நவராத்திரி துதி -அலைமகள் துதி

 .

அலைமகள் துதி 
அருள் புரிவாயே அம்மா இலக்குமி ! 



         மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 
   மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
          மெல்பேண் …. அவுஸ்திரேலியா



செல்வம் செல்வம் தேயாச் செல்வம்
தேடித் திரிகிறோம் தெரியவே இல்லை
அனைத்துச் செல்வமாய் ஆகியே இருக்
அம்மா லக்சுமே அடியினைத் தொழுகிறோம்

நிறைந்த செல்வம் நீயே அம்மா
நினது அருளே அனைத்தும் அம்மா
அலைந்து திரிகிறார் செல்வந் தேடி
அவரின் மனத்தைத் திருத்திடு அம்மா

ஓய்வே இல்லா உழைக்கிறார் அம்மா
உழைத்து உழைத்துக் குவிக்கிறார் அம்மா
அருளை அன்பை மறக்கும் அவரை
திருத்திடு தாயே திருவடி சரணம் 

வாழும் வரைக்கும் செல்வம் வேண்டும்
செல்வம் உன்னருள் பெற்றிட வேண்டும்
திருவருள் நிறைவுடன் செல்வம் சேர்ந்திட
அருள் புரிவாயே அம்மா இலக்குமி !

No comments: