறிஸ்டி நல்லரெத்தினம்.

இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு இவரது பூர்வீகம்.


தனது கல்வியை மட்டுநகர் புனித. மிக்கேல் கல்லூரியில் நிறைவு செய்துவிட்டு,  கணக்கியலில் தேர்ச்சி பெற்று இலங்கையில்  முன்னணியில் திகழ்ந்த தனியார் வர்த்தக வங்கியில் கடமையேற்றார்.

1970 களில் இலங்கையில் நன்கு அறியப்பட்ட ஓவியர் செள அவர்களின் மருமகன்தான் கிறிஸ்டி. ஓவியர் செள அவர்களின் கருத்துப்படங்களையும் ஓவியங்களையும் கொழும்பில் இளம்பிறை ரகுமான் நடத்திய அரசு வெளியீடு நூல்களில் குறிப்பாக,   ஈழத்தின் மூத்த கவிஞர் மஹாகவி உருத்திரமூர்த்தியின் குறும்பா தொகுப்பில் வாசகர்கள் பார்த்திருக்கலாம்.

கிறிஸ்டி நல்லரெத்தினம், தனது   இளமைப் பருவத்திலிருந்தே ஓவியக்கலையில் நாட்டம் மிக்கவராகவிருந்தார்.

 தமது உறவினரான  மூத்த ஓவியக்கலைஞர்  "சௌ' எனும் கருணாகரன் சௌந்தரராஜாவிடமிருந்து  ஓவியம்  வரையும் நுணுக்கங்களை தனது பள்ளி நாட்களிலேயே கற்றுத்தேர்ந்தார். இதுவே இவரை இலக்கியத்துறையுடன் இணைத்த  ஆரம்பப் புள்ளி!

1992 இல் மெல்பனுக்கு புலம்பெயர்ந்து,  இங்குள்ள  அவுஸ்திரேலிய முன்னணி வங்கியில் சர்வதேச வர்த்தகப் பிரிவில் இணைந்து,  தனது முதுநிலை வணிக நிர்வாக கற்கை நெறியைப் பூர்த்தி செய்து  முகாமையாளராக கடமையாற்றினார்.

கற்பகதரு நூல்விமர்சனம் - இரண்டாவது பகுதி


கற்பகதரு நூல் விமர்சனத்தின் இரண்டாவது அங்கமாக அடுத்த பத்து சுவைகளை இங்கே சமைக்கிறேன்…..

சங்கர சுப்பிரமணியன்.


சுவை பதினொன்றில் தென்னையையும் பனையையும ஒப்பிடும்

நோக்கு நன்றாக உள்ளது. தென்னைக்கு அடிக்கடி தண்ணீர் ஊற்ற வேண்டும் என்கிறார். அதுவே பனைமரத்தைப்பற்றிச் சொல்லும்போது பனங்கொட்டையை  மண்ணில் புதைத்து சிறுதளவு நீரை விட்டுவந்தால் போதும் அது காலத்துக்கும் பயனளிக்கும் என்பதை நாலடியார் துணைகொண்டு சொல்லியிருப்பதோடு தென்னையைவிட பனைதான் சிறப்பு வாய்ந்ததென செப்பியிருக்கிறார்.


சுவை பன்னிரெண்டில் தென்னை ஒலையையும் பனை ஓலையையும் ஒப்பிடுகிறார். தென்னை ஓலையின் பயன்பாடு ஒரு குறிப்பிட்ட மட்டில் நின்று விடுகிறது. ஆனால் பனை ஓலையினால் பலவகை பொருட்கள் செய்யப்படுவதால் கைத்தொழிலுக்கு உறுதுணையாக நிற்கிறது என்கிறார்.

இக்கைத்தொழில் இந்தியாவிலும் இலங்கையிலும் நிலவி வருவதை கூறுவதோடு இலங்கையின் வடக்குப் பகுதியிலும் கிழக்கிலங்கையிலும் பனை மரங்கள் அதிகம் காணப்படுவதையும் கூறியிருப்பதோடு எந்தெந்த இடங்களில் என்னென்ன கைவினைப் பொருட்கள் செய்யப் படுகின்றன என்பதையும் விளக்கமாக தந்துள்ளார்.

பதின்மூன்றாம் சுவையில் யாழ்ப்பணத்தில் வீடுகள் எப்படியிருந்தது என்பதைப் பற்றிக்கூறும் நூலாசிரயர் வீடுகளின் கூரைகள் பனை ஓலையால் வேயப் பட்டிருக்கம் என்கிறார். களிமண்ணாலான தரையும் அரைச் சுவரும் இருக்கும் என்றும் தரையை சாணத்தினால் மெழுகியதையும் குறிப்பிட்டிருக்கறார்.

வீட்டின் அறைகள் அமைய தடுப்புக்களினால் மறைத்தனர். அந்ந தடுப்புக்களே தட்டிகளாகும். அந்த தட்டிகள் வீட்டின் வெளிப்பறம் தென்னை ஓலை கிடுகுகளாகவும் உட்புறம் பனை ஓலைப் பாய்களாகவும் இருக்கும் என்று விளக்கமாக கூறியிருக்கிறார்.

கல்யாணமாம் கல்யாணம் - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச. சுந்தரதாஸ்

 பாதிப் படம் பஞ்சு என்ற அடை மொழியோடு தமிழ் திரையுலகில்


வலம் வந்தவர் பஞ்சு அருணாசலம். காரணம் அவர் கதை வசனம் எழுதி ஆரம்பிக்கப் பட்ட படங்கள் அனைத்தும் பாதியிலேயே நின்று விட்ட காரணத்தால் அவருக்கு இப்படியொரு ஏளனப் பெயர் கிடைக்கப் பெற்றது. 70ம் ஆண்டின் ஆரம்பத்தில் சித்ரமஹால் கிருஷ்ணமூர்த்தி தயாரித்த ஹலோ பார்ட்னர் படம் மூலம் கதாசிரியராக பஞ்சுவால் திரையுலகில் கால் வைக்க முடிந்தது. அதனைத் தொடர்ந்து அடுத்த படத்துக்கு கதை சொல்ல நாகேஷிடம் பஞ்சு சென்ற போது நாகேஷ் கதையை மட்டும் நிராகரிக்கவில்லை , பஞ்சுவையும் நிராகரித்து விட்டார்.


அதன் பின் கிருஷ்ணமூர்த்தி தயவில் அவர் இயக்கிய படத்துக்கு

மீண்டும் கதை வசனம் எழுதும் வாய்ப்பு பஞ்சுவுக்கு கிடைத்தது. அந்தப் படம் தான் கல்யாணமாம் கல்யாணம். ஜெய்சங்கரின் ஆதரவுடன் தயாரிப்பாளரான அவருடைய மேக்கப் மேன் மாணிக்கம், மானேஜர் பாலகிருஷ்ணன், அக்கவுண்டன்ட் காமாட்சி இவர்கள் மூவரும் தயாரித்த இதில் ஜெய்சங்கர் கதாநாயகனாக நடித்தார். அது வரை காலமும் அவர் ஏற்ற பாத்திரங்களில் இருந்து வேறுபட்டு அப்பாவியாக , வெகுளியாக நடித்து தன் நடிப்புத் திறனை காட்டியிருந்தார் அவர். படம் முழுதும் அவரின் நடிப்பு ரசிக்கும் படி இருந்தது.

ஜெய்சங்கருக்கு ஜோடியாக ஆரம்பத்தில் லதா, ஜெயசித்திரா இருவரும் நடிப்பதாக இருந்தது. ஆனால் இறுதி நேரத்தில் லதா படத்தில் இருந்து விலக , ஜெயசித்ரா இரட்டை வேடங்களை ஏற்று நடித்திருந்தார். இரண்டுமே துடிப்பான அலட்சியமான பாத்திரம் . அதனை அனாயசியமாக செய்திருந்தார் அவர். நகைச்சுவை படம் என்பதால் பல காமெடி நடிகர்கள் படத்தில் இடம் பெற்றார்கள். சோ, கே ஏ தங்கவேலு,தேங்காய் சீனிவாசன், வெண்ணிற ஆடை மூர்த்தி, எஸ் ராமராவ், பகோடா காதர், என்று கூட்டு அவியல் மாதிரி படத்தில் இடம் பெற்றார்கள். இதனால் சிரிப்புக்கு பஞ்சமில்லாமல் போயிற்று. இவர்களுடன் வ எஸ் ராகவன், சுகுமாரி, ஜெயக்குமாரி, ஆகியோரும் நடித்தனர். வில்லன் வேடத்தை ஸ்ரீகாந்த், சசிகுமார் இருவரும் ஏற்றிருந்தார்.

I Am: Celine Dion ஆவணச் சித்திரம் - கானா பிரபா

 I Am: Celine Dion










குரல் தான் என் வழிகாட்டி

அது சொன்ன வழியில் தான்

என் வாழ்க்கை அமைந்தது,

ஆனால்.....

2022 ஆம் ஆண்டில் பாடகி Céline Dion தன் உலகச் சுற்றுலாவுக்குத் தயாரான வேளை அவருக்கு Stiff Person Syndrome (SPS) என்ற நோய்க்கூறு பீடிக்கப்பட்டதை அடையாளம் காண்கிறார்.

கணவன் René-Charles Angélil ஐ 2016 இழந்த மன உளைச்சலில் ஒரு புறம்,

பால்ய வாழ்வில் இருக்கும் மூன்று பிள்ளைகள் ஒருபுறம்,

இன்னொரு புறம் நோயோடு போராடுதல்.

இவற்றோடு தன்னுடைய குரலை மெல்ல மெல்ல இழந்து சூனியமாகிப் போய் கொண்டிருக்கும் ஒரு உலகப் புகழ் பூத்த பாடகி என்ற பெரும் உச்சத்தில் இருந்து சரிந்து விழும் மன உறுதி

என்று அவரின் வாழ்க்கையே கடந்த 2 வருடத்தில் புரட்டிப் போடுகிறது இந்த நோய்.

சிட்னி துர்க்கை அம்மன் கோவிலில் ஆடிப்பூரத் திருவிழா




ஆடி மாதம் வந்துவிட்டது. ஆடி மாதமே துர்க்கை அம்மனுக்கு வரும் மாதம், இந்த மாதத்தில் பல கொண்டாட்டங்கள் நடைபெறும்.

23 ஜூலை 2024 செவ்வாய்க்கிழமை தொடங்கி 07 ஆகஸ்ட் 2024 புதன்கிழமை வரை 10 நாள் திருவிழா நடைபெறும்.

ஆடிப்பூரத் திருவிழாவின் ஒவ்வொரு இரவிலும் ஹோமம், அபிஷேகம், சிறப்பு பூஜைகள், தெய்வ பிரதக்ஷணம் நடைபெறும். 

தேர் திருவிழா ஆகஸ்ட் 03 சனிக்கிழமை நடைபெறும்.

ஆகஸ்ட் 7-ம் தேதி மாலை 5.30 மணிக்கு பால்குட அபிஷேகத்துடன் சிறப்பு ஆடிப்பூர பூஜை நடக்கிறது.

துர்கா தேவியை போற்றுவதற்காகவும், பக்தர்களுக்கு ஆசி வழங்குவதற்காகவும் ஆடிப் பூரம் திருவிழா கொண்டாடப்படுகிறது.



 

சர்வதேச விண்வெளி நிலையத்துக்குள் சிக்கிக் கொண்ட இருவரின் கதி என்ன?

 July 12, 2024 6:04 am 

சர்வதேச விண்வெளி மையத்தில் சுனிதா வில்லியம்ஸ் உட்பட இருவர் சிக்கியிருக்கும் நிலையில், தாங்கள் மீண்டும் பத்திரமாக பூமிக்கு திரும்புவோம் என அவர்கள் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள்.

பூமியிலிருந்து ஏறத்தாழ 400 கி.மீ உயரத்தில் உள்ள சர்வதேச விண்வெளி மையத்திற்கு அடிக்கடி விண்வெளி வீரர்கள் சென்று ஆய்வு செய்வது வழக்கம். போயிங் நிறுவனம் இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அமெரிக்காவின் மற்றொரு விண்வெளி வீரரான புட்ச் வில்மோர் என இருவரையும் சர்வதேச விண்வெளி மையத்திற்கு அழைத்துச் சென்று, மீண்டும் பத்திரமாக பூமிக்குக் கொண்டுவரும் பணியை ஏற்றுக் கொண்டது.

எல்லாவற்றையும் நம்பும் தலைமுறை

 July 14, 2024


சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை தொடர்பான குற்றச்சாட்டுகள் பற்றிய விசாரணைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்.
அந்தப் பொறுப்பு சுகாதார அமைச்சுக்குரியது.
தவறுகள் இருப்பின் அதனை திருத்திக் கொள்ள வேண்டியதும் – அதேவேளை, பொய்கள் கலக்கப்பட்டிருப்பின் அதனை பொது வெளிக்கு கொண்டுவருவதும்
சம்பந்தப்பட்ட அனைவரதும் பொறுப்புமாகும் – ஆனால், இந்த விடயத்தில் வைத்தியசாலை விவகாரத்திற்கு அப்பால், சமூக பொறுப்புடன் கவனிக்க வேண்டிய பிறிதொரு முக்கியமான விடயமுண்டு.
இன்றைய காலத்தில் அது மிகவும் ஆபத்தானதொரு விடயமாக மாறிவருகின்றது.
சமூக ஊடகங்களில் ஒருவர் குறிப்பிடும் விடயங்களை அப்படியே, ஆராயாமல் நம்பிவிடும் தலைமுறையொன்று உருவாகிவருவது மிகவும் ஆபத்தானது.
சமூக ஊடங்களை இன்று பலரும் தங்களது தேவைகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.
உலகின் மிகவும் ஆபத்தான சர்வதேச இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான ஜ.எஸ்.ஜ.எஸ். போன்ற அமைப்புக்கள் முகநூலை மிகவும் கச்சிதமாக பயன்படுத்தி வருகின்றன.
முகநூல்கள் வழியாக மேற்கொள்ளப்படும் பிரசாரங்களை உண்மை யென்று நம்பி, பல நூற்றுக்கணக்கான இளைஞர்கள் அந்த அமைப்பில் இணைந்திருப்பதாக தீவிரவாத எதி;ர்ப்பு ஆய்வுகள் கூறுகின்றன.
அதேபோன்று, மதசார்ப்பு குழுக்கள், சமூக விரோத அமைப்புக்கள் என அனைத்து தரப்புக்களுமே முகநூல்களை பயன்படுத்தி வருகின்றன.

வடக்கின் வைத்தியத்துறை

 July 9, 2024


சாவகச்சேரி ஆதார வைத்திய சாலையை மையப்படுத்தி வெளிவ ரும் தகவல்கள் வடக்கு மாகாண வைத்தியத்துறையின் மீது மட்டு மல்லரூபவ் ஒட்டுமொத்த வைத்தியத் துறையின் மீதான மக்கள் நம்பிக் கையை கேள்விக்குள்ளாகியுள்ளது. ஒரு வைத்தியரின் குற்றச்சாட் டும் அதனைத் தொடர்ந்துஇடம்பெற்றுவரும் உரையாடல்களும் வடக்கின் ஒட்டுமொத்த வைத்தியத்துறையின் மீது விரல் நீட்டுகின் றது. அனைத்து வைத்தியர்களையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்து கின்றது. குறிப்பாக அரசாங்க வைத்தியசாலைகள் திட்டமிட்டு முடக்கப்பட்டு தனியார் வைத்தியத் துறையை ஊக்குவிக்கும் நோக்கில் விடயங்கள் இடம்பெறுவதாக வெளிவரும் தகவல்களில் உண்மையிருக்கின்றதா அல்லது அவைகள் பொய்யான குற்றச்சாட்டுக்களா – இதற்கு ஆம் என்றோ அல்லது இல்லையென்றோ எவரும் பதிலளித்துவிட முடி யாது –
ஆனால், வடக்கின் ஆளுநர் உள்ளடங்கலாக, பிராந்திய சுகா தார பணிப்பாளர், அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்கள் அனை வருமே இது தொடர்பில் பொறுப்புக் கூற வேண்டியவர்களாவர். ஏனெ னில் வைத்தியத் துறையின் மீது கடுமையான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.

இலங்கைச் செய்திகள்

 கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வில் 3 மனித எச்சங்கள்

எம்.பி. பதவி நீக்கப்பட்ட டயனாவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை

சாவகச்சேரி வைத்தியசாலைக்கு தற்காலிக மின் பிறப்பாக்கி கையளிப்பு

யாழ்.போதனா வைத்தியசாலை குறித்து பொறுப்புணர்வோடு நடப்பது அவசியம்

கட்டுநாயக்கா விமான நிலையத்தின் 02 வது முனையத்தை விரிவாக்க திட்டம்

சாவகச்சேரி வைத்தியசாலை விவகாரம்; நிலைமைகளை ஆராய்ந்தார் அமைச்சர் டக்ளஸ்



கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வில் 3 மனித எச்சங்கள்

July 12, 2024 11:38 am 

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வாராய்ச்சியின் 7ஆவது நாளான நேற்று (11) 3 மனித எச்சங்கள் முழுமையாக வெளியே அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன் தகடு ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.

உலகச் செய்திகள்

டொனால்ட் ட்ரம்பை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு

காசா நகர வீதிகளில் மீட்க முடியாது குவிந்துள்ள உடல்கள்: வெளியேறுவோர் மீது ‘ஸ்னைப்பர்’ சூடு

தேர்தலில் போட்டியிடுவதற்கு பைடனுக்கு வலுக்கும் எதிர்ப்பு

காசாவில் 4 நாட்களுக்குள் நான்காவது பாடசாலை மீது தாக்குதல்: 30 பேர் பலி

காசாவில் இஸ்ரேலின் உக்கிர தாக்குதலால் போர் நிறுத்தப் பேச்சு சீர்குலையும் நெருக்கடி

காசா நகரில் இஸ்ரேல் பாரிய தாக்குதல் பல முனைகளால் டாங்கிகள் முன்னேற்றம்

இஸ்ரேல் படை வாபஸ் பெற்ற காசாவின் ஷுஜையா தரைமட்டம்; 60 சடலங்கள் மீட்பு


டொனால்ட் ட்ரம்பை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு

- காதோரமாக சென்ற ரவை; மயிரிழையில் உயிர் தப்பினார்

July 14, 2024 8:14 am 

– துப்பாக்கிதாரி சுட்டுக் கொலை; ஆதரவாளர் ஒருவரும் பலி

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளருமான டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இசை வேள்வி 03/08/2024